• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சரணடைந்தோரைக்காக்கும் விரதம்கொண்ட அதி&#

சரணடைந்தோரைக்காக்கும் விரதம்கொண்ட அதி&#

சரணடைந்தோரைக்காக்கும் விரதம்கொண்ட
அதிசயபுருஷன்ராமன்.


ராமாயணத்தில் உயிர்நாடியாக விளங்கும் ஒரு ஸ்லோகம் யுத்தகாண்டத்தில் 18ஆம் ஸர்க்கத்தில் 33வது ஸ்லோகமாக அமைகிறது.....!


ஸக்ருதேவ ப்ரபன்னாய
தவாஸ்மீதி ச யாசதே i


அபயம் சர்வபூதேப்யோ
ததாம்யேதத் வ்ரதம் மம ii


கஷ்டமடைந்து "உனது பொருள் நான்" என் வேண்டுபவர்க்கு எல்லா பிராணிகளிடமிருந்தும் அபயத்தை_கொடுக்கிறேன், இது எனது சங்கல்பம்!


ராமர் கூறும் இந்த அற்புதமான உறுதி மொழி அனைவருக்கும் சந்திரசூரியன்உள்ளவரை பொருந்தக்-கூடிய-ஒன்று.


விபீஷணன் சரணாகதி அடையும் போது அவனைக் கொல்வதே உசிதம் என சுக்ரீவன் கருத்துத் தெரிவிக்கிறான். ஆனால் ராமரோஅதைமறுக்கிறார்.


அருமையான பழைய கதை ஒன்றை ராமர் இங்கு சுக்ரீவனிடம் நினைவு படுத்துகிறார். அவரே, “இப்படி ஒரு சம்பவம் வழங்கப்படுகிறது” என்றால் அது எவ்வளவு பழமை பொருந்தியதாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்!


ஒரு வேடன் வனமொன்றில் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் மழையுடன் கூடிய கடும் புயல் அடித்தது. அப்போது மழையால் மதி மயங்கிக் கிடந்த பெண் புறா ஒன்றைக் கையில் எடுத்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு குளிர்காயவும் பசி தீரவும் வழி தெரியாதவனாகி அருகில் இருந்த ஒரு மரத்தடியை அடைந்தான். அங்கு தன் பெண் துணையைக் காணாமல் வாடும் ஆண் புறாவைக் கண்டான். கூண்டில் இருந்த பெண்புறா தன் ஆண் துணையான ஆண் புறாவை நோக்கி,” இதோ பார், நான் சத்துரு வசப்பட்டேன். என்னைப் பற்றி வருந்தாதே. சத்துருவாக இருந்தாலும் குளிர் காயவும் உணவை வேண்டியும் நமது மரத்தடிக்கு இவன் அதிதியாக வந்திருக்கிறான். இவனை உபசரித்து நலம் அடைவாய்” என்று கூறியது. அதைக் கேட்ட ஆண்புறாவிறகுச் சுள்ளிகளைச்_சேகரித்து
தீமூட்டி வேடனைக்குளிர் காயவைத்துஉணவின் பொருட்டுத்தன்உடலையும் தீக்கு_இரையாக்கியது.


இப்படிப்பட்ட அருமையான தியாக சரிதத்தை எடுத்துக் கூறிய பின்னர் ராமர் கூறும் பொருள் பொதிந்த ஸ்லோகம் தான் மேற்கூறிய*ஸ்லோகம்


என்னே ஸ்ரீ ராமச்சந்த்ரமூர்த்தியின் பெருமை...
 

Latest ads

Back
Top