பரம பவித்ரமான காலம்; ஆவணி மாசம்; ஆகாயம் நிர்மலமாக இருந்தது;
தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;
பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;
வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;
வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;
தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;
த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;
கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,
ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,
நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.
தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.
ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்
எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச்சொல்லி,
நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,
உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,
அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.
தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;
பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;
வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;
வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;
தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;
த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;
கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,
ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,
நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.
தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.
ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்
எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச்சொல்லி,
நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,
உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,
அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.