• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கூரேசரும் உடையவரும்

ஸ்ரீ இராமானுஜர் பல திவ்ய தேசங்களை தரிசித்து விட்டு தென்னகம் திரும்பினார். வைணவமதம் இப்படிப் பெருகுவது கண்டுச் சோழ மன்னர்களுள் ஒருவரான குலோத்துங்கன் சினம் கொண்டான். தனது அமைச்சர்களுள் ஒருவரான நாலூரான் என்பவரின் துர்வார்த்தைகளால் கவரப்பட்டு " இப்படியே விட்டால் சைவ மதம் நசிந்து விடும்" ஆகவே இராமானுஜரை சைவமே உயர்ந்தது என்று கையெழுத்து இடச் சொல்லி வற்புறுத்த வேண்டும். மறுத்தால் இராமனுஜரைக் கைது செய்து ராஜசபைக்கு கொண்டு வரும்படி ஆணையிட்டான் அரசன். உடனே காவலர்கள் திருவரங்கத்திற்கு விரைந்தனர். அப்போது இராமானுஜர் ஸ்நானம் செய்ய காவேரிக் கரைக்குப் போயிருந்தார். " இராமானுஜர் எங்கே ! , கூப்பிடுங்கள் அவரை" என்று காவலர்கள் கேட்ட பொழுது பணியாள் கூரத்தாழ்வாரிடம் சென்று ரகசியமாக அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை உரைத்தான். அரச கோபம் எந்த அளவிற்குப் போகும் என்பதை உணர்த்திருந்த கூரேசர் நொடியில் காஷாயத்தையும் , திரிதண்டத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் வந்து, " நான் தான் இராமனுஜர்" . எதற்காக என்னைத் தேடுகிறீர்கள்? என்று கேட்க, " இது அரச கட்டளை , எதுவும் பேசாமல் எங்களுடன் வாரும் " என்று அவரைக் கையோடு அழைத்துச் சென்றனர்.

கூரத்தாழ்வாரை இராமானுஜர் என்றெண்ணிய அரசன், " சிவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை" என்று எழுதிக் கையெழுத்திடும்" எனக் கட்டளைப் பிறப்பித்தான். " ஸ்ரீமந் நாராயணன் மூவுலகங்களையும் அளந்த போது அவரது திருப்பாதங்களுக்கு பிரம்ம தேவர் ஸத்ய லோகத்தில் கங்கை நீரால் அபிஷேகம் செய்தார். அந்த கங்கையைத் தனது தலையில் தாங்கிக் கொண்ட சிவன் எப்படி மேம்பட்டவராகி விட முடியும் " என்று கூரேசர் துணிவுடன் கேட்க. " சிவ அபராதம் செய்கின்ற இவனது விழிகளைக் பிடுங்கி எறியுங்கள் " என்று கோபத்துடன் உத்தரவிட்டான் அரசன். காவலர்கள் கூரேசர் அருகே செல்ல சீறி எழுந்த அவர் , " உன்னைப் போன்ற பஞ்சமகா பாதகனைப் பார்த்த இந்த ஊனக் கண்களை நீயே வைத்து கொள் " என்றுத் தன்னுடைய கூரிய நகங்களால் தனது இரு கண்களையும் பிடுங்கி மன்னனை நோக்கி வீசினார் கூரேசர். என்னே அவரது மனவலிமை! தனது ஆசார்யனைக் காப்பாற்றத் தனது விழிகளையே இழந்த கூரேசனின் ஆசார்ய பக்தியை எப்படிப் போற்றுவது.
 

Latest ads

Back
Top