• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

Status
Not open for further replies.
கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

DSC_6454.jpg


என் பெயர் புலவர் நக்கீரன். கா ..கா…கா…… என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற 4 வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ‘’இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதிலும் அதை நாடி ஓடு’’


நான் முதலில் பேசுகிறேன். என் பெயர் வள்ளுவன். காகத்தின் அருமையான குணங்களில் உன்று பகுத்துண்டு உண்ணுதல். அதை நான் தான் அழகாக இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (குறள் 527)

அது மட்டுமா? பஞ்ச தந்திரக் கதையில் வரும் காகம் ஆந்தை மோதலையும் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481).

என் பெயர் ஓதல் ஆந்தையார். நான் சங்க காலத்திலேயே இதைச் சொல்லிவிட்டேனே:

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின் கிளையோடாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவன் மாதோ
வெஞ்சின விறல் வேற் காளையோ
டஞ்சி லோதியை வரக்கரைந்தீமே (ஐங்குறுநூறு 391)

DSC_6213.jpg


(காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக்கொள்ளுவர்).
என் பெயர் பெருவாயின் முள்ளியார். என் ஆசாரக்கோவையில் கூட எறும்பு, தூக்கணம் குருவி, காகம் ஆகிய மூன்றின் அரிய குணங்களைப் பாடி இருக்கிறேன். எறும்பு திட்டமிட்டு மழைக் காலத்துக்கு உணவைச் சேமிக்கிறது. குருவி எந்தக் காலத்திலும் சேதமடையாத அழகான கூட்டைக் கட்டுகிறது. காகம் எல்லோரையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடுகிறது.

நந்து எறும்பு தூக்கணம் புள் காக்கை என்றிவை போல்
தங்கரு நல்ல கடைப் பிடித்து……….. (ஆசாரக்கோவை)

என் பெயர் முன்றுரை அரையனார். காகத்தின் சொல்லை எள்ளி நகையாடக்கூடாது என்று பாடி இருக்கிறேன்:

கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும்போல
எள்ளற்க யார் வாயின் நல்லுரையை—பழமொழி

பாரதி

பாரதி: நான் பல பாடல்களில் காகத்தின் பெருமைதனைப் பேசி இருக்கிறேன். காகத்தை மனித ஜாதியுடன் இணைத்துப் பாடிவிட்டேன். சிறுவர் பாட்டில்கூட காகத்துக்கு இரக்கம் காட்டச் சொன்னேன்:
காக்கை குருவி எங்கள் ஜாதி—நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
!!!
ஓடி விளையாடு பாப்பா……….
எத்தித் திருடும் அந்த காக்கை—அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா
!!!
காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன்
கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா

!!!

பாரசக்தி திரைப்படம்

என் பெயர் உடுமலை நாராயண கவி.நான் பாரசக்தி திரைப்படப் படத்தி பாடிய பாடல் 60 ஆண்டுகாலமாகப் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது:
கா கா கா
கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப் பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க
காக்கை அண்ணாவே நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க
கா கா கா என்று தினம் ஒன்னாக கூடுவீங்க
வாங்க.. கா கா கா
சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க

சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணீ ஊத்துங்க—என்றால்
தாழ்ப்பாள போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன் நலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம்…. கா கா கா
...

எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
எத்தனையோ இந்த நாட்டிலே
படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க
படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க
பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க
எங்க பாடுங்க… கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்)

!!!!!!

sani+with+kaka+vahana.jpg


காக்கைபாடினியார்:


காக்கைபாடினியார்: என்பெயர் காக்கை பாடினியார். நான் சங்க காலத்திலேயே காக்கை பற்றிப் பாடியவள். காக்கையின் பெயரை உடைய ஒரே புலவன். என் பெயரில் காக்கைபாடினீயம் என்ற நூலும் உள்ளது.
நாங்கள் சங்கப் புலவர்கள். பாருங்கள் எத்தனை பாடல்களில் காகம் பலிச் சோற்றை உண்ணுவது பற்றிப் பாடீருக்கிறோம். பெண்களின் கரிய விழிகளைக் காகத்தின் கரிய நிறத்துக்கு ஒப்பிட்டுள்ளோம்:
பொருநராற்றுப்படை (முடத்தாமக்கண்ணியார்)
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கலவு முனையின்
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந்210) 246 ,313, 334;
நற்றிணை 31, 231, 258, 272, 281, 343, 345, 358. 367; புறம் 238, 342, 362
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top