ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
காணப்பிறந்த பாணன்.
இன்று கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரம் ஆழ்வார்களுள் ஒன்பதாவதாக அவதரித்த திருப்பாணாழ்வாரின் திரு அவதார நன்னாள். முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் இவ்வாழ்வார் அவதரித்தார். அமலனாதிபிரான் என்று போற்றப்படும் 10 பாசுரங்கள் கொண்ட திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தார் பகவான் ஒவ்வொரு ஆழ்வாரை அவதரிக்கச் செய்ததற்கும் ஒரு சிறப்பான பயன் உள்ளது. இவ்வாழ்வார் அவதாரப் பயனை சிறிது விளக்குகிறேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் நம்முடைய புலன்களை அடக்குவதற்கு வழி சொல்கிறார் இறைவனின் திருமேனியை தியானித்தால் நம் புலன்கள் அடங்கும். ஆனால் அதில் ஒரு இடர்பாடு உள்ளது. புலன்கள் அடங்கினால் தான் மனம் ஒருமுகப்பட்டு தியானத்தில் ஈடுபடமுடியும். ஆகவே புலனடக்கமும் தியானமும் ஒன்றை ஒன்று சார்ந்து எது முன்னே என்பது கேள்விக்குறியாகி விடுகிறது
இதற்கும் கண்ணன் ஒரு எளிய உபாயத்தைக் கூறினார் “அர்ஜுனா! என்னுடைய திவ்யமான திருமேனி சத்துவ குணத்தால் மட்டுமே நிறைந்தது. ஆகவே உன் புலன்களை என் திருமேனியில் ஈடுபடுத்தினால் அவை மெதுமெதுவே கட்டுப் பட்டு வரும், அடுத்து மனமும் கட்டுப்படும் தொட,ர்ந்து என் திவ்ய ஸ்வரூபத்தை நீ எளிதில் தியானிக்கலாம் ஆகவே உன் புலன்களை என் திருமேனியில் ஈடுபடுத்துவதே எளிய வழி” என்று கூறினார் இந்த வழியை இன்றும் நாமும் எளிதில் பின்பற்ற முடியும் பெருமானின் திருமேனிக்கு “சுபாச்ரயம்” என்று பெயர். அதாவது புலன்களுக்கு சுபமான புகலிடம் என்று பொருள். இந்த வழியை உலகுக்கு உணர்த்தவே திருப்பாணாழ்வார் அவதரித்தார்.
திருவரங்கத்து பெரிய பெருமாளின் திருமேனியில் ஒவ்வொரு அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்தார். பாத கமலம், ஆடை, உந்தித் தாமரை, உதரபந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், திருக்கண்கள் என்று எட்டு அவயவங்களை தனித்தனியே எட்டு பாசுரங்களால் பாடிவிட்டு ஒன்பதாவது பாசுரத்தால் திருமேனி முழுவதுமாகப் பாடினார். நம் புலன்களை பெருமானின் திருமேனியில் ஈடுபடுத்துவதற்கு வழியை அவருடைய பாசுரங்கள் மூலம் காட்டியுள்ளார். இனி நாம் செய்யவேண்டியது – இவர் பாசுரங்களைச் சொல்லிக் கொண்டே பகவானின் அந்தந்த திவ்ய அவயவத்தை சிந்திப்பது. இதுவே இவ்வாழ்வாரின் அவதாரப் பயன்கள் பலவற்றுள் முக்கியமான பயன். அவதார நன்னாளில் அவர் காட்டிய வழியில் நடப்போம் என்று உறுதி ஏற்று அவர் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி வாழ்ச்சி பெறுவோம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
காணப்பிறந்த பாணன்.
இன்று கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரம் ஆழ்வார்களுள் ஒன்பதாவதாக அவதரித்த திருப்பாணாழ்வாரின் திரு அவதார நன்னாள். முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் இவ்வாழ்வார் அவதரித்தார். அமலனாதிபிரான் என்று போற்றப்படும் 10 பாசுரங்கள் கொண்ட திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தார் பகவான் ஒவ்வொரு ஆழ்வாரை அவதரிக்கச் செய்ததற்கும் ஒரு சிறப்பான பயன் உள்ளது. இவ்வாழ்வார் அவதாரப் பயனை சிறிது விளக்குகிறேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் நம்முடைய புலன்களை அடக்குவதற்கு வழி சொல்கிறார் இறைவனின் திருமேனியை தியானித்தால் நம் புலன்கள் அடங்கும். ஆனால் அதில் ஒரு இடர்பாடு உள்ளது. புலன்கள் அடங்கினால் தான் மனம் ஒருமுகப்பட்டு தியானத்தில் ஈடுபடமுடியும். ஆகவே புலனடக்கமும் தியானமும் ஒன்றை ஒன்று சார்ந்து எது முன்னே என்பது கேள்விக்குறியாகி விடுகிறது
இதற்கும் கண்ணன் ஒரு எளிய உபாயத்தைக் கூறினார் “அர்ஜுனா! என்னுடைய திவ்யமான திருமேனி சத்துவ குணத்தால் மட்டுமே நிறைந்தது. ஆகவே உன் புலன்களை என் திருமேனியில் ஈடுபடுத்தினால் அவை மெதுமெதுவே கட்டுப் பட்டு வரும், அடுத்து மனமும் கட்டுப்படும் தொட,ர்ந்து என் திவ்ய ஸ்வரூபத்தை நீ எளிதில் தியானிக்கலாம் ஆகவே உன் புலன்களை என் திருமேனியில் ஈடுபடுத்துவதே எளிய வழி” என்று கூறினார் இந்த வழியை இன்றும் நாமும் எளிதில் பின்பற்ற முடியும் பெருமானின் திருமேனிக்கு “சுபாச்ரயம்” என்று பெயர். அதாவது புலன்களுக்கு சுபமான புகலிடம் என்று பொருள். இந்த வழியை உலகுக்கு உணர்த்தவே திருப்பாணாழ்வார் அவதரித்தார்.
திருவரங்கத்து பெரிய பெருமாளின் திருமேனியில் ஒவ்வொரு அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்தார். பாத கமலம், ஆடை, உந்தித் தாமரை, உதரபந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், திருக்கண்கள் என்று எட்டு அவயவங்களை தனித்தனியே எட்டு பாசுரங்களால் பாடிவிட்டு ஒன்பதாவது பாசுரத்தால் திருமேனி முழுவதுமாகப் பாடினார். நம் புலன்களை பெருமானின் திருமேனியில் ஈடுபடுத்துவதற்கு வழியை அவருடைய பாசுரங்கள் மூலம் காட்டியுள்ளார். இனி நாம் செய்யவேண்டியது – இவர் பாசுரங்களைச் சொல்லிக் கொண்டே பகவானின் அந்தந்த திவ்ய அவயவத்தை சிந்திப்பது. இதுவே இவ்வாழ்வாரின் அவதாரப் பயன்கள் பலவற்றுள் முக்கியமான பயன். அவதார நன்னாளில் அவர் காட்டிய வழியில் நடப்போம் என்று உறுதி ஏற்று அவர் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி வாழ்ச்சி பெறுவோம்