உங்கள் குடும்பம் செழிக்க இதைச் செய்யுங்கள்
பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பண்டிகை. அன்று காலையில் எழுந்து பெண்கள்( தாங்கள் குளிப்பதற்கு முன்) தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி
கனுப்_பிடி வைப்பது வழக்கம்.
கனுப் பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையைப் , பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு, பல வண்ணச் சாதங்கள்( சோறு), கரும்பு, வாழைப் பழம் முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வணங்குவது என்பது நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.
இது ஒரு வகையான திருஷ்டி(கண்ணூறு) கழித்தலாகும்.
தமது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டி கனுப் பிடி வைக்கும் தமது சகோதரிகளுக்கு அண்ணன் தம்பிகள் பொங்கல் சீர் செய்வது என்பதும் இன்றும் வழக்கில் உள்ளது. "பெண்வாழபிறந்தகம்_வாழ" என்று கூறுவார்கள் .
நமது சகோதரிகள் நலமாக இருந்தால் அவள் பிறந்த வீடான
நமதுவீடும்(குடும்பமும்) நலமாகஇருக்கும்.
அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டி கொண்டாடும் அருமையான பண்டிகை
இந்த பொங்கலும்
கனுப் பண்டிகையும்.
குடும்பஒற்றுமை வளர்வதற்கும் சகோதரபாசம் நிலைப்பதற்கும் கனுப் பிடி வைத்தலும், பொங்கல் சீரும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது.
சகோதரிகளே உங்கள் அண்ணன் தம்பிகள்
குடும்ப_நலனுக்கு
கனுப்பிடிவையுங்கள்.
சகோதரர்களே உங்கள் அக்காள் தங்கைகளுக்கு மறக்காமல் இந்தப் பொங்கலுக்கு நேரில் சென்று சீர் கொடுங்கள். வெளி ஊரில் இருந்தால் தபால் மூலம் சீர் அனுப்புங்கள். உங்கள் குடும்ப வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்கும்.
கனுபண்டிகை
காக்கா பிடியும் கனுப் பிடியும்
கனிவாக நானும் வெச்சேன்
மஞ்சள் இலையில் விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
கலர் கலரா சாதம் வெச்சேன்
கண்டிப்பா கரும்பும் வெச்சேன்
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமர்க்களமா வாழ வெச்சேன்
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இதயத்தோட எடுத்து வெச்சேன்
கூட்டு வெச்சேன் கூவி வெச்சேன்
கூட்டு குடும்பம் கேட்டு வெச்சேன்
பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்
கல்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை நான் வணங்கி வெச்சேன்
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை துதித்து வெச்சேன்
பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப் பண்டிகை. அன்று காலையில் எழுந்து பெண்கள்( தாங்கள் குளிப்பதற்கு முன்) தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி
கனுப்_பிடி வைப்பது வழக்கம்.
கனுப் பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையைப் , பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு, பல வண்ணச் சாதங்கள்( சோறு), கரும்பு, வாழைப் பழம் முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வணங்குவது என்பது நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.
இது ஒரு வகையான திருஷ்டி(கண்ணூறு) கழித்தலாகும்.
தமது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டி கனுப் பிடி வைக்கும் தமது சகோதரிகளுக்கு அண்ணன் தம்பிகள் பொங்கல் சீர் செய்வது என்பதும் இன்றும் வழக்கில் உள்ளது. "பெண்வாழபிறந்தகம்_வாழ" என்று கூறுவார்கள் .
நமது சகோதரிகள் நலமாக இருந்தால் அவள் பிறந்த வீடான
நமதுவீடும்(குடும்பமும்) நலமாகஇருக்கும்.
அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டி கொண்டாடும் அருமையான பண்டிகை
இந்த பொங்கலும்
கனுப் பண்டிகையும்.
குடும்பஒற்றுமை வளர்வதற்கும் சகோதரபாசம் நிலைப்பதற்கும் கனுப் பிடி வைத்தலும், பொங்கல் சீரும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது.
சகோதரிகளே உங்கள் அண்ணன் தம்பிகள்
குடும்ப_நலனுக்கு
கனுப்பிடிவையுங்கள்.
சகோதரர்களே உங்கள் அக்காள் தங்கைகளுக்கு மறக்காமல் இந்தப் பொங்கலுக்கு நேரில் சென்று சீர் கொடுங்கள். வெளி ஊரில் இருந்தால் தபால் மூலம் சீர் அனுப்புங்கள். உங்கள் குடும்ப வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்கும்.
கனுபண்டிகை
காக்கா பிடியும் கனுப் பிடியும்
கனிவாக நானும் வெச்சேன்
மஞ்சள் இலையில் விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
கலர் கலரா சாதம் வெச்சேன்
கண்டிப்பா கரும்பும் வெச்சேன்
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமர்க்களமா வாழ வெச்சேன்
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இதயத்தோட எடுத்து வெச்சேன்
கூட்டு வெச்சேன் கூவி வெச்சேன்
கூட்டு குடும்பம் கேட்டு வெச்சேன்
பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்
கல்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை நான் வணங்கி வெச்சேன்
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை துதித்து வெச்சேன்