P.J.
0
கட்டாய வசூல்: திருநங்கைகளுக்கு காவல்துற&
கட்டாய வசூல்: திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: மின்சார ரயில் பயணிகளிடம், வலுக்கட்டாயமாக காசு கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகளிடம் பாட்டுப்பாடி, வலுக்கட்டாயமாக காசு கேட்டு தொந்தரவு தருவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல்துறை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.சேகர், சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான ஒரு குழுவினர் எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களிலும், பாதுகாப்பு படையினர் தலைமையிலான மற்றொரு குழுவினர் கடற்கரை வரை செல்லும் ரயில்களிலும் சென்று பயணிகளிடம் காசு கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகளை பிடித்தனர்.
இதில் மொத்தம் 30 திருநங்கைகள் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் எழும்பூர் ரயில்வே காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் திருநங்கைகளிடம் 'இனிமேல் காசு கேட்டு பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
?????? ?????: ???????????????? ????????? ??????????!
கட்டாய வசூல்: திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: மின்சார ரயில் பயணிகளிடம், வலுக்கட்டாயமாக காசு கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகளிடம் பாட்டுப்பாடி, வலுக்கட்டாயமாக காசு கேட்டு தொந்தரவு தருவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல்துறை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.சேகர், சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான ஒரு குழுவினர் எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களிலும், பாதுகாப்பு படையினர் தலைமையிலான மற்றொரு குழுவினர் கடற்கரை வரை செல்லும் ரயில்களிலும் சென்று பயணிகளிடம் காசு கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகளை பிடித்தனர்.
இதில் மொத்தம் 30 திருநங்கைகள் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் எழும்பூர் ரயில்வே காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் திருநங்கைகளிடம் 'இனிமேல் காசு கேட்டு பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
?????? ?????: ???????????????? ????????? ??????????!