• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கடவுள் என்றால் என்ன பொருள்..?

கடவுள் என்றால் என்ன பொருள்..?
இறைவன் என்றால் என்ன பொருள்..?
தெய்வம் என்றால் என்ன பொருள்..?
சிவம் என்றால் என்ன பொருள்..?

கடந்தும் உள்ளும் இருபவர் கடவுள். சமஸ்க்ரிதத்தில் பராபரம் என்பது தான் தமிழ் கடவுள் ஆகிறது.நம்மை கடந்தும் (பர) நம்மின் உள்ளும் (அபரம்) இருப்பது பராபரம். அதுவே கடவுள்.

உள்ளிருப்பது வெளி வருவது இறை எனப்படும். உதாரணம் - நீர் இறைத்தல். (மனம், அகம்) உள்ளிருப்பவன் வெளி வந்தால் இறைவன். அரசனை இறைவன் என்று கூறுவதன் காரணம் அவன் நாட்டிற்கு உள்ளிருந்து (வளம், நீதி) இறைப்பவன். அப்படி இறைப்பவரே காக்கிறார். எனவே ஆள்கிறார். அப்படி இறைப்பவனிடம் வேண்டுவது இறைஞ்சுதல் ஆகிறது. அப்படி மனம் /அகத்திலிருந்து இறைக்கப்படாவிட்டால் இறைவன் இல்லை. ஆகவே நம் அகத்தை/மனதை நாம் நம்பி வெளியே இறைத்தால் அது இறை நம்பிக்கை.

தெய்வம் என்பது சக்தியாகும். அச்சக்தி பலவேறு விதமாக பரிமளிக்கிறது. அத்தெய்வ சக்தி இரண்டு வகைப்படும். ஒன்று உள்ளார்ந்து இருக்கும் சக்தி. அவள் 'உம்' மென்று இருப்பதால் உமை என்கிறோம். இன்னொன்று வெளிப்படும் சக்தி. கொற்றம் என்பது வெளிப்படுவது. வெளிப்படும் சக்தியே கொற்றவை. கொற்றவை என்றால் கடக்க முடியாதவள் அல்லது அடக்க முடியாதவள் அல்லது வெற்றி என்று பொருள். சமஸ்க்ரிதத்தில் துர்கை என்றால் கடக்க முடியாதவள் அல்லது அடக்க முடியாதவள் என்று பொருள். எனவே கொற்றவையே துர்கை.

இச்சக்திகள் அகிலத்தில் பல் வேறு வடிவங்களாக, எண்ணங்களாக, ஊழ் வினையாக, அகிலமேயாக மாறும் மாயத்தை மாயோன் என்கிறோம். ஆற்றல், வடிவம் பெறும்
மாயம் செய்பவன் மாயோன். மாயோன் சக்திக்கு வடிவம் தருகிறான். பொருளாக, உயிர் தாங்கும் உடலாக, எண்ணமாக, எண்ணங்கள் தாங்கும் மனமாக பல மாய வடிவங்களை மாயோன் வடிக்கிறான். மாயோனும் சக்தியின் ஒரு பரிமாணம். எனவே மாயோனும் தெய்வம்.

உமை, கொற்றவை, மாயோன் மட்டும் தெய்வம் இல்லை. வினைக்கு சக்தியானவன் விநாயகன். வெப்பத்து சக்தியானவன் முருகன். நாற்புறமானவன் நான்முகன். அதில் முப்புறம் எரித்து, அம்பலமாக்கி அதில் ஆற்றலாய் ஆடுபவன் நடராசன். இவ்வாறு பல தெய்வங்களை, சக்திகளை சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் மனிதன் தோன்ற காரணமான, மனிதர்க்கு மேம்பட்ட சக்திகளே.

இந்த உமை (உள்ளிருக்கும்), கொற்றவை (வெளிப்படும்) மற்றும் பிற தெய்வ சக்திகளை 'சிவனே' என்று வெறுமனே பார்த்து கொண்டிருப்பதே சிவம் ஆகும். அச்சிவமே சாட்சி. சக்தி அன்னையாக, அகிலம் அனைத்து உள்ளும், வெளிப்பட்டும் ஆட்ட, அவளை பார்க்கும் சாட்சியாக தவத்தில் இருப்பதே சிவம்.

அச்சாட்சியின் பார்வையில் அகிலமே இயங்குகிறது. அச்சிவமே நம் மனதில், நம்மை வழிப்படுத்தும் மனசாட்சியாக வீற்றிருக்கிறது. மனசாட்சியை கேட்டு நடப்பது என்பதே அச்சிவத்தின் பார்வையில் நடப்பது ஆகும். சிவத்தின் வழி நடப்பது என்பது நம் மனசாட்சிப்படி நடப்பதே ஆகும்.
 

Latest ads

Back
Top