• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓம் நமோ நாராயணா

praveen

Life is a dream
Staff member
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூடமதே
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |
யல்லபசே நிஜகர்மோபாத்தம்
.வித்தம் தேன விநோதயசித்தம் |

மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;
நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;
பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால்
கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.

யாவத்வித்தோபார்ஜனசக்த--
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :|
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே
வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே |

சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
அன்பைப் பொழிந்திடும் உன்பரிவாரம்,
ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.

மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா |

பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .

சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ |
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ
கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ |
உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலினை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?

பகவத்கீதா கிஞ்சித தீதா
கங்காஜலலவகணிகா பீதா |
சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா
த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||

சில வரியேனுங் கீதை படிப்போரும்,
துளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,
அரங்கனைக் கணமேனுந் துதிப்போரும்,
கலங்குவதில்லை கூற்றுவன் வரினும்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனிஜடரே சயனம் |
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே ||

மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .

கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் ||

கீதையும்,அரங்கனின் ஆயிரம்பேரும்
ஓதி நினைப்பாய் கமலையின் பதியை;
நிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;
இதயங்குளிர்வாய் இல்லார்க்கீந்தே!

அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |
புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி
சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி

செல்வத்தால் தொல்லையே சுகமென்றுமில்லை;
உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்மையை.
தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
மனிதஇயல்பிதை மறந்திடவேண்டாம் .

குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ
சம்சாராதசிராத்பவமுக்தஹ |
செந்த்ரியமானச நியமாதேவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம்

குருவின் பதகமலம் பற்றிய பக்தா!
அறநெறி நின்று, ஐம்புலனடக்கி
விடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;
உணர்ந்திடுன்னுளமுறை பரம்பொருள்தன்னை !
 

Latest ads

Back
Top