ஏகாதசி விரதம்

praveen

Life is a dream
Staff member
வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் போக்கும் ஷட்திலா ஏகாதசி விரதம் 18.12.2018


நாளை அதிகாலை முதல் வைகுண்ட ஏகாதசி விரதம் துவங்குகிறது பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வைகுண்ட வாசல் வழியாக வந்து விரதம் இருக்க துவங்குவர்..அன்று எள் கலந்த உணவை தானமாக செய்தால் எத்தனை எள் அதில் இருக்குமோ அத்தனை வருட காலம் சொர்க்கத்தில் வசிக்கும் யோகம் உண்டாகும்.ஏள் உருண்டை வெல்லம் கலந்து தானம் செய்யுங்கள் தயிர் சாதம் தானம் செய்யுங்கள் ..நாட்டு பசு மாட்டில் கறந்த பாலில் தயிர் உண்டாக்கி அதில் சாதம் கலந்து கொடுப்பதுதான் உண்மையான தயிர் சாத அன்னதானம்..இது சுக்கிரன்,சந்திர தோசங்களை போக்க வல்லது..மறுநாள் விடியற்காலையில் துவாதசியில் நெல்லிக்காய் சிறிது உண்டபின் அறுசுவை உணவை வாழை இலையில் உண்ண வேண்டும்..அறுசுவை என்றால் இனிப்பு,புளிப்பு,காரம்,துவர்ப்பு ,கசப்பு,உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்த உணவாகும்...துவர்ப்புக்கு வாழைப்பூ,கொத்தவரங்காய்,வாழைக்காய் சேர்ப்பார்கள்
 
Back
Top