• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்

தோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை

கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.

கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.

ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது.

“பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.

எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.

அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும்.

பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும்.

இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பைரவருக்குத் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். அர்த்தஜாமபூஜை நடந்தான பிறகு பைரவருக்கு பூஜை நடக்கும். ஆலய நடைகளையெல்லாம் பூட்டியான பிறகு சாவிகளை பைரவர் அருகே வைத்துவிட்டுச் செல்வார்கள். கோயிலைக் காக்கும் பைரவர் எட்டு விதத்தோற்றங்களுடன் விளங்குபவர். எனவேதான் அஷ்டபைரவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.

காசியில் காலபைரவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. சீர்காழியில் பிரம்மபுரீசுவரர் ஆலயத்தில் அஷ்டபைரவருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வெள்ளிக்கிழமைத்தோறும் மலைமீது வீற்றிருக்கும் சட்டநாதருக்குப் புனுகுச்சட்டம் சாற்றி சுக்கிர வார பூஜை செய்வார்கள். அப்போது அஷ்டபைரவருக்கும் வழிபாடு நடைபெறும்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிற்சபையில் உள்ள பைரவர் பைரவர்சுவர்ணகாலபைரவர் என்று அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் தினசரி பூஜை செய்து முடித்துச் செல்பவர்களுருக்குப் பொற்காசு வழங்கியதால் இவருக்கு இவ்வாறு பெயர் வந்தது.
காலபைரவரிடம் பிரத்தியேகமாகப் பிராத்தனை செய்து செல்லும் வழக்கம் உள்ளது. பிராத்தனை நிறைவேற்றுகையில் ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போலவே பைரவருக்கு வடைமாலை, சாற்றுவார்கள்.

ஆன்மாக்களைத் தமது சூல நுனியினால் தொட்டு, நொடிப்பொழுதில் அவர்களின் பாவங்களைத் தொலைத்துக் கட்டுபவர் காலபைரவர்.எல்லா சிவாலயங்களிலும் ஷேத்திர பாலராக பைரவர் விளங்கினாலும், காசி, சீர்காழி, நாகப்பட்டினம், செங்காட்டான்குடி ஆகிய தலங்களில் தனிச்சிறப்போடு விளங்குகிறார் அவர்.

சீர்காழியில் வலம்புரி மண்டபத்து யோகஸ்தானத்தில் அஷ்டபைரவர்களின் திருவுருவச் சிலைகளைக் கண்டு வணங்கலாம். அஷ்டபைரவர்களின் தோற்ற அமைப்புகள் வருமாறு:

1) அசிதாங்க பைரவர்:

கிருபாமூர்த்தி. புன்முறுவல் தவழும் முகம் ,திக்கு: கிழக்கு. சக்தி: பிராமி. வாகனம் :ஹம்சம், நிறம்: வெண்மை . ஆயுதம்:கத்தி , பாராத்திரம், ருத்திராட்சமாலை கமண்ட லம்,

2) குரு பைரவர் :

கிருபாமூர்த்தி புன்முறுவல் தவழும் முகம். திக்கு :தென்கிழக்கு .சத்தி: மகேஸ்வரி. வாகனம்: விருஷபம். நிறம்: படிகம்.ஆயுதம்: டங்கம், கத்தி, பாரபாத்திரம்.

3} சண்ட பைரவர்:

கிருபாமூர்த்தி.புன்முறுவல் தவழும முகம். திக்கு: தெற்கு . சக்தி: கௌமாரி. வாகனம்: மயில், நிறம்: பொன். ஆயுதம்: வில்,பாணம், கத்தி பாரபாத்திரம் .

4) குரோதனை பைரவர்:

கிருபாமூர்த்தி. புன்முறுவல் தவழும் முகம். திக்கு: தென்மேற்கு. சக்தி : வைணவி. வாகனம்: கருடன். நிறம் :கறுப்பு.ஆயுதம்: சங்கம், சக்க்ரம், கதை, பாராபாத்திரம்

5) உன்மத்த பைரவர்:

கிருபாமூர்த்திக்கு. புன்முறுவல் தவழும் முகம். திக்கு: மேற்கு, சக்தி: வராஹி வாகனம்: குதிரை .நிறம்: பொன். ஆயுதம்: கத்தி, உலக்கை , கேடயம் , கபாலம்.

6) கபாலி பைரவர்:

கிருபாமூர்த்தி ,புன்முறுவல் தவழும் முகம். திக்கு: வடமேற்கு. சக்தி:இந்திராணி. வாகனம்: யானை நிறம்: பத்தமராக காந்தி. ஆயுதம்: பரசு, வஜ்ரம், கத்தி, பாராபாத்திரம்

7) பீஷண பைரவர்:

கிருபாமூர்த்தி: புன்முறுவல் தவழும் முகம். திக்கு: வடக்கு. சக்தி: சாமுண்டி.. வாகனம்: சிங்கம். நிறம் : சிவப்பு. ஆயுதம்: சூலம் இரும்பு, உலக்கை, கபாலம் கத்தி .இந்த ஏழு பைரவர்களுக்கும் முக்கண்ணும்-சிகையும் இருக்கும்.

8) சம்கார பைரவர்:

பத்து கைகள், பயங்கர முகம், முக்கண், சர்ப்பப்பூநூல் உள்ளவர். திக்கு: வடகிழக்கு. சக்தி: சண்டிகை, வாகனம்: நாய் நிறம் : வெண்மை . ஆயுதம்: சூலம் ,டமருகம் சங்கம் சக்க்ரம், கதை கத்தி, கபாலம், கட்வாங்கம், பாசம், அங்குசம். பார்க்கப் பயங்கரமாகத் தோற்றமளித்தபோதிலும், பக்தர்களுக்குக் கருணாகடாட்சம் அளிப்பவர்

தர்மத்துக்கு அரணாக இருந்து அதர்மங்களைத் தொலைக்கும் பைரவர், அணிமா , மகிமா எனப்படும் எட்டு ஐசுவரியங்களயும் அருள்பவர்.
 

Latest ads

Back
Top