P.J.
0
உலகெங்கும் தீபாவளி!
உலகெங்கும் தீபாவளி!
வட மாநிலங்களில், தீபாவளி அன்று மகாலட்சுமி தங்கள் வீடுகளில் தங்குவதாக நம்புகிறார்கள். அவர்கள், தீபாவளி வரும் அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கை எரிய விடுகிறார்கள். அந்த விளக்கில் படியும் புகைக் கரியில் இருந்து கண் மை தயாரிப்பார்கள். இந்தக் கண் மையைத்தான் அவர்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இதை, 'மோனி தீபாவளி’ என்கிறார்கள்.
வங்காளத்தில் சும்பன், நிகம்பனை சம்ஹாரம் செய்த மகா துர்கையின் உக்கிரத்தை சிவபெருமான் தணித்த நாளையே தீபாவளி என்கிறார்கள்.
மத்தியப்பிரதேசம், புதுடெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் மகாலட்சுமி தனது கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நன்னாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் லடாக், இமயமலை, அசாம், மணிபுரி, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளிலும், இலங்கை, பர்மா, கம்போடியா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், திபெத் ஆகிய நாடுகளிலும் வசிக்கும் பௌத்த மதத்தினர் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் தீபாவளியன்று பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டுத் தீயிட்டு எரிக்கும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்வதால் வறுமை விலகி, வளமை வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த வழிபாட்டின்போது, 'மூதேவியே போ... ஸ்ரீதேவியே வா...’ என்று அவர்கள் வேண்டுவர்.
மராட்டிய மன்னன் வீரசிவாஜிக்கு 'சத்ரபதி’ பட்டம் வழங்கப்பட்டது ஒரு தீபாவளி நன்னாளில்தான்.
குஜராத் மக்களுக்கு தீபாவளி தினம்தான் புது வருடப் பிறப்பு நாள். அன்றைய தினம்தான் அங்குள்ள வியாபாரிகள் புதுக்கணக்கை ஆரம்பிக்கிறார்கள்.
காசியில் அன்னபூரணி ஆலயத்தில் தீபாவளி அன்று மிட்டாய்த் திருவிழா நடைபெறும். அப்போது, சுவர்ணமயமான அன்னபூரணி வீதியுலா வருவாள். அவள் லட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பாள். பிறகு, அந்த லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும்.
சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவார்கள். தீபாவளியைச் சிறப்பித்து தபால்தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான்!
மலேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர்- ஹரி தீபாவளி.
ஜப்பானில் மூன்று நாள் கொண்டாட்டமாக தீபாவளி அமர்க்களப்படுகிறது.
ஸ்ரீகுபேர பகவான், சிவபெருமானை வழிபட்டுச் செல்வ பொக்கிஷங்களைப் பெற்றது ஒரு தீபாவளி நாளில்தான்! இந்தப் புராண சம்பவம், கீழ்வேளுர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் காரணத்தால் ஒவ்வொரு தீபாவளி அன்றும் பலவித பட்சணங்களுடன் இங்கே குபேர பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வடஇந்தியாவில், சகோதர பாசத்தை வளர்க்கும் விழாவாகவும் தீபாவளி அமைகிறது. தீபாவளி அன்று தமது சகோதரர்களின் வீடுகளுக்குச் செல்லும் பெண்கள் அவர்களுக்குப் பரிசு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் சகோதர பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
உலகெங்கும் தீபாவளி!
வட மாநிலங்களில், தீபாவளி அன்று மகாலட்சுமி தங்கள் வீடுகளில் தங்குவதாக நம்புகிறார்கள். அவர்கள், தீபாவளி வரும் அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கை எரிய விடுகிறார்கள். அந்த விளக்கில் படியும் புகைக் கரியில் இருந்து கண் மை தயாரிப்பார்கள். இந்தக் கண் மையைத்தான் அவர்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இதை, 'மோனி தீபாவளி’ என்கிறார்கள்.
வங்காளத்தில் சும்பன், நிகம்பனை சம்ஹாரம் செய்த மகா துர்கையின் உக்கிரத்தை சிவபெருமான் தணித்த நாளையே தீபாவளி என்கிறார்கள்.
மத்தியப்பிரதேசம், புதுடெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் மகாலட்சுமி தனது கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நன்னாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் லடாக், இமயமலை, அசாம், மணிபுரி, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளிலும், இலங்கை, பர்மா, கம்போடியா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், திபெத் ஆகிய நாடுகளிலும் வசிக்கும் பௌத்த மதத்தினர் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் தீபாவளியன்று பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டுத் தீயிட்டு எரிக்கும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்வதால் வறுமை விலகி, வளமை வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த வழிபாட்டின்போது, 'மூதேவியே போ... ஸ்ரீதேவியே வா...’ என்று அவர்கள் வேண்டுவர்.
மராட்டிய மன்னன் வீரசிவாஜிக்கு 'சத்ரபதி’ பட்டம் வழங்கப்பட்டது ஒரு தீபாவளி நன்னாளில்தான்.
குஜராத் மக்களுக்கு தீபாவளி தினம்தான் புது வருடப் பிறப்பு நாள். அன்றைய தினம்தான் அங்குள்ள வியாபாரிகள் புதுக்கணக்கை ஆரம்பிக்கிறார்கள்.
காசியில் அன்னபூரணி ஆலயத்தில் தீபாவளி அன்று மிட்டாய்த் திருவிழா நடைபெறும். அப்போது, சுவர்ணமயமான அன்னபூரணி வீதியுலா வருவாள். அவள் லட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பாள். பிறகு, அந்த லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும்.
சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவார்கள். தீபாவளியைச் சிறப்பித்து தபால்தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான்!
மலேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர்- ஹரி தீபாவளி.
ஜப்பானில் மூன்று நாள் கொண்டாட்டமாக தீபாவளி அமர்க்களப்படுகிறது.
ஸ்ரீகுபேர பகவான், சிவபெருமானை வழிபட்டுச் செல்வ பொக்கிஷங்களைப் பெற்றது ஒரு தீபாவளி நாளில்தான்! இந்தப் புராண சம்பவம், கீழ்வேளுர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் காரணத்தால் ஒவ்வொரு தீபாவளி அன்றும் பலவித பட்சணங்களுடன் இங்கே குபேர பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வடஇந்தியாவில், சகோதர பாசத்தை வளர்க்கும் விழாவாகவும் தீபாவளி அமைகிறது. தீபாவளி அன்று தமது சகோதரர்களின் வீடுகளுக்குச் செல்லும் பெண்கள் அவர்களுக்குப் பரிசு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் சகோதர பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
தொகுப்பு: புலவர் க.சுகுமாரன், மன்னார்குடி
?????????? ???????! - ????? ?????? - 2012-11-13
?????????? ???????! - ????? ?????? - 2012-11-13