ஒவ்வோரு வருடமும் மாசிமாதம் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்தசி திதியன்று இறைவன் சிவனாரை பிரதானமாகக் கொண்டு வழிபடும் சைவ பக்தர்களின் முக்கிய விழாவான மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
திரியோதசி திதி எனும் பார்வதி தேவியும் சதுர்தசி திதி எனும் சிவனாரும் இரவில் இணையும் இரவே சிவ-ராத்திரி ஆகும். இம்மாதிரி
சில வருடங்கள் இணையும் இணையாமலும் போகும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் சிவராத்திரி அன்று விரதம் மேற்கோள்பவர்கள் மறுநாள் பாரணை என்று சொல்லக்கூடிய சாஸ்திரீய (சாத்திரத்தில் கூறப்பட்டவாறு)
போஜனத்தை - உணவை உட்கொள்ள வேண்டும்.
பல சமயங்களில் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை வருவதால் சாஸ்த்ரீய உணவை உட்கொள்ள இயலாது. (அமாவாசை முன்னோர்களின் தினமாதலால் அனைவரும் பாரணை மேற்கொள்ள இயலாது) அவ்வாறே சிவராத்திரி தினம் எப்போதாவது சிவனாருக்கு உகந்த தினமான திங்கட்கிழமையுடன் இணையும். இவ்வாறு இணைவதும் அபூர்வம்.
இவ்வாண்டு விளம்பி வருடம் - மகாசிவராத்திரி தினம் மாசி மாதம் 20 ம் தேதி (04/03/2019) அன்று சோமவாரம் என்று சொல்லப்படும்
திங்கட்கிழமையுடன் சிவராத்திரி தினம் இணைவதாலும், மறுநாள் செவ்வாய்கிழமை யன்று பாரணை எனச்சொல்லக்கூடிய போஜனத்தை செய்ய ஏதுவாக இருப்பதாலும், இரவில் திரியோதசி திதியும் சதுர்தசி திதியும் உமை ஐயன் சந்திப்பு ஏற்படுவதாலும் மிகச்சிறப்பான மகத்துவத்தை அடைந்த நாளாக இவ்வருட மகாசிவராத்திரி ஆகிறது. மேற்சொன்ன மூன்று நியமங்களும் ஒரே நாளில் அமைவதென்பது எளிதில் ஏற்படாத அபூர்வ சிவராத்திரி.
எனவே இந்த அதி அற்புதமான சிவராத்திரி நன்னாளில் சிவாலய தரிசனம், ஜாகரணம் எனும் இரவில் கண்விழித்தல், விரதம், வீட்டில்
சிவனுக்கு பூஜைகள் செய்வது, ஆலயத்தினுல் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை அனுசரித்தால் மூன்று கோடி சிவாராத்திரி தினத்தில் சிவனாரை தரிசனம் முதலாவற்றைச் செய்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ அந்த அளவிடமுடியாத புண்ணியம் இச்சிவராத்திரியினால் கிட்டும் என ஸ்ரீமத் உத்தரகாரணாகமத்தில் உள்ள சிவராத்திரி பூஜை செய்யும் முறையைக் கூறும் படலம்(33) அறுதியிட்டு கூறுகிறது.
கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் கூட மூன்றுகோடி சிவராத்திரியை தரிசித்தல் என்பது இயலாத காரியம். எனவே ஆஸ்தீக அன்பர்கள் இவ்வாய்ப்பினை நழுவவிடாமல் மார்ச் மாதம் 4ம் தேதி திங்கட்கிழமையுடன் கூடிய சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து சிவனருளால் இக பர சுகங்களை அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Photo Courtesy
VIGSU Artography
திரியோதசி திதி எனும் பார்வதி தேவியும் சதுர்தசி திதி எனும் சிவனாரும் இரவில் இணையும் இரவே சிவ-ராத்திரி ஆகும். இம்மாதிரி
சில வருடங்கள் இணையும் இணையாமலும் போகும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் சிவராத்திரி அன்று விரதம் மேற்கோள்பவர்கள் மறுநாள் பாரணை என்று சொல்லக்கூடிய சாஸ்திரீய (சாத்திரத்தில் கூறப்பட்டவாறு)
போஜனத்தை - உணவை உட்கொள்ள வேண்டும்.
பல சமயங்களில் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை வருவதால் சாஸ்த்ரீய உணவை உட்கொள்ள இயலாது. (அமாவாசை முன்னோர்களின் தினமாதலால் அனைவரும் பாரணை மேற்கொள்ள இயலாது) அவ்வாறே சிவராத்திரி தினம் எப்போதாவது சிவனாருக்கு உகந்த தினமான திங்கட்கிழமையுடன் இணையும். இவ்வாறு இணைவதும் அபூர்வம்.
இவ்வாண்டு விளம்பி வருடம் - மகாசிவராத்திரி தினம் மாசி மாதம் 20 ம் தேதி (04/03/2019) அன்று சோமவாரம் என்று சொல்லப்படும்
திங்கட்கிழமையுடன் சிவராத்திரி தினம் இணைவதாலும், மறுநாள் செவ்வாய்கிழமை யன்று பாரணை எனச்சொல்லக்கூடிய போஜனத்தை செய்ய ஏதுவாக இருப்பதாலும், இரவில் திரியோதசி திதியும் சதுர்தசி திதியும் உமை ஐயன் சந்திப்பு ஏற்படுவதாலும் மிகச்சிறப்பான மகத்துவத்தை அடைந்த நாளாக இவ்வருட மகாசிவராத்திரி ஆகிறது. மேற்சொன்ன மூன்று நியமங்களும் ஒரே நாளில் அமைவதென்பது எளிதில் ஏற்படாத அபூர்வ சிவராத்திரி.
எனவே இந்த அதி அற்புதமான சிவராத்திரி நன்னாளில் சிவாலய தரிசனம், ஜாகரணம் எனும் இரவில் கண்விழித்தல், விரதம், வீட்டில்
சிவனுக்கு பூஜைகள் செய்வது, ஆலயத்தினுல் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை அனுசரித்தால் மூன்று கோடி சிவாராத்திரி தினத்தில் சிவனாரை தரிசனம் முதலாவற்றைச் செய்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ அந்த அளவிடமுடியாத புண்ணியம் இச்சிவராத்திரியினால் கிட்டும் என ஸ்ரீமத் உத்தரகாரணாகமத்தில் உள்ள சிவராத்திரி பூஜை செய்யும் முறையைக் கூறும் படலம்(33) அறுதியிட்டு கூறுகிறது.
கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் கூட மூன்றுகோடி சிவராத்திரியை தரிசித்தல் என்பது இயலாத காரியம். எனவே ஆஸ்தீக அன்பர்கள் இவ்வாய்ப்பினை நழுவவிடாமல் மார்ச் மாதம் 4ம் தேதி திங்கட்கிழமையுடன் கூடிய சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து சிவனருளால் இக பர சுகங்களை அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Photo Courtesy
VIGSU Artography