புண்ணியங்கள், சுகங்கள் சேர்க்கும்- இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.
oஒ ராமா வணங்குகின்றேன். ரகு குல திலகா, கருணை சொரூபனே உன்னை துதிக்கின்றேன். கருணைக்கடலில் விளையாட்டாகவே ரமிப்பவனே உன்னையெ பணிகின்றேன். வேள்விகளின் நாயகனான சூரியனின் குலத்தில் உதித்தவனே! ரகு குல திலகனே வணக்கம்.
oவனம் சென்று சுபாஹு என்ற அரக்கனை கொன்றவனே. அகல்யா என்ற கௌதமுனி மனைவிக்கு சாபம் தீர்த்தவனே. சிவதனுசை உடைத்தவனே. அதன் பயனாக ஜனககுமாரியின் பிராணநாயகன் ஆனவனே. கார்த்தவீர்யார்ச்சுனன் இழைத்த அநீதியினால் கோபமடைந்து க்ஷத்ரிய வம்சத்தின் தலைமுறைகளை அழித்ததாக கர்வப்பட்ட பிருகுராமனின் கொட்டத்தை அடக்கியவனே. வணக்கம். சாகேத ராமா வணக்கம்.
oபட்டாபிஷேகத்தை ஒதுக்கி, மனைவி சீதை மற்றும், அடக்கம் தர்மத்தின் இலக்கணமான லட்சுமணனுடன் கானகம் சென்று குகனுடைய இருப்பிடத்தை அடைந்தவனே, அதன்பின் சித்ரகூடபர்வதத்தை அடைந்தவுடன், தம்பி பரதன் உன்னை காண ஒடிவந்தான், மன்மதனும் மயங்கும் சுந்திரனே. அப்போது தானே திவ்ய ரத்னங்களிழைத்த பாதுகையில் வைபோகம் நடந்தேறியது.
oஇருளடர்ந்த தண்டகாரண்யம் சென்றபோது விராடன் என்னும் ராட்சசனைக் கொன்றவரே. மாசில்லா குணக்குன்றான நீங்கள் அகஸ்தியரின் சீடரான சரபங்க முனிவருக்கு மோட்சம் அருளியது வைஷ்ணவாஸ்திரம் போன்றது. பஞ்சவடியில் தவசீலனாய் எளிமையாய் வாழ்ந்த உம்மை கழுகுகளின் அரசான ஜடாயு வணங்கியது. கோர சொருபமான சூர்ப்பணகை தனது இறுதிப் பயணம் தேடி ஓட வகை செய்த ராமா உன்னை வணங்குகின்றேன்.
oமாயமான் உருவெடுத்து வந்த அரக்கன் மாரீசனைக் கொன்றவனே. பத்துத் தலைகளையுடைய ராவணன், ஜனகரின் மகளைத் தேடிவந்து கடத்திச் சென்றான். பாவமற்ற புண்ணிய சீலனான அந்த சூரிய குலத்தோன்றலான ராமபிரான் பம்பாதீரத்தில் ஆஞ்சநேயரை சந்தித்தார். அதன்பின் ராட்சசர்களின் நண்பன் வாலியைக் கொன்றான். உன்னை வணங்குகின்றேன்.
oவானர அரசருடன் கலந்து ஆலோசித்து வாயு குமாரனான அனுமனிடம் நூறு சூரிய ஒளிமயமான கெம்பினால் இழைக்கப்பட்ட கணையாழியைக் கொடுத்தார். அவரும் தாம் திரும்பி வரும் போது கொணர்ந்த சூடாமணியைக் கண்டவுடன் அனைத்து செல்வங்களும் மீளக் கிடைத்தாற்போல் உணர்ந்தார். சமுத்திரக் கரையில் விபீஷணர் சரணடைந்த ராமரை நான் பணிவோடு வணங்குகின்றேன்.
oஎவர் சேது அணையைக் கடலின்மேல் கட்டி அசுர வேந்தனின் சிம்மாசனத்தை உலுக்கினாரோ, எவர் தசகண்ட ராவணனை எளிதில் கொன்ற அதிதீரரோ, எவர் அக்னி பிரவேசம் புரிந்து தூய்மையை அறிவித்த ஜனககுமாரியுடன் சாகேதபுரிக்கு வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாரோ, அந்த லோக நாயகனான பத்மநாபனை பூஜிக்கின்றேன்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
oஒ ராமா வணங்குகின்றேன். ரகு குல திலகா, கருணை சொரூபனே உன்னை துதிக்கின்றேன். கருணைக்கடலில் விளையாட்டாகவே ரமிப்பவனே உன்னையெ பணிகின்றேன். வேள்விகளின் நாயகனான சூரியனின் குலத்தில் உதித்தவனே! ரகு குல திலகனே வணக்கம்.
oவனம் சென்று சுபாஹு என்ற அரக்கனை கொன்றவனே. அகல்யா என்ற கௌதமுனி மனைவிக்கு சாபம் தீர்த்தவனே. சிவதனுசை உடைத்தவனே. அதன் பயனாக ஜனககுமாரியின் பிராணநாயகன் ஆனவனே. கார்த்தவீர்யார்ச்சுனன் இழைத்த அநீதியினால் கோபமடைந்து க்ஷத்ரிய வம்சத்தின் தலைமுறைகளை அழித்ததாக கர்வப்பட்ட பிருகுராமனின் கொட்டத்தை அடக்கியவனே. வணக்கம். சாகேத ராமா வணக்கம்.
oபட்டாபிஷேகத்தை ஒதுக்கி, மனைவி சீதை மற்றும், அடக்கம் தர்மத்தின் இலக்கணமான லட்சுமணனுடன் கானகம் சென்று குகனுடைய இருப்பிடத்தை அடைந்தவனே, அதன்பின் சித்ரகூடபர்வதத்தை அடைந்தவுடன், தம்பி பரதன் உன்னை காண ஒடிவந்தான், மன்மதனும் மயங்கும் சுந்திரனே. அப்போது தானே திவ்ய ரத்னங்களிழைத்த பாதுகையில் வைபோகம் நடந்தேறியது.
oஇருளடர்ந்த தண்டகாரண்யம் சென்றபோது விராடன் என்னும் ராட்சசனைக் கொன்றவரே. மாசில்லா குணக்குன்றான நீங்கள் அகஸ்தியரின் சீடரான சரபங்க முனிவருக்கு மோட்சம் அருளியது வைஷ்ணவாஸ்திரம் போன்றது. பஞ்சவடியில் தவசீலனாய் எளிமையாய் வாழ்ந்த உம்மை கழுகுகளின் அரசான ஜடாயு வணங்கியது. கோர சொருபமான சூர்ப்பணகை தனது இறுதிப் பயணம் தேடி ஓட வகை செய்த ராமா உன்னை வணங்குகின்றேன்.
oமாயமான் உருவெடுத்து வந்த அரக்கன் மாரீசனைக் கொன்றவனே. பத்துத் தலைகளையுடைய ராவணன், ஜனகரின் மகளைத் தேடிவந்து கடத்திச் சென்றான். பாவமற்ற புண்ணிய சீலனான அந்த சூரிய குலத்தோன்றலான ராமபிரான் பம்பாதீரத்தில் ஆஞ்சநேயரை சந்தித்தார். அதன்பின் ராட்சசர்களின் நண்பன் வாலியைக் கொன்றான். உன்னை வணங்குகின்றேன்.
oவானர அரசருடன் கலந்து ஆலோசித்து வாயு குமாரனான அனுமனிடம் நூறு சூரிய ஒளிமயமான கெம்பினால் இழைக்கப்பட்ட கணையாழியைக் கொடுத்தார். அவரும் தாம் திரும்பி வரும் போது கொணர்ந்த சூடாமணியைக் கண்டவுடன் அனைத்து செல்வங்களும் மீளக் கிடைத்தாற்போல் உணர்ந்தார். சமுத்திரக் கரையில் விபீஷணர் சரணடைந்த ராமரை நான் பணிவோடு வணங்குகின்றேன்.
oஎவர் சேது அணையைக் கடலின்மேல் கட்டி அசுர வேந்தனின் சிம்மாசனத்தை உலுக்கினாரோ, எவர் தசகண்ட ராவணனை எளிதில் கொன்ற அதிதீரரோ, எவர் அக்னி பிரவேசம் புரிந்து தூய்மையை அறிவித்த ஜனககுமாரியுடன் சாகேதபுரிக்கு வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாரோ, அந்த லோக நாயகனான பத்மநாபனை பூஜிக்கின்றேன்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !