• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இதுதாங்க அர்த்தம்!

Status
Not open for further replies.
இதுதாங்க அர்த்தம்!

[FONT=SHREE_TAM_OTF_0802]எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]முனிவர் சொன்னார். ""ரொம்ப சுலபம்..."நாரம்' என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார். [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாராயணனிடமே ஓடினார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதர் வண்டிடம் ஓடினார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?''[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதர் நாராயணனிடம் திரும்பினார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்..அப்படியானால் அது தானே அர்த்தம்,'' என்றார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""அப்படி நான் கேள்விப் பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,'' என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது. [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை "நாராயணா' என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!'' பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""பெருமாளே! அதற்கு அர்த்தம் "அது'தான்...உறுதியாகி விட்டது.
[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]"நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்''.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா! முடியாது'' என்றார் நாரதர்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பிவிட்டார் பெருமாள்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!'' எனக்கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!'' என்ற நாராயணனை,"" அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் "நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி... அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!'' என்றான்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]""ஆகா! "நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப்புரிந்து கொண்டார் நாரதர்.[/FONT]
 
Mrs.Raji Ram,
Please write your poem immediately,as I am very much interested to know how such a story could be translated into a poem.I am very poor even in writing tamil without
mistakes, as you yourselves have corrected me several times. I think you must have taken tamil literature during your college career and have passed with distinction
 

நாராயணா எனும் திவ்ய நாமம்!

சந்தேகம் வர வைத்துச் கலகம் செய்யும் நாரதரே
சந்தேகம் வந்து குழம்பிப் போகக் காரணம் என்ன?

'நாராயணன்' என்றால் என்ன பொருள் என்ற ஐயம்!
'நாராம் என்றால் தண்ணீர்; அயனன் என்றால் சயனம்;

கடல் நீரிலே சயனித்திருப்பவன் நாராயணன்', என்று
கட கடவென விளக்கம் ஒரு முனிவர் சொல்ல, அதில்

திருப்தி அடையாத நாரதர், நாராயணனையே வினவ,
'திருப்தியான பதிலை நர்மதைக் கரையில் உள்ள ஒரு

வண்டு சொல்லும்' என்றிட, நாரதர் கேட்டவுடனேயே
வண்டு சுருண்டு மாண்டு போய்விட, மிரண்ட நாரதர்

ஓடி வந்து கூற, நாராயணன் ஒரு கிளியைக் காட்டிட,
ஓடிச் சென்று கிளியைக் கேட்டதும், அதுவும் இறக்க,

கன்று ஒன்றை அடுத்ததாகக் காட்ட, மருண்ட நாரதர்,
கன்றைக் கொன்ற பாவம் வேண்டாமெனப் பயந்தும்,

நாராயணன் தந்த தைரியத்தால் அதனிடமும் வினவ,
நாராயணன் நாமம் கேட்ட அதுவும் மாண்டு போனது!

இனிமேல் பூச்சி, பறவை, விலங்குகளைக் கேட்காமல்,
மனிதனான காசி இளவரசனை வினவுமாறு பணிக்க,

அரச தண்டனை வருமோ என்ற அச்சத்துடன், அவரும்,
அரச குமாரனை வினவ, பணிவுடன் பதில் உரைத்தான்!

'நாராயணன் பெயரைக் கேட்டவுடன், வண்டாக இருந்த
நான் கிளியாகப் பிறந்து, பின் கன்றாகப் பிறந்து, பின்

மனிதனாக உயர்ந்துவிட்டேன்! அதிலும் ஒரு சாதாரண
மனிதனாக அல்லாது, செல்வச் செழிப்பில் உதித்தேன்!

தொடர்ந்து அதே திவ்ய நாமத்தைச் சொல்லி, முடிவில்
உயர்ந்த வைகுண்டப் பதவியும் அடைவேன்!' இவ்வாறு

நாராயண திவ்ய நாமத்தின் மகிமையை அறிந்த நாரதர்,
'நாராயண! நாராயண!' என்று உலாவைத் தொடர்ந்தார்!

:pray2: . . . :hail:
 
Dear Mrs.Raji Ram,
I am really proud of you for having composed a poem within a very short time that too an excellent one. May God bless you with "Deerka Sumangali Bhava"
Now one request. How you are typing in tamil when there is no facility in this forum. Have I to download and install a Tamil software for typing in tamil? If there is any
facility in this forum itself please guide me.
 

Dear P S N Sir,

I use G mail compose page for typing Tamil fonts. Now it is made easier than it used to be!

After typing, the portion is copy pasted in our forum 'reply' box. If you don't have a gmail

account, please get one right now! That takes only a few minutes. :)
 
........ Have I to download and install a Tamil software for typing in tamil? If there is any
facility in this forum itself please guide me.
Dear Sir,

If you wish to work off line you may download from this link:

Google Input Tools for Windows

Somehow I prefer the compose page in gmail which is very easy!

a, aa, i, ii, u, uu, e, E, ai, o, O, au, are for uyir ezhuththu
H for ayudha ezhuththu (ஃ)

k, ng, ch (s), nj, t, N, th, n, p, m, y, r, l, v, zh, L, R, n for mey ezhuththu


ka, kaa, ki, kee etc for uyir mey ezhuththu.

S for ஸ், sh for ஷ், ksh க்ஷ், sri for
ஸ்ரீ
 

Dear P S N Sir,

I use G mail compose page for typing Tamil fonts. Now it is made easier than it used to be!

After typing, the portion is copy pasted in our forum 'reply' box. If you don't have a gmail

account, please get one right now! That takes only a few minutes. :)

Dear Mrs.Raji Ram,
I have got the facility of Tamil fonts in my G mail.Now as per your version we can type the text in compose page, copy and then paste it in any other page including forum.
Thank you for your nice idea.
 
........I think you must have taken tamil literature during your college career and have passed with distinction
This is my introduction that I posted in our forum:

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாலும்,
புனிதமான இசைக்கலையே என்னை ஈர்த்தது!


சிறு வயதில் தாத்தா 'ஹரிதாஸ' நாராயணன்
பெருமளவு இசைஞானம் வழங்கினார்! பின்னர்

சிங்காரச் சென்னையில் குடியேற்றம்! மீண்டும்
பாங்காக இசை மேதை திரு இராமநாதனின் சிட்சை!

கற்பூர புத்திக் குழந்தைகள் முதலாக, எளிதில்
ஏற்ற முடியாத வாழைமட்டைப் பெரிசுகள் வரை,

இசை பயிற்றுவிப்பதில் ஈடுபாடு கொண்டு
இசை பரப்பும் பணியைச் செய்கின்றேன்!

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை மிகவும்
யதார்த்த நடையில் எழுதவும் விருப்பமே!

உதிர்ந்த சில படைப்புக்களை தமிழ் விரும்பிகளுடன்
பகிர்ந்து கொள்ள இதன் மூலம் முனைகின்றேன்!

ஆசையுடன் எனை நக்கீரி என்று அழைக்கும் என்
பாசமிகு அண்ணனை நன்றியுடன் நினைக்கின்றேன்!

ஆவலுடன் என் எழுத்தை ரசித்து ஊக்குவிக்கும்
ஆவல் கொண்ட இதயங்களை வணங்குகின்றேன்!

புதிய பக்கங்கள் இணையும்போது அவற்றுக்கு
இனிய வரவேற்பையும் எதிர்பார்க்கின்றேன்!

அன்புடன்,
ராஜி ராம்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top