அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,ஈச்சனா&#

Status
Not open for further replies.
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,ஈச்சனா&#

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,ஈச்சனாரி.

மூலவர் : ஸ்ரீவிநாயகர்
பிறபெயர் : விக்னேஸ்வர்
சிறப்பு : பிரம்மாண்டம்
உயரம் : 5 அடி
பருமன் : 3 அடி
அழகு : கோபுரம்
விசேசம் : நட்சத்திரபூஜை
விழா : சதுர்த்திவிழா
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோவை

பிரார்த்தனை

*விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்றகாகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை,உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப்பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

நேர்த்தி கடன்

சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன.இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் , திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்

கோயிலின் சிறப்பம்சம்

நட்சத்திரபூஜை: இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும்.திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம் , குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருவது மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

தலபெருமைகள் :


*5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம்.
*கோவை மாவட்டத்தல் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில்.
*நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.
*அழகிய கோபுரம்,மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில்.



தல வரலாறு :


மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாம்ல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது



முக்கிய திருவிழாக்கள்

*விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
*சித்திரைத் திருவிழா 2நாள் திருவிழா
*மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி,அம்மாவாசை, சதுரத்தி நாட்களில் இத்திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் தைபூசம்,கார்த்திகை தீபம் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்



பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கோவை 9 கி.மீ.
தங்கும் வசதி :* குடும்பத்தோடு வருபவர்கள் கோவை நகரிலேயே தங்கி,கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.

போக்குவரத்து வசதி : *கோவை தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரம் என்பதால் கோவை நகருக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.

*கோவை நகரை ஒட்டினாற்போல் ஈச்சனாரி இருப்பதால் குடும்பத்தோடு வருகிறவர்கள் கோவையிலிருந்து கோயிலுக்கு செல்லலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் கோவை.
*அருகிலுள்ள விமான நிலையம் கோவை











???????????????: ????????? ???????? ????????????,????????.

???????? ???? ??? ???????? ???????? ???????! | Webdunia Tamil

????????? ???????? ????????????, ????????, ????.
 
Status
Not open for further replies.
Back
Top