• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்மன் காயத்திரி மந்திரங்கள்!

praveen

Life is a dream
Staff member
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

######

அம்மன் காயத்திரி மந்திரங்கள்!
(சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன், சரதா தேவி,
சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி,
பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு)
######




ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ
(கல்வியில் சிறந்து விளங்க)

”ஓம் வாக்தேவயை ச வித்மஹே
விரிஞ்சி பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்”

(நாவின் ஒலிக்கு மூலகாரணமானவளே,
நான்முகனின் நாயகியே, தினமும் உன்னை
பணிகின்றேன் சரஸ்வதி தேவியே சரணம்.)

######



ஸ்ரீ கலைவாணி காயத்ரீ
(சங்கீத ஞானம் பெற)

”ஓம் நாத ரூபிண்யை ச வித்மஹே
வீணா தரணீ ச தீமஹி
தந்நோ கலாவாணி ப்ரசோதயாத்”

(வேதங்களின் வடிவான வாணியே,
வீணையை வைத்திருப்பவளே,
கலைமகளே சரணம்.)
######
ஸ்ரீ அன்னபூரணி காயத்ரீ
(இல்லத்தில் அன்னம் நிறைந்திருக்க)

”ஓம் பகவத்யை காசிவாசின்யை ச வித்மஹே
மாஹேச்வர்யை ச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்”

(பஞ்சமிலா வாழ்வுதரும் பகவதியே, உலக உயிர்களுக்கு
அன்னமளிக்கும் மகேசுவரியே, காசி
அன்னபூரணி தாயே அருளவாய்.)

######



ஸ்ரீ மாரியம்மன் காயத்ரீ
(வெம்மை நோய் பாதிப்பு குறைய)

”ஓம் மங்கள காரணீ ச வித்மஹே
மனோகர ரூபிணீ ச தீமஹி
தந்நோ மாரி ப்ரசோதயாத்”

(மங்கள காரணியே, மகிழ்வருளும்
அன்னையே, மண்ணுலக உயிர்களைக்
காக்கும் மாரித்தாயே போற்றி.)

######



ஸ்ரீ சரதா தேவி காயத்ரீ
(கலைகளில் மேன்மை பெற்றிட)

”ஓம் ஞான ரூபாய ச வித்மஹே
புத்தி தாராயை ச தீமஹி
தந்நோ சாரதா ப்ரசோதயாத்”

(ஞானத்தின் வடிவமே, அறிவான அறுபத்தி
நான்கு கலைகளையும் அறிந்தவளே
உன்பதம் பணிந்தேன் சாரதையே சரணம்.)

######



ஸ்ரீ சந்தோஷிமாதா காயத்ரீ
(வாரிசு வாழ்விற்கு நன்மை ஏற்பட)

”ஓம் கணேச புத்ரீ ச வித்மஹே
சுப லாப சோதரீ ச தீமஹி
தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்”

(தும்பிக்கையான் புதல்வியே, சுபன் லாபன்
தமக்கையே நம்பிக்கையுடன் தொழுதேன்
நலம் புரிவாய் சந்தோஷி போற்றி.)

######



ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காயத்ரீ
(துயரம் நீங்கி செல்வம் பெருக)

’ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே,
விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி
தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்”

(மகிஷனை அழித்த விஷ்ணுவின்
பத்தினியே வறுமை துயரம்
துடைப்பாய், வரமருள் துர்க்கையே.)

######



ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரீ
(வறுமை நீங்கி செல்வம் பெருக)

’ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே,
விஷ்ணு பத்னியை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்”

(மகாதேவியே, லட்சுமியே, விஷ்ணுவின்
பத்தினியே உன் பார்வை
என்மீது விழட்டும், வரமருள் தாயே.)

’ஓம் கமலவாஸின்யை ச வித்மஹே,
பத்ம லோசன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்”

(தாமரை மலர்மீது அமர் தாயே, உன்
பதும விழி என்னையும் பார்க்கட்டும்,
வறுமை விலக வரமருள் தாயே.)

######



ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி காயத்ரீ
(குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு)

”ஓம் பால ரூபாயை ச வித்மஹே
ஸதாநவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்”

(மழலை வடிவான மாதாவே, அழல்கண்
அரனின் தேவியே, கருணை மழை
பொழியும் பலா திரிபுரசுந்தரியே போற்றி.)

######



ஸ்ரீ மீனாட்சி காயத்ரீ
(வாழ்வில் உயர்வுகள் பெற்றிட)
”ஓம் த்ரீநேத்ரிணீ ச வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ மீனாக்ஷி ப்ரசோதயாத்”

(முக்கண்ணனின் பத்தினியே,
உன் அருளால் நாளும் மண்ணுயிர்
காக்கும் மீனாட்சியே போற்றி.)

######



ஸ்ரீ ராதா காயத்ரீ
(பிடித்த மணவாளன் அமைந்திட)

”ஓம் க்ருஷ்ண மோஹின்யை ச வித்மஹே,
விஸ்வ ஜனன்யை ச தீமஹி
தந்நோ க்ரிஷ்ணப்ரேமி ப்ரசோதயாத்’

(ஸ்ரீ கிருஷ்ணன் மேல் மாறா அன்பு
கொண்டவளே, நல்லோர்க்கு நல்வாழ்வு
தந்திடுபவளே, க்ருஷ்ண ப்ரியையே போற்றி.)

”ஓம் கோபால மோஹின்யை ச வித்மஹே,
கிருஷ்ணாங்கார்த்த சரீரிண்யை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்’

(கோபாலன் மேல் மாறா அன்பு கொண்டவளே,
சரீரம் உள்ளவரை க்ருஷ்ணனை மறவாத ராதையே
மாபாதகம் போக்கும் மாதவத்தோய் போற்றி.)

######



ஸ்ரீ ஸாகம்பரி காயத்ரீ
(பயிர்கள் செழித்து விளைச்சல் பெருகிட)

”ஓம் கால ரூபிண்யை ச வித்மஹே,
தான்ய பல வ்ருத்திகாயை ச தீமஹி
தந்நோ ஸாகம்பரி ப்ரசோதயாத்’

(உரிய காலத்தில் தானியங்களை விருத்தி செய்பவளே,
கனிவோடு காத்து அருள் புரிந்து தானியங்கள் செழித்து
பஞ்சமில்லா வாழ்வு அருள்வாய் ஸாகம்பரியே.)

######



ஸ்ரீ காமதேனு காயத்ரீ
(எண்ணங்கள் நிறைவேற)

”ஓம் ஸூரப்யை ச வித்மஹே
மனோ ரஞ்சிதாய தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்”

(கோரிக்கைகள் பலித்திட அருள் புரிந்து நேர்
வழியில் வாழ பாரினில் வழிபடுவோர்க்கு
அருளும் கோமாதாவே போற்றி.)

######

ஸ்ரீ மகாமேரு காயத்ரீ
(அனைத்துகுறைகளும் நீங்க)

”ஓம் யந்த்ர வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தந்தரா யந்திர ப்ரசோதயாத்”

”ஓம் மந்த்ர ராஜாய வித்மஹே
மஹா மந்த்ராய தீமஹி
தந்தோ மந்திர ப்ரசோதயாத்”

(மந்திர, யந்திரங்களின் தலைமை சக்தி, ராஜாவாக திகழும்.)

#####


சப்த மாதா காயத்திரி

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும்
தொடர்ந்த வினைகளே! அப்பமும் பழம் அமுதும்
செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

######

சப்த மாதா காயத்திரி மந்திரங்கள்!
(ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி,
இந்த்ராணி, பத்ரகாளி/சாமுண்டா, துர்கை, பகவதி)

######



ஸ்ரீ ப்ராஹ்மி காயத்ரீ
(தோல் நோய் நீங்கி முக எழில் பெற)

”ஓம் ப்ரஹ்ம சக்த்யை ச வித்மஹே,
பீதவர்ணாயை ச தீமஹி
தந்நோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்’

(மஞ்சள் பட்டு அணிந்த தேவியே, கஞ்சனின்
சக்தியே, நெஞ்சில் வைத்தேன், உன்னைத்
தஞ்சமடைந்தேன் ப்ராம்மி தாயே.)

######



ஸ்ரீ மஹேஸ்வரி காயத்ரீ
(மங்களங்கள் பெருக)

”ஓம் மஹேஸ்வர ஹம்சாயை ச வித்மஹே,
சூல ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


(வெண்பட்டு அணிந்த முக்கண்ணன்தேவியே, சூலம்
கரத்தில் ஏந்திய மஹேஸ்வரி தாயே, முக்காலமும்,
தஞ்சமடைந்தேன் மஹேஸ்வரி தாயே.)

######



ஸ்ரீ கௌமாரி காயத்ரீ
(ரத்த உறவுகள் நலமுடனிருக்க)

”ஓம் சிகிவாஹனாய வித்மஹே,
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்’

(மயில் வாகனம் கொண்டவளே வடிவேலன்
துணையை பெற்றவளே, சீரான அருள்
தாராயோ கௌமாரி தாயே.)

######



ஸ்ரீ வைஷ்ணவி காயத்ரீ
(எதிர்பாரா ஆபத்துக்கள் விலக)

”ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே,
சக்தி ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்’

(சங்கடங்கள் நீங்க, சக்கரத்தை கரத்தினில்
கொண்டு விரைந்து வருவாய், உன்னை
சரணடைந்தேன் வைஷ்ணவி தாயே.)

######



ஸ்ரீ வராஹி காயத்ரீ
(தடைகள் அகன்று ஏற்றமான வாழ்வு கிட்ட)

”ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

(தண்டமுடன் கலப்பையை ஏந்தி சண்டையிடும்
தீவினைகளை அகற்றுவாய் சியாமளாதேவியே
பணிந்து வேண்டினேன் வராஹி தாயே.)

”ஓம் மகிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

(எருமைக் கொடியுடையவளே உன் பெருமை
பரவி நிற்க தொழுதவர் வாழ்வில் கருமை
வினைநீங்க அருள்வாய் வராஹி தாயே.)

######



ஸ்ரீ இந்த்ராணி காயத்ரீ
(இல்லறம் சிறந்திட)

‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

(கருமைநிற இந்திரையே, வஜ்ரத்தை ஆயுதமாக
கொண்டவளே, அரு நலம்தான் உன்னருளே, பெருங்குணம்
கொண்டு காப்பாய் நிழல் தரு இந்திராணி தாயே.)

######



ஸ்ரீ பத்ரகாளி/சாமுண்டா- காயத்திரீ
(நரம்புக் குறைகள் நீங்க)

“ஓம் க்ருஷ்ண-தூம வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

(கரு நீலப் புகை கிருஷ்ணனின் நிறத்தைக் கொண்டவளே,
சூலத்தை ஆயுதமாக ஏந்தியவளே, சாமுண்டி தாயே,
பத்ரகாளியே என்னை காத்து அருள்வாய்.)

######



ஸ்ரீ துர்கை காயத்திரீ
(மாங்கல்ய பாக்யம் நிலைத்திட)

’ஓம் காத்யாயனாய வித்மஹே,
கன்னியாகுமார்யை ச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்”

(காத்யாயன முனியின் மகளே, காத்திடுவாய்
மாங்கல்யம், கன்னிகையே மாத்திடுவாய்
மனத்துயரையே மாதாவே சரணம்.)

######



ஸ்ரீ பகவதி காயத்திரீ
(எதிர்ப்புகள் நீங்க)

‘ஓம் பூஹா சூலின்யை ச வித்மஹே
மகா துர்க்காயை தீமஹி
தன்னோ பகவதி ப்ரசோதயாத்”

(சிவனின் உக்ரவடிவான சூலினியே, சரபேஸ்வரரின்
இறக்கையில் இருப்பவளே, எதிர்களின்
தாக்குதல்களிலிருந்து காப்பாய் பகவதி தாயே!)

######


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

######
 

Latest ads

Back
Top