• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"

Status
Not open for further replies.
அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"

கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் 'ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மா'வந்தார். பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், "என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?" என்று பெரியவாகேட்டார்கள். அங்கே
இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.
"என்னது" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா"அக்ரமம் என்று திகைத்துப் போனார்கள்.


"ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, "பெரியவாஅனுக்ரஹத்திலே நன்னா
நடந்துண்டு இருக்கு" என்று பதில் சொன்னார்.விஷயம் வேறுன்றுமில்லை.

பெரியவாள் உத்தரவுப்படி "அநாதை பிரேத ஸம்ஸ்கார சமிதி" என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உரிய முறையில் ஸம்ஸ்காரம்செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார்.


அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம்கிடைக்கும்" என்பது சாஸ்திர வாக்கியம் இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக "அசுவமேதயக்ஞம் நடக்கிறதா" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் எனபது தெரிய வந்தது.
அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக சேவை,பெரியவாளின் சேவாகாரியங்களில் மிக முக்கியமானது.






Source: Varagooran Narayanan (FB)
 
Status
Not open for further replies.
Back
Top