• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அகத்தியர் பெருமானின் பூஜை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்.

தியானச் செய்யுள்

****
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

பிறகு பின்வரும் நூற்றிஎட்டு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.



அகத்திய பெருமானின் 108 போற்றி
******
1.ஓம் அகத்தில் ஈசனை வைத்தவா போற்றி
2.ஓம் அகத்தில் நின்ற சற்குருவே போற்றி
3.ஓம் அவென அகரத்தின் பொருளே போற்றி
4.ஓம் அவெனு அரவத்தின் மூலமே போற்றி
5.ஓம் அகத்தீச் சுவரத்தின் அன்பே போற்றி
6.ஓம் அரவத்தின் இலக்கணம் வகுத்தாய் போற்றி
7.ஓம் அட்டமாசித்திகள் கண்டவா போற்றி
8.ஓம் அட்டவசுக்களின் அன்பே போற்றி
9.ஓம் அஞ்சனப்பொருளை கண்டவா போற்றி
10.ஓம் அஞ்செழுத்தில் ஆதாரம் கண்டவா போற்றி
11.ஓம் அசுவணியத் தேவரின் அன்பே போற்றி
12.ஓம் அசைவர கிடைத்த அன்பே போற்றி
13.ஓம் அண்ட மெலாந்திரியும அறிவே போற்றி
14.ஓம் அண்டப் பொருளை கண்டவா போற்றி
15.ஓம் அகிலத்தின் நாத குருவே போற்றி
16.ஓம் அகவிலா அவிழ்தம் தந்தோனே போற்றி
17.ஓம் அறங்களை வகுத்த குருவே போற்றி
18.ஓம் அறுவகலை அறுபதின் குருவே போற்றி
19.ஓம் ஆதிசக்தியின் அருளே போற்றி
20.ஓம் ஆதியெந்தத்து அருளே போற்றி
21.ஓம் ஆதி மருந்தின் மூலமே போற்றி,
22.ஓம் ஆதி அருங்கலையை தந்தவா போற்றி,
23.ஓம் ஆகாயசத்திர குருவே போற்றி,
24.ஓம் ஆக ஆகமங்களின் குருவே போற்றி,
25.ஓம் இகரத்தின் இன்ப நிலையே போற்றி,
26.ஓம் இருவினைபோக்கு கலையே போற்றி,
27.ஓம் இலைகளின் மருந்து கண்டாய் போற்றி,
28.ஓம் மலைகளில் பாதம் பதித்தோய் போற்றி,
29.ஓம் ஈசனி்ன் அருளை பெற்றோய் போற்றி,
30.ஓம் ஈஸ்வரியின் சக்தி பெற்றோய் போற்றி,
31.ஓம் உபரநாதன் அருளே போற்றி,
32.ஓம் உபாய பொருளின் மருத்துவா போற்றி,
33.ஓம் ஊனங்கள் சரியாக்குமன்னவா போற்றி,
34.ஓம் ஊற்றில் செய்நீர் கண்டவா போற்றி,
35.ஓம் என்றும் இளமையாய் இருந்தவா போற்றி,
36.ஓம் என்றும் மறவாத இலக்கியவா போற்றி,
37.ஓம் ஏழுலகம் புகழ திரிந்தவா போற்றி,
38.ஓம் ஏக்கங்களைய மருந்தீவாய் போற்றி,
39.ஓம் ஏப்பமாய் வாதாபியை செரித்தாய் போற்றி,
40.ஓம் ஏகாந்த சொருபமானாய் போற்றி.
41.ஓம் ஐயனை தன்னுள் வைத்தவா போற்றி,
42.ஓம் ஐங்கரனின் அருள் பெற்றாய் போற்றி,
43.ஓம் ஒன்றிய ஞானத்தனிவே போற்றி,
44.ஓம் ஒற்றிய மருந்தின் ஒளியே போற்றி,
45.ஓம் ஓலையில் எழுதிய உபாத்தியாயா போற்றி,
46.ஓம் ஓலையில் யட்டமா சித்திவைத்தவா போற்றி,
47.ஓம் ஔவையின் இலக்கிய வகையே போற்றி,
48.ஓம் ஔவையம் இல்லா துகையே போற்றி,
49.ஓம் கலைகளின் ஞான குருவே போற்றி,
50.ஓம் கலைகளின் வேண குரு மருந்தே போற்றி,
51.ஓம் ஙானஞான குருவே போற்றி,
52.ஓம் ஙனவேதியானவா போற்றி,
53.ஓம் கங்காதரனின் தயையே போற்றி,
54.ஓம் சங்கீதத்தில் ராவணனை வென்றவா போற்றி,
55.ஓம் ஞானமருந்தின் ஞானமே போற்றி,
56.ஓம் ஞானகுரு பூரணமே போற்றி,
57.ஓம் டகாரவித்தை கொடுத்தவா போற்றி,
58.ஓம் டகாரசித்து கண்டவா போற்றி,
59.ஓம் வணங்கிடு வைத்திய குருவே போற்றி,
60.ஓம் குணங்கிடு நோயை தீர்த்தவா போற்றி
61.ஓம் தத்துவங்கடந்த தவஞானியே போற்றி,
62.ஓம் தத்சத்தானந்த தருவாய் போற்றி,
63.ஓம் நாதியானதியின் பொருளே போற்றி,
64.ஓம் நாதாந்த சித்து காட்டினாய் போற்றி,
65.ஓம் நீதிகளை காக்க விரைந்தாய் போற்றி,
66.ஓம் நதிகளை கடந்த நாதனே போற்றி,
67.ஓம் நாடியில் நாலாயிரம் வைத்தாய் போற்றி,
68.ஓம் நாடிநரம்பின் நோய் வகுத்தாய் போற்றி,
69.ஓம் பாடித்திரிந்த பறவையே போற்றி,
70.ஓம் பாடி பண்ணிராயிரம் வைத்தாய் போற்றி,
71.ஓம் தேடித்திருந்திடு திருவருளே போற்றி,
72.ஓம் வாடிவருவோர்க்கு வாழ்வே போற்றி,
73.ஓம் ஓடித்திரியுவெல்லாமே போற்றி,
74.ஓம் நாடித்தந்நிடு திருவருளே போற்றி,
75.ஓம் நாடிவருவோர்க்கு வாழ்வே போற்றி,
76.ஓம் காடியில் வைப்பு குருவே போற்றி,
77.ஓம் தாடியில் அருளினை கண்டாய் போற்றி,
78.ஓம் சாடியில் நவபாஷய கண்டாய் போற்றி,
79.ஓம் நாடியில் நோய்காண கொடுத்தவா போற்றி,
80.ஓம் பசும்பொன்னாக்கு மருத்துவனே போற்றி
81.ஓம் பேசும் தமிழின் குருவே போற்றி,
82.ஓம் வீசும் காற்று கணக்காளனே போற்றி,
83.ஓம் காசும் வீசமும் கண்டவா போற்றி,
84.ஓம் ஞானத்தின் ஞான குருவே போற்றி,
85.ஓம் வானத்தின் ஞான குருவே போற்றி,
86.ஓம் யாகார மெய்ஞானம் கண்டாய் போற்றி,
87.ஓம் சிகார உள்ஞானம் கண்டாய் போற்றி,
88.ஓம் மாகார பிஜத்தை கண்டாய் போற்றி,
89.ஓம் உகார விகாரம் கண்டாய் போற்றி,
90.ஓம் லகார வகை லட்சமே போற்றி,
91.ஓம் சகார விதை மருத்துவமே போற்றி,
92.ஓம் விதியை வெல்லு வித்தையே போற்றி,
93.ஓம் சதியை தகர்க்கு சற்குருவே போற்றி,
94.ஓம் மழலை சொல்லின் மணியே போற்றி,
95.ஓம் விழலை புல்லின் மருந்தே போற்றி,
96.ஓம் ஓலையில் எழுதிய உபாத்தியா போற்றி,
97.ஓம் மூலையில் ஒளிக்கு முற்குருவே போற்றி,
98.ஓம் வீணை மீட்டிய வித்தகா போற்றி,
99.ஓம் நாதத்தால் குன்றை கரைத்தவா போற்றி,
100.ஓம் நானையருக்க வைத்தவா போற்றி,
101.ஓம் கீதத்தால் ராவணனை யடக்கியவா போற்றி,
102.ஓம் வாதத்தில் வேதம் கண்டவா போற்றி,
103.ஓம் பாதத்தில் வேதம் கண்டவா போற்றி,
104.ஓம் வணங்கிடவே மனதையீவாய் போற்றி,
105.ஓம் குணங்காதிருக்க யருள்வாய் போற்றி,
106.ஓம் எண்ணுளம் வொளியாய் இருப்பாய் போற்றி,
107.ஓம் கண்ணொளியாக நிற்பாய் போற்றி,
108.ஓம் போற்றி அகத்திய குருவே போற்றி போற்றி.

நிவேதனம்:-
****
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:-
******
இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
கல்வித்தடை நீங்கும்.
புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
முன்வினை பாவங்கள் அகலும்.
பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
சகலவிதமான நோய்களும் தீரும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அகத்தியர் சிறப்பு பெயர்கள்.
******
தமிழ் முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
மாதவ முனிவன் (அதிக தவம் செய்ததால்)
மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
திருமுனி (உயர்வுக்குரியவர்)
முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

அகத்தியரின் பொன்மொழிகள்:
*******
1.உனக்கு வழி காட்டும் புனிதநூல் உன்னால் மட்டுமே எழுதப்பட முடியும்.அது உன்னுடைய அனுபவங்களைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்.
2.அன்பு அடுத்தவருக்கு சுதந்திரம் தரும். அன்பு பொறுப்பைக் கொடுக்கும்.
3.புது மனிதன் மரங்களில், பறவைகளில், நதியில், கடலில், மலைகளில், நட்ஷத்திரங்களில் உயிர்துடிப்போடு உள்ள கடவுளை காண்பான்.
4.பிரபஞ்சம் என்பது தொடர்ந்த படைப்பாற்றல்தான். அது ஏதோ யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. அதுவே தெய்வீகமானதுதான்.
5.பயமின்மை என்பது முழுமையாக பயத்தில் இருந்து கொண்டே அதை தைரியமாக சந்திப்பதாகும்.


1683428237098.png
 

Latest ads

Back
Top