இன்று மார்கழி திருவோணம் நக்ஷத்திரம், சுவாமி தேசிகனின் மாச திரு
நக்ஷத்திரம்.
இந்நன்னாளில் நாம் சுவாமி தேசிகனின்
" ஸ்ரீ கோதாஸ்துதி "
யினை சிறிது அனுபவிப்போம்.
"ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||" (ஸ்லோ.1)
"கோதாஸ்துதி" என்பது கோதை நாச்சியாரின் புகழ் பாடும் அற்புத க்ரந்தமாகும். "ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" - கோதை என்னும் பெயர் கொண்டு, விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வாரின் குலத்தில் வந்து அவதரித்து, அந்தக் குலத்திற்கே பெருமகிழ்ச்சியை அளித்த பிராட்டியே" என்று ஆண்டாளைப் புகழ்ந்துள்ளார் ஸ்வாமி. "விஷ்ணுசித்தரின் குலம்" என்றால் என்ன என்பதை அறிவோம். "எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் என்று பெருமானுக்குத் தான் அருளிச்செய்த "திருப்பல்லாண்டு" என்னும் பிரபந்தத்தில் உரைத்துள்ளார் பெரியாழ்வார். அதாவது, இதுவே இவர்களது குலம் - எதுவென்றால், பெருமானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு தொண்டாற்றுவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள் இவர்கள். தமக்கு முன்னோர்கள் அனைவரும் இதைத்தானே செய்து காட்டினார்கள் ஆகையால், நானும் அவர்களின் காட்டிய வழியிலேயே உனக்குத் தொண்டு செய்துகொண்டு இருப்பேன் என்று தெரிவிக்கிறார் பெரியாழ்வார். அப்படிப்பட்ட "தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகும் குலத்தில், புதல்வியாய் வந்து அவதரித்தவளே என்று அழைத்து கோதையைப் புகழ்கிறார் ஸ்வாமி தேசிகன்.
கோதையும் திருப்பாவையில் "உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று அருளிச்செய்தாள்.
அடுத்த வரியில், "ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்" என்கிறார் ஸ்வாமி. அதாவது, ஸ்ரீரங்கராஜனான திருவரங்கநாதன் என்னும் கற்பக விருக்ஷத்தையே எப்போதும் சார்ந்து நிற்பவள் கோதை நாச்சியார் என்று அர்த்தம். இப்படி அவனைச் சார்ந்து நிற்பதாலேயே இவள் தேஜஸ் கொண்டு திகழ்கிறாள். " கோதையும் எம்பெருமானுக்குப் "பாமாலைகள்" சூடி, அவனையே தனது மணாளனாகச் சூடிக்கொண்டாள்.
அடுத்து, "ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளியுள்ளார் சுவாமி தேசிகன். அதாவது, "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்றால் பொறுமையில் பூமிப்பிராட்டியைப் போலே என்றும், அந்த பூமிப்பிராட்டியே இந்தப் பூவுலகில் வந்து ஆண்டாளாய் அவதரித்துள்ளாள் என்றும், நம் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, அவைகளை விலக்கி, நற்கதி அளிக்கும் கருணையே வடிவானவள் என்றும் அர்த்தம். "கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளிச்செய்து, கருணையில் பூமிப்பிராட்டியை ஸ்ரீதேவி நாச்சியாருக்கு நிகராகக் கூறுகிறார். ஆனால், பூமிப்பிராட்டியைக் காட்டிலும் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே கருணையில் சிறந்தவளாகக் கருதப்படுகிறாள். "திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாரென்கொல்" என்று அருளிச்செய்துள்ளார் பொய்கையாழ்வார் அதாவது, ஸ்ரீதேவி பூதேவி -மண்மகள்\ நீளாதேவி (ஆய்மகள்] ஆகிய மூவரோடும் கலக்கும்போதும், ஸ்ரீதேவியான பெரியபிராட்டிக்கே அற்றுத் தீர்ந்ததாக இருக்கும்" என்று அர்த்தம். இருப்பினும், சில விஷயங்களில் பூமிப்பிராட்டி எப்படி ஸ்ரீதேவி நாச்சியாரை மிஞ்சுகிறாள் என்று பார்த்தால், எம்பெருமான் நம்மைப் பாவம் செய்தவர்கள் என்று விலக்கி விடுகிறான்; அப்போது, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் குறுக்கிட்டு, "பாவம் செய்யாதவர்கள் எவர் உண்டு பூவுலகில்?" என்று நமக்காகப் பரிந்து பேசி, நமக்கு நற்கதியைப் பெற்றுத் தருகிறாள். ஆனால், பூமிப்பிராட்டியோ "பாவமா? இவர்கள் யாருமே பாவமே செய்யவில்லையே!" என்று கருணைபொங்க எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி, நம்மை உய்விக்கிறாள், "கமலாமிவாந்யாம்" என்று சொல்லி கருணையில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரை ஒத்தவள் பூமிப்பிராட்டி என்று உரைத்துள்ளார் ஸ்வாமி. ஆகையால், ஆண்டாளை ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சம் என்றும் பூருவர்கள் கூறுவர்.
கடைசி வரியில் "கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே" என்று அருளியுள்ளார் ஸ்வாமி. அதாவது, கோதையே என் கர்மங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள உன் திருவடிகளையே தஞ்சமாகக் கொள்கிறேன் என்றும், உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை" என்றும் உரைத்துள்ளார் ஸ்வாமி.
நக்ஷத்திரம்.
இந்நன்னாளில் நாம் சுவாமி தேசிகனின்
" ஸ்ரீ கோதாஸ்துதி "
யினை சிறிது அனுபவிப்போம்.
"ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||" (ஸ்லோ.1)
"கோதாஸ்துதி" என்பது கோதை நாச்சியாரின் புகழ் பாடும் அற்புத க்ரந்தமாகும். "ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" - கோதை என்னும் பெயர் கொண்டு, விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வாரின் குலத்தில் வந்து அவதரித்து, அந்தக் குலத்திற்கே பெருமகிழ்ச்சியை அளித்த பிராட்டியே" என்று ஆண்டாளைப் புகழ்ந்துள்ளார் ஸ்வாமி. "விஷ்ணுசித்தரின் குலம்" என்றால் என்ன என்பதை அறிவோம். "எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் என்று பெருமானுக்குத் தான் அருளிச்செய்த "திருப்பல்லாண்டு" என்னும் பிரபந்தத்தில் உரைத்துள்ளார் பெரியாழ்வார். அதாவது, இதுவே இவர்களது குலம் - எதுவென்றால், பெருமானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு தொண்டாற்றுவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள் இவர்கள். தமக்கு முன்னோர்கள் அனைவரும் இதைத்தானே செய்து காட்டினார்கள் ஆகையால், நானும் அவர்களின் காட்டிய வழியிலேயே உனக்குத் தொண்டு செய்துகொண்டு இருப்பேன் என்று தெரிவிக்கிறார் பெரியாழ்வார். அப்படிப்பட்ட "தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகும் குலத்தில், புதல்வியாய் வந்து அவதரித்தவளே என்று அழைத்து கோதையைப் புகழ்கிறார் ஸ்வாமி தேசிகன்.
கோதையும் திருப்பாவையில் "உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று அருளிச்செய்தாள்.
அடுத்த வரியில், "ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்" என்கிறார் ஸ்வாமி. அதாவது, ஸ்ரீரங்கராஜனான திருவரங்கநாதன் என்னும் கற்பக விருக்ஷத்தையே எப்போதும் சார்ந்து நிற்பவள் கோதை நாச்சியார் என்று அர்த்தம். இப்படி அவனைச் சார்ந்து நிற்பதாலேயே இவள் தேஜஸ் கொண்டு திகழ்கிறாள். " கோதையும் எம்பெருமானுக்குப் "பாமாலைகள்" சூடி, அவனையே தனது மணாளனாகச் சூடிக்கொண்டாள்.
அடுத்து, "ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளியுள்ளார் சுவாமி தேசிகன். அதாவது, "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்றால் பொறுமையில் பூமிப்பிராட்டியைப் போலே என்றும், அந்த பூமிப்பிராட்டியே இந்தப் பூவுலகில் வந்து ஆண்டாளாய் அவதரித்துள்ளாள் என்றும், நம் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, அவைகளை விலக்கி, நற்கதி அளிக்கும் கருணையே வடிவானவள் என்றும் அர்த்தம். "கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளிச்செய்து, கருணையில் பூமிப்பிராட்டியை ஸ்ரீதேவி நாச்சியாருக்கு நிகராகக் கூறுகிறார். ஆனால், பூமிப்பிராட்டியைக் காட்டிலும் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே கருணையில் சிறந்தவளாகக் கருதப்படுகிறாள். "திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாரென்கொல்" என்று அருளிச்செய்துள்ளார் பொய்கையாழ்வார் அதாவது, ஸ்ரீதேவி பூதேவி -மண்மகள்\ நீளாதேவி (ஆய்மகள்] ஆகிய மூவரோடும் கலக்கும்போதும், ஸ்ரீதேவியான பெரியபிராட்டிக்கே அற்றுத் தீர்ந்ததாக இருக்கும்" என்று அர்த்தம். இருப்பினும், சில விஷயங்களில் பூமிப்பிராட்டி எப்படி ஸ்ரீதேவி நாச்சியாரை மிஞ்சுகிறாள் என்று பார்த்தால், எம்பெருமான் நம்மைப் பாவம் செய்தவர்கள் என்று விலக்கி விடுகிறான்; அப்போது, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் குறுக்கிட்டு, "பாவம் செய்யாதவர்கள் எவர் உண்டு பூவுலகில்?" என்று நமக்காகப் பரிந்து பேசி, நமக்கு நற்கதியைப் பெற்றுத் தருகிறாள். ஆனால், பூமிப்பிராட்டியோ "பாவமா? இவர்கள் யாருமே பாவமே செய்யவில்லையே!" என்று கருணைபொங்க எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி, நம்மை உய்விக்கிறாள், "கமலாமிவாந்யாம்" என்று சொல்லி கருணையில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரை ஒத்தவள் பூமிப்பிராட்டி என்று உரைத்துள்ளார் ஸ்வாமி. ஆகையால், ஆண்டாளை ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சம் என்றும் பூருவர்கள் கூறுவர்.
கடைசி வரியில் "கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே" என்று அருளியுள்ளார் ஸ்வாமி. அதாவது, கோதையே என் கர்மங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள உன் திருவடிகளையே தஞ்சமாகக் கொள்கிறேன் என்றும், உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை" என்றும் உரைத்துள்ளார் ஸ்வாமி.