• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..



"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


படிக்கும்போதே...கண்ணுல தண்ணி தளும்பரது....பகவானே...ஜய ஜய சங்கர...ஹர ஹர சங்கர...காஞ்சி சங்கர...காமகோடி சங்கர...
மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்று!

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, மகா பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் மகா பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!

வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. மகா பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. மகா பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், மகா பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்!

பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் மகா பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”

சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”

“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!

post courtesy Hinduism

Source: Siva sankaran/ Maha Periyava Public Group/ Face Book



ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் –

நெஞ்சை உலுக்கும் சம்பவம் –

குரு தரிசனம்

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக
எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது.

சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகி விடுவார்.
தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும்.
ஆனால்…

தவறுக்கும் தவறான தவறை ஒருவர் செய்த காரணத்தால் மகா பெரியவா எரிமலையாய் சீறி அனல் கக்கிய தருணம் பற்றி தெரியுமா?

2006 ஆம் ஆண்டு சக்தி விகடனில் வெளியான இந்த சம்பவத்தை படியுங்கள்.
பல இடங்களில் நமக்கு திக் திக் என்று இருக்கும்.

கண்ணீர் பொத்துக்கொண்டு வரும்.

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவா!

பல வருஷங்களுக்கு முன், ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் என்பவர்.

காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம்,

மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார்.
ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பய பக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில், மதுரை- சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசு தார்.

விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயணஸ்வாமி ஐயர்.

அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதி களை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காக பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார்.
நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மகா ஸ்வாமிகள்.

பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை.

உடனே மிராசுதார், ‘‘எல்லாரும் நகருங்கோ… நகருங்கோ.

நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்.

அத அவர்ட்ட சமர்ப்பிக்கணும்’’ என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும் பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை, பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளைப் பார்த்தவுடன் மிராசுதாருக்குக் கையும் காலும் ஓடவில்லை. தொபுக் கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார்.

மகா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! ‘என்ன விஷயம்’ என்பதைப் போல புருவங்களை உயர்த்தினார்.

உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டை யைப் பிரித்துக் கொண்டே, ‘‘பிரசாதம்… பிரசாதம் பெரியவா’’ என்று குழறினார். மீண்டும் பெரியவா, ‘‘என்ன பிரசாதம்?’’ என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள், மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார்.

அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.

மகா ஸ்வாமிகள், ‘‘இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரசாதம்?’’ என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக,

‘‘பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர்ல மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா பிஷேகம் பண்ணி வெச்சேன்.

மஹாந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம்.

அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹம் பண்ணணும்!’’ என்று சொல்லி முடித்தார்.

உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார்: ‘‘நாராயணசாமி! நீ பெரிய மிராசுதான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரை யாவது கூட்டு சேத்துண்டு இந்த ருத்ராபி ஷேகத்தை ஸ்வாமிக்கு பண்ணினாயோ?’’

‘‘இல்லே பெரியவா… நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்’’ என்று, அந்த ‘நானே’வுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரிய வாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விட வில்லை. ‘‘லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரத்துலே (திருவிடைமருதூர்) ருத்ராபிஷேகத்தைப் பண்ணினாயாக்கும்?’’ என்று கேட்டார்.

உடனே மிராசுதார் ஆதங்கத்துடன்,

‘‘இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷ மாவே வயல்கள்ல சரியான வெளச்சல் கிடை யாது.

சில வயல்கள் தரிசாவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பாத்தேன். அவர்தான், ‘சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளச்சல் கொடுக்கும்’னார்!

அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா’’ என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. ‘‘அப்டீன்னா ஆத்மார்த்தத் துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேனு தெரியறது’’ என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார்.

‘‘சரி… ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?’’

‘‘பதினோரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணியிருந்தேன் பெரியவா!’’ – இது மிராசுதார்.
உடனே ஸ்வாமிகள், ‘‘வைதீகாள் எல்லாம் யார் யாரு?

எந்த ஊருன்னெல்லாம் தெரியுமோ?

நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?’’ என்று விடாப்பிடியாக விசாரித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, ‘பெரியவா ஏன் இப்படித் துருவித் துருவி விசாரணை செய்கிறார்!’ என வியப்பாக இருந்தது.
இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார்,
தன் இடுப்பில் செருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

‘‘வாசிக்கறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார்,
சுந்தா சாஸ்திரிகள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்கிட்டு வாத்யார்… அப்புறம்…’’ என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள்,

‘‘எல்லாம் நல்ல அயனான வேதவித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணிருக்கே. அது சரி… ஒன் லிஸ்ட்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு…’’ என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, ‘‘இருக்கு பெரியவா… இருக்கு.

அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!’’ என ஆச்சரியத்தோடு பதிலளித்தார்.
Periyava angry சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படி துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு.
தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.
ஸ்வாமிகள்,

‘‘பேஷ்… பேஷ்! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லிருந்தயா? ரொம்ப நல்ல காரியம். மகா வேத வித்து!
இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தை புடிச்சு (மூச்சடக்கி) சொல்றதுக்கு கஷ்டப்படுவார்’’ என்று கூறியதுதான் தாமதம்… மிராசுதார் படபடவென்று,
உயர்ந்த குரலில், ‘‘ஆமாம் பெரியவா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே!
சில நேரம் வாயே திறக்காம கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார்.

அதனால ஜப ‘ஸங்க்யை’யும் (எண்ணிக்கை) கொறயறது!


Contd....'2
 
Last edited:

Contd.../2

நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.
வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள்,

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப் பத்தி என்னமா நீ அப்டிச் சொல்லலாம்? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்!
நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு!

நேத்திக்கு ஜப நேரத்துலே… கனபாடிகள் முடியாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்துலே நீ அவர்ட்ட போய், கடுமையாக ‘ஏங்காணும், காசு வாங்கலே நீர்!
இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கீரே’னு கத்தினது உண்டா, இல்லியா?’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.
கை- கால்கள் நடுங்க சாஷ்டாங்க மாகப் பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன்,

‘‘தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சந்நிதியிலே சொன்னது வாஸ்தவம்தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா’’ என்று கெஞ்சினார்.
பெரியவா விடவில்லை.

‘‘இரு… இரு…

நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. எல்லாருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ… ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்ளவு தட்சிணை கொடுத்தே?’’ என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, ‘‘தலைக்குப் பத்து ரூவா கொடுத்தேன் பெரியவா’’ என்றார் ஈனஸ்வரத்தில். ஸ்வாமிகள் நிறுத்தவில்லை.

‘‘சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூவாயா கொடுத்தே! நேக்கு எல்லாம் தெரியும்’’ என்று மடக்கினார்.
மிராசுதார் மௌனமாக நின்றார்.

ஆனால், ஆசார்யாள் விடவில்லை!

‘‘நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறத நா சொல்றேன் கேட்டுக்கோ…
நோக்கு சொல்ல வெக்கமாருக்கு போல. வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்டே வந்தபோது,

‘இவர்தான் சரியாவே ருத்ரம் சொல்லலியே… இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூவா சம்பாவனை பண்ணினே.
ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா?
நீ கொடுத்ததை வாங்கி அப்டியே தலப்பிலே முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே, சொல்லு’’ என்று உஷ்ணமானார் ஆசார்யாள்.
பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

‘நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, ‘‘தப்புத்தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச் சுடுங்கோ…’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா,

‘‘இரு… இரு! இதோட முடிஞ்சுட்டாத்தான் பரவாயில்லையே…

ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மகாதானத் தெரு ராமசந்த்ரையர் கிரஹத்துலதானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?’’ என்று கேள்வி போட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ‘‘சாப்பா டெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே,
நெய் ஒழுக ஒழுக நெறய மிந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே… சரியா?’’ என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர்!

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, ‘‘ஆமாம் பெரியவா! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையால நானே பரிமாறினேன்!’’ என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் விடவில்லை.

‘‘சரி… அப்டி சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே,

பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?’’ என்று கேட்டார் கடுமையாக.
வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆசார்யாளே பேசினார்: ‘‘நீ சொல்ல வேண்டாம்… நானே சொல்றேன்!
நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே,

அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாள்ளாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்டா! நீயும் நெறயப் போட்டே. ஆனா, தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாயவிட்டு,
‘சக்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா… ரொம்ப ருசியாருக்கு’னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும்கூட
நீ காதுலே வாங்கிண்டு அவருக்குப் போடாமலேயே போனயா இல்லியா? எத்தன தடவ வாய்விட்டுக் கேட்டார்! போடலியே நீ!
பந்தி வஞ்சனை பண்ணிப்டியே…

இது தர்மமா?

ஒரு மஹா சாதுவ இப்டி அவமானப்படுத்திப்டியே…’’ _ மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்!

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆசார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிஷங்கள். மௌனம். பிறகு, கண்களைத் திறந்து, மௌனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆசார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலேருந்து எத்தனயோ சிவ க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மகான் அவர். அவர்ட்ட நீ நடந்துண்ட விதம் மகா பாபமான கார்யம்… மஹா பாபமான கார்யம்!’’ _
மேலே பேச முடியவில்லை பெரியவாளால்.

கண் மூடி மௌனமாகி விட்டார்.

சற்றுப் பொறுத்து ஆசார்யாள் தொடர்ந்தார்:

‘‘நீ ‘பந்தி பேதம்’ பண்ணின காரிய மிருக்கே, அது கனபாடிகள் மனச ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ‘அஸ்மேத’ (பெரிய பிராகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார்.

நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார்.
கை கூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்திச்சார் தெரியுமா?’’ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்:
வெங்கடேச கனபாடிகள்

‘‘கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்!
நா ஒன்னோட பரமபக்தன். பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவ ஒன் சந்நிதியிலே மஹாந்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன்.
நீ கேட்ருக்கே.

இப்போ நேக்கு எம்ப்ளத்தோரு வயசாறது.

மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்படறச்சே நடந்தது, நோக்குத் தெரியாம இருக்காது.

அந்த சக்கரப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியா இருந்துதேனு ‘இன்னும் கொஞ்சம் போடுங்கோ’னு வெக்கத்த விட்டு அந்த மிராசுதார்கிட்டே பல தடவ கேட்டேன்.
அவர் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகர்ந்து போயிட்டார்.

நேக்கு சக்கரப் பொங்கல்னா உசுருங்கறது நோக்குதான் தெரியுமே. சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப் பட்டேன்.
ஆனா, சாப்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறம்தான், ‘இப்டியரு ஜிஹ்வா சபலம்’ (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமானு தோணித்து. அப்பா மகாலிங்கம்… இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன்.

ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே,
‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! இது சத்யம்டாப்பா மகாலிங்கம்’னு வைராக்ய பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்!

நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர்.
ஊருக்குப் பொறப்டுட்டார்!

இப்போ சொல்லு… நீ பண்ணின காரியம் தர்மமா? மகாலிங்கஸ்வாமி ஒப்புத்துப்பாரா?’’

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி.

‘‘நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்!’’ என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள்.
அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை.

அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிருந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘நேற்றைய தினம் திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே, இது எப்படி?’ என்று அனைவரும் வியந்தனர்.
பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார்.
கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது:

‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன்.
என்னை மன்னிச்சுடுங்கோ.

இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.
ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். ‘‘பிரார்த்திக்கி றேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்… என்னை மன்னிச்சுடுங்கோ!’’ என்று பிரசாதத் தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆசார்யாள், ‘‘இருக்கட்டும்… இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே ப்ரசாத அநுக்ரஹம் பண்ணுவார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘நகருங்கோ… நகருங்கோ’’
என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட் டது.

எல்லோரும் விலகி வழிவிட்டனர்.

தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்ச கச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சைப் பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்துக் கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கருகே வந்து சேர்ந்தார். பிரசாதத் தட்டை ஆசார்யாளுக்கு முன்பு பவ்யமாகச் சமர்ப்பித்து விட்டு,

‘‘எம் பேரு மகாலிங்கம். திருவிடமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார்.
இந்தூர்லே எங்க அக்காவ (சகோதரி) கொடுத்துருக்கு. ஆசார்யாளுக்கும் அந்த பிரசாதத்தைக் கொடுத்துட்டு, அவளையும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்’’ என்று நமஸ்கரிக்கப் போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

‘‘நீங்களெல்லாம் சிவதீட்சை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்டாது’’ என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்றுத் தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்துவிட்டார் சிவாச்சார்யார். ‘‘பெரியவா! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!’’ என்று ஆச்சரியத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சார்யார்.

ஆசார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், ‘‘திரும்பத் திரும்பப்
பிரார்த்திக்கறேன் பெரியவா.

நா பண்ணினது ரொம்ப பாவ காரியம்தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்’’ என்று மன்றாடினார்.
விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார்.

‘‘இதுக்கு பிராயச்சித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்’’ என்றார்!

‘‘இந்தப் பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்வாரா பெரியவா?’’ என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், ‘‘நோக்கு ‘ப்ராப்தம்’ இருந்தா நிச்சயம் சொல்வார்!’’ என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை.
சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார்.

ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச் சென்று ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக் கட்டினார்.

எப்படியும் வேங்கடேச கன பாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து, மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் ‘பிராயச்சித்த’த்தைப் பூர்த்தி செய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹா ரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கன பாடிகள் பெயரைச் சொல்லி, அவர் க்ருஹம் எங்கே என விசாரித் தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, ‘‘துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா?

அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலமா யிட்டார். ‘அநாயாஸேன’ மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்). போய்ப் பார்த்துட்டு வாங்கோ’’ என்று சொல்லிப் புறப்பட்டார்.

இதைக் கேட்டவுடன் பிரமித்து நின்று விட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போலிருந்தது.

நேற்று மடத்தில் ஆசார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போலிருந்தது: ‘நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!’

‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடி கள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துகளையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங் கரியம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.....

Source: WhastApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa



மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை அல்லாவாகவும், கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏராளம்.

1989 ஆண்டு ஜூலை மாதம் முதல்தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர், தன்னுடைய மகனை குலாம் தஸ்தகீர்- கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார் ஸ்ரீமடத்துக்கு சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன், வயலின் வாசிக்கிறான். ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான். பெரியவங்க ஆசி வேணும்… சாமிக்கு முன்னால வயலின் வாசிக்கணும்’

அனுமதி கிடைதத்தும், பார்வையில்லாத குலாம்தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான். பெரியவாள் கண்களை மூடிக் கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து, ‘பையனுக்கு யாரிடம் சிட்சை?’ என்றும் கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனாருக்கு உணர்ச்சிபூர்வமான தவிப்பு. நெஞ்சு, கெஞ்சியது. ‘சுவாமி நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்’… என்று சொல்லியே விட்டார்!

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இது என்ன பிரார்த்தனை? ஆசிவாதம் கேட்டால் போதாதோ?

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது. பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடை காட்டி, அந்த வயலினை வாங்கிக் கொண்டு வரச்சொல்லி, தன் அருட் கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய் உருகிப் போனார்கள். இரண்டு வேஷ்டிகளும் மாம்பழங்களும் பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, உம்மாச்சி தாத்தாவிற்க்கு !!!

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


Experiences with Maha Periyava: On the Path of Righteousness

Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons, dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional manner, upper cloth and a gem studded gold chain around his neck.

He held a large plate on which were fruits, flowers, sugar candy, grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to Him. Periyava gently probed the plate with His eyes.

“What cover is that?”

“Just a little... money...”

“By little do you mean ten or fifteen rupees?”

The lawyer’s ego was probably hurt. He was known to be the best criminal lawyer in his district.

“Why did Periyava estimate of him so low?”

With an excessive display of humility, he said in a honeyed voice, “Fifteen thousand rupees”.
Periyava was silent for a while and then asked, “How did you come here?”

“We came by car”.

“Put away this cover safely in the car. The fruits and flowers will do”.

The advocate was shaken. He carried out Periyava’s instructions. Periyava conversed with him in a peaceful manner for a long time and then sent him away with prasada. The sound of the car leaving was heard. Did not Periyaval know that the attendants were disappointed because Periyaval refused fifteen thousand rupees?

“He argued a false case and won it. The fifteen thousand rupees he offered was a portion of the money he got for that. It was tainted money. That is why I refused it”. The attendants understood and accepted.

There were times when SriMatham went through dire circumstances. The Manager would be worried. Even then Periyava never accepted money anxiously, disregarding righteousness.

“A tiny drop of salt is enough to curdle a pot of milk. If dharma is slackened for the sake of one man, it will become a habit,” He would say.

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Source: Maha Periyava public group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa



நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே!!!பெரியவாவின் கதை.

ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.எத்தனையோ பாழடைஞ்சகோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர்.

எதிர்பாராவிதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார்.தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர்
சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார். அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துலமுகாமிட்டிருந்தா.அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும், மகாபெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.

வெறும் கையோட வந்திருந்ததுலயே, விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.வழக்கம்போல இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம," ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார்

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி
இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார். அமைதியா கேட்டுண்ட ஆசார்யா,"நீ இப்ப ரொம்ப விரக்தில இருக்கே.உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை சொல்றேன் அப்படின்னார்.

உப்பு விக்கறவனுக்கு,உப்புக் கொறவன்னு பேர்.அப்படி ஒரு உப்புக் கொறவன் இருந்தான்.காமாட்சியோட பரம பக்தன்அவன்.கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷினுட்டுதான் எழுந்திருப்பான்.தூங்கப் போறச்சேயும் அம்பாள் பேரைச் சொல்லிட்டுதான் படுத்துக்குவான். உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு கொண்டு வருவான்.பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமே வாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும் அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை வசதியெல்லாம் கெடையாது.

ஒத்தையடிப் பாதைதான். அதனால் திருடாளும் நிறைய இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு வர்ஷிச்சுது.

உப்புக் கொறவனும் பரபரப்பா உப்புமூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து.அவ்வளவுதான்,அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன்,லாபம் இல்லாவிட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து.அவனோட விரக்தி அப்படியே கோபமா மாறித்து.அது அப்படியே காமாக்ஷிமேல திரும்பித்து.

"காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாதுங்கறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும்.ஏன்னா தாயாரான உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!"

அப்படின்னு வெறுப்பா கத்தினான். கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு,வெறுங்கையோட பொறப்பட்டான்.அப்படியே போயிண்டு இருந்தவன்,

"டேய் பிடிங்கடா அவனை..அவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!" அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கிப்போய் நின்னான்.அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு. "மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே,
அவன் மடியில,இடுப்புல,கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை.

"ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை"

"பணமா? ஏது பணம்? அதான் கொண்டுபோன உப்பு மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே...அப்புறம் ஏது வியாபாரம்,ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்."இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனாலபிழைச்சே போ!" அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள்.

மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது.இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம வந்திருந்தா,உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.நாம கும்பிடற காமாக்ஷிதான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச் சொல்லி வேண்டிண்டான்.

மகாபெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது.தனக்கு ஏதோ ஒரு காரணத்துனாலதான் இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.

கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க வந்தார்."பெரியவா நமஸ்காரம். போன தரம் நான் வர்றச்சே,என்னோட சொத்து மொத்தமும் பறிபோகப்போறது மாதிரியான சூழல் இருந்தது. ஆனா,இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன்.உங்களை
சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு நமஸ்காரம் பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ

" உப்பு கரைஞ்சுபோன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

நன்றி ; -- ஆனந்த விகடன்.

Source: Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர்

மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி(1907-1994)

"ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) இவையும் வேறு வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள், உபநிஷதமும், சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்துவிட்டார்கள்."

"உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே என்பதுதான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள்.

இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் 'யமுனா' 'ஜமுனா' வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம் என்பது 'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி' விருட்சம் தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி விருட்சத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே அரசமரத்துக்கு போதி விருட்சம் என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம் -135-136)

* இதற்கு ஒரு பாரா முன்னதாக உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.

"பழைய தர்மங்கள் எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக்கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல் பக். 284)

"தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (mouthful): இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்." (மே. நூல் பக். 316)

"வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்யத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)

"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை: அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்: என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே நூல் பக். 576)

"Action and reaction are equal and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக் காரியங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும் மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane, metaphysical plan, physical plane, மூன்றையும் கோத்து தம் மதத்தில் சொன்னதை physical plane -இல் (பௌதீக மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன் லா:......"(மே. நூல். 3ஆம் பாகம்: பக் 392)

"வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்: 3-ஆம் பாகம்: பக். 393)

"விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ" என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே சப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர") ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது,. வாஸுதேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மகாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும் அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள் அகப்பட்டன. (மே. நூல் பக். 811-12).

"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பது தான் 'நித்யம்'. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் 'பூர்ணம்'. இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று நம் பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. (மே. நூல் பக். 814)

"இப்போது தான் வயசு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை) நிறைவேற்றிய சபைக்கு அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப் பார்த்தார். "சட்டத்தைப் பற்றி வாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பி.க்களுக்கும் ஒன்றும் வேண்டாம் என்றால் கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை. (மே. நூல் பக். 854).

"நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக்கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவதுதான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதும் கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது அல்ல (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்துவிடக் கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல். 5ஆம் பாகம் பக். 648)

"அபிநவ சங்கரர்": அவர்களுடைய ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடிய கல்வெட்டில் ஒரு 'பகவத் சங்கர'ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து 9ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங்கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ஆம் வருஷமான கி.பி.788 -ஐச் சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ஆம் பாகம் பக் 835).

மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி (1894-1895) அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத் தரிசிக்க வந்து குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு. இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது அவர்கள் முன் தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட பகுதிகள், எவ்விதத் தேர்வும் இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இதுகாறும் வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார் 6000 பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள் என்று மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு என்று) பரமாச்சாரியாரின் படிப்பும் அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று சொல்லும் அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை.

வரலாறு, தத்துவம், இசை, மொழியியல், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என அடுக்கிக்கொண்டே போகலாம், அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்துகொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ் கால அரசியல், சமூக பிரச்சினைகளையும் நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தன் 13ஆவது வயதில் சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களும் பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்துகொள்ள வேண்டிய மத சாஸ்திரங்கள் அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்? வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்? இவற்றைக் கற்பதே, முழு நேரக் கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து அவர் ஆங்கிலமும், அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில் பயிற்சியும், உயர் கணிதமும் தொல்பொருளியலும் கல்வெட்டு இயலும் ஃப்ரெஞ்சும் ஆஸ்ரமத்துக்குள் இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?

ஆசிரமத்துக் கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது கிடைத்தது? யார் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஆசிரமமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை வரவழைத்து பீடாதிபதிக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால் அதற்குத் தடை எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக்கொண்டிருக்க முடியாது. நூற்றாண்டுகள் பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களும் மடத்தின் கண்ணியமும் சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை, சங்கராச்சாரியார் எந்த சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப் பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு இவற்றைக் கற்க நேரம் இருக்கவேண்டும். அந்த மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப் பெற்றான், அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம் எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி.

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


"நீங்கள் இருவரும் மடத்திலேயே இரண்டு மூணுநாள் தங்குங்கோ, பையன் மட்டும் என்னோட இருக்கட்டும் நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பையனைத் தேடி என்னண்டை வரப்படாது"

மகானிடம் மனக்குறையை சொல்ல பலர் இருந்தாலும் உடல் உபாதைக்கு மருந்தோ ஆறுதலோ தேடி வந்தவர்களும் இருந்தார்கள் .

டாக்டர் கெடு வைத்த பிறகும் கூட மகான் வில்வ இலைகள், துளசிதீர்த்தம் , வீபுதி பிரசாதங்கள் கொடுத்தும், சில பரிகாரங்கள் கூறியும் பிழைக்க வைத்த அதிசயங்கள் அனைவரும் அறிந்ததே .

ஒரு சிறுவன் உடம்பில் ஏற்பட்ட நோயைப் போக்க மகான் தாமும் விரதம் இருந்தார் எனும் செய்தியைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

மகானின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட பக்தர் ஒருவர் தமக்கு எல்லாமே அவர் தான் என்று உறுதியாக இருந்தவர் மகானிடம் தன் மகனை அழைத்துகொந்து வந்தார்

மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி உடலில் பல பாகங்களில் இருந்து தோல் செதில் செதிலாக கீழே உதிர்கிறது டாக்டர்களிடம் மருந்து சாப்பிட்டும் பார்த்தாயிற்று நோய் குணமாகவில்லை சிறுவனை பார்ப்பவர்கள் அருவருப்புடனே அவனைப் பார்கிறார்கள்.

தந்தையிடம் விவரம் பூராவையும் தெரிந்து கொண்ட மகான் சிறுவனை தன் அருகில் அழைத்துப் பார்த்தார் பிறகு சிறுவனின் பெற்றோரிடம் பேசினார்:

"நீங்கள் இருவரும் மடத்திலேயே இரண்டு மூணுநாள் தங்குங்கோ, பையன் மட்டும் என்னோட இருக்கட்டும் நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பையனைத் தேடி என்னண்டை வரப்படாது" என்று உத்தரவிட்டு மடத்து சிப்பந்திகளிடம் தேவையான விவரங்களையும் சொல்லிவிட்டார். மூன்று தினங்கள் சிறுவன் மகானுடன் தான் இருந்தான். அவனுக்கு தினமும் மூன்று வேளையும் வழைத்தண்டுச்சாறு கொடுக்கப்பட்டது. வேறு ஆகாரம் ஏதும் இல்லை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் மகானும் அந்த மூன்று நாளும் வாழைத்தண்டு சாறுதான் உட்கொண்டார். வேறு ஆகாரமில்லை. சிறுவனின் உடலில் இருந்து சருமம் செதில் செதிலாக உதிர்வது நின்று விட்டது. அவன் உடல் தேறி விட்டதை மகான் சொல்லித்தான் பெற்றோர்களுக்கே தெரியும். மகானை எழுந்து வணங்கிவிட்டு தங்கல் மகனை அழைத்துக் கொண்டு போனார்கள் .

மகான் வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் என்பதை அறிய இதைவிட வேறு என்னவேண்டும்?

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


"" தனக்கு எதுவும் வேண்டாத மகான்களின் கருணை உள்ளம் , மக்களின் துன்பங்கள் கண்டு உருகுகிறது ""

1940 ம் வருடம், பெரியவா தனது சாதுர்மாஸ்ய விரதத்தின் போது நாகபட்டினத்தில் இருந்தார். அங்கு ஒரே வறட்சி தாண்டவமாடியது.


நாகப்பட்டினம் சுற்றிலும் எங்கும் மழையே இல்லை. ஆடிபூர விழா நெருங்கிகொண்டிருந்தது. நீலாயதாட்சி அம்மன் கோவில் விழாக் குழுவினர் வறட்சியின் காரணமாக விழா நடத்தவேண்டாம் என முடிவுசெய்து பெரியவரிடம் மேற்படி விசயத்தை எடுத்து சென்றனர் . ஆனால் அவரிடம் இதை பற்றி யாருக்கும் வாய் திறக்க தைரியமில்லை.

பெரியவா அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே .அவரும் எதுவும் சொல்லாமல் விழா நடத்த பிரசாதம் கொடுத்து அனுப்பினார். அவர்களும் எதுவும் சொல்லாமல் திரும்பிவிட்டனர்,

பெரியவா உட்சிபொழுதில் நீலாயதாட்சி அம்மன் கோவில் குளத்திற்கு சென்றார், வறட்சியான குளத்தின் மத்யபகுதிக்கு சென்று, சிறிது ஈரமான பகுதியில் தனது பாதத்தின் பெருவிரலால் சற்றே அழுத்த , சிறிது நீர் வெளியேறியது. அந்த தீர்த்தத்தை எடுத்து தமது தலையில் புரோட்சித்து தமது இருப்பிடத்திற்கு திரும்பினர்.
மீண்டும் அடுத்த நாளும் உட்சிப்பொழுதில் குளத்திற்கு சென்று, தமது தாமரைபாதங்களால் சிறிது நீரை வெளியேற்றி, சற்று மேலே வானத்தை நோக்கிவிட்டு தனது தண்டத்துடன் திரும்பினார். மடத்திற்குள் அவர் நுழையவும், எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து சுற்றுசூழ்நிலையில் திடீரென மாற்றம் நிகழ்ந்தது.

கடினமாக மழை அடித்து பெய்தது. அடுத்த நான்கு நாட்களும் மழையால் நாகப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும், குளங்களும் நீரால் நிரம்பின. ஆடிபூரம் விழாவினை அந்த ஆண்டு மிகுந்த மகிழ்ச்சியாக
நாகப்பட்டினம் மக்கள் கொண்டாடினர் என்பதை சொல்லவும் வேண்டுமா!........என்ன?

பெரியவாளின் கருணை அளப்பரியது...............!
.
தனக்கு எதுவும் வேண்டாத மகான்களின் கருணை உள்ளம் , மக்களின் துன்பங்கள் கண்டு உருகுகிறது....

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


வரலாற்று சான்று :

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளின் 124-வது ஜயந்தி உத்ஸவம் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில், அவர் நினைவைப் போற்றும் ஒரு கட்டுரை இது.
இந்த வாரம் ‘ராணி’ இதழில் வெளி வந்திருக்கிறது.

மகா பெரியவா சரணம்.

அடியேன்...

பி. சுவாமிநாதன்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உலகின் பல பாகங்களில் வசிக்கக் கூடிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் அவ்வப்போது காஞ்சி மாநகரத்துக்கு விஜயம் செய்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்று விவாதிப்பது வழக்கம்.

வருகின்றவர்கள் ஆச்சரியப்படும்படி அவர்கள் சார்ந்திருக்கிற துறை தொடர்பாக பல்வேறு தகவல்களைச் சொல்லி, அவர்களைப் பிரமிக்க வைப்பார் மகா பெரியவா.

புகழ்பெற்ற புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார். அவரது பூர்வீகம், குடும்பம், உத்தியோகம் ஆகிய அனைத்தையும் பற்றிக் கேட்டறிந்தார் மகா பெரியவா. அரை மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, ஆசி பெற்று கிளம்ப இருந்தவரை, ‘‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’ என்று ஒரு குழந்தை போல் கேட்டார் மகா பெரியவா.

புவியியலாளருக்கு நம்ப முடியவில்லை. ‘உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கின்ற சிறு அசைவையும் அறிந்தவர், நம்மிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறார்?’ என்று வியந்து, மகானுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றவர், ‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும் உபகாரம் ஆகும்னு இருந்தா, அதைவிட எனக்கு சந்தோஷம் கிடையாது’’ என்று பணிவுடன் சொன்னார்.

‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம் பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ என்றார்.

‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட அவதார பூமி ஆச்சே...’’

‘‘ஆமா... அங்கே பூர்ணா நதி ஓடறது. ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் அதுலதான் தெனோமும் ஸ்நானம் பண்ணுவா.’’

தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார் புவியியலாளர்.

‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’

‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.

ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா? ரெண்டாவது மண்ணை எங்கே எடுக்கணும்னா, இந்த நதி காலடி ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும். காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி சங்கரர் வாழ்ந்த கிரஹம் வரை வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி தனக்கு உண்டான பாதைல இந்த நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ... அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.

நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. ‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி நிறுத்தினார் மகா பெரியவா.

தன் துறை சார்ந்த பணி என்பதாலும், மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல் சொன்னதாலும், மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’ என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் புவியியலாளர்.

காலடிக்கு முன்னால் பாய்கின்ற ஊரிலும், காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள இடத்திலும் மண் சேகரித்தார். மகா பெரியவா சொன்ன சோதனைகளை முடித்தார். பரிசோதனை முடிவுகளைக் கையில் எடுத்துக் கொண்டார். இவற்றை மகா பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார் புவியியலாளர்.

ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றார் மகா பெரியவா. நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் புவியியலாளர். அவர் சொல்லப் போகும் தகவலுக்காக ஆவலுடன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘பெரியவா... ரெண்டு எடத்துலயும் மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’ முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன். கேரளாவில் காலடிக்குள் நுழைவதற்கு முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம் ஆனது. அதாவது, இந்த நதியின் வயது ஒரு லட்சம் வருஷம். அடுத்தது - காலடிக்குள் சங்கரர் கிரஹம் இருந்த இடம் அருகே இருந்த மண், சுமார் 2500 வருட பழமை கொண்டது.’’

புவியியலாரையும் அங்கே கூடி இருந்த பக்தர்களையும் பார்த்து மகா பெரியவா புன்னகை பூத்தார்.

‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி ஆதி சங்கரரோட அவதார காலம் மேலும் ஊர்ஜிதமாயிடுறது’’ என்று சொன்ன மகா பெரியவா, ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் அப்போது இருந்தன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின் வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும் ஒரு காரணம் உண்டு.

காலடியில் ஆதி சங்கரர் வசித்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது. சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.

‘இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.

ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்’ என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.

அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.

ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது.

திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும் என்று தீர்மானித்து, புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா.

காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.

காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்.

எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று.

கட்டுரை: பி. சுவாமிநாதன். நன்றி: ‘ராணி’ இதழ்

எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா முடித்தார் என்று பார்க்கb v வேண்டும்.

Source: WhatsApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர்
மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.


Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa



ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி(1907-1994)

"ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) இவையும் வேறு வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள், உபநிஷதமும், சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்துவிட்டார்கள்."

"உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே என்பதுதான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள்.

இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் 'யமுனா' 'ஜமுனா' வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம் என்பது 'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி' விருட்சம் தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி விருட்சத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே அரசமரத்துக்கு போதி விருட்சம் என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம் -135-136)

* இதற்கு ஒரு பாரா முன்னதாக உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.

"பழைய தர்மங்கள் எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக்கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல் பக். 284)

"தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (mouthful): இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்." (மே. நூல் பக். 316)

"வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்யத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)

"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை: அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்: என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே நூல் பக். 576)

"Action and reaction are equal and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக் காரியங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும் மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane, metaphysical plan, physical plane, மூன்றையும் கோத்து தம் மதத்தில் சொன்னதை physical plane -இல் (பௌதீக மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன் லா:......"(மே. நூல். 3ஆம் பாகம்: பக் 392)

"வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்: 3-ஆம் பாகம்: பக். 393)

"விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ" என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே சப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர") ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது,. வாஸுதேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மகாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும் அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள் அகப்பட்டன. (மே. நூல் பக். 811-12).

"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பது தான் 'நித்யம்'. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் 'பூர்ணம்'. இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று நம் பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. (மே. நூல் பக். 814)

"இப்போது தான் வயசு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை) நிறைவேற்றிய சபைக்கு அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப் பார்த்தார். "சட்டத்தைப் பற்றி வாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பி.க்களுக்கும் ஒன்றும் வேண்டாம் என்றால் கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை. (மே. நூல் பக். 854).

"நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக்கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவதுதான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதும் கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது அல்ல (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்துவிடக் கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல். 5ஆம் பாகம் பக். 648)

"அபிநவ சங்கரர்": அவர்களுடைய ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடிய கல்வெட்டில் ஒரு 'பகவத் சங்கர'ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து 9ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங்கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ஆம் வருஷமான கி.பி.788 -ஐச் சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ஆம் பாகம் பக் 835).

மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி (1894-1895) அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத் தரிசிக்க வந்து குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு. இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது அவர்கள் முன் தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட பகுதிகள், எவ்விதத் தேர்வும் இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இதுகாறும் வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார் 6000 பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள் என்று மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு என்று) பரமாச்சாரியாரின் படிப்பும் அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று சொல்லும் அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை.

வரலாறு, தத்துவம், இசை, மொழியியல், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என அடுக்கிக்கொண்டே போகலாம், அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்துகொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ் கால அரசியல், சமூக பிரச்சினைகளையும் நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தன் 13ஆவது வயதில் சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களும் பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்துகொள்ள வேண்டிய மத சாஸ்திரங்கள் அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்? வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்? இவற்றைக் கற்பதே, முழு நேரக் கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து அவர் ஆங்கிலமும், அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில் பயிற்சியும், உயர் கணிதமும் தொல்பொருளியலும் கல்வெட்டு இயலும் ஃப்ரெஞ்சும் ஆஸ்ரமத்துக்குள் இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?

ஆசிரமத்துக் கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது கிடைத்தது? யார் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஆசிரமமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை வரவழைத்து பீடாதிபதிக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால் அதற்குத் தடை எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக்கொண்டிருக்க முடியாது. நூற்றாண்டுகள் பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களும் மடத்தின் கண்ணியமும் சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை, சங்கராச்சாரியார் எந்த சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப் பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு இவற்றைக் கற்க நேரம் இருக்கவேண்டும். அந்த மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப் பெற்றான், அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம் எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி.

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


Experiences with Maha Periyava: Foresight

During January 1966 MahaSwamigal was camping in Elavur. As an invitation came from there, I went to Elavur and had darshan of MahaSwamigal.

As He informed me that as an unprecedented event a Mahanadu (conference) where all the Mathadhipatis of Tamilnadu would participate was to be held in Chennai, He ordered me, "You should come with us to that Mahanadu and jot down everything that is spoken there." I carried out His orders.

That Mahanadu took place in the office building of the Commissioner of the Hindu Charitable and Endowments Board, on the dates February 6 and 7, 1966 at Chennai. All the events scheduled for the two days, both morning and evening took place without any scope for any sort of problems arising.

On the first day of the Mahanadu, in the morning, before the conference started, MahaSwamigal did something that removed any scope of mental tension, agony, bitterness, and ego of superiority, among the conference delegates; it eased everyone's mind and made it happy. Why, it formed the entire base for the success of the Mahanadu. Put in other words, it could also have been felt as the explanatory note of SriMatham's siddhantam (principle).

This Mahanadu was convened by the Commissioner of HR&CE. A government function. In this festivity, there was no scope for allowing anyone to sit anywhere as they pleased.

Among the Mathadhipatis, who were the delegates, as to who should be seated in the centre,
what kind of seat should be provided for him, who is to be seated to his left and right--for such things, there is a Government Order. Only according to the Ranking List mentioned in that Protocol, seats were arranged in the conference hall and the names of the Mathams were also written for them.

For the starting event of the Mahanadu, Mathadhipatis of Mathams located at Tiruvavaduturai, Dharmapuram, Tondaimandala Adhinakartas, Tiruppanandal, Kanchipuram, Madurai, Kundrakkudi, Mayilam and so on, came one by one to partake the event. The Commissioner welcomed each of them individually according to protocol and brought them to the conference hall. Kanchi MahaSwamigal too came. He made a survey of the arrangements in the hall with an all-round glance. He is a kala-vittaka (expert in the art), of making sweet with His pleasant look, any tight atmosphere. With a smile crawling on His face He walked towards the seat allotted for him. All the other Mathadhipatis too walked towards their seats.

Like one who gets into a pond to take bath would part away with his two hands, the moss that covered the water surface, and like one who would gently dust the floor with his upper cloth before he sits there, MahaSwamigal with His hands pushed back the seat allotted for Him by the government officials, and sat on the floor at that spot.

The next moment all the other Mathadhipatis, without sitting on the seats provided for them, sat on the floor of the conference hall. The bhumi (ground), became the samasthanam (seat of equivality) for everyone.

What to speak of the adhishayam (wonder) that Kanchi MahaSwamigal, 'the jnanamurti who stood beyond the book of Vedas', through his foresight and subtle knowledge, demonstrated the great truth, "Paramporul--Brahman, is only one. So what superiority is there for us who live on this earth because of our wealth, or kulam (lineage)? What inferiority is there? All of us are of one kulam, one inam (species)."

Kanchi Sri MahaSwamigal was one who stood as the svarupam (embodiment) of kalas (arts). Artistes went to Him and worshipped. He too honoured them, supporting them with great love. Many of the kalas ran towards that kalasagara (ocean of arts) and did-sangamam (merged) themselves.

During the year 1957-58, Kanchi Sri MahaSwamigal did-vijayam (visited) to Chennai. The vyasapuja was performed in the Sanskrit College, Mylapore, and Chennai.
After the puja of the night session, he would do upanyasam (lecture). I would jot down in shorthand, his words of nectar without leaving out anything and then write them back in long hand. Later, they were published in (the magazine) 'Kalaimagal' under the title 'Acharya Svamigal Upadeshangal'.

One day, the event of Sri MahaSwamigal visiting Raja Annamalaipuram was scheduled. En route, at the junction of the Nallappan Street and Adam Street, we were waiting for PeriyavAL's arrival. The mena (palanquin), came. Giving purnakumbham, we bowed to Periyava. Calling me suddenly, Periyava asked, "Ni Enge Inge (How come you are here)?" I pointed out to Nallappan Street and said, "I am living in this street." He asked for the mena to proceed through our street. The karanam (reason) was not known. Before we could run to our house, open the doors and light the lamp, the mena had come there.

Calling me near him, he said, "You said you have written a book of shorthand in Tamil? Bring it, let us see."

Going inside my house, I brought the manuscript of the book and submitted it to him. Leafing through every page, showing no hurry at all, with a speck of smile lingering in his face, he glanced through that book until the last page. His face shining like a lotus flower, when he said, "As suitable for Tamil, you have written the book, relating the P in Pitman to (the Tamil alphabet) 'pa' and M to 'ma'", his subtle power of knowledge that took everything at a glance made thrilled us in ecstasy.

"Has this book been published?" he asked me. "No", I said. Taking the bhilva garland from his Shiras (head), and placing it on the book, he gave it back to me.

The Tamilnadu government itself published this book in 1964. Its 4th editing coming out in 1998, adding honour to Tamil and the Tamil world. Such is the power of grace of that deivam--god!

Author: Ananthan, Chennai-29
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa



Experiences with Maha Periyava: Why Fear when I am here???

He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capable of performing a lot of miracles.

He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having unbearable stomach pain and so wanting some immediate relief for him, I took him to this Yogi at that time.

After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother.

As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract me towards him. (So that I would get interested enough to write about him).

During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and performed some miracles for me. He kept cooked rice in his palm and when he rubbed his palms together, it became raw rice again. He kept boiled dal (pulse) in his palm and again when he rubbed his palms, it became raw pulses. He brought Turmeric powder from Thiruchanur, Vibhuthi from Pazhani, Kumkum from Meenakshi temple etc… There were many such acts that he p
erformed.

I sat silently and watched the whole scene without much interest. He said a little harshly, “I am performing so many miracles and you are not even astonished?? What do you think of yourself??”
I said, “I know that you are capable and have the power to perform even more unbelievable miracles than these and that is the reason none of this seems astonishing to me.”

Now not only his words but his face also showed anger and he said,”You are a writer and that is
why you are speaking smartly.”

I was a little scared and as I had Periyava’s photo in my purse, I folded my hands tightly so that I could hug the purse that held His photo.

The yogi thought that I had surrendered to him and said,”I will give you Upadesham (Blessings in the form of a Mantra), write down the Mantra.” Saying this he stretched out his hand and from somewhere a paper and pen materialized.

“Take these” he said and handed them over to me. I took them.

“Mmm… Write down…” he said.

I said, “No thank you. I dont want any Upadesham.”

He yelled and said, “What?? People are waiting to get my Upadesham and pining for it and you say you dont want it??”

I was petrified and had butterflies in my stomach. I just said, “Forgive me...” and kept the paper and pen on the table.

He got up from his seat and I was filled with a dread and started praying to Periyava.

That yogi came near me and touched my right shoulder.

“You write with this hand don’t you?? I can make it impossible for you to write… Do you want to see???” Saying this he pressed slightly on my shoulder. The next instant, my hand moved slightly down and started moving loose. I was choked with fear and dread. My eyes were filled with tears.

My whole body was shaking and I was unable to decide what to do. Even in that condition my mind was all the time repeatedly chanting, ‘Periyavaa, Periyavaa’.

“Tell me that you will write about me at least now…I will make your hand alright,” said that yogi.

But I never opened my mouth even at that time!!

Though I never answered the yogi’s question, my facial expressions must have shown him the amount of fear that was inside me.

“Poor man. You are terrified and upset. I will make your hand alright. It is enough if atleast now you can understand the extent of my power” so saying, he touched my right shoulder and just rubbed his hands over my arm. Immediately I could feel that my arm had become normal.

Fearing that he may do something else, I said with a little hesitation, “Can I leave??” and he laughed.

He said, “Go now. When once all your fear has left you, come back another day and we will talk” and opened the door for me.

Having escaped that day, I rushed towards my home with great relief. After reaching home, I narrated all that had happened to everyone in a normal manner. I had kept small packets of the Turmeric, Kumkum, pulses etc, which the yogi had produced and they were all astonished on seeing these. I told them a little humorously about the amount of tension and agony that I had experienced inside that room.

But could not sleep peacefully once I went to bed.

That yogi’s facial expressions, words and deeds were tossing around in my mind and I was in a turmoil. Somewhere deep in my heart there was a dread, fear, panic….. !!

I was tossing around in my bed. If for a second I managed to doze off, then even in my dream his figure and words were bothering me. The next instant I would wake up as if from a nightmare. In this way I passed the night and it was morning already.

For almost a whole week, my actions became almost mechanical. I could guess that it was my mental status that was causing this. I slept, got up, bathed, read, spoke, ate, went to office, edited, and went to hotels in the evening with my friends. Went for a movie, chatted with friends etc. but what happened inside that closed room that night was sitting deep in my mind and so all my actions were coated with an artificial veneer.

At the back of all my actions, there was this unidentifiable fear and dread that was echoing in my heart and I was in a virtual hell not being able to openly say anything to anyone.

My inner world and outer world were two opposites and I started imagining that there was a permanent dread that was following me like a shadow. Not knowing a way out of this mess, I was slowly losing it.

How much ever I tried, the unnatural happenings of that night were coming to my mind’s eye repeatedly and were torturing me.

On the one hand I was afraid that ‘If the way in which I behaved with that Yogi and the words that I spoke to him were inappropriate, would the consequences be terrible ???’ and on the other hand, I also started thinking, ‘If by chance the yogi summons me again and I dont go, would something terrible happen ??’

These were the fears that were eating me up and slowly, day by day, this was becoming a mental illness and I was acting like one possessed by a spirit.

One evening feeling that I would get some peace of mind only if I tell someone about this, I went to my close friend Dunlop Krishnan’s home, and tearfully told him all about my mental agony.

My friend pitied me and gave me alot of consolation and said,”You are the one who always gives courage to others by saying that Periyavaa is there to take care of everything. Now you yourself are so scared!!”

“Bhakthi is advising me to be courageous but my mind is in a turmoil. What can I do?? I need to see Periyavaa immediately and tell him about everything. You have to accompany me…You have to only drive the car… Start immediately… We have to leave at once” I said, and hurried him.

At that point of time, Periyavaa was not in Kancheepuram. He was on touring in the TamilNadu –
Andhra border regions. We left after verifying his whereabouts and stopped the car en route to inquire about the exact location of his camp.

It was way past eleven in the night… We were speeding on a road, and I said, “Krishna, see there is the enclosed cycle cart standing there. Periyavaa must be staying here only. Stop the car.”

We stopped the car and we got down. The sentry Subbaiah and a few others were sleeping under a tree. There was a dilapidated Mantap on the side of the road. At its entrance we saw Kannan sitting there. (How much ever I try to recall now, I am not able to exactly say which place Periyavaa was staying in at that time. Kannan is also not able to recall clearly.)

On seeing us, Kannan was surprised and asked,”How come you both have come here at this unearthly hour??” (Almost midnight!!)

I said, “I will tell all about that later. I must have Periyava’s Darshan immediately. I have to tell him about an important matter.” We were very disappointed when Kannan said,

“Periyavaa has gone to bed… See that sack cloth there?? He is sleeping behind that… By now he must have gone to sleep… There is no place here...so sleep in the car only…”

Just as we started moving towards the car, we heard the reassuring voice of Periyavaa from behind the sack screen…”Who is that Kannaa??? Has Sridhar come??”

“Yes” said Kannan.

“Ask him to come.”

Kannan took me inside. The saviour who was lying down got up and sat down. Tearfully, I bowed down to Him and he asked me to sit down. I obeyed.

“What happened??” The nectar like question mixed with compassion, love and affection came like a spring shower and cooled my heart.

I narrated all that had happened without omitting any detail. Unashamed, I told Him about my fears and begged Him to deliver me from this uneasy and dreadful situation.

He listened to everything patiently, and then asked,”Why did you go to see him??” The question pricked me sharply.

“I could not bear to see my brother suffering from severe stomach pain and so hoping that he may give a miraculous cure and reduce the pain, I went to him. After having taken Periyavaa’s blessings for the operation, it was definitely wrong of me to have gone to someone else. I feel I am suffering the consequences of that act for the past one week. I am afraid that yogi may harm me in some way. Periyavaa must only save me. That is why I have come running to you” I said incoherently with a palpitating heart.

“Why are you afraid?? What can he do to you??” ("அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?"

Tears of gratitude sprang from my eyes. Immediately a huge burden was off my chest.
“Dont ever go for anything to people who do such things”.

“Okay” I said.

“Okay go home”.

I said, “It is now after midnight. I will stay for the night and leave tomorrow morning.”

“Have no fears. You leave immediately.” Periyavaa again gave me permission and asked me to leave.

I got up and after bowing down to Him again, I started my return journey.

“What can he do to you??” The fear that manifested itself at midnight, was cleared by this question at midnight itself.

The answer ‘Why Fear when I am here??’ was hidden in Periyavaa’s question itself and it kept echoing repeatedly in my heart.

This became my armour and a security fence for me. This armour and fence gave me a fearless peacefulness. Out of that peaceful mindset was born an abundant happiness. We laughed happily and chatted merrily and reached Chennai by night. When I entered my home, darkness had departed and it was dawn.

Source: Translated from the book Anbe Arule by Sri Bharanidharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


பெரியவாளின் ஹ்ருதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்த மஹா மஹா பெரியவர்...

தேப்பெருமாநல்லூர் ஶிவன் என்ற அன்னதானஶிவன்.
[ஶ்ரீ அன்னதான ஶிவனின் அன்னதான மஹத்வம்]

இவருடைய அன்னதான மஹா கைங்கர்யத்தைப் பற்றிப் பார்ப்போம்.

தேப்பெருமாநல்லூர் ராமஸ்வாமி என்ற நாமத்துடன் பிறந்து, வாஸ்தவத்துலேயே அவர் பண்ணிய அன்னதானத்தால் மட்டுமே 'அன்னதான ஶிவன்' என்று உலகமே போற்றி வணங்கிய உத்தம ஜீவனைப் பற்றி பெரியவாளுடைய திவ்யமங்கள சரித்ரத்தில் சொல்வதுதான் உத்தமம். அப்பேர்ப்பட்ட யுகமஹா புருஷருக்கு நாம் செய்யும் நமஸ்காரம்.

18th century-ன் மத்தியிலிருந்து, போன century மத்தி வரை, கும்பகோணம்தான் காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.

கும்பகோணம் என்றால், இப்போதுள்ளவர்களுக்கு மஹாமகம் நினைவுக்கு வரும். ஆனால், அப்போது இருந்தவர்களுக்கு, அப்போது அன்னதான ஶிவன் நடத்திய அதிஸயமான அன்னதான கைங்கர்யமும் நிச்சயமாக நினைவுக்கு வரும்.

நம்முடைய பெரியவா, மூன்று வயஸுக் குழந்தையாக, குட்டிக் கிணியாக இருந்த போதே [1897], ஸ்ரீ ஶிவனின் மாமாங்க அன்னதானம், ஸ்ரீமடத்தில் பூர்வ ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் துவங்கிவிட்டது!

1909-ல் பெரியவா.... 15 வயஸு பால ஸன்யாஸியாக இருந்தபோது வந்த மாமாங்கத்திலும்,
ஸ்ரீமடத்தின் ஸார்பாக அன்னதானத்தை தொடர்ந்தார் ஶிவன்.

1916-லிருந்து தொடங்கி, அவர் முக்தியடைந்த 1939 வரை, ஸ்ரீமடமே ஶிவனுடைய வாஸ ஸ்தானமானது.

அந்தப் பெரியவரின் அன்புப்பணி பெரியவாளின் கருணையோடு ஸங்கமமாகி, லக்ஷோபலக்ஷம் ஜனங்களின் குக்ஷிகளை [வயிறு] முட்ட முட்ட நிறைவித்தது. இத்தனை லக்ஷம் ஜனங்களுக்கும் ஶ்ரீமடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

அன்னதானம் பற்றி பெரியவா சொன்ன கதை..........

"தானங்கள் நெறைய பண்ணினவன் கர்ணன். யார் வந்து, எதக் கேட்டாலும் குடுத்துடுவான்!
மஹாபாரத சண்டைல, யுத்தகளத்ல, உஸுர் போனதும், அவன் வீரஸ்வர்க்கத்துக்கு போனான். அங்க, அவனுக்கு எல்லாம் இருந்தும், ஒண்ணே ஒண்ணு மட்டும் இல்ல!

அவனுக்கு பசி எடுத்தா..... வைர வைடூர்யமா கொட்டி கெடந்தாலும், ஒரு பிடி சோறும், ஒரு
கொவளை ஜலமும் இல்ல!.....

ஏன் இப்டி?....

அங்க இருந்த கார்யஸ்தாளைக் கேட்டான்.

அவாள்ளாம் சொன்னா....

"பாருங்கோ.... நீ.... தான ஸூரன்தான்! எத்தனைதான் வெல [விலை] பெத்த பொருளா, நீ வாரி
வாரி வழங்கி தானம் பண்ணிருந்தாலும், முக்யமான தானத்தை நீ பண்ணவே இல்லியே!...."ன்னதும், கர்ணனுக்கு தூக்கி வாரிப் போட்டுது!

'எந்த தானத்தை நா... பண்ணாம விட்டேன்?'ன்னு கேட்டதும், அவா சொன்னா....

"நீ, ஒரு தடவை கூட அன்ன தானமே பண்ணலியேப்பா...! அங்க [பூமி] நீ குடுத்ததுதான், இங்க
ஒனக்கு கெடைக்கும்" ன்னுட்டா!

கர்ணனுக்கு அவமானமா போச்சு...! இந்த தர்ம ஸூக்ஷ்மம் அவனுக்கு தெரியாம போய்டுத்து..!
என்ன பண்ணறது?....பசியானா... வயத்தை கிள்றது!

அப்போ நாரதர் அங்க வந்துட்டு, அவன்ட்ட சொன்னார்.......

"பஞ்ச பாண்டவாளுக்காக கண்ணன் தூது வந்தப்போ, நீ ஒன்னோட ஆள்காட்டி வெரலால, விதுரரோட வீட்டை காமிச்சு, அவனை 'அங்க போய் ஸாப்டு'ன்னு, க்ருஷ்ணன்கிட்ட கேலியா சொன்னே! அதுனால ஒன்னோட ஆள்காட்டி வெரலை வாய்ல வெச்சுக்கோ! ஒம்பசி போய்டும்"...ன்னார்.

அதுனால நாம எத்தனைதான் தானம் பண்ணினாலும், பசிச்சவாளுக்கு, அது எந்த ஜீவராஸியா இருந்தாலும் ஸெரி, அன்னம் போடணும். தெனோமும் அவாவா ஆத்துல ஸமைக்கறப்போ, ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு பாத்ரத்தில் தனியா போட்டு வெச்சு, மொத்தமா ஏதாவது அன்னதானமோ இல்லாட்டா, ஏழை பாழேகளுக்கு ஒதவி பண்ணினா.... அது, எனக்கே பண்ற மாதிரி!...
காமாக்ஷியோட கருவறைல அன்னபூரணிக்கு ஸன்னதி இருக்கு!

'இரு நாழி நெல் கொண்டு, அவள் இயற்றும் எண் நான்கு அறங்களில்' அன்னதானம் ரொம்ப முக்யமானது.

காஞ்சிபுரத்ல மணிமேகலை, தங்கிட்ட இருந்த அமுதஸுரபிலேர்ந்து அக்ஷயமா அன்னதானம் பண்ணியிருக்கா.

'காஞ்சி'ங்கறதும், 'மணிமேகலை'ங்கறதும் ஒண்ணுதான்! மணி கட்டினஒட்டியாணத்துக்குத்தான் அப்டிப் பேர்!...

காமாக்ஷியோட அன்ன பாலிப்பை ஒஸத்தியாவும், பரமேஶ்வரனை பரியாஸம் பண்ணியும் ஸுந்தரமூர்த்தி நாயனார் எப்டி பாடறார்-ன்னா....

ஓணன், காந்தன்-னு ரெண்டு அஸுராள் பரமேஶ்வரனை வழிபட்ட ஸ்தலந்தான் காஞ்சில இருக்கற ஓணகாந்தன்றளி.

அங்கயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை, ஸுந்தரமூர்த்தி நாயனார் பாத்தார். பாத்துட்டு பாடறார்....
"லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா, புராதனமான இந்த காஞ்சிபுரத்ல... கச்சி மூதூர்லேயே இருக்கா..! அவ போட்டு ஸாப்ட்டா, வயறு ரொம்பறது மட்டுமில்ல.! உயிரும் ரொம்பிடும்.

'ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி'ன்னு ஆசார்யாள், அன்னபூர்ணேஶ்வரிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டபடி, அவ கையால வாங்கிச் ஸாப்ட்டா, உய்நெறி-ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும். இப்டி ஒருத்தி இந்த காஞ்சீபுரத்லேயே காமக் கோட்டத்ல இருக்கறப்போ...... ஏ ! பிச்சாண்டி ஸ்வாமி ! நீர் ஏங்காணும் இப்டி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சையெடுத்துண்டு திரியரீர்?.." ன்னு ஸுந்தரர்.... ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமா கேலி பண்றார்...

....அப்டி..... அன்னதானம் பண்ணினவர்தான் தேப்பெருமாநல்லூர் ஶிவன்!
ஸாதம்னா..... அப்டியே வெள்ள-வெளே..ர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும்! ஸாம்பார் அண்டால.... யானையே முழுகிப் போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல ஶிவன், மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக, அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்-னு சொல்லுவாளே?.... அதையே அந்த ஏழை ப்ராஹ்மண ஶிவன் பண்ணாரோ-ன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.

..." என்று பெரியவாளே வியந்து போன அன்னதான ஶிவனுக்கு, இப்படி அன்னதானம் செய்வதையே ஜன்மப்பணியாக செய்ய ஆதேஶம் கிடைத்தது, தேப்பெருமாநல்லூர் ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
பெரியவாளின் திருவாக்கால் ஶிவனின் பெருமைகளைக் கேட்போம்....

"ஒரு தடவை, த்ளாயிரத்து முப்பத்து மூணாம் [1933] வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே [விறகு] நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது. ஆவி வாஸனைலேர்ந்தே, இன்ன இன்ன பண்டம், இன்னும் இவ்ளோவ் சேக்கணும்-னு கரெக்டா சொல்லிடுவார்! அப்டி, கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாஸனைலேர்ந்தே, அதுக்கு இன்னும் எவ்ளோவ் கொத்தமல்லி அரச்சு விடணும்-னு சொல்லுவார்!

அது எவ்ளோவ் தெரியுமோ?......

ஒரு பிடி கொத்தமல்லியோ, ஒரு கத்தையோ இல்ல! 'ஒரு மொறம் அரைச்சு விடுடா"ன்னு அதட்டல் போட்டாராம்!

ஏற்கனவே அரைச்சு விட்டதுக்கு, கூடுதலா, மொறம் கொத்தமல்லி சேக்கணும்னா... எவ்ளோவ் ரஸம் வெச்சிருப்பா! எவ்ளோவ் பேர் ஸாப்டிருப்பா-ன்னு நீங்களே கணக்குப் போட்டு பாத்துக்கோங்கோ!

ஸாப்படற எடத்தை, ஶுத்தி பண்றதுக்காக, தொடப்பக்கட்டையே, ரெண்டு வண்டி வந்துதுன்னா... பாத்துக்கோங்கோ!

...எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும், ஸாதம் வடிச்சு மாளாது-னு... அவர் என்ன பண்ணுவாராம்...... பத்து மூட்டை, இருவது மூட்டை ஸாதம் வடிச்சு, அதை அப்டியே..... நீள நீளப் பாய்-ல பரத்திக் கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே, மெலீ...ஸா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை.... ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்...! பரத்திக் கொட்டிட்டு, அதுக்கு மேல கெட்டிக் கோணியா [சாக்கு] போட்டு, நானா அடிப் பாய்க்கு, அடிவரைக்கும் அதை ஓரளவு இறுக்கமா சொருகி மூடிப்பிடுவாராம்!...
கா[ல்]மணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.... அத்தனை அரிசியும் புஷ்பமா..... ஸாதமாயிருக்குமாம்! அதாவுது, ஸாதம் வடிக்கற கார்யத்ல..... பாதி மிஞ்சும்படியா இப்டி யுக்தி பண்ணிண்டு இருந்திருக்கார்...!

இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய்ய மோர் விடணும்னா அத்தனை பாலுக்கு எங்க போறது?

இந்த மாதிரி பெரிய உத்ஸவ ஸமாராதனைகள்ள, ஶிவன்..... அதுக்கும் ஒரு யுக்தி வெச்சிருந்தார்.

Refridgerator, அது-இதுல்லாம் இல்லாத நாள்ள.... அவர் ஒரு புது மாதிரி refridgerator கண்டுபிடிச்சிருந்தார்!

ஸமாராதனைக்கு பல வாரம், பல மாஸம் முந்தியே, தயிர் ஸேகரம் பண்ண ஆரம்பிச்சுடுவார். தயிர் சேரச் சேர, பெரிய பெரிய மரப் பீப்பாய்கள்ள.... அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், அதோட வாயை மெழுகால அடச்சு, அப்டியே ஆழமான கொளங்களுக்கு [குளம்] அடில தள்ளிப்பிடுவார்!

அப்றம் எப்பத் தேவைப்படறதோ, அப்பத் தெறந்தா..... மொத நா[ள்] ராத்ரிதான் தோச்ச மாதிரி, தயிர் ஶுத்தமா இருக்கும்!

கொளத்தொட குளிர்ச்சி மாத்ரந்தான் காரணம்-னு சொல்றதுக்கில்ல..! அவரோட மனஸு விஸேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்...."

மனஸெல்லாம் குழைந்து போய், தன் பக்தனின் பெருமைகளை கூறி மாளவில்லை, பகவானுக

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


பெரியவாளின் அம்மா வீட்டில் எதிரொலிக்குது வேத கோஷம் ..!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது.

இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!

ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.

அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.

என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!

பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.

வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்று, அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

எஸ்.சந்திர சேகர்

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 
"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
---------------
பெரியவாளின் ஹ்ருதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்த மஹா மஹா பெரியவர்...

தேப்பெருமாநல்லூர் ஶிவன் என்ற அன்னதானஶிவன்.
[ஶ்ரீ அன்னதான ஶிவனின் அன்னதான மஹத்வம்]

இவருடைய அன்னதான மஹா கைங்கர்யத்தைப் பற்றிப் பார்ப்போம்.

தேப்பெருமாநல்லூர் ராமஸ்வாமி என்ற நாமத்துடன் பிறந்து, வாஸ்தவத்துலேயே அவர் பண்ணிய அன்னதானத்தால் மட்டுமே 'அன்னதான ஶிவன்' என்று உலகமே போற்றி வணங்கிய உத்தம ஜீவனைப் பற்றி பெரியவாளுடைய திவ்யமங்கள சரித்ரத்தில் சொல்வதுதான் உத்தமம். அப்பேர்ப்பட்ட யுகமஹா புருஷருக்கு நாம் செய்யும் நமஸ்காரம்.

18th century-ன் மத்தியிலிருந்து, போன century மத்தி வரை, கும்பகோணம்தான் காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.

கும்பகோணம் என்றால், இப்போதுள்ளவர்களுக்கு மஹாமகம் நினைவுக்கு வரும். ஆனால், அப்போது இருந்தவர்களுக்கு, அப்போது அன்னதான ஶிவன் நடத்திய அதிஸயமான அன்னதான கைங்கர்யமும் நிச்சயமாக நினைவுக்கு வரும்.

நம்முடைய பெரியவா, மூன்று வயஸுக் குழந்தையாக, குட்டிக் கிணியாக இருந்த போதே [1897], ஸ்ரீ ஶிவனின் மாமாங்க அன்னதானம், ஸ்ரீமடத்தில் பூர்வ ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் துவங்கிவிட்டது!

1909-ல் பெரியவா.... 15 வயஸு பால ஸன்யாஸியாக இருந்தபோது வந்த மாமாங்கத்திலும்,
ஸ்ரீமடத்தின் ஸார்பாக அன்னதானத்தை தொடர்ந்தார் ஶிவன்.

1916-லிருந்து தொடங்கி, அவர் முக்தியடைந்த 1939 வரை, ஸ்ரீமடமே ஶிவனுடைய வாஸ ஸ்தானமானது.

அந்தப் பெரியவரின் அன்புப்பணி பெரியவாளின் கருணையோடு ஸங்கமமாகி, லக்ஷோபலக்ஷம் ஜனங்களின் குக்ஷிகளை [வயிறு] முட்ட முட்ட நிறைவித்தது. இத்தனை லக்ஷம் ஜனங்களுக்கும் ஶ்ரீமடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

அன்னதானம் பற்றி பெரியவா சொன்ன கதை..........

"தானங்கள் நெறைய பண்ணினவன் கர்ணன். யார் வந்து, எதக் கேட்டாலும் குடுத்துடுவான்!
மஹாபாரத சண்டைல, யுத்தகளத்ல, உஸுர் போனதும், அவன் வீரஸ்வர்க்கத்துக்கு போனான். அங்க, அவனுக்கு எல்லாம் இருந்தும், ஒண்ணே ஒண்ணு மட்டும் இல்ல!

அவனுக்கு பசி எடுத்தா..... வைர வைடூர்யமா கொட்டி கெடந்தாலும், ஒரு பிடி சோறும், ஒரு
கொவளை ஜலமும் இல்ல!.....

ஏன் இப்டி?....

அங்க இருந்த கார்யஸ்தாளைக் கேட்டான்.

அவாள்ளாம் சொன்னா....

"பாருங்கோ.... நீ.... தான ஸூரன்தான்! எத்தனைதான் வெல [விலை] பெத்த பொருளா, நீ வாரி
வாரி வழங்கி தானம் பண்ணிருந்தாலும், முக்யமான தானத்தை நீ பண்ணவே இல்லியே!...."ன்னதும், கர்ணனுக்கு தூக்கி வாரிப் போட்டுது!

'எந்த தானத்தை நா... பண்ணாம விட்டேன்?'ன்னு கேட்டதும், அவா சொன்னா....

"நீ, ஒரு தடவை கூட அன்ன தானமே பண்ணலியேப்பா...! அங்க [பூமி] நீ குடுத்ததுதான், இங்க
ஒனக்கு கெடைக்கும்" ன்னுட்டா!

கர்ணனுக்கு அவமானமா போச்சு...! இந்த தர்ம ஸூக்ஷ்மம் அவனுக்கு தெரியாம போய்டுத்து..!
என்ன பண்ணறது?....பசியானா... வயத்தை கிள்றது!

அப்போ நாரதர் அங்க வந்துட்டு, அவன்ட்ட சொன்னார்.......

"பஞ்ச பாண்டவாளுக்காக கண்ணன் தூது வந்தப்போ, நீ ஒன்னோட ஆள்காட்டி வெரலால, விதுரரோட வீட்டை காமிச்சு, அவனை 'அங்க போய் ஸாப்டு'ன்னு, க்ருஷ்ணன்கிட்ட கேலியா சொன்னே! அதுனால ஒன்னோட ஆள்காட்டி வெரலை வாய்ல வெச்சுக்கோ! ஒம்பசி போய்டும்"...ன்னார்.

அதுனால நாம எத்தனைதான் தானம் பண்ணினாலும், பசிச்சவாளுக்கு, அது எந்த ஜீவராஸியா இருந்தாலும் ஸெரி, அன்னம் போடணும். தெனோமும் அவாவா ஆத்துல ஸமைக்கறப்போ, ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு பாத்ரத்தில் தனியா போட்டு வெச்சு, மொத்தமா ஏதாவது அன்னதானமோ இல்லாட்டா, ஏழை பாழேகளுக்கு ஒதவி பண்ணினா.... அது, எனக்கே பண்ற மாதிரி!...
காமாக்ஷியோட கருவறைல அன்னபூரணிக்கு ஸன்னதி இருக்கு!

'இரு நாழி நெல் கொண்டு, அவள் இயற்றும் எண் நான்கு அறங்களில்' அன்னதானம் ரொம்ப முக்யமானது.

காஞ்சிபுரத்ல மணிமேகலை, தங்கிட்ட இருந்த அமுதஸுரபிலேர்ந்து அக்ஷயமா அன்னதானம் பண்ணியிருக்கா.

'காஞ்சி'ங்கறதும், 'மணிமேகலை'ங்கறதும் ஒண்ணுதான்! மணி கட்டினஒட்டியாணத்துக்குத்தான் அப்டிப் பேர்!...

காமாக்ஷியோட அன்ன பாலிப்பை ஒஸத்தியாவும், பரமேஶ்வரனை பரியாஸம் பண்ணியும் ஸுந்தரமூர்த்தி நாயனார் எப்டி பாடறார்-ன்னா....

ஓணன், காந்தன்-னு ரெண்டு அஸுராள் பரமேஶ்வரனை வழிபட்ட ஸ்தலந்தான் காஞ்சில இருக்கற ஓணகாந்தன்றளி.

அங்கயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை, ஸுந்தரமூர்த்தி நாயனார் பாத்தார். பாத்துட்டு பாடறார்....
"லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா, புராதனமான இந்த காஞ்சிபுரத்ல... கச்சி மூதூர்லேயே இருக்கா..! அவ போட்டு ஸாப்ட்டா, வயறு ரொம்பறது மட்டுமில்ல.! உயிரும் ரொம்பிடும்.

'ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி'ன்னு ஆசார்யாள், அன்னபூர்ணேஶ்வரிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டபடி, அவ கையால வாங்கிச் ஸாப்ட்டா, உய்நெறி-ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும். இப்டி ஒருத்தி இந்த காஞ்சீபுரத்லேயே காமக் கோட்டத்ல இருக்கறப்போ...... ஏ ! பிச்சாண்டி ஸ்வாமி ! நீர் ஏங்காணும் இப்டி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சையெடுத்துண்டு திரியரீர்?.." ன்னு ஸுந்தரர்.... ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமா கேலி பண்றார்...

....அப்டி..... அன்னதானம் பண்ணினவர்தான் தேப்பெருமாநல்லூர் ஶிவன்!
ஸாதம்னா..... அப்டியே வெள்ள-வெளே..ர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும்! ஸாம்பார் அண்டால.... யானையே முழுகிப் போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல ஶிவன், மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக, அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்-னு சொல்லுவாளே?.... அதையே அந்த ஏழை ப்ராஹ்மண ஶிவன் பண்ணாரோ-ன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.

..." என்று பெரியவாளே வியந்து போன அன்னதான ஶிவனுக்கு, இப்படி அன்னதானம் செய்வதையே ஜன்மப்பணியாக செய்ய ஆதேஶம் கிடைத்தது, தேப்பெருமாநல்லூர் ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
பெரியவாளின் திருவாக்கால் ஶிவனின் பெருமைகளைக் கேட்போம்....

"ஒரு தடவை, த்ளாயிரத்து முப்பத்து மூணாம் [1933] வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே [விறகு] நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது. ஆவி வாஸனைலேர்ந்தே, இன்ன இன்ன பண்டம், இன்னும் இவ்ளோவ் சேக்கணும்-னு கரெக்டா சொல்லிடுவார்! அப்டி, கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாஸனைலேர்ந்தே, அதுக்கு இன்னும் எவ்ளோவ் கொத்தமல்லி அரச்சு விடணும்-னு சொல்லுவார்!

அது எவ்ளோவ் தெரியுமோ?......

ஒரு பிடி கொத்தமல்லியோ, ஒரு கத்தையோ இல்ல! 'ஒரு மொறம் அரைச்சு விடுடா"ன்னு அதட்டல் போட்டாராம்!

ஏற்கனவே அரைச்சு விட்டதுக்கு, கூடுதலா, மொறம் கொத்தமல்லி சேக்கணும்னா... எவ்ளோவ் ரஸம் வெச்சிருப்பா! எவ்ளோவ் பேர் ஸாப்டிருப்பா-ன்னு நீங்களே கணக்குப் போட்டு பாத்துக்கோங்கோ!

ஸாப்படற எடத்தை, ஶுத்தி பண்றதுக்காக, தொடப்பக்கட்டையே, ரெண்டு வண்டி வந்துதுன்னா... பாத்துக்கோங்கோ!

...எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும், ஸாதம் வடிச்சு மாளாது-னு... அவர் என்ன பண்ணுவாராம்...... பத்து மூட்டை, இருவது மூட்டை ஸாதம் வடிச்சு, அதை அப்டியே..... நீள நீளப் பாய்-ல பரத்திக் கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே, மெலீ...ஸா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை.... ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்...! பரத்திக் கொட்டிட்டு, அதுக்கு மேல கெட்டிக் கோணியா [சாக்கு] போட்டு, நானா அடிப் பாய்க்கு, அடிவரைக்கும் அதை ஓரளவு இறுக்கமா சொருகி மூடிப்பிடுவாராம்!...
கா[ல்]மணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.... அத்தனை அரிசியும் புஷ்பமா..... ஸாதமாயிருக்குமாம்! அதாவுது, ஸாதம் வடிக்கற கார்யத்ல..... பாதி மிஞ்சும்படியா இப்டி யுக்தி பண்ணிண்டு இருந்திருக்கார்...!

இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய்ய மோர் விடணும்னா அத்தனை பாலுக்கு எங்க போறது?

இந்த மாதிரி பெரிய உத்ஸவ ஸமாராதனைகள்ள, ஶிவன்..... அதுக்கும் ஒரு யுக்தி வெச்சிருந்தார்.

Refridgerator, அது-இதுல்லாம் இல்லாத நாள்ள.... அவர் ஒரு புது மாதிரி refridgerator கண்டுபிடிச்சிருந்தார்!

ஸமாராதனைக்கு பல வாரம், பல மாஸம் முந்தியே, தயிர் ஸேகரம் பண்ண ஆரம்பிச்சுடுவார். தயிர் சேரச் சேர, பெரிய பெரிய மரப் பீப்பாய்கள்ள.... அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், அதோட வாயை மெழுகால அடச்சு, அப்டியே ஆழமான கொளங்களுக்கு [குளம்] அடில தள்ளிப்பிடுவார்!

அப்றம் எப்பத் தேவைப்படறதோ, அப்பத் தெறந்தா..... மொத நா[ள்] ராத்ரிதான் தோச்ச மாதிரி, தயிர் ஶுத்தமா இருக்கும்!

கொளத்தொட குளிர்ச்சி மாத்ரந்தான் காரணம்-னு சொல்றதுக்கில்ல..! அவரோட மனஸு விஸேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்...."

மனஸெல்லாம் குழைந்து போய், தன் பக்தனின் பெருமைகளை கூறி மாளவில்லை, பகவானுக

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
---------------

பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"
(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே
ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!")

நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான இதழ்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்துல ஒரு சமயம். நல்ல பனிக்காலம்.

விடியற்காலையில் எழுந்திருக்கறதுக்கே பலரும்
சோம்பல்படுவா. பனிகொட்டறதுல ரெண்டடி தூரத்துல
இருக்கறவாளோட முகம்கூட தெரியாது.ஒரு போர்வைக்கு
நாலு போர்வை போர்த்திண்டாலும் உடம்பு நடுங்கும். ஆனா
அத்தனை குளிர்லயும் மகாபெரியவா கார்த்தால
நாலுமணிக்கெல்லாம் எழுந்து, கொஞ்சமும் சலிச்சுக்காம
நீராடிட்டு நித்ய கர்மானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க
ஆரம்பிச்சுடுவார்.

வாட்டற பனியோட பிரதிபலிப்பா, மகா பெரியவாளோட
உதடுகள்ல நிறைய வெடிப்பு வந்துடுத்து. உதட்டோட உள்
பக்கம் எல்லாம் புண்ணாயிடுத்து.அந்த மாதிரியான
நிலைமைல உதட்டை சரியா மூடக்கூட முடியாது.

ரணமா இருந்ததால, சரியா பேசக்கூட முடியாம வேதனை
இருந்தாலும் தன்னோட கஷ்டம் எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல் எப்போதும்போல மடத்துல உள்ளவா,
வேதம் சொல்ல வர்றவா,தரிசனம் பண்ண வர்றவாள்னு
எல்லார்கிட்டேயும் பேசிக் கொண்டிருந்தார்.

பனிக்காலத்துல உதடு வெடிக்கும்போது அடிக்கடி வெண்ணெய்
தடவிண்டே இருந்தால் சீக்கிரமா வெடிப்பு சரியாகிவிடும்.
ஆனால், ஆசார சீலரான பெரியவா, கடைகள்ல விற்கிற
வெண்ணெயை வாங்கித் தந்தால் தடவிக் கொள்ள மாட்டார்..
என்ன பண்ணுவது? மடத்துலய தயார் செய்யறதுன்னா அப்போ
இருந்த நிதி நிலைமைல அது கொஞ்சம் செலவான விஷயம்.
அதோட வெண்ணெய் தயார் பண்றதுக்கு குறைஞ்சது ரெண்டு
நாளாவது ஆகும். என்ன செய்யறதுன்னு மடத்துல இருந்தவா
எல்லாரும் யோசிச்சுண்டு இருந்தா.

அந்த சமயத்துல வயசான பாட்டி ஒருத்தர், ஆசார்யாளை
தரிசனம் செய்யறதுக்கு வந்தா.முந்தின நாள் பெரியவாளை
தரிசனம் பண்ண வந்தப்போ அவரோட உதடு
வெடிச்சிருக்கறதைப் பார்த்ததாகவும்,அதனால் தானே மடியோட
ஆசாரமா பசும்பால் வாங்கி,காய்ச்சி,உறை குத்தி,தயிராக்கிக்
கடைஞ்சு ஆசாரத்துக்கு எந்தக் குறைபாடும் வராம வெண்ணெய்
எடுத்துக்கொண்டுவந்திருக்கறதாகவும் மடத்து சிப்பந்திகள்கிட்டே
சொன்ன அந்தப் பாட்டி,தான் கொண்டுவந்த வெண்ணெயை
ஆசார்யா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினா.

"பெரியவா! ஒங்க ஒதடு பனியால ரொம்ப பாளம் பாளமா
வெடிச்சிருக்கு. நான் ரொம்ப மடியா வெண்ணெய் கடைஞ்சு
எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்க மறுக்காம இதை ஏத்துண்டு
ஒதட்டுல தடவிக்கணும்!" அப்படின்னு ப்ரார்த்தனை செய்தாள்.

அப்போ பெரியவாளை தரிசனம் பண்றதுக்கு வந்திருந்த ஒரு
தம்பதியோட குழந்தை அம்மாவோட கையைப் பிடிச்சுண்டு
அத்தனைநேரம் சமர்த்தா நின்னுண்டு இருந்த குழந்தை,
வெண்ணெயைப் பார்த்ததும், தாயாரோட கையை உதறிட்டு
ஓடிவந்து பெரியவா முன்னால நின்னு,'எனக்கும் வெண்ணெய்
வேணும்'கற மாதிரி தன்னோட பிஞ்சுக்கையை நீட்டியது.

சாட்சாத் பாலகோபாலனே வந்து ஆசார்யாகிட்டே வெண்ணெய்
வேணும்னு கேட்கற மாதிரி தோணித்து அங்கே இருந்தவா
எல்லாருக்கும்.இதுக்குள்ளே, அந்தக் குழந்தையோட பெற்றோர்
அவசர அவசரமா அதைத் தூக்கிக்க வந்துட்டா. அதோட
வெண்ணெய் கேட்டது தப்புங்கற மாதிரி உஸ்னு அதட்டவும்
ஆரம்பிச்சா. கை அசைவுல அவாளை பேசாம இருக்கச்
சொன்னார், மகாபெரியவா.

தன்னை தரிசிக்கவர்றவா கேட்காமலேயே அவாளுக்குத்
தேவையானதைத் தெரிஞ்சுண்டு குடுக்கக்கூடிய பெரியவா,
ஆத்மார்த்தமான பக்தி உள்ளவாளுக்கு தன்னையே
குடுத்துடக்கூடிய அந்த தெய்வம், குழந்தை அழற
தோரணையிலேயே அதுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுண்டு
குடுக்கற அம்மா மாதிரியான அந்த மஹா மஹா மாதா,
தனக்கு முன்னால இருந்த அத்தனை வெண்ணெயையும்
தூக்கி அந்தக் குழந்தைகிட்டே குடுத்துட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு கொஞ்சம்
முகம் சுருங்கியது.'ரொம்ப நன்னா இருக்கு ஆசார்யா
பண்ணினது. ஏதோ கொழந்தை கேட்டா ஒரு எலுமிச்சங்காய்
சைஸுல உருட்டிக் குடுத்தா போறாதா? அப்படியே
டப்பாவோடாயா தூக்கிக் குடுக்கணும்? இப்போ ஒதட்டுல
தடவிக்க ஏது வெண்ணெய்?' அப்படின்னு மனசுக்குள்ளே
சிலர் நினைச்சுண்டா.சிலர் மகாபெரியவா காதுல
விழாதபடி முணுமுணுப்பா பேசிண்டா.

"என்ன எல்லாரோட முகமும் தொங்கிப் போயிடுத்து?
வெண்ணெயை மொத்தமா குடுத்துட்டேனேன்னா?
கொழந்தை சாப்ட்டாலே போதும்.என்னோட ஒதட்டுப்புண்
சரியாயிடும்!" தானே குழந்தையாக சிரித்தார்-பெரியவா.

அன்னிக்கு சாயங்காலமே பெரியவாளோட உதட்டுல
இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே
தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.

ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;

"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டுபோன
பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு.
அதான் எனக்கு சரியாயிடுத்து!"

சரீரம் வேறவேறயா இருந்தாலும் உள்ளே இருக்கிற ஆத்மா
ஒண்ணுதான்கறது அத்வைதம்.அந்தக் கொள்கையைப்
பரப்பறதுக்காகவே ஆதிசங்கர மகான் ஏற்படுத்தின மடத்தை
அலங்கரிக்க வந்த ஆசார்யா, இந்த லீலை மூலமா அதை
நேரடியா உணர்த்தினதை நினைச்சு சிலிர்த்துப்போனார்கள்
எல்லாரும்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
---------------

The miracle that lost eye sight got again!!

Balu is one of the senior staff of the monastering to maha periyava. He shared some thrilled incidents that happened with us when the great adult was staying in teenambakkam.

" a woman from Kerala came to worship periyava. And when she was pregnant, she fell on her head, and fell on her head. She often suffered from that type of Fitz.

Her eyes also lost. Even though a child was born in time, her sight did not return.

In this situation, a familiar friend for their family asked to see the press. He brought no one of the trust.

Namboothiri who analyze the woman's horoscope, " don't worry, you will get eye sight. But you have to do the kshetra. Start in guruvayur, go to all the holy places, kumbakonam, holy places. If possible, it would be said, " if possible, it is very special

So the woman who went to the temple, went to the temple, went to the temple. There in the temple of swami, when the gurus had finished the fire, she took away the Aarti, and she shall put a hundred rupees on the plate.

Surprise for the gurus. He who knew that she has no vision, he said, " Mother... this is not ten rupees, but hundred rupees note...

She also said, " it's okay... take it...

And immediately the gurus asked, " have you not seen periyava?"

This woman doesn't know who she's saying. She is questioned only the blind.

Gurus Have advised that " he is in kanchipuram, at shankara monastery... visit him...

She can immediately get out of there and went to chidambaram and came to kanchipuram. On that day, a celebrity's house in Chennai. He sent them all the prasad and sat down in the monastery.

The lady who came there, left the fruits that she brought in the chair and explained her situation.

As the gurus told the temple of the temple, she told him to see kanchi muni.

And immediately he called her husband and said to him, " ask your family that you know me!" Also, he took the torch light near and lightened his face.

At the same time the girl said, " here you see the sannyasi told by the gurus!" get excited!
Yes... Kanchi God gave her mercy. They just said, 'believing will not spoil... this is four hidden judgement'! The girl got her sight at kanchi muni.

She had to get her eye sight again. More than that, after the gods and the temple gurus of the temple, the great faith that she had was not wasted.

But when maha periyava asked about this, do you know what he said?
I have no power. The benefit of your former people, your faith, the grace of ambal kamakshiyi meditate everyday... everything is the reason! '

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
-------------------------------------------------------

Dinamalar dated 21 October 2014

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார். கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார். அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது மட்டுமல்ல! தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார். இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. நடந்தே செல்ல திட்டமிட்டார். அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார். எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார். அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.

அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார். பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர்.

செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார். அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர். அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன. ஆனால், மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால், பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது. அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார். அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார். செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.

அவரிடம் பக்தர்கள்,""இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,'' என கோரிக்கை வைத்தனர். மகாபெரியவர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார். பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர். அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார். பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.

ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நாமும் மகாபெரியவர் ஆசியுடன், அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
-------------------------------------------------------

Experiences with Maha Periyava: The Epitome of Compassion Who Appeased The Yearnings of the Distressed Soul

Sakshat Parameswaran Himself is showering His blessings on us in His Avatar as Sri Maha Periyava with the greatness of SukaBrahma Rishi due to the boundless love and affection He has on us.

There are many incidents where the Epitome of compassion has fulfilled the desires of many devotees.
Balachandar, a simple devotee was thinking about Sri Maha Periyava and was in great mental anguish. “Maha Periyava! People eulogize you as the Epitome of compassion! But I have not had the good fortune of having your Darshan for many days. After I had your Darshan in my childhood, many years ago when you visited our village, I have not been able to have your Darshan till today because of my poverty. You are now camping somewhere in the North.”—tears welled up in his eyes and were rolling down his cheeks.

Balachandar was working for a small income in Thiruvanmiyur to take care of his parents and sisters, who were living in some other place. He himself was staying with his relatives. His financial condition was so tight, that he had not been able to go anywhere outside Chennai.

When he returned from the office one evening, he was reading an article on Sri Maha Periyava in a weekly magazine. When he thought about his poverty stricken state and his inability to have His Darshan, it increased his grief and caused a heavy heart.

In spite of repeated persuasion by the lady of the house to have dinner, he refused to have dinner and after crying a lot, felt sleepy and slept off.

The next day dawned.

His face showed signs of crying in the night due to his craving for Periyava’s Darshan and the relatives asked him whether he had cried.

When he went to the office, the same question was asked by his colleagues at office also.

“Sir! Did you cry? You are looking highly perturbed and distressed!”

Balachandar confided in his close friend about his mental agony and started with his office work.

The company proprietor who entered the office just then, on his way to his room stopped at Balachandar’s desk and told him, “Balachandar ! Come to my room!”

Balachandar went inside his room thinking that he had called him to discuss about some office matter.

He was surprised when the proprietor asked him, “Do you know where Periyava is camping now?”

The boss then answered the question himself, “I think He is camping somewhere near Mahagoan. I had made reservations in the train to go there; but I cannot go as there is an important meeting here for me. I do not want to cancel the ticket. Please take this ticket, go there on my behalf and have Periyava’s Darshan. I shall arrange to convert this ticket in your name. Get ready and start”.

Balachandar was stunned at this sudden development; it looked as if the compassionate God, Sri Periyava had given this order in the proprietor’s roopam (form) to provide solace to his distressed soul.

He nodded his agreement to go and came out of the room. But another worry caught hold of him.

“I got a first class ticket to go and have Darshan, that is alright. Boss will not ask me money for this ticket. But where is the money for the travel from Mahagoan to the place where Periyava is camping and for the other expenses on the way and the return ticket to Chennai after the Darshan?”—his thoughts ran thus. He came back to his seat and told his close friend what had happened.

“Why do you worry? Periyava has showered His Grace on you as per your wishes. Start immediately without any worry. I will give you hundred rupees. The return ticket charge will be within that amount only”—-said his friend.

Balachandar accepted the money with hesitation. As he would not be able to return that sum in one lot, he made an agreement with his friend that he would return the amount in ten months at the rate of ten rupees per month.

As he had never crossed the boundaries of Chennai in his lifetime and he could not speak any other language, he was feeling anxious and scared till he reached Mahagoan.

When he was standing on the road thinking about whom to ask the way to where Periyava was camping, a lorry loaded with sugarcane came that way and he stopped it by waving his hand. He asked the driver in broken Hindi where Sankaracharyar was staying. The driver, as if he had known him very well, took him in his lorry and left him in the place where Periyava was camping. When he was worried as to how much money the driver would demand, the driver refused to accept even a paisa because he was happy to have taken him to Periyava’s place.

Balachandar was overwhelmed by the compassion showered on him by Sri Periyava. He ran inside to the place where Sri Maha Periyava was camping to have His Darshan. He had His Darshan to his full satisfaction. Although Periyava did not speak a word, he was happy that He fulfilled his desire of seeing the Sakshat Parameshwaran and with that happiness he started towards the railway station thanking Him in his mind.

The train to Chennai was about to arrive. He stood in the queue with the hundred rupees in his pocket which he had got as loan. As he stood in the queue, he was thinking that he would return the balance money after paying for the ticket immediately after reaching Chennai and pay back the remaining outstanding amount at the rate of ten rupees per month.

At that time, he heard two men talking in Tamil. They came and stood just behind him in the queue. He was happy to see Tamil speaking people there. They asked him if he was travelling to Chennai. When he replied in the affirmative, they took him away from the queue.

“Three of us came here for Sri Maha Periyava’s Darshan. We had reserved three first class tickets to Chennai. But one among us is proceeding to Bombay (Mumbai) and we came here to cancel one ticket. Now that you are also going to Chennai, you can travel on this ticket with us. Why cancel it and waste the money?”

He was not able to digest the incidents happening one after the other in this way. He hesitated thinking whether they would ask him to pay the first class ticket amount.
One of them, Sri Raman said, “Why are you thinking? We are happy that we are able to take with us a Periyava devotee like you. You need not pay us anything for the ticket. Do come with us.”

Tears welled up in his eyes thinking about the abundant compassion showered on him now, the same way as on that day when he cried because of his inability to have His Darshan. With folded hands, he turned in the direction where that Mahan was staying, melting in his mind.

When he thought whether a God could bless him this way by fulfilling his desire without having to spend a paisa, his amazement was never-ending.

There was another incident connected with the same devotee. His sister’s marriage had been fixed. He could not find a way to arrange even for the minimum expenditure of thirty thousand rupees. There was only one solution and that was going and surrendering at the feet of Periyava and so he went to see Him.

There was a big crowd of devotees near Sri Maha Periyava. Unable to go anywhere near Him, Balachandar stood at some distance away. A rich man from Andhra who used to come to Sri Periyava every year after the harvest and submit a big amount to Him had come. Sri Periyava would normally direct him to give the money to a Veda Patasala. This man was standing before Periyava with his offerings.

“This time, give this money for another big requirement” saying this, Sri Periyava signaled to where Balachandar was standing. He thought Periyava was calling someone else. When
other devotees told him that Periyava was calling him only, he went near Him.

Sri Periyava told the rich man, “This man is conducting his sister’s marriage. Give this money to him”. Balachandar could not believe what was happening as he had not told anybody about his predicament. What compassion and mercy of Periyava!!!

The rich man gave the money to Balachandar as per Periyava’s orders. Did he need to count the amount that was given to him? The amount was exactly thirty thousand rupees!!!

The Trikala Gnani and Sarvagnar knows everything!

He will never let anyone down. It is certain that He will bestow us with all prosperity and auspiciousness if we surrender wholeheartedly to Him.

Compassion Will Continue To Flow……..

Source: Sri Periyava Mahimai Newsletter – Sep 29 2009
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
-------------------------------------------------------
சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச
சம்பவம்.

தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு
கேட்கணும்னு கோரிக்கை இருந்தது. ஆனா, அவா
ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவும்
சொல்றதுக்கு முன்னாலேயே குங்கும பிரசாதத்தைக்
குடுத்து அவாளை அனுப்பிவிட்டார் ஆசார்யா. அதனால
ரொம்பவே கவலையோட நகர்ந்த அவாகிட்டே மடத்து
சிப்பந்தி ஒருத்தர் பெரியவாளோட காஷ்ட மௌனத்தைப்
பத்தி சொல்லி,இன்னொரு நாள் மடத்துல இருக்கறச்சே
வந்து பாருங்கோன்னு ஆறுதலா சொல்லி அனுப்பினார்.

மறுபடியும் அதே தம்பதிகள் வேறொரு நாள் மடத்துக்கு
வந்து,வரிசைல நின்ற அவாளோட முறை வந்தது.
தன் முன்னால நின்ன அவாளை ஒருதரம் ஏற இறங்கப்
பார்த்தார் ஆசார்யா. கைகளைக் குவிச்சு நமஸ்காரம்
செஞ்ச அவா, தங்களோட குறையை சொல்ல நினைச்சு
"பெரியவா எங்க.." அப்படின்னு ஆரம்பிச்சதுதான் தாமதம்
சட்டுனு நிறுத்துங்கோங்கறமாதிரி கையைக் காட்டினார்
பரமாசார்யா.


என்னடா இது நம்ப பிரச்னைக்கு தீர்வே இல்லையோ?..
சொல்றதுக்கு முன்னாலயே வேண்டாம்னு தடுக்கறாரே
பெரியவா. காரணம் என்னவா இருக்கும்னு அவா திகைச்சு
நின்னா.சுத்தி இருந்தவா, ஆசார்யா அவாளைத் தடுத்ததுக்குக்
காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வப்பட்டா. ஆனா,
இதெல்லாம் எதையும் கவனிக்காதவர் மாதிரி,
"நீங்க ரெண்டுபேரும் இப்போ திரும்பிப் போங்கோ..
தங்கத்தால சின்னதா ஒரு வேல் பண்ணி எடுத்துண்டு
அப்புறம் இங்கே வாங்கோ!" அப்படின்னார், மகாபெரியவா.

வந்தவாளுக்கு ஒரே குழப்பம்.'நாம சொல்லவந்ததை ஏன்
பாதியிலேயே தடுத்தார்? ஒருவேளை அதுக்குத் தீர்வே
இல்லையோ! போனதரம் மௌன்விரதம்னு பேசாமே
இருந்துட்டார். இந்த தரம் இப்படி ஆயிடுத்து. ஏதாவது தெய்வ
குத்தமா இருக்குமோ! எதுக்காக வேல் பண்ணி எடுத்துண்டு
வரச் சொல்றார்னு புரியலை. சரி, தங்களோட கோரிக்கை
என்னன்னு கேட்டுட்டு இதைச் சொல்லி இருந்தாலாவது
அதுக்கான பரிகாரம்னு நினைச்சுக்கலாம். ஆனா, அதைக்
கேட்டுக்காமலே சொல்றாரே..இது எதனால இருக்கும்?
என்றெல்லாம் குழம்பினவா, சரி எல்லாம் தெய்வ சித்தம்.
நாம போய் வேல் செஞ்சு எடுத்துண்டு வந்து பார்ப்போம்.

அப்பவாவது கோரிக்கையை கேட்டுண்டு தீர்வு சொன்னார்னா
போதும்'னு நினைச்சுண்டு புறப்பட்டா.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு, பெரியவா சொன்ன மாதிரியே
தங்கத்தால சின்னதா வேல் செஞ்சு எடுத்துண்டு வந்தா அந்தத்
தம்பதி. வரிசையில் நின்ற அவாளைப் பார்த்த பெரியவா, கிட்டே
கூட்டிண்டு வரும்படி ஒரு சீடனை அனுப்பினார்.

"பெரியவா நீங்க சொன்னமாதிரியே வேல் செஞ்சு எடுத்துண்டு
வந்துட்டோம். எங்களுக்கு ஒரு...!" தம்பதிகள் முடிக்குமுன்
இந்தமுறையும் அவாளை எதுவும் சொல்ல வேண்டாம்கறமாதிரி
கையைக் காட்டினார், பரமாசார்யா.

"இந்த வேலை உங்க அகத்துல பூஜை அறையில் வைச்சு தினமும்
பசும்பாலால் அபிஷேகம் பண்ணு. அதோட வாரம் ஒரு தரம்
செம்பருத்திப் பூவால முருகன் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை
செஞ்சுண்டே வா!" சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார் ஆசார்யா.

'நம்ப கோரிக்கை என்னன்னே கேட்டுக்காம இவரா ஏதோ சொல்றார்.

ஒருவேளை நாம சொல்ல வந்த விஷயத்துக்குத் தீர்வே கிடையாதோ
இல்லை இப்போ இவர் சொல்றது ஏதாவது பரிகாரமா இருக்குமோ?
ஒண்ணும் புரியாம பிரசாதத்தை வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சுண்டு பவ்யமா கையை நீட்டினா ரெண்டுபேரும்.

"என்ன,முக்கியமான விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளே
அவசரமா? இன்னும் நான் சொல்லி முடிக்கலை. அதையும்
கேட்டுட்டுப் புறப்படுங்கோ. வேலுக்கு தினமும் பால் அபிஷேகம்
பண்ணச் சொன்னேன் இல்லையா? அந்தப் பாலையும் அர்ச்சனை
பண்ணின அப்புறம் செம்பருத்திப் பூவையும் உன்னோட மாமியாருக்கு
குடுத்துடு. அவாளை தெனமும் ரெண்டு மூணு செம்பருத்திப் பூவை
சாப்டுட்டு அந்தப் பாலையும் குடிக்கச் சொல்லு. அவாளோட
சிரமத்துக்கு அதுதான் தீர்வு" பரமாசார்யா சொல்லச் சொல்ல,
அப்படியே திகைச்சுப் போய் நின்னா, அந்தத் தம்பதி. அவா

ரெண்டுபேரோட உடம்பும் சிலிர்த்துண்டு அந்த ஆச்சரியத்துல லேசா
நடுங்கினதுகூட அங்கே இருந்தவா எல்லாருக்கும் தெரிஞ்சுது.
கொஞ்சநாழி கழிச்சு,சுயபிரக்ஞைக்கு வந்தவா, ஆசார்யாளை
நமஸ்காரம் பண்ணினா. சாத்துக்குடி பழம் ஒண்ணைத் தந்து
அவாளை ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

வரிசையில் நின்ற பலரும் அவளுடைய திகைப்புக்கு காரணம் கேட்க;
"என்னோட மாமியாருக்கு ரெண்டு மூணு வருஷமாவே அடிக்கடி
வயத்துவலி வந்து பாடாப் படுத்திண்டு இருந்தது. சமீபகாலமா
அந்த வலி அவாளுக்கு நிரந்தரமாவே ஆயிடுத்து. பார்க்காத
வைத்தியம் இல்லை. வேண்டாத சுவாமி இல்லை. ஆனாலும்
தினமும் அவா துடிக்கறதைப் பார்க்கறச்சே எனக்கே தாள முடியலை.

தாயாரோட கஷ்டத்தைப் பார்க்க சகிக்காம இவரும் வேதனைப்
பட்டுண்டு இருக்கார்.பெரியவாகிட்டே சொன்னா, தீர்வு கிடைக்கும்னு
தெரிஞ்சவா சொன்னா. அதான் வந்தோம். பரமாசார்யா எங்களைப்
பேசவிடாம தடுத்தப்போ,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது!. ஆனா
இப்போ.." பேசமுடியாம நாக்கு தழுதழுக்க கொஞ்சம் நிறுத்தினா.

"இப்போ நாங்க எதையும் சொல்லாம அவராவே என் மாமியாரோட
பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கார். இப்படிக் கண்ணுக்கு முன்னால
நடமாடற தெய்வத்தை, நாம சொன்னதைக் கேட்கலையேன்னு தப்பா
நினைச்சுட்டோமேங்கறதை நினைச்சா அழுகை அழுகையா வருது!"
சொல்லி முடிச்சா. அப்புறம் பெரியவா இருந்த திசைப்பக்கமா திரும்பி
நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டா.

கொஞ்ச நாள் கழிச்சு அந்தத் தம்பதி திரும்ப வந்தா, "பெரியவா உங்க
அனுகிரகத்தால என் மாமியாரோட வயத்து வலி பரிபூரணமா
குணமாயிடுத்து"ன்னு பெரியவாகிட்டே சொன்னா அந்தப் பெண்மணி.
"இதெல்லாம் என்னோட வேலை இல்லை. எல்லாம் பரமேஸ்வரனோட
கிருபை. முருகனை நினைச்சுண்டு நீ பண்ணின பூஜையோட பலன்!"
அப்படின்னு சொன்ன பரமாசார்யா,அவாளை பரிபூரண சௌக்யமா
இருங்கோன்னு ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினார்

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


"the remedy for periyava to cure the disease"

"குருவே சரணம்”

Om Sri Gurubyo Namah

Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

-------------------------------------------------------------------------------------------

"ஜெயந்திக்கு பால் பாயசம் போடணும் ஏற்பாடு பண்ணிடு" என்று, இரவே சமையலறை நிர்வாகியிடம் சொன்னார்.

நூறு லிட்டர் பால் தேவைப்படும். சமையலறை நிர்வாகி "செய்கிறேன்!" என்று எப்படித் தைரியமாகச் சொல்லுவார்.

1980-ம் வருடம் இந்தச் சம்பவம் நடந்தது.பால் எவ்வளவு தேவையென்றாலும் முன் பணம் கட்டவேண்டும்.
எப்படிப் பால் பாயசத்தைத் தயாரிப்பது?.

"முடியாது!" என்று பிரதோஷம் மாமாவிடம் சொல்ல முடியுமா...தயங்கித் தயங்கி நின்றார்.

"என்னப்பா பதிலையே காணோமே?"-மாமா கேட்டார்.

என்ன பதில் சொல்வது என்று இவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்க அப்போது திடீரென போன் ஒலித்தது.

மாமாவின் உத்தரவின்படி,காரியஸ்தர் போனை எடுத்தார்.

போனில் கேட்ட செய்தி அன்பரின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்தது.மகாபெரியவாளின் எல்லையற்ற அருளும் பிரதோஷம் மாமாவின் ஆழ்ந்த பக்தியும் .

அங்கே வெளிப்பட்ட போனில் வந்த செய்திதான் என்ன?

ஜோஷி என்கிற வடக்கத்திய அன்பர்,மகானிடம் அளவற்ற அன்பு பூண்டவர். பசுக்களை வைத்து பண்ணையை நடத்துபவர்,

"ஜெயந்திக்கு, பால் அனுப்பினால், அதைப் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்றுதான் போனில்கேட்டார் ஜோஷி.
எப்படிப்பட்ட நேரத்தில் வருகிறது இந்தச் செய்தி!


பால் பாயசத்திற்கு வேண்டிய பால் கிடைத்துவிட்டது.

பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப் போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை
நிழலில் புத்தகத்திலிருந்து.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 

Latest ads

Back
Top