• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கடன் பிரச்சினை; திங்கட்கிழமை; திருச்சேறை கோயில்!

Kum

Active member
617104.jpg


திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார் ருண விமோசனேஸ்வரர்
கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை. இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீருண விமோசனேஸ்வரர். இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார். பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது. என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.

அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீருணவிமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.

திருச்சேறை தலத்தில் ருண விமோசனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அதேபோல், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ருண விமோசனேஸ்வரருக்கு சந்நிதி இருக்கிறது. இந்தத்தலத்துக்கு வந்தும் மனதார வேண்டிக்கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார் ருண விமோசனேஸ்வரர்.
9914872343_86d915ecb8.jpg
View attachment 13227
7439627314_837ed590d6.jpg
7439636124_a4558b95c6.jpg
 

Attachments

  • 7439609844_49cae415ba.jpg
    7439609844_49cae415ba.jpg
    35.6 KB · Views: 39
Last edited:

Latest ads

Back
Top