• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு

Status
Not open for further replies.
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு

201201-w-crazy-staircases-chand-baori-jpg_235831.jpg

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).

இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
abhaneri-step-well-full-frontal-view-small.jpg


இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.

அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).
 
இந்த விவரம் அளித்தமைக்கு நன்றி.

ஆனால் ஒரு சிறு திருத்தம். 'அதிசயம்' என்பதே சரி என்று நினைக்கின்றேன்!
 
Thanks.
I will check Cre-A Tamil dictionary and Lifco dictionary.
But it is not a Tamil word. So words borrowed can be written with many different spellings.
But we must form uniform spelling. I agree with you.

In Sangam Tamil literature Sanskrit word Amrutham (ambrosia) is written with three different spellings by three different poets.
So spelling confusion started two thousand years ago.
Sorry, I am also adding some stuff to that confusion.
 
அதிசயம் என்பதே சரி. இரண்டு தமிழ் அகராதிகளையும் பார்த்துவிட்டேன். தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி. இன்னும் நிறைய அதிசயங்கள் பற்றி எழுதவிருக்கிறேன். சரியான எழுத்துகளைப் பயன்படுத்துவேன். ஸ்பெல்லிங் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தனியான தமிழ் சொல் எதுவும் இல்லை. ஆகையால் சரியான எழுத்துக்கள் என்று எழுத வேண்டியிருக்கிறது
 
......... சரியான எழுத்துகளைப் பயன்படுத்துவேன். ஸ்பெல்லிங் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தனியான தமிழ் சொல் எதுவும் இல்லை. ஆகையால் சரியான எழுத்துக்கள் என்று எழுத வேண்டியிருக்கிறது
Google மொழி பெயர்ப்பு தரும் விடை: 'சொல்லின் எழுத்துக் கூட்டுரு'

'சொல்லின் உருவம்' என்பதால் 'சொல்லுரு' என்ற புதிய சொல்லை உருவாக்கலாமே!!


யோசியுங்கள்!! :)
 
It is a good word. But unfortunately Tamils are a divided race in the world. If I say one thing Sri Lankan Tamils will say a different thing. Malaysian, Singaporean,South African and Mauritian Tamils will coin new words. But for English and French there are hundreds of years old Institutions in Oxford and Paris. Whatever they say is accepted in the courts of law. Tamils must have a parent body such as Thanjavur Tamil University who must give uniform translation for new words. When they coin new words they may consult local bodies
 
No harm in creating new words. Some may survive, some may not. I cannot speculate how many of these will survive - madi kanini, kaipesi, valaikanini, thuruthru pesi (smart phone).

A conversation between an american and an english:
A: Today I washed the windshield of my auto.
E: It is not windshield, it is windscreen. Car and not auto.
A: Quiet man, we invented the automobile.
E: That is alright, but we invented the language.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top