• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆண்டாளின் இயற்கைக் கடிகாரம்

பாவை விரதம் இருக்கும் கன்னிப் பெண்ணொருத்தியை இளம் காலையில் துயில் எழுப்ப வேண்டும். கடியாரமோ, ஒலிப்பான்களோ (alarm) இல்லாத காலம். ஆண்டாள் இயற்கை வழியாக,

உறங்கும் கோபியர் கூட்டத்திற்கு , படிப்படியாக நேரம் சொல்லி, உறக்கம் கலைக்க முயற்சி செய்கிறாள்.

- சில இலக்கிய /விஞ்ஞான விவரங்கள் அடிப்படையில் அடியேன் தோராயமாகக் கோடித்தது. நிரூபணங்கள் கடினம். தவறு கண்டால் மன்னிக்கவும்.

பாடல் எண் :

1 .மார்கழித் திங்கள் - மதி நிறைந்த நன்னாள் (இளங்காலை 2.00 லிருந்து 3.00 மணி வரை) - பௌர்ணமி நிலவு முழுவதும் பரிமளிக்கும் மார்கழி மாதப் பிறப்பு நேரம்.

2. நாட்காலே நீராடி (4.00 மணி) - நீராடுதலுக்கு உகந்த உஷத் காலம். மனப் பிணியும், உடற் பிணிகளும் எங்கோ பறந்து விடும், உஷத் கால ஸ்னானத்தில்.

3. ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப,,, (4.10 மணி)

ஓங்கி வாமன எம்பெருமானைப் போன்று வளர்ந்த நீர் தங்கிய செந்நெல் வயல்கள் இடையில் மீன்கள், பொழுது விடியப் போவதை உணர்ந்து, இனிமேல் பாம்பு போன்ற எதிரிகளால் பயமில்லை என்று நீந்தத் துவங்குவதும், குறுகிக் கிடக்கும் குவளைப்பூ அரும்புகளில் மது உண்ட களைப்பில் உறங்கிடக் கிடக்கும் வண்டுகளும்.

6. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ (4.15 மணி) - ஓரிரெண்டு பறவைகள் கூவத் துவங்குவதும், கருட பிரான் திருக்கோவிலில் மனிதர்களைத் துயில் எழுப்பிட சங்கு ஒலிப்பதற்கான நேரம்.

7. கீசு கீசென்று ஆனைச் சாத்தன் (வலியன் குருவி) கலந்து பேசிய பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே (4.30 மணி) - இரை தேடப் புறப்படும், ஒன்றுக்கொன்று பிரிந்து ஆண் பெண் குருவிகள் பறக்கத் துவங்கிடும் முன்னர் பேசிடும் காதல் மொழிகள்.

7. காசும் பிறப்பும் (அச்சுத்தாலியும் முளைத்தாலியும்) கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ (4.45 மணி) - பாலும் தயிரும், வெண்ணையும் நகரத்திற்குச் சென்று ஆயர்கள் விற்பனை செய்யத் தயாராக, ஆய்ச்சிகள் மத்துக்களால் கடைந்திடும் நேரம்.

8. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பறந்தன காண் (5.00 மணி) - எருமை மாடுகள், வெளி வயல்களில் மேய்ந்திட புறப்படும், இளம் வெளிச்சம் கொண்ட நேரம்.

9. தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ (5.10 மணி). அரண்மனை விளக்குகள் எரியத் துவங்கி தூபம் இடத் துவங்கி விட்டனர்.

12.பனித்தலை வீழ நின் வாசற் கீழ் (5.15 மணி). சூரியன் வரும் முன்னால் பனிப்பொழிவு ஏற்படும் நேரம்.

13. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று, புள்ளும் சிலம்பின காண், (5.30 மணி). குரு என்னும் வியாழ கிரஹம் மறைந்து, சுக்கிர கிரஹம் மெதுவாய் கண் காட்டும் நேரம்.

14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் (கரு நெய்தல் மலர்கள்) கூம்பின காண்.செம்பொற்கொடிக் கூரை வெண் பல் தவத்தவர், தங்கள் திருக்கோவில்
சங்கிடுவான் போகின்றார். (5.45 மணி). - கோவில் பணியாளர்கள் சாவிகளிட்டு தங்கள் கோவில்களைத் திறந்திடச் செல்கின்றனர்.

18. வந்து எங்கும் கோழி அழைத்தன காண். மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் (5.50 மணி) - குயில்கள் கூட்டம் கூட்டமாகக் கூவத் தொடங்கி விட்டன.

22.. திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் (6.00 மணி) - வெளுத்த சந்திரன், சிகப்புச் சூரியனும் எதிரெதிர் திசையினில் முளைத்திடும் நேரம்.
 

Latest ads

Back
Top