• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

# 1. யார் சிறந்தவர் ?









கரிய இருட்டில் பறக்கும் மின்மினி,
கர்வத்துடன் கூறியது,” என்னைப் போல
உலகுக்கு, ஒளி கொடுப்பவர் யாருள்ளார்?
உலகம் என்ன ஆகும் நான் இல்லாவிடில்?”

விண்ணில் தோன்றிய தாரகைகள்,
விழுந்து விழுந்து நகைக்கலாயின;
“எங்கள் ஒளியின் முன் நீ நிச்சயம்
மங்கி நிற்பாய்! ஏன் வீண் பெருமை?”

இப்போது நகைத்தது வானத்து நிலா;
“இங்கே நான் வந்தபின்னர் உங்களை
எங்கே எங்கே எனத் தேட வேண்டும்!
என்று தான் உணர்வீர் உண்மையினை?”

உதித்தான் செங்கதிரவன் கீழ் வானத்தில்,
மிதித்தான் நிலவின் மங்கிய ஒளியினை,
பெருமைகள் பேசிய மின்மினி, தாரகை,
போன இடம் எதுவோ தெரியவில்லை!

உள்ளது என்னிடம் இளமையும், செல்வமும்,
அழகும் என்று அலட்டிக்கொள்ள வேண்டாம்!
உள்ளார் உலகில் பலர், உன்னைவிடவும்
அழகு, இளமை, செல்வம் அதிகம் உள்ளவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
# 2. வெள்ளி நாணயங்கள்!


ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நான்,
ஒவ்வொரு மூட்டைநிறைய நாணயங்கள்,
அள்ளி அள்ளி தினம் தந்திட்டால், நீங்கள்
உள்ளம் மகிழ்ந்து என்ன செய்வீர்கள்?

நான் தரும் நாணயங்கள் மாறுபட்டவை.
நன்றாகச் செலவு செய்ய முடியும், ஆனால்
மாற்றி வேறு யாருக்கும் கொடுக்கவோ, அன்றி
மறுநாள் கணக்கில் சேர்க்கவோ இயலாது!

பயன் படுத்தியே ஆக வேண்டும், உங்களால்
இயன்றவரை. இல்லாவிட்டால் முழுவதுமாய்
மறைந்து விடும் அந்த மாயப் பண மூட்டை;
என்று இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு வெள்ளி நாணயத்தையும்,
ஒழுங்காக உமக்கு மிகவும் பிடித்ததை,
வாங்கச் செலவு செய்து மனம் மகிழ்வீர் .
வந்ததை வீணாக்க மாட்டீர் அல்லவா?

இறைவன் நமக்கு ஒவ்வொரு நாளும்,
இனிய 86,400 நொடிகள் அளிக்கின்றான்.
நம்மால் அதை மாற்றவும் முடியாது!
நம்மால் அதை சேமிக்கவும் முடியாது!

“ஒரு முறை போனால் போனது தான்!” என்றாலும்
ஓராயிரம் நொடிகளை நாம் வீணடிக்கின்றோம்!
பணம் என்றால் பாங்காக உள்ள எல்லோரும்,
மனம் போலக் காலத்தை விரயம் செய்கின்றோம்!

ஒவ்வொரு நொடியை வீணாக்கும் போதும்,
ஒவ்வொரு நாணயம் உருண்டோடுவது போல;
எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்,
எண்ணுவோம், நொடிகளையும் வீணாக்காமல்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
# 3. பிறவியும், உயர்வும்!







பிறவியில் உயர்வு அடைபவர் மூவர்;
பிறவியினாலேயே உயர்ந்தவர்கள்,
பிறவியில் முயன்று உயர்ந்தவர்கள்,
பிறவியில் உயர்வுக்கு உந்தப்பட்டவர்கள்!

உயர் குலத்தில் உதித்ததால் மட்டுமே
உயர்ந்துவிடுவர் சில பாக்கியசாலிகள்;
உயர்ந்த முயற்சிகள் இல்லாமலேயே,
உயர்வை அடைந்துவிடுவார் இவர்கள்.

முயன்றும் முட்டி மோதிக்கொண்டும்,
முனைப்பினாலும், கடின உழைப்பினாலும்,
அல்லல்கள் பல உற்று, மனிதர்கள் சிலர்
அடைவர் உயரிய நிலை ஒன்றினை.

மூன்றாம் வகையினர் மாறுபட்டவர்.
வேண்டாம் என்று ஓடினாலும், விதி
விடாமல் துரத்திப் பிடித்து, அவர்களை
வேந்தர்கள் ஆக்கிவிடும் அவனியில்.

பிறவியால் கிடைத்த உயர்வும் சரி,
விதியால் விளைந்த உயர்வும் சரி,
அழிந்து போகலாம்; ஆனால் அழியாது
உழைப்பால் விளைந்த உன்னத உயர்வு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
I am reminded of Shakespeare's words in 'Twelfth Night'.

"Some are born great;
Some achieve greatness and
Some have greatness thrust upon them".

Thiruvalluvar says, "Thondrin pugazhodu thondruga".
 
Dear Mr. Pannvalan,
You are right! My poem is based on the quotation by Shakespeare.
It was my father's favorite quote too!
I just wrote the poem as a tribute to my dear father.
with warm regards,
Visalakshi Ramani.
 
# 4. அறிவும், அன்பும்!





ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
ஏற்படும் அனுபவமே உண்மை அறிவு.
சொல்லுதல் எளிது, செய்வது கடினம்,
சொல்லுவது அறிவு, செயல் புரிவது அன்பு.

நிரம்பக் கற்றவர்கள் மனதில், கற்றதின்
கர்வம் உண்டாகும், கண்கண்ட உண்மை;
நிரம்பத் தொண்டு செய்பவர் மனதிலோ,
கனிவு, பணிவு, இனிமை வளர்ந்து மலரும்.

தர்க்கம், வாதம், போட்டி, பேட்டி என,
தேடிச் செல்லுவர் நன்கு படித்தவர்,
தொண்டு, உதவிகள், சேவை என்று
நாடிச் செல்லுவர் உண்மைத் தொண்டர்.

ஆத்ம அனுபவத்துக்கு நல்ல வழிகளை
அறிந்திருந்தாலும், முயலார் கற்றவர் .
அனுபவத்திலேயே வழி கண்டு கொள்ளுவர்
ஆன்ம ஞானத்துக்கு, உண்மைத் தொண்டர்.

காரண காரியங்களை எல்லாம் ஆராய்ந்து
காண விழைவர் நன்கு படித்த அறிஞர்.
சாதனையிலேயே தன் மனத்தை முழுதும்
செலுத்துவர் இறையின் உண்மைத் தொண்டர்.

உயந்த அறிவு நிரம்ப உண்டு அவரிடம்.
உண்மைத் தொண்டு நிரம்ப உண்டு இவரிடம்.
அறிவே பெரும் சுமையாகிவிடும் அவருக்கு,
அன்பே உலகை இன்பமாக்கும் இவருக்கு.

சாஸ்திரங்கள் பல கற்றாலும், சாதனைகள் பல
செய்தாலும், திருப்தி இல்லாதவர் அவர்.
விவேக, வைராக்யங்களால் மனஅமைதி,
வியத்தகு வண்ணம் கொண்டவர் இவர்.

அறிவும் அன்பும் இரண்டுமே அவசியம்,
அவனியில் நாம் பயன் தர வாழ்ந்திடவே;
அறிவு என்பது ஒளிரும் சூரியன் என்றால்,
அன்பு என்பது குளிர்ந்த வெண்ணிலவாகும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
நேர்மையும், வாய்மையும்.







நேர்மை என்பது நம் மனம், மொழி,
செயல்களை ஒருமைப்படுத்துவதே.
நேரில் ஒன்றும், மறைவில் ஒன்றும்,
செய்யாதிருப்பதே நேர்மை ஆகும்.

பேச வேண்டும், நாம் எண்ணியதையே;
பேச்சும், எண்ணமும் வேறுபடக் கூடாது!
பேசியதையே நாம் செய்ய வேண்டும்;
பேச்சும், செயலும் மாறுபடக் கூடாது!

ஒன்றை நினைத்து, மற்றதைப் பேசினால்;
அழிந்து போகும் நம் வாக்கின் நேர்மை!
ஒன்றைப் பேசி, மற்றதைச் செய்தால்;
அழிந்து போகும் நம் உடலின் நேர்மை!

தன் நெஞ்சு அறிந்து பொய் சொன்னால்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றாலும்;
பொய்மையும் உயிர்களுக்கு நன்மை செய்தால்,
வாய்மையே ஆகும், இது வள்ளுவன் வாக்கு!

வாய்மை என்பது எந்த உயிர்களுக்கும்,
தீமை பயக்காததைச் சொல்வதே ஆம்.
வாய்மையை விடவும் சிறந்தது ஒன்று
வலை விரித்துத் தேடினாலும் கிட்டாது.

மனம், மொழி, செயல்கள் மாறுபடும்போது,
மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன.
ஒருமைப்பாட்டையும், வாய்மையையும்
ஒருங்கிணைத்து நாம் வாழ்ந்திடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Dear Ms.Visalakshi,

Beautiful poem....and great arrangement of words as well...!!!
Though a small point....I am not a Tamil expert...but still in the last stanza....I have a point of contention:

மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன

vyadigal uruvagindrana.....urpathi alla...right?

Diseases, mental or otherwise cannot be manufactured (please exclude the bio engineers from this) right?
Do correct me if I am wrong....

But still a lovely poem...

With respects,
Sriraman
 
The word 'urpaththi' was derived from the Sanskrit word 'urpavam' meaning birth. So, 'urpaththi aagindrana' means 'pirakkindrana' (they are born).
 
# 3. பிறவியும், உயர்வும்!







பிறவியில் உயர்வு அடைபவர் மூவர்;
பிறவியினாலேயே உயர்ந்தவர்கள்,
பிறவியில் முயன்று உயர்ந்தவர்கள்,
பிறவியில் உயர்வுக்கு உந்தப்பட்டவர்கள்!

உயர் குலத்தில் உதித்ததால் மட்டுமே
உயர்ந்துவிடுவர் சில பாக்கியசாலிகள்;
உயர்ந்த முயற்சிகள் இல்லாமலேயே,
உயர்வை அடைந்துவிடுவார் இவர்கள்.

முயன்றும் முட்டி மோதிக்கொண்டும்,
முனைப்பினாலும், கடின உழைப்பினாலும்,
அல்லல்கள் பல உற்று, மனிதர்கள் சிலர்
அடைவர் உயரிய நிலை ஒன்றினை.

மூன்றாம் வகையினர் மாறுபட்டவர்.
வேண்டாம் என்று ஓடினாலும், விதி
விடாமல் துரத்திப் பிடித்து, அவர்களை
வேந்தர்கள் ஆக்கிவிடும் அவனியில்.

பிறவியால் கிடைத்த உயர்வும் சரி,
விதியால் விளைந்த உயர்வும் சரி,
அழிந்து போகலாம்; ஆனால் அழியாது
உழைப்பால் விளைந்த உன்னத உயர்வு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

விசா, மிகவும் நன்றாக எழுதியுள்ள கவிதை. என்னால் கூட புரிஞ்சு கொள்ள எளிய தமிழ். மிக்க நன்றி.

ஆனால் ஒரே ஒரு வினா. இரண்டாவது பத்தியில் உயர் குலைதைப் பற்றி எழுதி இருப்பது சரி என்று எனக்கு தோன்ற வில்லை. சில பாக்கிய பிறவிகள் உயர்ந்து விடுவார்கள். அதற்கு பாக்கியம் தான் தேவை. உயர் குலம் அல்ல. உயர் குலம் எல்லாம் மனித்தில் தான். அந்த குதிக்க புத்தியால் தான் இந்த காலத்தில் பல வேதனைகள்
 
Dear Mr Sitaraman,
Thank you for the feedback!
The meanings of URPATHI and URUVAGAM are the same except that Urpathi is always a plural form and uruvagam may be singular!
Both words are apt but Urpathi suggests multiple mental diseases.
with warm regards,
Visalakshi Ramani.
 
Dear Mr. Kunjuppu,
Uyrar Kulam does NOT denote the caste or community, in this context! IT only means the Aristocrats and the multi millionaires!
I am sure that the pictorial illustration will remove all ambiguity!
with warm regards,
Visalakshi Ramani.
 
Dear friends,
I was on Lufthansa flight on 13th and 14th Sept. So my daily quota of poems got delayed!
i will be posting them right away!
with warm regards,
Visalakshi Ramani.
 
# 6. சுவர்க்கமும், நரகமும்!

12.jpg


சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?

அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?
சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே

சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,
இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்

கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.
எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி

நானா இன்னல்கள் அடைத்தாலும்,
சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,

இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.
சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!

“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?
பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!

நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.
நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
# 7. கண் என்னும் ஜன்னல்!

11742022137mqee8.jpg


ஜன்னல் என்பது இருவழி போக்கு.
ஒளியும், ஒலிகளும் மட்டுமின்றி,
ஜன்னல்கள் வழியே ஓடி வரும்,
வளியும், வாசனைகளும் கூடி!

வெளியே இருப்பவர் காணலாம்,

உள்ளே இருக்கும் பொருட்களை;
நபர்களை, நடவடிக்கைகளை;
நல்லது, பொல்லாதவைகளை.

கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள்.

வெளி விஷயங்கள் உள்ளே செல்லும்,
கண்கள் வழியே! உள்ளே இருப்பவையும்,
வெளியே தெரியும், காண்பவர்களுக்கு!

மதலையின் கண்களில் ஒரு மாசின்மை,

மங்கையின் கண்களில் ஒரு மயக்கம்;
மனிதனின் கண்களில் பொங்கும் காமம்,
புனிதரின் கண்களில் பெருகும் அருளொளி.

புலியின் கண்களில் வழியும் கொடூரம்,

மானின் கண்களில் தெரியும் மருட்சி;
அணிலின் கண்களில் தெறிக்கும் குறும்பு,
ஆட்டின் கண்களில் உள்ள அறியாமை.

நரியின் கண்களில் வழியும் தந்திரம்,

நாயின் கண்களில் விளங்கும் நேர்மை,
பூனையின் கண்களில் தெரியும் பெருமை,
யானையின் கண்களில் அமைந்த கம்பீரம்.

நம் கண்கள் வழியே வெளியே செல்லும்,

நம் உள்ளப் பாங்கும், நம் உணர்ச்சிகளும்;
இனிய எண்ணங்கள் தரும் அந்த அழகை,
இனித் தர முடியாது எந்த சாயப் பூச்சும்.

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
Hi Smt. Visalakshi,

Thanks for your explanation...with a small correction there too...my name is Sriraman and not Sitaraman....:D))))

As to your 2 new poe...no....kavithaigal.... for the first one...beautiful and hats off...superb....really...

But as to the second one....neengalaavathu siruthu matra pengalilirinthu veru paduveergal endru ninaithen...yematrivitigal....
Mantihanin kangalil verum kamamum, mangain kannil verum mayakkumum mattuma ullana....

Migavum azhagaga kavithai ezhuthum neengal ekkangalil, kaadal,paasam,parivu,anbu,inbam....pondra entha unarvaiyum paarthathilaya? athil ondrai udaaranthukku kodukalaame...?

Mariyathayuduan,
Sriraman
 
Dear Mr. Sriram,
I was half asleep after the two days' long flight. Sorry for reading Sriram as Sitaram!
There are thousands of shades of feelings and emotions of human mind,expressed through his face and eyes.
But the strong emotions are much better recognized and felt from the facial expressions than the milder ones.
I have also written about "arul oli in the eyes of the pure person"
How did you miss it?
I have also said the feelings in the mind of the person will be transmitted to the outside world through his eyes-the windows of his soul.
So we know how to send out good transmission! Don't we?
I will cover all the emotions you are looking for! But since it is one poem per day, you WILL have to wait!:)
with best wishes,
Visalakshi Ramani.
 
Last edited:
#8. உணவும், உணர்வும்!

1508079_f496.jpg


“எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றாயோ,
அதுவாகவே மாறிவிடுகின்றாய் நீ “!
“எதை உணவாக உண்கின்றாயோ,
அது நீயாகவே மாறிவிடுகின்றது”

கூறுவது வேதம் என்னும் போது இந்தக்
கூற்றும் உண்மையே ஆகி விடுகின்றது.
உணர்வும், உணவும், உண்மையிலேயே;
மணமும், மலரும் போலப் பிணைந்துள்ளன.

இனிய ரசமுள்ளதாய், சுவைமிகுந்ததாய் ,
இன்பத்தைப் பெருக்கி, உடலுக்கு
வலிமை தரும், நல்ல உணவுவகைகள்,
வளர்க்கும் மேன்மையான சாந்த குணத்தை.

அதிக காரத்துடன், உப்புச்சுவையுடன்,
அதிக புளிப்புடன், கசப்பும், சூடும்,
கலந்த உணவுகள் வளர்த்தும் நம்மிடம்,
கண்டவர் அஞ்சும் ராஜச குணத்தை.

பழயதை, புளித்ததை, சுவை இழந்ததை,
பல மணி கழிந்ததால் ரசம் இழந்ததை,
உண்பதால் வளரும் மந்த புத்தியும் ,
மண் உள்ளோர் வெறுக்கும் தாமச குணமும்.

தாமசன், அறியாமையிலேயே உழன்று,
தன் அரிய மனிதப் பிறவியை வீணடிப்பான்!
ராஜசனோ, பற்பல கர்மகளால் தளைப்பட்டு,
மீண்டும் மீண்டும் பிறவியில் அழுந்துவான்!

சத்வ குணன் சாதனைப் படிகளில் ஏறி,
சாந்த குணம் பெற்று, ஞானமும் அடைவான்.
கடும் சுவை உணவுகளைத் தவிர்த்திடல் நலமே.
கெடும் உணவுகளையும் தவிர்த்திடல் நலமே.

மனத்தை மயக்கும் மதுவைத் தவிர்த்து,
உடலைக் கெடுக்கும் புகையையும் தவிர்த்து,
மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்,
உணவினை உண்டு நலம் பெற வாழ்வோம்..

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி
 
Smt. Visalakshi,

I will be typing Tamil in English so please bear with me...on office laptop...cannot install anyother language.....

punitharin aruloliyai naan padikaamal vidavilai...anal punithr aanaaguvum irukkalam....thangalai pol gnanam ulla pennagavum irukkalam enbathal
athai patri naan ethuvum kuripidavillai....

en manithil ulla yekkathai koorinen avallave....

atharkaka neengal immathiri oru pugaipadaithai pottu....en naakai thonga vittu pazhi vaangaalaama? nyayama ithu?

unavukkum unarvikkum ulla ottrumai migavum thelivaga elliya tamizhil eduthu kaati.....can't say more than this....superb....!!!!

With Respect,
Sriraman
 
Dear Mr. Sriram,
Thank you for the feed back! Hope you enjoyed the "Thalai Vaazhai Ilai chaappaadu!".
"Arivukkum sirithu unavu koduththen, kangalukkum sirithu..
Ithuvum oru vagai pazhi vaanguthalaa?"
Have a good day!
with best wishes,
Visalakshi Ramani.
 
Smt.Visalakshi,

arivukku sindhanai endra unavai vazhangi konde irungal....varaverkiren...!!!
thalai vazhai chithiram vaithu kannukku virnthu allitheergale....
athu manam endra kurangai thatti ezhuppi....yekkam endra agniyil kondu vittathu...!!!
athaithaan pazhi vaanguthal endren.....

But, to me.....kangalukku virinthu....
1. thai thanthaiyarin sirrupu
2. iyarkkai
3. nam varalarai koorum kovilgal....

oru vendugol...points 1 & 2 base panni oru chinna kavithai....?

mariyathaiyudan....thangalai vambukku izhukkum sagotharan,
Sriraman
 
#9 அறிவுக்கு உணவு!
14.jpg

உடல் நன்கு பணி புரியத் தேவை
உணவும், உறக்கமும், உழைப்பும்.
அறிவு நன்கு பணி புரியவும் தேவை
உணவும், உறக்கமும், உழைப்புமே!


அறிவின் உணவு கருத்துப் புதையல்;
அறிவின் உறக்கம் தியானம், மௌனம்;
அறிவின் உழைப்பு சிந்தனை ஓட்டம்;
அறிவின் பயனோ மயக்கம் ஒழிதல்.


ஒரு நாள் உணவு உண்ணாவிடினும்,
சரிவரப் பணி செய்ய மறுக்கும் உடம்பு;
ஒரு நாளும் ஒழியாமல் தம் அறிவுக்கு
சரிவர உணவு அளிப்பவர் யார் உளர்?


கல்விச் செல்வம் சாலச் சிறந்தது ஆயினும்
கேள்விச் செல்வமும் சமச் சிறப்புடையது.
கல்வி கற்காதவர்களும் படிக்க இயலாதாரும்
கேள்விச் செல்வதினால் பயனுற முடியும்.


செவிக்கு உணவு இல்லாதபோது தான்
சற்று வயிற்றுக்கும் ஈவர் சான்றோர்;
வயிற்றுக்கு உணவு ஈந்த பிறகாவது
சற்று அறிவுக்கும் நாம் ஈயக் கூடாதா?


எத்தனை மகான்கள், மாமேதைகள்!
எத்தனை சிறந்த சிந்தனையாளர்கள்!
எத்தனை ஞானிகள், ஆச்சாரியார்கள்!
எத்தனை மிக அரிய சிறந்த புத்தகங்கள்!


படிக்க நினைத்துத் தொடங்கினால்,
படித்து முடிக்க ஒரு ஜன்மம் போதாது!
படித்துக் கொண்டே இருந்தால் அன்றி
படித்தது மனதில் பதிந்து நிற்காது.


பஞ்சமே இல்லை நேரத்துக்கு! ஆனால்
படிக்க மட்டும் சிலருக்கு நேரமே இல்லை!
பஞ்சமிர்தம் போலக் கையில் கொடுத்தாலும்
கொஞ்சமும் உண்ணார், பயன் அறியாதார்.


பார்ப்பது மெகா தொடர்களை மட்டுமே,
படிப்பது கிசு கிசுப் புத்தகங்களை மட்டுமே,
அலசுவதில் அடங்கும் அரசியல் மற்றும்
அடுத்த வீட்டு வம்புகளும், சினிமாவும்!


குப்பை கூளம் நிறைந்துள்ள இடத்தில்,
எப்படி நன்மைகள் உள்ளே நுழையும்?
நல்லவை நுழைந்தாலே தூய்மை வரும்;
நல்லெண்ணங்கள் தூய்மையில் வளரும்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
pencil.png
 

Latest ads

Back
Top