மோக்ஷதா ஏகாதசி
மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு மோக்ஷதா ஏகாதசி எனப் பெயர். பகவானும் இந்த மாதத்தை 'மாஸாநாம் மார்கசீர் ஷோாஸ்மி' என்ற பாராட்டியுள்ளான். இதற்கு பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர் வழங்கப்படும். இதில் எம்பெருமானை அர்ச்சிப்பவர்களுக்கு மோக்ஷம் திண்ணம். இவர்களுடைய பித்ருக்களும் நரகத்தில் இருந்தாலும் அதைத் துறந்து ஸ்வர்கம் செல்வாராம். இந்த ஏகாதசியில் பரமபதவாசல் திறப்பது என்று எல்லா கோயில்களிலும் வடக்குவாசல் திறப்பது வழக்கம். ஸ்வர்க வாசல் என்று சொல்லுவர். ஸ்ரீரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் வடக்கு வாசலில் திரள் திரளாக எம்பெருமானை தர்சிக்க நான் முன்பு நான் முன்பு என்று போட்டியில் மக்கள் நிற்பார்கள். எம்பெருமானுடைய முதல் கடாக்ஷம் தன்மேல் விழ வேண்டும் என்ற அவா அனைவர்க்கும் இருக்கும். எம்பெருமான் படுத்து எழுந்திருந்து பார்க்கும்போது ஏற்படும் ப்ரதமகடாக்ஷம் ஐச்வர்யத்தை தரும் விரோதிகளையும் அழிக்கும். அர்ஜுனனை முதல் பார்த்த பிறகே ஸ்ரீக்ருஷ்ணன் துரியோதனனைக் கண்டான். விஜயனுக்கு ஏற்பட்ட முதல் கடாக்ஷம் அவனது விரோதியை அழிப்பதுடன் அவனது படடாபிஷேகத்துக்கும் ஹேதுவாயிற்று. ஆகவே நமக்கு ஏற்படும் விரோதிகளை அழிப்பதுடன் ஐச்வர்யம் முதலிய நற்பயனை எம்பெருமான் முதல் பார்வை கொடுக்கும் என்பதற்காக அனைவரும் அப்பொழுது காத்துக் கொண்டிருப்பார்கள். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமன் விழித்தெழுந்திருக்கும்போது அவனது கடாக்ஷம் முதன் முதலில் தன் மேல் விழ வேண்டும் என்று பெரிய பிராட்டி தொடக்கமானவர்கள் முதலில் எழுந்து அவனது பாதபரிஸரத்தில் நின்று திருவடிகளை வருடுவார்களாம் என்றார் ஸ்வாமி தேசிகன்.
கம்பம் என்னும் ஒரு நாடு. அதை முறைதவறாது வைகானஸன் அரசன் ஆண்டுவந்தான். ஒரு நாள் தூங்கும்போது இவனது பித்ருக்கள் கனவில் வந்து "நாங்கள் நரகத்தில் பல வேதனைகளை அடைந்து வருந்துகிறோம். இதை அகற்ற ஏதாவது ஒரு வழியை சிந்திக்கலாம். அங்குள்ள மகான்களிடம் இதைச் சொல்லி எங்களுடைய வருத்தத்தை நீக்க முயற்ச்சிக்கவும்" என்று அழுது கொண்டே சொன்னார்கள். இக்கனவு கண்டதும் இவனுக்கு வருத்தம் அதிகமாயிற்று. காலை எழுந்து அங்குள்ள பெரியவர்களிடம் கூறினான். அவர்களும் பர்வதர் என்னும் முனிவர் எல்லாமறிந்தவர். அவரிடம் போகலாம் என்று சொல்லி அரசனையும் அழைத்துச் சென்றனர். பர்வதமுனிவர் இதைக்கேட்டு ஞானக்கண்ணால் ஆலோசித்தார்.
அரசனே உனது தந்தை அரசனில் சிறந்தவன் நானே, என்னை விட மேற்பட்டவர் யாருமில்லை என்ற மதம் கொண்டவர். இதனால் யாவரையும் மதிக்காதவர். தர்மத்தை மறந்தவர்.
அவர் தன் முன் ஜென்மத்தில் தனது மனைவியரிடத்தில் பாகுபாடு கண்டு வாழ்ந்தார். பல மனைவியரோடு வாழ்ந்து வந்தார். இத்தீவினையால் விளைந்த பாபத்தால் உன் பிதா நரகத்தில் உள்ளார்." என்றார்.
இதன் காரணமாகக் கொடிய பாபம் அவரை பிடித்து ஹிம்ஸிக்கிறது. எனவே நீ இந்த வைகுண்ட ஏகாதசியில் மனைவியுடன் வ்ரதமிருந்தால் உன் தந்தையை மீட்க முடியும் என்றார். இவனும் பக்தியுடன் இந்த ஏகாதசியில் உபவாஸமிருந்து பூஜை புரஸ்காரங்களைச் செய்து தந்தைக்கு அர்ப்பணம் செய்தான். அந்த க்ஷணமே அவனுடைய பித்ருக்கள் விடுபட்டு விமானம் ஏறி புதல்வனையும் ஆசீர்வதித்து ஸ்வர்க்கம் சென்றனர். ஆக இது நினைத்த பலனை அளிக்கக் கூடியது.
பகவான் ஸ்ரீஹரியால், பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து உய்விக்க அருளப்பட்ட ஏகாதசி விரதத்தை மிகவும் நிஷ்டையுடனும், சிரத்தையுடனும் அனுஷ்டிப்பது நற்பேற்றினை அளிக்கும்.
மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு மோக்ஷதா ஏகாதசி எனப் பெயர். பகவானும் இந்த மாதத்தை 'மாஸாநாம் மார்கசீர் ஷோாஸ்மி' என்ற பாராட்டியுள்ளான். இதற்கு பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர் வழங்கப்படும். இதில் எம்பெருமானை அர்ச்சிப்பவர்களுக்கு மோக்ஷம் திண்ணம். இவர்களுடைய பித்ருக்களும் நரகத்தில் இருந்தாலும் அதைத் துறந்து ஸ்வர்கம் செல்வாராம். இந்த ஏகாதசியில் பரமபதவாசல் திறப்பது என்று எல்லா கோயில்களிலும் வடக்குவாசல் திறப்பது வழக்கம். ஸ்வர்க வாசல் என்று சொல்லுவர். ஸ்ரீரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் வடக்கு வாசலில் திரள் திரளாக எம்பெருமானை தர்சிக்க நான் முன்பு நான் முன்பு என்று போட்டியில் மக்கள் நிற்பார்கள். எம்பெருமானுடைய முதல் கடாக்ஷம் தன்மேல் விழ வேண்டும் என்ற அவா அனைவர்க்கும் இருக்கும். எம்பெருமான் படுத்து எழுந்திருந்து பார்க்கும்போது ஏற்படும் ப்ரதமகடாக்ஷம் ஐச்வர்யத்தை தரும் விரோதிகளையும் அழிக்கும். அர்ஜுனனை முதல் பார்த்த பிறகே ஸ்ரீக்ருஷ்ணன் துரியோதனனைக் கண்டான். விஜயனுக்கு ஏற்பட்ட முதல் கடாக்ஷம் அவனது விரோதியை அழிப்பதுடன் அவனது படடாபிஷேகத்துக்கும் ஹேதுவாயிற்று. ஆகவே நமக்கு ஏற்படும் விரோதிகளை அழிப்பதுடன் ஐச்வர்யம் முதலிய நற்பயனை எம்பெருமான் முதல் பார்வை கொடுக்கும் என்பதற்காக அனைவரும் அப்பொழுது காத்துக் கொண்டிருப்பார்கள். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமன் விழித்தெழுந்திருக்கும்போது அவனது கடாக்ஷம் முதன் முதலில் தன் மேல் விழ வேண்டும் என்று பெரிய பிராட்டி தொடக்கமானவர்கள் முதலில் எழுந்து அவனது பாதபரிஸரத்தில் நின்று திருவடிகளை வருடுவார்களாம் என்றார் ஸ்வாமி தேசிகன்.
கம்பம் என்னும் ஒரு நாடு. அதை முறைதவறாது வைகானஸன் அரசன் ஆண்டுவந்தான். ஒரு நாள் தூங்கும்போது இவனது பித்ருக்கள் கனவில் வந்து "நாங்கள் நரகத்தில் பல வேதனைகளை அடைந்து வருந்துகிறோம். இதை அகற்ற ஏதாவது ஒரு வழியை சிந்திக்கலாம். அங்குள்ள மகான்களிடம் இதைச் சொல்லி எங்களுடைய வருத்தத்தை நீக்க முயற்ச்சிக்கவும்" என்று அழுது கொண்டே சொன்னார்கள். இக்கனவு கண்டதும் இவனுக்கு வருத்தம் அதிகமாயிற்று. காலை எழுந்து அங்குள்ள பெரியவர்களிடம் கூறினான். அவர்களும் பர்வதர் என்னும் முனிவர் எல்லாமறிந்தவர். அவரிடம் போகலாம் என்று சொல்லி அரசனையும் அழைத்துச் சென்றனர். பர்வதமுனிவர் இதைக்கேட்டு ஞானக்கண்ணால் ஆலோசித்தார்.
அரசனே உனது தந்தை அரசனில் சிறந்தவன் நானே, என்னை விட மேற்பட்டவர் யாருமில்லை என்ற மதம் கொண்டவர். இதனால் யாவரையும் மதிக்காதவர். தர்மத்தை மறந்தவர்.
அவர் தன் முன் ஜென்மத்தில் தனது மனைவியரிடத்தில் பாகுபாடு கண்டு வாழ்ந்தார். பல மனைவியரோடு வாழ்ந்து வந்தார். இத்தீவினையால் விளைந்த பாபத்தால் உன் பிதா நரகத்தில் உள்ளார்." என்றார்.
இதன் காரணமாகக் கொடிய பாபம் அவரை பிடித்து ஹிம்ஸிக்கிறது. எனவே நீ இந்த வைகுண்ட ஏகாதசியில் மனைவியுடன் வ்ரதமிருந்தால் உன் தந்தையை மீட்க முடியும் என்றார். இவனும் பக்தியுடன் இந்த ஏகாதசியில் உபவாஸமிருந்து பூஜை புரஸ்காரங்களைச் செய்து தந்தைக்கு அர்ப்பணம் செய்தான். அந்த க்ஷணமே அவனுடைய பித்ருக்கள் விடுபட்டு விமானம் ஏறி புதல்வனையும் ஆசீர்வதித்து ஸ்வர்க்கம் சென்றனர். ஆக இது நினைத்த பலனை அளிக்கக் கூடியது.
பகவான் ஸ்ரீஹரியால், பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து உய்விக்க அருளப்பட்ட ஏகாதசி விரதத்தை மிகவும் நிஷ்டையுடனும், சிரத்தையுடனும் அனுஷ்டிப்பது நற்பேற்றினை அளிக்கும்.