பகல் பத்து திரு மொழி ஒன்பதாம் நாள் !
பகல் பத்து திரு மொழி ஒன்பதாம் நாள் !
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,
கைவளை கொள்வது தக்கதே?
தெளிந்த அறிவு உடையவரே! தேவாதி தேவரே! பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!
சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே! காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!
இஃது என்ன அநியாயம்!.
இப்பரகால நாயகியானவள்
கரைபுரண்டு பெருகுகின்ற நீரை யுடைத்தான திருக்கண்ணபுரத்தை கையெடுத்துக் கும்பிட்டாள். இப்படிப்பட்ட இவள் கள்வியன்றே;அப்படியிருக்க
இவளுடைய கைவளைகளைக் கொள்ளை கொள்வதானது உமக்குத் தகுந்ததோ?
"என் பெண் பிள்ளை திருக்கண்ணபுரத்தைத் தொழுதாளென்பதையே காரணமாகக் கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் " என்று சௌரிப்பெருமாளை மடிபிடிக்கிறாள் திருத்தாய். பிரிவாற்றாமையினால் இவள் உடம்பு இளைத்துக் கைவளைகள் கழன்று விழுகின்றன. இவளை இப்படி இளைத்துப்போம்படி செய்யாமல் எப்பொழுதும் பிரியாத கூடியிருக்கும் நிலமையை தந்து இவளுடம்பைப் புஷ்டியாக்குவதே தகுதி என தாய் கூறுகிறாள்.
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சரணம்.
பகல் பத்து திரு மொழி ஒன்பதாம் நாள் !
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,
கைவளை கொள்வது தக்கதே?
தெளிந்த அறிவு உடையவரே! தேவாதி தேவரே! பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!
சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே! காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!
இஃது என்ன அநியாயம்!.
இப்பரகால நாயகியானவள்
கரைபுரண்டு பெருகுகின்ற நீரை யுடைத்தான திருக்கண்ணபுரத்தை கையெடுத்துக் கும்பிட்டாள். இப்படிப்பட்ட இவள் கள்வியன்றே;அப்படியிருக்க
இவளுடைய கைவளைகளைக் கொள்ளை கொள்வதானது உமக்குத் தகுந்ததோ?
"என் பெண் பிள்ளை திருக்கண்ணபுரத்தைத் தொழுதாளென்பதையே காரணமாகக் கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் " என்று சௌரிப்பெருமாளை மடிபிடிக்கிறாள் திருத்தாய். பிரிவாற்றாமையினால் இவள் உடம்பு இளைத்துக் கைவளைகள் கழன்று விழுகின்றன. இவளை இப்படி இளைத்துப்போம்படி செய்யாமல் எப்பொழுதும் பிரியாத கூடியிருக்கும் நிலமையை தந்து இவளுடம்பைப் புஷ்டியாக்குவதே தகுதி என தாய் கூறுகிறாள்.
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சரணம்.