• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அண்டக் குலத்துக்கதிபதி

அண்டக் குலத்துக்கதிபதி

அண்டக் குலத்துக்கதிபதி யாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்வந்தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே'


பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுர வரிகளிவை.


'இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்வந்தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி'


இங்கே ஆயிரம் நாமம் சொல்லி அப்டிங்கறதுக்கு எவ்வளவு உயர்ந்த அர்த்தம் உண்டாகிறது. குருக்ஷேத்ரம். பாரதப் போர் முடிந்த பின்னர், அம்புப் படுக்கையில் பிதாமகர் பீஷ்மர் படுத்தவாறு இருக்க, மெய் எது? எது சாஸ்வதம்? என்பது போன்ற சந்தேகங்களை தெளிவாக நீக்கும் வண்ணம் சாதிக்கப்பட்டது தான் சஹஸ்ரநாமம். விஷ்ணுவாகிய க்ருஷ்ணன் தன்னெதிரே நின்று கொண்டிருக்க, பீஷ்மாச்சாரியார் இதனை சாதிக்க என்ன தவம் செய்திருப்பாரோ? தனது கண்ணெதிரே ஸ்ரீமன் நாராயணன். தனக்கு மோக்ஷம் அனுக்கிரஹம் பண்ணுபவன் என்ற தெளிந்த ஞானம். அவனைப் போற்றுவதற்கான வரம். அதனை அவனே தன்னெதிரே நின்று முழுவதும் கேட்டு ரசித்த அனுபவம். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த ஈடுஇணையில்லாத உயர்ந்த வரம்?


ஆயிரம் நாமம் ஏத்த நின்ற நாராயணன் அவன். விஷ்ணு என்பவன் அலங்காரப் பிரியன். அப்படி இருக்க, பீஷ்மாச்சார்யார் முன்னர், ஆயிரம் நாமம் கொண்டு அவர் தன்னைத் துதிக்க, பொறுமையாக அந்தக் க்ருஷ்ணன் நின்றிருந்த காரணம் என்ன? பீஷ்மரின் வார்த்தைகளில் இருந்த அலங்காரமா? இதுவும் ஒரு காரணம் என்று கொள்ளலாம். ஆனால் முழு முதற்காரணம், அங்கு நின்று பீஷ்மரானவர் ஆயிரம் நாமங்கள் கொண்டு சாற்றிய புகழாரத்தை கேட்டது க்ருஷ்ணன் ரூபத்தில் இருந்த ந்ருஸிம்ஹன். இதனை பீஷ்மருடைய திருவுள்ளமானது உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் கண்ணெதிரில் க்ருஷ்ணன் ரூபத்தில் ஸ்ரீமன் நாராயணன் நின்றிருந்த போதும் கூட, அவனைப் பற்றி சொல்லப்பட்ட சஹஸ்ரநாமத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை மிளிர்ந்ததென்னவோ ந்ருஸிம்ஹன் தான்.


ந்ருஸிம்ஹன் எப்படிப்பட்டவன்? ஸ்ரீமன் நாராயணன் அலங்காரப்ரியன். ந்ருஸிம்ஹனோ புகழ்ச்சிப்ரியன். 'ந்ருஸிம்ஹா' என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து நம்மருகே நின்று கொள்பவன். இதோ வந்து விட்டேன் என்று நம் கையைப் பிடித்துக் கொள்பவன். அவனை நாம் கொண்டாடக் கொண்டாட நம்மிடமே ஐக்யமாகிவிடுபவன். நம்மை அவனுடைய பைத்தியமாக்கி விடுபவன். பீஷ்மர் அம்புப் படுக்கையில் ஆயிரம் நாமம் ஏத்த நின்றது க்ருஷ்ணன் ரூபத்தில் ஸ்ரீமன் நாராயணன் என்றாலும், அங்கு உண்மையில் இருந்ததென்னவோ ந்ருஸிம்ஹன் தான்.


ஸ்ரீரங்கம் மேட்டழகியசிங்கர் சந்நிதியின் எதிரில் கம்பநாட்டாழ்வார் ராமாயண அரங்கேற்றம் பண்ணின போது, தனது கையை உயர்த்தி, பொக்கை வாய் சிரிப்பு மிளிர, தன்னுடைய அவதாரத்தினை தத்த்ரூபமாக கம்பன் பாடுவதை கேட்டு "ஆஹா ஆஹா" என்று ஆஹாகாரம் செய்து ரசித்தது, அந்த சந்நிதியில் இருந்த ந்ருஸிம்ஹன். கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது சுற்றியிருந்த மக்கள் தாம் அனைவரது கண்ணுக்கும் தெரிந்தனரே அன்றி, அந்த சந்நிதியில் ப்ரத்யக்ஷமாக இருந்த ந்ருஸிம்ஹன், அவனது ஆஹாகாரத்திற்கு முன்னர் யாருடைய கண்ணிற்கும் தெரியவில்லை. அதே போல, கிருஷ்ணாவதாரத்தின் போதும், பீஷ்மர் ஆயிரம் நாமம் கொண்டு அந்த ஸ்ரீமன் நாராயணனைப் போற்றி புகழ்ந்த பொழுது, அங்கிருந்தவர்களின் கண்களுக்கு தெரிந்தது க்ருஷ்ணனாக இருந்தாலும், உண்மையில் அங்கிருந்து கொண்டு தன்னுடைய ஆயிரம் நாமங்களை பீஷ்மர் சொல்லக் கேட்டு ரசித்தது - புகழ்ச்சிப் ப்ரியன் ந்ருஸிம்ஹன் தான்.


தூணிலும் துரும்பிலும் நிறைந்து நின்றவனாயிற்றே அந்த ந்ருஸிம்ஹன். அந்த ஒரு தூணிலிருந்து மட்டும்தானே பக்தனது சொல்லுக்கு கட்டுப்பாட்டு வெளியே வந்தான். மற்ற இடங்களிலெல்லாம் இன்னமும் ஒளிந்து கொண்டு தானே இருக்கின்றான். வெளியே வரவில்லையே. அதனால் ராமகாதையில் வந்து விடுகிறான். க்ருஷ்ண காதையில் வந்து விடுகிறான். புகழ்ச்சிப் ப்ரியன் ஆதலால் அவனால் தன்னை மறைத்து வைத்துக் கொள்ள இயலாது. ந்ருஸிம்ஹனுடைய பக்தர்களாக இருப்பதில் இது ஒரு பெரிய வரம். 'ந்ருஸிம்ஹா' என்று கூப்பிட்ட குரலுக்கு அவன் நம் பக்கத்திலேயே சதா இருப்பதை காண்பித்து குடுத்து விடுவதற்கும் இது தான் காரணம்.


ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து.
 

Latest ads

Back
Top