• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆண்டாளுக்கும் வராக அவதாரத்துக்கும் பூர&#

ஆண்டாளுக்கும் வராக அவதாரத்துக்கும் பூர&#

ஆண்டாளுக்கும் வராக அவதாரத்துக்கும் பூர்வசார்யர்கள் சம்பந்தம் சொல்வார்கள். அது எப்படி என்று சற்று விளக்கமாக பார்போம். அவதாரங்களிலேயே
வராக அவதாரமே
மிகவும்பெரிது என்பர் – த்ரிவிக்ரமாவதாரம் கூட பூமியில்காலூன்றித்தான் நின்றது.
வராகமோ பூமியையே தன் கொம்பில்
ஒருதூசிபோல் தாங்கி
நின்றது.
சர்வ ஜகத்துக்கும் காரணபூதனான
ஸ்ரீமன் நாராயணன் இந்த வராக அவதாரம் எடுத்தபோது சேதனர்களுக்காக தன்னை அடையும் வழியை சுருக்கமாக பூமாதேவி கேட்டதின் பேரில் அருளினான். இது வராக சரம ஸ்லோகம் எனப்படும். (கீதையின் சரம ஸ்லோகம் போலவே!).


ஸ்ரீ வராக உவாச:
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||
– வராக சரம ஸ்லோகம்


அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!


இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.
 

Latest ads

Back
Top