• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை (Thiruppavai)

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை (Thiruppavai)

ஆண்டாள் அருளியது


பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


Maargazhi(th) thingal madhi niraindha nannaalaal
Neeraada(p) podhuveer podhuminon erizhaiyeer
Seer malgum aayppaadi(ch) chelva(ch) chirumeergaal
Koorvel kodundhozhilan nandhagopan kumaran
Eraarndha kannii yasodhai ilam singam
Kaar meni cengan kadhir madhiyam pol mugaththaan
naaraayanane namakke parai tharuvaan
paaror pugazha(p) padindhelor empaavaay


விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.


பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்


This first verse sets the time as the first day of the month of Margazhi (When Sri Andal sung this verse that was probably a full moon day ) thingal – month madi – moon). Andal invites the young girls of the prosperous Ayarpadi and everyone to symbolically bathe and join in the excellent and exemplary worship of Lord Narayana who will bless us and give us succor. Like in all the verses the Lord is referenced not just by name but by a number of lines of praise about His Form, lineage, beauty, valour, kindness and many virtues and also anecdotes from his victories and other illustrious events. In this verse the Lord is referenced as Krishna, the son of Nandagopan (who is ever vigilant with a sharp spear to protect the baby Krishna, the lion cub like son of the beautiful eyed Yashoda, the Lord who is dark, and whose face is radiant like the sun.
 
திருப்பாவை (1).....!!!


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்**
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை(1)


செல்வம்நிறைந்துள்ள
திருவாய்ப்பாடியில்
கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள் !
விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் பூர்ண சந்திரோதயத்தையுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்லநாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும்
(கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபனுக்கு பிள்ளையாய்ப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடையளான
யசோதைப்பிராட்டிக்கு
சிங்கக்குட்டி போலிருப்பவனும்,
காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும்
ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திருமுகத்தை உடையனுமான
ஸ்ரீமந் நாராயணன் தானே (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறையை
கொடுக்குமவனாயிற் நின்றான், ஆதலால், இவ்வுலகத்தவர்கள்
கொண்டாடும்படி
(இந்நோன்பிலே)ஊன்றி
நீராட வர விருப்பமுடையீர்களே !
வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய் !


ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !” என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.


பகவத் கீதையிற் கண்ணபிரான் “மாஸங்களனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள் அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே. இராமபிரானை முடிசூட்டப் பாரித்து முயன்றபோழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட, அதனை அங்குக் கொண்டாடினாற்போல், இவர்களும் நோன்பு நோற்கமுயலத் தன்னடையே வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.
நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால், அதனையுங் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று. ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது. இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்குங் காலத்தில் “நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்; இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால் இருளை வெறுத்து நிலவைக்கொண்டாடுகின்றனரென்க.
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 2


Dear Bakthas, Today being the second day of Margazhi posting Andal's hymn on Vaiyaththu vaazhveergaal (வையத்து வாழ்வீர்காள்). . Readers are requested to recite the THIRUPAVAI and be blessed:


பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


Vaiyaththu vaazhveergaal naamum nampaavaikku(ch)
Cheyyum kirisaigal keleero paarkadalul
Paaiya(th) thuyinra paramanadi paadi
Neyyunnom paalunnom naatkaale neeraadi
Maiyittu ezhudhom malarittu naam mudiyom
Seyyaadhana seyyom theekkuralai(ch) chenrodhom
Aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti
uyyumaarenni ugandhelor empaavaay.


விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.


பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


In this second verse Sri Andal enumerates the dos and don’ts for the month long Nonbu ( intense worship) that she is setting out to do with an invitation to everyone to join in. We will sing the praise of the feet of the Lord who is sleeping gently on the serpent in the middle of the wide ocean. We will wake up early and bathe, we will not adorn ourselves with kajal and flowers, we will not eat Ghee and milk, we will not do inappropriate deeds, will not speak evil and and harmful words, we will do charity and righteous deeds. Think noble thoughts and work to attain salvation and unification with the Lord.
The reference to not eating and not adorning is an advice to change the focus from the self and enjoyment of worldly pleasures to increasing the focus intensely on God and godly matters. When intensity of one activity increases the intensity and time on other activities automatically decreases. Conversely when we make the choice to eschew some activities, we automatically create the time and inclination for other activities.
 
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி**
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


இப் பூமண்டலத்தில்
வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!
(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும் உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளி நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
(ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும், (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
மகிழ்ந்து நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்யவேண்டிய
க்ரியைகளை காது கொடுத்துக்கேளுங்கள்.
நோன்பு நோற்கத் தொடங்கின நாம் நெய், பால் உண்ணக்கடவோமல்லோம்;
விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்துவிட்டு
(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக்கடவோமல்லோம்;
(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யக் கடவோமல்லோம்;
கொடிய கோட்சொற்களை
(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்


ஒரு விசேஷ காரியத்தில் ஈடுப்பட்டவர்கள் அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களிற் கூறியுள்ளதனால், அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள் தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில்.


பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை, நாட்காலே நீராடுகை, ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை. நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மையிட்டெழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 3


Dear Bhaktas, Today My posting in on the 3rd hymn of Thirupavai OngiUlagalantha(ஓங்கி உலகளந்த) – Being Vaikunda Ekadesi Readers are blessed with Namperumal in Rathna angi while reading the 3rd Pasuram of Thiruppavai.


திருப்பாவை பாடல் 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


Ongi ulagalandha uththaman per paadi
Naangal nam paavaikku(ch) chaatri neeraadinaal
Theenginri naadellaam thingal mum maari peydhu
Ongu perum sennel oodu kayalugala(p)
Poonguvalai(p) podhil pori vandu kan paduppa(th)
Thengaadhe pukkirundhu seerththa mulai patri
Vaanga kudam niraikkum vallal perum pasukkal
Neengaadha selvam niraindhelor embaavaay


விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்


(விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


Referrring to the Lord as the One who rose to the Viswaroopa form and measured the three worlds with three giant strides during the Vamana Avatar , in this third stanza, Andal describes the good that will follow when during this prayer, we all sing the praise of the names of the Lord during the Margazhi Nonbu.
All throughout the nation, without any disaster(floods), we will have adequate rains during all the months, the crops will cherish making the fields of tall well grown paddy lively with the fish jumping around, honey bees gently sleeping in the beautiful flowers, the big cows, like great philanthropists will fill the pots with milk from their abundant udders and In all prosperity and plenty will fill the lives of the devotees who are performing this prayers.


Andal cited the measures of prosperity in these terms in the days that she lived. Will these measures mean prosperity now ? We may be preoccupied with other measures like the GDP and the Sensex but with the focus on the environment as the single largest concern for humanity, Andal’s metrics appear truly farsighted.
 
திருப்பாவை(3)..... !!!


ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து - ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(3)


ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.


இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. ப்ரபத்தி அதாவது சரணாகதியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. அதையும் அர்ச்சிராதி மார்க்கங்கள் வழியாகவே சரணாகதி செய்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!


மேலும் த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.


பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பூர்வாசார்யர்கள்; உத்தமன் பெயர் என்று திருமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இது முதல் பாசுரத்தில் சொன்ன நாராயண நாமத்திலிருந்து தேறும். அந்த நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம். இந்த பாடலுக்கு வியாக்யானம் எழுதிய பூர்வாசார்யர்கள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நீராடினால் என்றும் கொண்டு விளக்கம் சொன்னதுண்டு.


மழை என்பது நிறைய பெய்தாலும் தீங்கு – பெய்யாமல் விட்டாலும் தீங்கு – துர்பிக்ஷம், பஞ்சம் போன்ற தீங்குகள் நீங்க மழை தேவை. இந்த புருஷோத்தமனின் நாமத்தை சொல்லி நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்குகள் நீங்க தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் என்று வாழ்த்துகிறாள். அந்த திருவிக்கிரமனின் பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். பூங்குவளை போது – போது என்றால் தளிர் – அந்த குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.


இங்கே சொல்லப்படும் உருவகங்கள் சுட்டுவது, அந்த பரமனின் கருணையால் ப்ரபன்னர்கள் மத்தியில் ஞானம் ஓங்கி வளர்ந்த பயிரைப்போல் செழித்து இருக்கிறது.


அதில் ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.


அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்… இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.


இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.


ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 4


Dear Bhaktas, Today My posting in on the 4th hymn of Thirupavai Aazhi mazhai) kannaa (ஆழி மழைக்கண்ணா)) – This pasuram is sung while praying for rains..


Let us have the Blessings of LORD PARTHASARATHY (VENKATAKRISHNAN) who is lifting the Govardhanagiri while reading this pasuram…


பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


Aazhi mazhai(k) kannaa onru nee kai karavel
Aazhi ul pukku mugandhu kodu aarthu eri
Oozhi mudhalvan uruvam pol mey karuththu(p)
Paazhiy am tholudai(p) padmapanaaban kaiyil
Aazhi pol minni valamburi pol ninru adhirndhu
Thaazhaadhe saarnga mudhaiththa sara mazhai pol
Vaazha ulaginil peydhidaay naangalum
Maargazhi neeraada magizhndhelor embaavaay


விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.


பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.


Continuing the prayers that she commenced, Andal in this fourth verse, refers to the Lord as the master of all the rain that falls on this earth. She picturises the Lord as going deep into the ocean, taking the water and rising high in the sky to deposit it in the magnificent black clouds to eventually precipitate into rain. The Lord’s dark colour, his mighty and handsome shoulders are compared to the clouds, the sound of thunder to the sounds from His Conch (Valampuri), the lightning to the shine on the Lord’s Disc (Aazhi – Chakra) and the plentiful rain compared to the stream of arrows issuing out of the Lord’s Bow (Sarngam). Timely and adequate rain is referred to as the precursor of many gains and prosperity and the Lord Padmanabha as the master of that phenomena is offered prayers seeking that bountiful rain for the welfare of the devotees and all beings on earth.
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் - 7 - நான்காம் பாசுரம்


ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழியில் புக்கு, முகந்து, கொடு, ஆர்த்து ஏறி


ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழி அம் தோளுடை பத்ம நாபன் கையில்


ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்


வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


(எளிமையாய் படிப்பதற்காக, பிரித்து எழுதப் பட்டது)


மழையுடைய சிறப்பை, மாலனுடைய சிறப்பாய் விளக்கும் உன்னதப் பதிகம்.


'ஆழி மழைக் கண்ணா':


மழைக்குக் கடல் (ஆழி) தான் தாய். கடலில்லையேல் மேகமோ, மழையோ இல்லை. நிலத்துக்கு ஆதாரமே கடல் தான். உலகம் முழுதுமே கடல் சூழ்ந்திருப்பது தான் பிரளயம். ஆதியும் அந்தமும் ஆனது பிரளயம்.


நிலம், கடலில் ஒரு சிறு திரட்டு தான். மழையில்லையேல் வளம் இல்லை. வளம் இல்லையேல் வாழ்வே இல்லை. ' ஆழி சூழ் உலகமெல்லாம் பாரதனே ஆள நீ போய்' என்று கைகேயி ராமனிடம் பேசிய வாசகமாய் கம்பன் சொல்லுவான்.


நோன்பிருக்கும் கோபியர் சிறுமிகள் வேண்டுவது 'பர்ஜன்யன்' என்னும் மழைத் தேவனைக் குறித்து. ஆனாலும் கண்ணன் என்ற பெயரை அல்லாது வேறு எந்த தேவதையையும் வரிக்கத் தெரியாததால், பர்ஜன்யனின் மழை கொடுக்கும் செயலைக் கூட கண்ணனின் பெயரோடு சேர்த்து விளிக்கிறார்கள்.


கண்ணனும் கடல் போன்று கருத்தவன். நம் எல்லோர் மேலும் கருணை மழை பெய்ய ஓங்கி உலகளந்த கார் மேகம் போன்றவன். க்ரியை என்பதை ப்ரம்மனிடமும், சம்ஹரிப்பதை ருத்ரனிடமும், பிரித்துக் கொடுத்து, பரப்ரஹ்மமான விஷ்ணு,


இறப்பு அழிவு போன்றவற்றை யமாதிகளிடம் விட்டுவிட்டு, ஜீவாத்மாக்கள் மற்றும் அசேதனங்களின் ரக்ஷணை என்னும் செயலை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு 'சமுத்திர இவ கம்பீர்யை' என்னும் வகையில் 'ஜகத்தை ஈரக்கையால் தடவி நோக்கவல்லானாக' , கம்பீரனாய் இருக்கிறான்.


'ஓன்று நீ கைகரவேல்':


நல்லவர் தீமைகள் எனப் பகுத்துப் பார்க்காமல் எல்லோருக்கும் தேவையான மழையைக் குறையாமல் ஜகத் முழுவதிலும் பெய்திடுவாய் பர்ஜன்யனே, என்று ஆய்ச்சியர்கள் பணிக்கிறார்கள்.


'பாபா நாம்வா சுபாம் நாம்வா' என்று நல்ல குணவதிகளையோ, ராக்ஷசிகளையோ, வேறு படுத்தாமல், எங்கள் கோஷ்டியில் நாங்கள் இணைத்துக் கொல்வதைப்போல, எல்லோரையும் சமமாகப் பாவித்து மழை கொடுப்பாய் என்று வேண்டல்.


'கை' என்பது, தானம், கொடுப்பது என்பதற்குக் குறியீடாக சொல்லப் படுவது, எப்படி 'அவனுக்கு ரொம்ப பெரிய தாராளமான கை' என்று கொடை வள்ளல்களைச் சொல்லுமாப்போலே.


'ஆழியில் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ' -


உபயோகங்கள் இல்லாத, பள்ளங்களிலோ, சாக்கடையிலோ ஒதுங்காமல், திரும்பத் திரும்ப சுழற்சிக்கு ஏதுவாக, பெய்யும் மழை நீர், நிலத்தினுள் உபயோகமான பின் கடலில் மட்டும் தான் புக வேணும்.


கடலின் கரைகளிலிருந்து அல்லாமல் நடுவிலிருந்து எல்லா நீரினையும் கிரஹித்து , சிறிதளவு நீர் கூடத் தெரியாத வண்ணம் அடிமண் அடியோடே தட்டப் பருகி, ஆர்த்து - ஆரவார மின்னலும் முழங்கலுமான மழையோடு வர வேண்டும்.


'ஓம் மேகேஸ்வன க்ருஷ்ண:' - எப்படி கிருஷ்ணன் கர்ஜனையோடு சொன்ன போதனைகளை நாங்கள் கிரஹிக்கிறோமோ, அவ்வண்ணம் மறைந்து கொண்டே நம் கார்யங்களை நடத்தி அருளும் ஈஸ்வரனைப் போல அல்லாமல்,


அருளிச்செயல் பேசிய வண்ணம் 'விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்' என்றும், 'மத யானை போல் எழுந்த மா முகில்காள்' என்றும், பட்டுக் கரு நீலப் புடைவை, என்று மஹாகவி பாரதியார் சொன்ன வகையில் வானத்து மேகங்கள் முழுதுமாய் கருத்துபோய்,

சப்தத்தோடும் முழக்கத்தோடும், வில் அம்புகள் தொடர்ந்து பூமியில் பாயுமாப் போலே ஊரார் அனைவரும் வானின் ஒளதார்யத்தை (தாராள குணம்) பரி பூரணமாக அறியும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்.


மழையால் ஏற்படும் உயரிய பலன்களையும் மீறி, மழைத் தூறல் ஆரம்பித்தவுடனேயே மனத்தில் மகிழ்ச்சி வருவதால், பெரும் சத்தத்தோடும் ஆரவாரத்தோடும் வந்து பெய்து எல்லோர் மனங்களையும் இன்பத்தால் நிரப்பிட, நோன்பிருக்கும் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்.


'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து' -


'ஊழி' என்ற சர்வ லோக ரக்ஷகனான கண்ணனின் கரிய நிறத்தினைப் போலே,


சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று நினைக்கையில் சர்வேஸ்வரனின் உடல் உருவம் கருத்திருக்கும். உன்னுடைய திருமேனியும் அப்படியே இருக்க வேணும் என்று மழைத் தேவன் 'பர்ஜனியனிடம்' நோன்பிருக்கும் சிறுமிகள் இறைஞ்சுகிறார்கள்.


குடும்பத்துக்காக இராப்பகல், வெய்யிலிலும் மழையிலும் அலைந்து உழைக்கும் குடும்பத் தலைவனின் மேனி கருத்திருக்கும். அடுப்படியில் பல சுவை உணவாக்கும் அன்னையின், பரிஸாராகரின் உடலும் கருத்துத் தானிருக்கும்.


'பாழி அம் தோள் உடைய ' -


அழகிய வலிமையான, (இடப் புறத்துத்) தோள்கள் கொண்ட, காருண்ய அங்கமாக மட்டுமே அல்லாமல், சௌந்தர்யமாகவும் உள்ள தோள் என்ற குறிப்பு.


'பற்பநாபன் கையில்' -


பிள்ளைகளை தொட்டிலிலே வளர்த்திப், புற்பாயிட்டுப் பூரித்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றிட ஆயுதம் கொண்டு நோக்கியிருக்கும் தந்தையை/ காவலர்களை போலே,


சிருஷ்டிக்குக் காரணமான ப்ரஹ்மனை கமலத்திலே ஆசனம் கொடுத்து அமர்த்தி, கையால் தாங்கிக் கிடக்கும் பத்மநாபன். 'அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்' என்ற பெருமை மாலனுக்கு உண்டு.


'ஆழி போல் மின்னி' -


ப்ரம்மன் பத்மநாபனின் திரு மகன். திரு வாழி ஆழ்வான் - பிரதம தளபதி.


எந்தத் தந்தையும் (பத்மநாபன் போல) தன் பிள்ளைக்குச் செய்யும் கடமைகளை வெளியில் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை. திருவாழியாழ்வன், (சக்கரம்) உண்மையான ஊழியனுக்கு ஒப்பானவன்.


எப்படி ஊழியன் தன் சேவைகளை வெளியில் பிரகடனப்படுத்தி மகிழ்வானோ , அவ்வண்ணம் ஜகத்தைக் காப்பதை மின்னி ஒளிர்ந்துத் தெரிவிக்கிறான் திருவாழி ஆழ்வான். .


'வலம்புரி போல் நின்றதிர்ந்து' -


மகா பாரதப் போரிலே எப்படி பாஞ்சஜன்ய த்வனி அதிர்ந்து ஒலித்ததோ அது போல பெரும் சத்தத்துடன் மழையின் சப்தம் ஒலிக்கட்டும். ஒரே த்வனியில் ஒலிக்காது, அனு கூலர் (அடியார்கள்)/ ப்ரதி கூலர்களுக்கு ஏற்ற வண்ணம், அதிர்ந்து என்னும் வகையாய் இரண்டு வகையில் ஆர்ப்பரித்து ஒலிக்கும் சங்கு.


'சுடராழியும் பல்லாண்டு', 'அப்பாஞ்சஜன்யமும் பல்லாண்டு'


என்னும் வகையில் இரண்டு திவ்யாயத்தங்களும் தொடர்ந்து தம் திருச் செயலாற்றுமாப் போல. சங்கின் ஒலியானது, பிரணவத்தின் அர்த்தத்தை இடை விடாமல் திருவாய் மொழி முகத்தாலே அருளிச் செய்வது என்ற ஈடும் உண்டு.


'தாழாதே சார்ங்கமுறைத்த சர மழைபோல்' - பிரணவ மந்திரத்தில், பரமாத்மா ஜீவாத்மாக்களின், பகவானின் அருளால் ஏற்பட்ட சம்பந்த்தததை லௌகீகர்களும் அறியும் வண்ணம் தொடர்ந்து உரைத்தலைக் குறிக்கும்.


எம்பெருமானின்\கட்டளையை ஆணை ஏற்று ஏவப் பட்ட சர மழை, அவனே தடுத்தாலும் ப்ரதி கூலர்களை சென்று தாக்கிடுமாம்.


'வாழ உலகினில் பெய்திடாய்' -


உலகம் உய்த்திட பெய்வாய் மழையே


'நாங்களும் மகிழ்ந்து நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்'


ஆரோக்கியமாக நனைந்து, நோன்பிற்காகக் குளித்து, பராமனோடு எங்கள் உறவினை பெருக்கிக் கொள்ள அருள்வாய் மழையே
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 5


Dear Bhaktas, Today My posting in on the 5th hymn of Thirupavai Maayanai mannu (மாயனை மன்னு) Let, all the sins that one had done unknowingly and our bad thoughts will be burnt away like cotton in a flame with blessings of Shri Krishna !!


பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


Maayanai mannu vada madhurai maindhanai(th)
Thooya peru neer yamunai(th) thuraivanai
Aayar kulaththinil thonrum ani vilakkai(th)
Thaayai(k) kudal vilakkam seydha dhaamodharanai(th)
Thooyomaay vandhu naam thoomalar thoovi(th) thozhudhu
Vaayinaal paadi manaththinaal sindhikka(p)
Poya pizhaiyum pugudharuvaan ninranavum
Theeyinil thoosaagum cheppelor embaavaay


விளக்கம்: "உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.


பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.


The way to worshipping the lord is described here in this fifth verse as follows – come with cleansed body and pure mind, offer fresh flowers to the Lord, sing verses and songs in praise of the Lord with your mouth and think deeply of the Lord in your mind. And how do you think of the Lord – think of Him in his many forms, as the One who incarnated in Mathura, as the one who is the Lord of the Yamuna, as the scion of the cowherd community, as the One who made his mother proud, as the One who was bound by a rope as a naughty child.


And if you do so, all the sins that one had done unknowingly and our bad thoughts will be burnt away like cotton in a flame, therefore come my dear friends, let us worship and perform our Nonbu.
Thus concludes the first section of the Thiruppavai consisting of the first 5 verses, Sri Andal has established the fact of the worship, described the do s and don’t s, described the Lord in whose name the prayers are to be performed, described the method of doing the worship, explained the benefits that will accrue on account of the worship and put the energy and motivation into the worship.
Good idea to recite these five verses together at one go and imbibe their essence ; will give you the energy to keep you going for the month – this is a weekend – so you could make time for it. We will go the next section (10 verses) the next day
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் - 8 - ஐந்தாம் பாசுரம்


மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை


ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை


தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து


போய பிழையும் புகு தருவான் நின்றனவாம்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


(எளிமையாய் படிப்பதற்காக, பிரித்து எழுதப் பட்டது)


இந்தப் பதிகத்தின் நோக்கம், நோன்பிருக்கும் ஒரு ஆயர் சிறுமிக்கு சிறு குழப்பம் வந்ததாம் . 'நாம் இப்படியே கனக்கப் பாரித்து கொண்டு இழியா நின்றோம். நமக்குத்தான் இது தகை கட்டுகைக்கு விஸ்வாச மென்' - இதன் பொருள் 'நாம் இப்படியே கடுமையாய், நோன்பிருந்து கொண்டிருக்கிறோம். நாம் விரும்பும் பயன்கள் நிறைவேறிடும் என்பதற்கு என்ன நிச்சயம் '.


சற்றே விவேகமான இன்னொருத்தி 'நாம் தொடர்ந்து செய்யும் நோன்பினால் எந்த இழிவும் ஏற்படாது. நம் நோன்பினை இடையில் நிறுத்தினோம் என்னில், நோன்பினை போகித்துக் கொண்டிருக்கும் நம் ப்ரியமான
சர்வேஸ்வரனுக்குச் சிந்தை குழம்பிடாதோ. பலன் கிடைக்குமா இல்லையா என்ற குழப்பத்தினை ஒதுக்கித் தொடர்ந்து நோன்பிருப்போம்' என்று தெளிவிக்கிறாள்.


நோன்பின் பலன் பற்றி ஐயம் கொண்டவளுக்கு, முன் பிறவிகளிலும், இப்பிறவியிலும் தொடர்ந்து செய்யும் பிழைகளும் அதனால் உண்டான பழிகளும், நம் நோன்பினை தோற்கடித்திடாதோ என்பதாம்.


வியாக்கியானம் சொல்கிறது. போரினைத் தொடர்ந்து செய்தல் தேவை தானோ என்று குழம்பிய அருச்சுணனுக்கு, அருள் செய்து கண்ணன் எப்படி வெற்றி தருவித்தானோ,


ராமபிரான் தன்னுடைய ப்ரஹ்மாண்டம்மாய் ஏற்பாடான முடி சூடலுக்குத், தடை/விக்னம் வந்த போதிலும், சுக்ரீவனுக்கும் விபீஷணாழ்வானுக்கும் ஆனந்தத்துடன் முடி சூட்டல் செய்வித்தவனைப் போலே,


பரமார்த்தியான எம்பெருமான், நாம் மனமுருகி வேண்டி நிற்க, நம்முடைய சங்கல்பங்களை , இடையில் எத்தனைத் தடை வந்தாலும், அவற்றை எல்லாம் தூசி போலச் செய்து, நடத்திக் காட்டுவான் என்பதாம்.


'மாயனை' - கிருஷ்ணன் குழந்தையாய் தோன்றிய போதில் நான்கு கரத்தினனாய், சங்கு சக்கரங்களைத் தாங்கிக் கொண்டு பிறந்தானாம். சர்வேஸ்வரனே தனக்கு மகனாகப் பிறந்திருக்கின்றான் என்றறிந்த வசுதேவர், கம்ஸன் மேல் கொண்ட பயத்தினால் அவனிடம் வேண்டி நின்றிட, அவைகளை உடனேயே மறைத்துக் கொண்டு, சராசரிக் குழந்தை போலக் காட்சி கொடுத்தானாம்.


சர்வேஸ்வரன், சாதாரண இடைச் சிறுவனாய்த் தோன்றி, கோபியரையும் பசுக்களையும் தன்னை அணைக்கச் செய்வித்தவனாய் 'சதா பஸ்யந்தி' என்னும் வகையில்,


தன்னுடைய பராக்கிரமங்களை அடக்கிக் கொண்டு, யசோதை தாம்புக் கயிற்றினால் கட்டியதற்காக, வெகுளிச் சிறுவனாய் விம்மி அழுததனால், மாயவன் என விளிக்கப் பெறுகிறான்.


'மன்னு வட மதுரை' -


சிறப்பான வட மதுரை - தேவ சம்பந்தம் கொண்ட அற்புத ஸ்தலம். சித்தாஸ்ரமமாய் வாமனன் நெடு நாள் தவமிருந்த, சத்ருக்னன், தனக்குப் படை வீடாக அமைத்து அரசாண்ட, தேவ சம்பந்தம் தொடர்ந்து கொண்டிருக்கிற நகரம்.


பரம பதம் போன்றே போகங்கள் மிகுந்திருக்கும் நகரம். 'மல்லை மூதூர் வட மதுரை' - சிறப்புக்கள் மிகுந்தப் பழைமையான வட மதுரை


சதைக ரூபனாய் (ஏக ரூபனாய்) வாமனனும், ப்ரவாஹ ரூபனாய் (எல்லொருடனும் சஹஜமாகப் பழகிய) கிருஷ்ணனும் ஆண்ட புண்ய க்ஷேத்ரம். 'நலம் அந்தம் இல்லாத நாடு' என்ற ஏற்றம் உண்டு.


'மதுரா நாம கரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதாஸ் விஷ்ணு ஸநாதந:' - மதுரை என்ற பெயரைச் சொன்னாலே, புண்யங்கள் கூடிடும், பாபங்கள் விலகும், சுபம் நடைபெறும், ஜகன்னாதனன விஷ்ணு ஏற்படுத்திய சனாதன தர்மங்கள் தழைத்தோங்கும் அற்புத தேசம்.


'மைந்தனை' - மிடுக்கனை, பிள்ளையை, இளமை மிக்க யுவனை, ராஜனை என்ற நான்கு வகை குறிப்புக்கள்.


மிடுக்கனை - 'தந்தை காலில் பெருவிலங்கு தாள விழ நள்ளிரவில் வந்த வெந்தை' - சிறையில் இருந்த வசு தேவரின் காலில் கம்சன் பிணைத்திருந்த விலங்கினைக் கீழே விழச் செய்த, நள்ளிரவில் வந்த எந்தை.


அருளிச் செயலின் அற்புதம், தந்தை மகனுக்குத் தேவையானதைச் செய்தது போக, மகன் தந்தையின் கால் விலங்கினை அகற்றியதால் எந்தை என்றழைக்கப் பெறுகிறான்.


வட மதுரை தந்த மகன் (பிள்ளையை), மதுரையை ஆண்ட அரசனை (ராஜனை) என்றும் குறிப்புண்டு.


'தூய பெருநீர் யமுனை துறைவனை' - கண்ணனை பிறப்பு முதல் ஸ்பர்சித்ததால் தூய்மையான மகாநதி. பரம பதத்தின் 'விராஜ' நதியைப் போன்ற, வடமதுரையை - கோகுலத்தை இணைத்த மா நதி.


"யமுனா அஞ்சரதி கம்பீராம் நானா வர்த்தா சக்க்ஷா குலாம் வசு தேவோ வஹன்
கிருஷ்ணம் ஜானுமாத்ரோத கோயயௌ".


- சீதா பிராட்டி சரணம் புகவும், இராவணனுக்கு பயந்த கோதாவரியைப் போல அல்லாமல், வசுதேவரின் மடியில் தவழும் கண்ணன், கோகுலம் நோக்கித் தப்பித்துச் செல்லும் வகையில், கம்சன் மாளிகை நிழலின் கீழே இருந்தும், எளிதாய் கடக்கும் வண்ணம், முழங்கால் அளவுக்கு வற்றிப்போன புனித நதி'.


கிருஷ்ண கோபாஸ்திரீகள் நீராடி, விளையாடி வாய்க் கொப்பளித்து இன்னும் புனிதமாய் மாறியதாம்.


'ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை' - பரம பதத்தை விடவும் கோகுலத்தில் நற் குணங்கள் அதிக அளவில் ப்ரகாசித்ததாம்.


கிழக்குத் திசைக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தம், கிருஷ்ணனுக்கும் தேவகிக்கும் உள்ளது என்ற குறிப்பு.


இருட்டில் பிரகாசிக்கும் விளக்கைப் போன்றே நலிந்தோர்களிடையே தோன்றி ஒளிரும் கண்ணன். ஆயர் குலத்துக்கே ஒளி காட்டும் வள்ளல். ஆயர்பாடியில் வந்துதித்த அற்புத விளக்கு.


ஆயர் குலத்தினில் 'தோன்றும்' என்பது வினைத்தொகை. இறந்த, நிகழ், எதிர் காலங்களில் தொடர்ந்து நிகழும் செயல் வினைத்தொகை ஆகும். எல்லாக் காலங்களிலும் ஆயர் குலத்திலே தோன்றுவதையே விரும்பிடும் கண்ணன் என்ற பொருள்.


'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை' - யசோதை தாம்புக் கயிற்றால் கட்டித் தழும்பான வயிற்றை உலகமெல்லாம் 'மணி வயிறு வாய்த்தனையோ', 'என்ன தவம் செய்தனை யசோதா', என்ற வகையில், புகழச் செய்தவன். பெற்ற வயிற்றுக்கு முதலில் பட்டம் வாங்கிப் பெற்றவள்.


'தாம உதரன்' தாமோதரன் என்னும் பதம் எம்பெருமானின் பவ்யமான திரு நாமம்.


நம்முடைய பந்தங்களை நாம் நினைத்தால் மட்டுமே எப்படி அறுக்க முடியாதோ, அதைப் போலே அடியார்கள் அவனோடு ஏற்படுத்திய பந்தங்களை அவன் எக்காலும் அறுத்திட மாட்டான்.


தாவி விளையாடிய கண்ணனின் வயிற்றுத் தழும்பைப் பார்த்து ஆய்ச்சியர்கள் சிரித்தார்களாம். அதனால் தான் கண்ணனின் திரு விக்ரஹ அலங்காரத்திலே, அவன் வயிற்றுக்கும் வஸ்திரமும், கந்தமும் சாற்றப் படுகிறது.


'தூயோமாய் வந்து நாம்' - இருக்கும் வண்ணத்தில் அப்படியே வந்து நோன்பில் பங்கு கொள்வதினாலேயே உடலுக்கும் மனத்துக்கும் தூய்மை ஏற்படுகிறது.


ப்ரபத்தி என்னும் சரணாகதிக்கு ஸ்நானம் முதலியன அவசியம் இல்லை. யோக்யரோ அயோக்யரோ இதுவரை, என்றல்லாது சரணாகதியில் எவரும் ஈடு படலாம்.


வள்ளுவன் சொல்லுவான், 'புறத்தூய்மை நீரானமையும், அகத் தூய்மை வாய்மையால் காணப்படும்'. வாய்மை அல்லது உண்மை என்பது மட்டும், மனத்தில் கள்ளம் கலவாது இருத்தல்.


வெகுளியான ஆய்ச்சிச் சிறுமிகள் தலையைக் கழுவி, உடலைக் கழுவ மறந்து, உடலைக் கழுவி தலையை கழுவ மறந்தாலும், கண்ணனோடு பர்யந்த சம்பந்தத்தால் எக்காலத்திலும் தூயவர் ஆயினார்.


'தூமலர் தூவித் ' - கண்ணனுக்கென்று சாற்றப்படும் எல்லா மலருமே தூய்மானவை தாம். யோக்யமென்றும் அயோக்கியமென்றும் பாராமல் கண்ணணுக்குத் தேற்றின மலரென்றுமாம் - 'யதா ததா வாபி', என்னும் சித்தாந்தப் படி.


'மிக்க சீர் தொண்டர்கள் இட்ட பூந் துளவம்' என்னும்படியாய் தொண்டர்கள் இட்ட மாத்திரத்திலேயே புஷ்பங்கள் தூய்மை ஆயின. கண்ணுக்குத் தோன்றிய மலர் எதுவானாலும் எம்பிரான் சூடிக் கொள்வான்.


'தொழுது' - இரு கைக் கூப்பி, தத்தம் பெற்றோர்கள், கண்ணனை அடைவதை தவறென்று எண்ணாத வகையில் தொழுது. கை கூப்பித் தொழுதல் எவருக்குமே இயன்ற வழிபாட்டு முறை.


'வாயினால் பாடி' - வாய் பெற்ற பலனையே அடைந்தோம், என்னும் வகையில் அவன் திரு நாமம் பாடி. திரு நாமம் பாடிட அறிவின் / மனதின் துணைக்குப் பெரிதும் தேவையில்லை.


'மனத்தினால் சிந்தித்து' - அவனுடைய திவ்ய சொரூபத்தையும், பராக்கிரமங்களையும் எண்ணத்தால் கொண்டு மகிழ்ந்து


'போய பிழையும் புகு தருவா நின்றனவும்' - ஞானம் பிறப்பதற்கு முன் பூர்வத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளும், பகவானுடன் மனத்தால் ஏற்பட்ட சம்பந்தத்திற்குப் பின்னரும், பழக்க தோஷத்தால் நித வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற பிழைகளும்,


'தீயினில் தூசாகும்' - பாலும் கற்கண்டும் கலந்துப் பருகினால் பித்தம் மறைவதை போலே, நாம் செய்த பாவங்களும், பிழைகளும், பகவதானுபவம் ஏற்பட்ட பின்னர், மீதமே இல்லாமல் முழுதும் எரிந்து போகும். பகவன் மேல் எழுந்த பக்தி என்னும் அக்கினியால் பாவங்கள் பஞ்சு போல் எரிந்து சாம்பலாகிடும்.


'செப்பு ஏலோர் எம் பாவாய்' - துதி செய்வாய் எம்பிரானை அழகிய என் தோழி


படங்கள்: மார்கழித்திங்களில்,அந்த்யரங்கம்:-ஸ்ரீரங்கம், ஆதிரங்கம்:-ஸ்ரீரங்கப்பட்டினம். மத்யரங்கம்:-ஸ்ரீவனசமுத்ரம்,


மூலக் குறிப்பு: மூவாயிர / ஆறாயிரப் படிகள்
 
திருப்பாவை(5).....!!!


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு - ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(5)


இந்தப் பாடலில் உயர்ந்த தத்வ விசாரம் இருக்கிறது. ஒரு இடைப்பெண் இன்னொரு இடைப்பெண்ணைப் பார்த்து கேட்கிறாள் “நாமெல்லாம் கர்ம வசப்பட்டவர்கள் – விதிப்படி கர்மாப்படி தான் எல்லாமும் நடக்கிறது என்றால், நாம் எப்படி பரமனை அடையமுடியும்? நம் பிழைகள் நம்மை தடுத்து விடாதா? இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்? இது வரை செய்த கர்மங்கள், கர்மத்துக்கான பலன்கள் நம்மை விட்டுவிடுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்து செல்கிறதே? இதிலிருந்து எப்படி மீள்வது?” என்று கேட்பதாகவும், அதற்கு இன்னொரு இடைப்பெண்ணாக ஆண்டாள் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.


கர்ம ஞான பக்தி யோகங்கள் தன் சுயமுயற்சியால் வசிஷ்டர் வாமதேவர் போல செய்து முக்தியடையக் கூடிய சக்தர்கள் அல்ல நாம் – நமக்கு வேத வேதாந்தங்கள் தெரியாது, சாஸ்திரம் தெரியாது, சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நாம் செய்யக் கூடியவைகள் சில உண்டு. அந்த மாயனை, வடமதுரை மைந்தனை, ஆயர் குலத்து அணிவிளக்கை, தாமோதரனை மலர் தூவி தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமானால் பல ஜன்மங்களில் நாம் சேர்த்து, இனி சேரப்போகும் அனைத்து பாவங்களும் தீயினில் தூசாக விலகும் என்று பதில் சொல்கிறாள்.


அப்பேர்பட்ட பரமனை நாம் எப்படி அணுகுவது? நாமோ அசுத்தர்கள் – என்றால், நமது அர்ஹதையெல்லாம் பார்க்க தேவை இல்லை – உள்ளமாதிரியே இப்படியே சென்று அடையலாம். அவன் வருவானா? நாம் அங்கே செல்ல வேண்டுமா? என்றெல்லாம் குழம்ப தேவையில்லை. ‘உபாயத்தில் துணிவு புறப்படவொட்டாதாப்போலே, உபேயத்தில் த்வரை முறை பார்த்திருக்க வொட்டாதிறே!’ என்று பூர்வாசார்யர்கள் அருளினார்கள்! அதாவது, கண்ணனை நாம் எப்படி அடைவது என்று பயந்தாலும், அவனை உபேயமாக – அடையும் பொருளாக நினைக்கும் போது அவனை அடையவேணும் என்கிற த்வரை – தணியாத ஆவல் இந்த வழிமுறைகளெல்லாம் பார்க்க விடாது.


ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை அழகாக நமக்காக விளக்கியிருக்கிறாள். த்ரிகரணமான மனம், வாக்கு, காயம் என்னும் கரணங்களைக்கொண்டு, கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனதினால் அனுசந்திப்பதே கர்ம கட்டை விலக்கும் என்கிறாள்! இன்னொரு வகையில், புண்ய பாவங்கள் இரண்டுமே மோக்ஷ பலனை தடுக்கும் – அதனால் அவை இரண்டையுமே பகவதர்ப்பணம் – க்ருஷ்ணார்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தேறும்.


கண்ணனை குழந்தையாக பாவித்து, அவன் செய்த பால லீலைகளை நினைத்து உருகுகிறாள் ஆண்டாள் – நம்மாழ்வார் அவனது சௌலப்யத்தை – சுலபத்தன்மையை நினைத்து நினைத்து ‘எத்திறம் எத்திறம்’ என்று மூவாறு மாதங்கள் வியந்ததைப்போலே. பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன் அல்லவா அவன்?


யாராவது சாமர்த்தியமாக வேலைகள் செய்தால் எந்த ஊர் வேலை இது? எந்த ஊர் நீர்? என்று விசாரிப்பது வழக்கம். அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்!


மாயனை, தாமோதரனை என்று இரண்டு திருநாமங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும். அவன் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று ஆழ்வார் அருளினார் அல்லவா? யசோதை சிறு கயிற்றினால் தன் பொல்லாப் பிள்ளையை கட்ட, அதனால் வடு விழுந்து தாம – உதரனாக தாமோதரனாக இருக்கும் அவன் பெரிய மாயன். தன் சர்வ சக்தியை மறைத்து அடியார்க்கு பொடியனாய் வந்த மாயக்கண்ணன்! அவன் மதுரையில் பிறந்து, யமுனையை கடந்து, ஆயர்பாடிக்கு வந்தான். இவனை பெற்ற பேறு பெற்றதால் யசோதை குடல் விளக்கம் செய்தான். அவள் இவனைக் கட்டிப்போட்ட கதையினை சிந்தித்தாலே மனிதனுடைய கர்மக் கட்டெல்லாம் கழன்று போகும்!
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை – 6


Dear Bhaktas, Today My posting in on the 6th hymn of Thirupavai Pullum silambina kaan (புள்ளும் சிலம்பின ) Let us all say the Narayana Namam and this gives us blessings of Shri Krishna !!
பாடல் 6


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


Pullum silambina kaan pullaraiyan koyilil
Vellai vili sangin peraravam kettilaiyo
Pillaay ezhundhiraay pey mulai nanchundu
Kalla(ch) chakatam kalakkazhiya(k) kaalochchi
Vellaththaravil thuyilamarndha viththinai
U;llaththu(k) kondu munivargalum yogigalum
mella ezhundhu ari enra peraravam
ullam pugundhu kulirndhelor embaavaay


விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.


பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


The second section of Sri Andal’s Thiruppavai consists of 10 verses beginning with the above 6th verse and sets out to wake up 10 girls to join Andal for the margazhi worship. Each verse is an attempt to awaken one of the girls and adopts a different reasoning and pleading. The common theme however is citing the reason for waking up ie to worship the Lord, and the the Lord who is to be worshipped is referenced citing his many splendorous qualities and pertinent deeds He performed during his incarnations in this earth.
Like any scripture or any great literary work, the meanings inside the verses are far far greater than what they appear to be on first reading. The more we know and are involved in the subject, the more we understand it. For now I will stay with the simple meaning of these verses,
Andal cites signs that indicate that the day has dawned, others – humans, animals and birds are up from their sleeps and therefore so should the girls. In this verse Andal says the birds are up and setting out, the sound of the white conch from the nearby temple is heard, so it is really daybreak, so dear girl, please wake up. The great Yogis and Munis invoke deep in their minds the Lord who finished the she-demon by suckling poison into her breasts, the Lord who vanquished the demon in a cart, the Lord who is resting gently on a serpent in the wide ocean and their minds are filled with the sound of “Hari”.
 
திருப்பாவை(6).....!!!


புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்* வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு* கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி* வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள்��திருப்பாவை(6)


ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, பர, வ்யூக, விபவ, நாம, நித்ய-லீலா விபூதி விசேஷங்களை சொல்லி பாடினாள். அதிலும் முதல் பாசுரத்தில் ப்ராப்ய ப்ராபக சம்பந்தத்தையும், இரண்டாம் பாசுரத்தில் க்ருத்யா-அக்ருத்ய விவேகத்தையும், மூன்றாம் பாசுரத்தில் பகவதனுக்ரஹத்தினால் ஏற்படும் மங்களங்களையும், நான்காம் பாசுரத்தில் பகவானை அடைந்து சரணாகதி செய்தால், பர்ஜன்ய தேவனான வருணன் முதலானோர் தாமும் அனுக்ரஹிப்பதையும், ஐந்தாம் பாசுரத்தில் கர்ம கட்டிலிருந்து விடுபடும் மார்க்கத்தையும் சொல்லி ஒரு கட்டத்தை முடித்தாள்.


அடுத்த படியாக அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். அடுத்த பத்து பாசுரங்களில் பத்து வீடுகளுக்கு சென்று கோபிகைகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. இன்றைய பாசுரத்தில், பாகவதர்களுடன் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, பிள்ளாய்! என்று அழைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து செல்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் இந்த பாசுரத்தை வீட்டினுள்ளே தூங்குகின்ற பெண்ணுக்கும், ஆண்டாள் மற்றும் அவர்கள் குழுவான கோபிகைகளுக்கும் இடையே ஒரு கேள்வி பதிலாக, சம்பாஷணையாக சித்திரித்து கூறுவர்.


ஆண்டாள் இந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று, “அம்மா பொழுது புலர்ந்தது.. நீ நேற்று பாவை நோன்புக்கு எங்களுடன் வருவதாக அத்தனை நேரம் சொன்னாயே! எழுந்திரு” என்று சொல்ல, அந்த பெண், “இன்னும் பொழுது விடியவே இல்லையே. அதற்குள் எழுந்திருக்க சொல்கிறீர்களே!” என்கிறாள்.


“இங்கே வெளியே வந்து பார், பறவைகளெல்லாம் விடிந்ததனால் உற்சாகமாக சப்தமெழுப்பிக்கொண்டிருக்கின்றன…” என்று ஆண்டாள் சொல்ல, அவளோ, “நீங்கள் க்ருஷ்ணனோடு சேருவதை நினைத்து நினைத்து உறங்காமல் இருப்பவர்கள். நீங்கள் பறவைகளையும் உறங்கவொட்டாது எழுப்பி விட்டிருப்பீர்கள், அதனால் அவைகள் கத்துகின்றன” என்கிறாள்.


“விடிந்ததனால் புள்ளரையன் கோவிலில் – பட்சிகளுக்கு அரசனான கருடனின் தலைவன் நாராயணன் – புள் அரையன் கோ – இல்லில், விடிந்ததற்கு அடையாளமாக சங்கு ஊதுகிறார்கள். அந்த பேரொலி உனக்கு கேட்கவில்லையா?” என்று ஆண்டாள் கேட்க, “அது ஏதோ சாமத்துக்கு சாமம் ஊதுகிற சங்காக கூட இருக்கலாம். இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளம் இல்லை. நான் விடிந்த பிறகு வருகிறேன்!” என்கிறாள் அந்தப் பெண்.


“பரம பாகவத பெண்பிள்ளையான நீ இப்படி சொல்லலாமா? க்ருஷ்ணனுக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தன, கண்ணனை நச்சு பாலை கொடுத்து கொல்லப்பார்த்த பூதனை, சகடமென்னும் சிறு விளையாட்டு பொருளுக்குள் ஆவேசித்து கண்ணனை கொல்லப்பார்த்த சகடாசுரன், என்று எத்தனையோ பேர்கள் வந்தார்களே… அவர்களை எல்லாம் அழித்து நம்மைக்காத்த சரண்யனாயிற்றே அவன்” என்று அவன் பெருமைகளை சொல்ல, “அவர்களை எல்லாம்தான் அழித்தாயிற்றே!” என்று இவள் எழுந்து வராமலே இருக்கிறாள்.


“அம்மா, இத்தனை அடையாளங்கள் சொல்லியும் நீ எழுந்திருக்க வில்லை. இந்த அசுரர்களெல்லாம் நுழைய முடியாத இடமான பாற்கடலில் பாம்பணையில் யோக நித்திரையில் இருக்கும் ஜகத்காரண வஸ்துவை – வித்தை – தம் உள்ளத்துள் வைத்துள்ள ஆய்ப்பாடியைச் சேர்ந்த யோகிகளும், முனிவர்களும் மெல்ல எழுந்திருந்து சம்ப்ரதாய முறைப்படி ‘ஹரிர்:ஹரி ஹரிர்:ஹரி’ என்று ஏழுமுறை சொல்ல – அது பேரொலியாக ஒலித்து நம் உள்ளத்தை குளிர்விக்கிறதே! இது கண்டுதான் நாங்களும் எழுந்திருந்து உன்னை எழுப்ப வந்துள்ளோம் – வந்து எங்களுடன் சேர்ந்து கொள் என்று அழைக்க அந்த சிறுமியும் வந்து சேர்ந்து கொள்கிறாள் என்பது சரித்திரம்!


இதில் உள்ளே தூங்குபவளுக்கும் வெளியே இருந்து எழுப்புகிறவர்களுக்கும் பக்தியில் வித்தியாசமில்லை. குடம் குடமாய் பாலூற்றினாலும் விஷம் குணம் மாறுவதில்லை – குடம் நிறையபாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்தமும் விஷமாகி விடுகிறது – அதைப்போல் க்ருஷ்ணனுடைய குணங்களை சிறிது அனுபவித்து விட்டாலும், நஞ்சுண்டாரைப்போலே சிலரை மயங்கப்பண்ணுவதும், சிலரை இருந்த இடத்திலே இருக்கவொட்டாதே துடிக்கப்பண்ணுகையாலும், சிலர் உறங்க, சிலர் குதூகலமாக துள்ளிக்கொண்டு சீக்கிரமாக எழுந்து வந்து விடுகிறார்கள் என்பது பெரியோர் வாக்கு.


இந்த பாசுரத்தில் சில முக்கியமான விஷயங்கள் – புள்ளரையன் கோவில் என்று சொல்லும்போது, பாரத காலமான துவாபர யுகத்தில் கோவில்கள் இருந்ததா? என்ற கேள்வி வரலாம். கண்ணனே இருக்கும்போது வேறு கோவில் எதற்கு என்றும் தோன்றலாம். கோவில் – அர்ச்சை வழிபாடு – அதற்கும் பலகாலம் முன்பிருந்தே இருந்தது. இவர்களுக்கு முந்தைய யுகமான த்ரேதா யுகத்திலேயே ஸ்ரீராமன் திருவரங்கத்து பெருமானான அழகிய மணவாளனை ஸ்ரீரங்க நாதனை அர்ச்சாரூபமாக – அதற்கும் பல காலம் முந்தைய தனது குலதனமாக கொண்டு வைத்திருந்து பின் விபீஷணாழ்வானுக்கு வழங்கவில்லையா? அதனால் அர்ச்சிராதி மார்க்கம் என்றுமுள்ளது என்பது தேறும். அர்ச்சையில்தான் மனிதர்களான நாம் தெய்வத்தை உணரமுடியும். அர்ச்சையிடம் முதலில் சரணாகதி செய்துதான் பகவதனுக்ரஹத்தை பெறமுடியும் என்பது சித்தாந்தம்.


அடுத்து, முனிவர்களும் யோகிகளும் என்று பிரித்து சொன்னது – முனிவர்கள் தம் ஞானம் சுடர்விட அனுபவஸ்தர்களாய் பரமனை உணர்ந்தவர்கள் – யோகிகள் யோகாப்யாசத்தினால் பரமனை அடைய முயற்சிப்பவர்கள்! இன்னொரு விதமாக பார்த்தால் இருந்த இடத்திலிருந்தே தவம் செய்வோர் முனிவர். அங்குமிங்கும் அலைந்து உடலை வருத்திக்கொள்வோர் யோகியர். அவர்களெல்லாம் தம் ஹ்ருதய கமலத்துள் பரமன் பைய துயிலுவதை கண்டுகொண்டு அதற்காக அவனுக்கு அலுங்காமல் மெள்ள எழுந்து ஹரி நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள்! யோகமார்க்கத்தை குறிப்பால் உணர்த்தும்போது வெள்ளத்து அரவு என்று கோடி காட்டுகிறாள் ஆண்டாள்!
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 7


Dear Bhaktas, Today my posting is on Thirupavai Keesu keesu (கீசுகீசு என்றெங்கும்) Let us all say the “Kesava” Namam 7 times a day and this gives us blessings to overcome all the hurdles with blessings of Shri Krishna !!


பாடல் 7


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


Keesu keesu enru engum aanai(ch) chaaththaan kalandhu
Pesina pechcharavam kettilaiyo pey(p) penne
Kaasum pirappum kalakalappa(k) kai perththu
Vaasa narum kuzhal aaychchiyar maththinaal
Osai paduththa thayiraravam kettilaiyo
Naayaga(p) pen pillaay naaraayanan moorththi
Kesavanai(p) paadavum nee ketta kidaththiyo
Dhesamudaiyaay thiravelor embaavaay


விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள


மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.


பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.


Sounds wake us up from sleep. Andal asks the girl, can you not hear the sound of the birds that are chirping, conversing before the leave the company of each other in their nests and setting out on their own to search for their food ? The beautiful ornamented women of the cowherd community with fragrant tresses are up and at work churning the curds for butter, and as they churn the curds with their dainty hands can you not hear the sounds ? We think of you as our leader, but you are asleep, why are you not awake even as we sing the praise of the Lord Narayana as Kesava who vanquished the demon Kesi, Is the sound of our music lulling you to sleep instead of waking you up ? Please open the door !
 
திருப்பாவை(7).....!!!


கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து* வாச நறுங் குழல் ஆய்ச்சியர்* மத்தினால்-
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ* நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ* தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(7)


சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள்.


ஆண்டாள் இந்த பாடல் முழுவதுமே பலவிதமான ஒசைகளைப் பற்றி சொல்கிறாள் – பறவைகள் கத்து கின்றன, ஆய்ச்சியரின் தாலி மணி மாலைகள் முதலானவை எழுப்பும் ஓசை, அவர்கள் தயிர் கடையும் ஓசை என்று பலவிதமான ஒசைகளுடன் இவர்கள் கேசவனை பாடும் ஓசையும் சேர்ந்து ஒலிக்கிறது.


ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம் துணையுடன் பறந்து ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.


ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர் கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைகிறார்களாம்.


அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.


நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? பகவதனுபவத்தை உணர்ந்து அதனால் முகத்தில் ப்ரஹ்ம தேஜசை பெற்றவளே! ஹே தேஜஸ்வினி! கதவை திறந்து வந்து எங்களோடு இணைந்து கொள்! என்று அழைக்கிறார்கள்!


இப்பாடலில் உயர்ந்த க்ருஷ்ணானுபவம் இழையோடுகிறது. இங்கே எழுப்புகிறவர்கள் நினைப்பது ஒன்றாக நடந்தது வேறொன்றாக ஆயிற்று. இவர்கள் க்ருஷ்ணனை பாடினால் எழுந்திருப்பாள் என்று பார்த்தால், அவளோ அதை கேட்டுக்கொண்டே படுத்துக்கொண்டிருக்கிறாள்! கேசவன் என்று மார்கழி மாதத்துக்கான மூர்த்தியை சொல்லி, நம்மை துன்புறுத்திய கேசி போன்ற அசுரர்களை அழித்த கேசவனை பாட நீ வரவில்லையா என்று சொல்லி எழுப்புகிறார்கள்.


ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனல்லவா அவன் !
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 8


Dear Bhaktas, Today My posting in on the 8th hymn of Thirupavai Keezhvanam (கீழ்வானம்) Let us all sing this pasuram with blessings of Shri Varadharaja Perumal of Kancheepuram !!


பாடல் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


Keezhvanam vellendru erumai siruveedu
Meyvaan parandhanakan mikkulla pillaikalum
Povaan pogindrarai pogaamal katthu unnai
Koovuvan vandhu nindrom kodhugalamudaiya
Paavai ezhundirai paadi p parai kondu
Maavay pilandhanai mallarai mattiya
Devadi devanai sendru naam sevitthaal
Aavaa vendra rayndh arulelor empavai


விளக்கம்: திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.


பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.


Pointing out the signs of dawn ; the slow brightening of the lower skies, the buffaloes out to graze the tender dew laden grass, Sri Andal says to the next girl whom she is calling upon, - many of the girls are going out to worship, but leaving them aside, we are at your doorstep, please wake up and let’s get to the Lord ; the Lord who vanquished the demon kesi in the form of a horse, the Lord who defeated the wrestler demons, the Lord who is the king of all kings and devas. When we sing and pray and get to Him, He is going to be so pleased that we sought him out instead of Him coming to us, that He will joyfully bless us and remove all our deficiencies
 
திருப்பாவை(8).....!!!


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய-
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(8)


இப்போது ஆண்டாள் தன் குழுவான கோபிகைகளுடன் எழுப்ப செல்லும் பெண் ஒரு சிறந்த ஞானி. பகவானான கண்ணனுக்கு ப்ரியமானவள். அதனால் கோதுகலமுடைய பாவாய்! என்று அன்போடு அழைக்கிறாள். இங்கேயும் அந்த பெண்ணுடன் ஆண்டாள் ஒரு சம்பாஷணையில் ஈடுபடுகிறாள். ‘கீழ்வானம் வெளுத்து அருணோதயம் ஆகிறது… இன்னும் நீ எழுந்திருக்க வில்லையா?’ என்கிறாள் ஆண்டாள். இங்கே கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.


ஆண்டாள் கேட்ட கேள்விக்கு, உள்ளே இருந்த பெண் “இன்னும் பொழுது விடியவில்லை… கிருஷ்ணனை சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் விடியும் என்று கிழக்கே பார்த்து பார்த்து உங்கள் முகத்தினொளியின் ப்ரதிபலிப்பே உங்களுக்கு கீழ்வானம் வெளுத்தது போல் தோன்றுகிறது…” என்று சொல்ல, ஆண்டாள் சொல்கிறாள் “எருமைகள் சிறுவீடு மேய கிளம்பி விட்டது… வந்து பார்.” என்கிறாள். சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது? அவள் தன்னையே ஒரு கோபிகையாக பாவித்துக்கொண்டு கண்ணனை மனதார விரும்பியதுதான் காரணமாக இருக்கவேண்டும்.


அதற்கு அந்த பெண் சொல்கிறாள், ‘கோகுலத்தில் எருமை மட்டுமா இருக்கிறது… ஆடுகள், பசுக்கள், எருமைகள் எல்லாம்தான் இருக்கின்றன.. எருமை மட்டும் சிறு வீடு மேய கிளம்பிவிட்டது என்று நீங்கள் அன்யதா ஞானத்தினால் – விபரீத ஞானத்தினால் தவறாக புரிந்து கொண்டு சொல்கிறீர்கள்… உங்கள் முகத்தின் ஒளியில் இருள் விலக உங்களுக்கு எருமை நகர்வதுபோல் தோன்றுகிறது” என்கிறாள். “மிக்குள்ள பிள்ளைகளும் போவான்” – என்று ஆண்டாள், “நீ இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய்…, ஆய்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள்” என்கிறாள்.


இது தொடர்பாக ஒரு விஷயம். முதலில் எருமை சிறுவீடு மேய போவதை சொன்னது – எருமைகள் மிக மெதுவாக நகரும் – நடுவில் காணப்படும் சிறு குளம் குட்டை எல்லாவற்றிலும் விழுந்து எழுந்து போக வேண்டிய இடத்துக்கு போய் சேரும். இது போலே, இதர தேவதாந்தரங்களை நாடுபவர்கள், கண்ட வழிகளில் நுழைந்து தாமதித்து கடைசியாக மோக்ஷத்தை அடைகிறார்கள். ஆனால் பரமனான வாசுதேவனை அண்டிய அடியார்களோ நேரே ‘மிக்குள்ள பிள்ளைகளை போல’ சுலபமாகவும் சீக்கிரமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். அதற்கு பரமனின் க்ருபையும் கிடைக்கிறது.


இங்கே உள்ளே இருக்கிற கோபிகைப்பெண், “ஆய்ப்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் கிளம்பிவிட்டார்களா? இனிமேல் நான் வந்து என்ன செய்ய? நீங்கள் போங்கள்” என்கிறாள். ஆண்டாள், “போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய பாவாய்!” – “க்ருஷ்ணனுக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியவளான உன் புருஷகாரம் இல்லாது நாங்கள் எங்கே அவனை சென்று காண்பது… பாவாய், அதனால் நீ வரவில்லை என்று போகிறவர்களிடம் சொல்ல, த்ருக் என போகாமல் அனைவரும் நின்றார்கள்… உனக்காகவே எல்லோரும் காத்திருக்கிறோம்” என்றாள். அதாவது மற்ற கோபிகைகள் “திருவேங்கட யாத்திரை போலே, போகையே பரயோஜனமாகப் போகா நின்றார்கள்” என்றபடி எல்லோரும் இணைந்து செல்வோம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் க்ருஷ்ணனையே லட்சியமாக நினைத்து மற்ற எல்லாவற்றையும் மறந்து கிளம்பிவிட்டார்கள். “இந்த கோபிகை வரவில்லையே! இவள் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானவளாயிற்றே! மேலும், செய்யாதன செய்யோம் என்று சொன்னோமே, க்ருஷ்ணானுபவத்தை கூடியிருந்து குளிர்ந்து அனுபவிப்பது இருக்க இந்த கோபிகையை விட்டுவிட்டு போகலாமா?” என்று கேட்டு அவர்களை தடுத்து விட்டோம் என்கிறாள்.


“கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்!”, “மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், அவன் நீ வந்திருக்கிறாயா என்று ஆராய்வன். அப்போது உன்னுடன் சேர்ந்து அவனை பாடி பறை கொண்டு வருவோம்”, என்கிறாள். கேசி என்கிற அசுரன் குதிரை உருக்கொண்டு வந்தான். பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்தான். க்ருஷ்ணன் இவர்களை வாயை கிழித்து கொன்றான். கம்சன் அவையில் மல்லர்களை வென்றான். அத்தகைய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், “நாம் இவர்களை தேடிச்சென்று ரக்ஷிப்பது இருக்க, இவர்களே நம்மை தேடி வந்துவிட்டார்களே! என்று ஹாஹா என்று ஆச்சரியப் பட்டு அருளுவன்” என்கிறாள். அந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள் என்பது சரித்ரம்.
 
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்* தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்* மாமீர் அவளை எழுப்பீரோ* உன் மகள் தான்- ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ* ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ*
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று* நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(9)


இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.


இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.


இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.


இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.


அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?


சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?


அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .


இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.


இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் - 12 - ஒன்பதாவது பாசுரம்


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்


மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீ அவளை எழிப்பீரோ?. உன் மகள் தான்


ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ
ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ


மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்


9 ம் பாடலில், வரும்போது கிருஷ்ணன் வந்திடட்டும் என்ற செல்வ மிடுக்கோடு பேசிடும் ஓரு பெண்ணை துயில் எழுப்பிறார்கள். வெளியில் மிடுக்கோடு கிடந்தாலும் உள்ளுக்குள் கிருஷ்ணனை அனுபவித்துக் கிடப்பவள் அவள்.


வெளியில் நிற்பவர்கள் இளையாழ்வானான பரதனைப் போலவும், ஆச்சார்யாதி களாகவும் காத்துக் கிடக்க
உள்ளே கிடப்பவள், சாக்ஷத் எம்பெருமான் போல நடந்து கொள்கிறாள்.


'தூமணி மாடத்து' - தூய்மையான மணிகளால் எழுப்பப்பட்ட மாடம் (மாளிகை). உள்ளே இருப்பவள்
உயர்ந்ததான ஒரு மாளிகைக்குள் கிடக்கிறாள். வெளியில் இருந்து வந்தவர்கள், கிருஷ்ணனுடைய நினைவைக் கூட ஒரு நிமிடம் மறந்து, மாளிகையின் அழகிலே மெய்ம்மறந்து நிற்கிறார்கள்.


நம் மனம் தான் தூமணி மாடம். அதில் தெளிவும் நிறைவும் இருந்தால் சுற்றிலும் ஒளிர்ந்து கிடக்கும்.


'சுற்றும் விளக்கெரிய' மாளிகையைச் சுற்றிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணன் வந்தானானால், தன் கையைப் பிடித்துக் கொண்டு விளையாடும் வகையில் விளக்கும் படுக்கையும் தயாராயிருந்ததை மாளிகைக்கு, வெளியிருந்தவர்கள் காண்கிறார்கள்.


திருச் சித்திரக் கூடத்திலுள்ளே, பிராட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு எம்பெருமான் உலவியது போலே, இங்கும் உள்ளே உள்ளவளின் கையைப் பிடித்துக் கொண்டு உலவும் வண்ணம், மாளிகையில், படுக்கையும் விளக்குமாய் இருக்கும் ஏற்பாட்டைக் காண்கிறார்கள்.


'தூபம் கமழ' மாளிகைக்கு உள்ளும் வெளியும் அகிற்புகை பரவிக் கிடந்தது. பரிமளம் என்ற உயர்ந்த வஸ்துக்களால் கிளம்பிய, நறுமணப் புகை, புகைவதே தெரியாமல் நறுமணம் மட்டும் தான் உணர பெறுகிறது நம்மைப் பொருத்த வரையில் பரிமளம் விசேஷமானது. ஆனால், கண்ணன் இருக்கும் இடத்தில் சகஜமான ஓன்று.


தூய்மையும் பக்தியும் நிறைந்து கிடக்கும் இதயத்தில் சுகந்தம் கமழ்ந்து கொண்டிருக்கும், என்பது உட்பொருள்.


'துயிலணை மேல் கண் வளரும்' வெளியில் நின்றவர்கள் நினைக்கிறார்கள். 'கிருஷ்ண விரஹத்தை ஆற்றக் கூடிய படுக்கையில், மெதுவாய் உறங்கிக் கிடக்கும் உள்ளிருப்பவள்


தங்களுக்குப் படுக்கையே கிருஷ்ணன் மேலுள்ள மோகத்தால் வெம்மையாய் உள்ள போதில், உள்ளே உள்ளவளுக்கு மென் படுக்கையாய் உள்ளது, 'மென் மலர்ப்பள்ளி வெம்பள்ளி' எண்ணுமாய் போலே.


உறக்கத்தை 'கண் வளர்தல்' என்று உயர்ந்த சொற்களால் வரிக்கிறார்கள். பகவத் சம்பந்தமான விஷயங்களில், விசேஷ சொற்களால் குறிக்க வேண்டும்.


ஒரு சமயம், பராசர பட்டரிடம் சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடி சேர்ந்தார்' என்று ஒரு உயர்ந்த வைணவப் பெரியவரின் உடல் முக்தியுற்றதைத் தெரிவித்தார்கள். பட்டர் ' உயரிய வைஷ்ணவத் தொண்டு செய்தவரை, திரு நாட்டுக்கு நடந்தார், என்று சொல்ல வேண்டாவோ' என்று திருத்தினார்.


'மாமான் மகளே' - முதலில், தங்களைப் போலவே ஒரு பக்தையாகவும், பின்னர் தோழியாகவும் உள்ளே இருப்பவளை விளித்தவர்கள், அவளோடு மனதினால் நெருங்கிட உறவு முறை சொல்லி அழைக்கிறார்கள்.


'மணிக்கதவம் தாள் திறவாய்' - மாளிகை எது, கதவு எது என்று தெரியாத வகையில் எல்லா இடத்திலும் நவ மணிகள் ஒளிர்வதானால், கதவுக்கும், சுவற்றுக்கும் வேறு பாடு தெரியாத காரனத்தால் உள்ளே இருப்பவளையே வந்து, கதவின் தாளைத் திறக்க, வெளியில் இருந்தவர்கள் பணிக்கிறார்கள்.


துரியோதனனுக்கு, நீருக்கும் ஸ்படிகத்துக்கும் வேற்றுமை தெரியாமல் தவிக்கும் போது, திரௌபதி சிரித்தாளாம்.


'மாமீ அவளை எழுப்பீரோ' - உள் இருந்தவள் பதில் ஏதும் சொல்லாததால், அவளுடைய அன்னையை உறவு முறையிட்டு அழைக்கிறார்கள்.


'தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்' என்னும் வகையில் உள்ளிருந்தவளின் அன்னையை வரித்து அவள் பெண்ணை எழுப்பிட வேண்டுகிறார்கள்.


'உன் மகள் தான் ஊமையோ' - மாமீ என்ற உரிமையோடு அழைத்த காரணத்தினால், 'உன் மகள் ஊமையா?', என்று சற்றே உரிமையோடு கேட்கிறார்கள்.


'அன்றிச் செவிடோ' - ஊமையாய் இருந்தால், எங்கள் பேச்சிற்குப் பதில் சொல்ல முடியாமல் போனால் கூட, காதும் கேட்காதவளோ?


'அனந்தலோ' - கிருஷ்ணனனோடு மானசீகமாக ஆடி ஆடிக் களைத்து தான் போனாளோ?. அதனால் அலுப்படைந்து விட்டாளோ?


'ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ' - யாரோ இவளை வேண்டுமென்றே தூக்கத்தில் ஆழ்த்தினார்களோ'. உறக்கத்திலிருந்து எழுந்திராத வண்ணம் யார் கட்டுப்பாடு செய்தார்கள். மந்திர மாயங்கள் தான் செய்தார்களோ.


'மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரந்தான் கொலோ' - உன்னுடைய மனதில் கண்ணன் மேல் வந்த காதல் மயக்கம் ஏற்றி உன் முகமே மந்திரத்தால் ஆட் படுத்தப் பட்டு அசைவின்றி இருக்கிறதோ?


மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று நாமம் பலவும் - உள்ளிருந்தவளின் அன்னை சொல்லுகிறாள். இப்படிக் காரணங்களை நீங்களே சொல்லி, அவளிடம் கேட்பதை விடவும், அந்தப் பரமனின் நாமங்களைச் சொன்னால் ஒரு சமயம் அவள் எழுந்திருக்கலாம் எனக் கூறிடுகிறாள்.


மேன்மைக்கு உரித்தான நாமங்களான:


'மாமாயன்' - கோபியர்களை வசியம் செய்து அவர்களிடம் பவ்யமாக இருப்பவன்.


'மாதவன்' - அவனுடைய சௌலப்ய காரணங்களுக்கு முக்கியமான யோக நிஷ்டைகள் அனுசந்தித்தவன்.


'வைகுந்தன்' - பெண்கள் ஆண்கள் பேதமில்லாமல் ஒரு நாட்டிலுள்ளவர் எல்லோருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். கருணைக்கும், மேன்மைக்கும் இடைப்பட்ட சரணாகதத்தை குறிக்கும் நாமம்.


'நவின்றேலோர் எம்பாவாய்' - அவனுடைய திரு நாமங்களை சொல்லி எழுப்புங்களேன் என்ற அன்வயமாகுமாம்.
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 10


Dear Bhaktas, Today My posting in on the 10th hymn of Thirupavai Nottru suvargam (நோற்றுச் சுவர்க்கம்) Today Andal and Rangamannar are blessing us:


பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


Nottru suvargam pugugindra ammanay
Mattramum thaaroro ? vassal thiravadhaar
Nattra thuzhay mudi Narayanan nammaal
Pottra parai tharum punniyanaal pandorunaal
Kootrathin vaay veezhnda kumbakarnanum
Thottram unakke perundhuyil than thandaano
Aattra anandhaludayaiy ! arungalame
Thettramaiy vandhu thiravelur empavai


விளக்கம்: யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.


பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.


Oh blessed girl, who by virtue of her earlier worships is destined to unite with the Lord in heaven, please open the door, why are you not even responding with words to our call ? Have you been handed over the sleep of the demon Kumbakarna ? Kumbakarna who was slain by Lord Rama, the embodiment of dharma who is adorned by tulsi mala, with fragrant hair, who is worshipped by us and is full of virtues. Oh sleepy slovenly girl, please wake up adorn yourself and come and open the door and join us in the Paavai Nonbu.
 
திருப்பாவை(10).....!!!


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்* நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒருநாள்-
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்* தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ*
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே* தேற்றமாய் வந்து திற- ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(10)


இந்த பாட்டில் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான கோபிகை ஒருத்தியை துயில் எழுப்ப பாடுகிறார்கள். இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.


இதற்கு வேறு விதமாகவும் அர்த்தங்கள் சொல்வர். சுவர்க்கானுபவம் என்பதை க்ருஷ்ணானுபவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். ஆண்டாள் அந்த கோபிகையை சுவர்க்கம் புகுந்து கொண்டிருக்கிற அம்மனே! என்கிறாள். சுவர்க்கத்தில் புகுந்துவிட்ட என்றோ, புக போகின்ற என்றோ சொல்லாமல் புகுகின்ற – புகுந்து கொண்டிருக்கிற என்று சுகத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற ஸ்வாமிநியாக – அம்மனாக – தலைவியாக இந்த கோபிகை இருக்கிறாள். இப்படி ஆனந்தத்தில் முழ்கி நமக்கு வாசலும் திறக்காமல், உள்ளே இருந்தபடியே பதிலும் சொல்லாமலிருக்கிறாயே! என்கிறாள் ஆண்டாள்.


இப்போது ஆண்டாளுக்கு சந்தேகம். “ஏன் வாசல் திறக்கவில்லை? உள்ளே கண்ணன் இருக்கிறானோ? அதனால்தான் திறக்க மறுக்கிறாயா?” என்று கேட்க, அவள் உள்ளிருந்தே “கண்ணன் இங்கு இல்லை…” என்கிறாள். ஆண்டாள் “அதுதான் அவன் சூடும் மணம் மிகுந்த திருத்துழாய் – துளசியின் மணம் காட்டிக்கொடுக்கிறதே?” என்கிறாள். அதற்கு அவள் “கண்ணன் உங்களுக்கு தெரியாமல் எப்படி என் வீட்டிற்குள் வரமுடியும்… ” என்று சொல்ல, “அவன் அந்தர்யாமியான நாராயணன் அல்லவா?.. அவன் எதனுள்ளும் இருக்கிறான். சேஷத்வத்தை நமக்கு மீட்டு கொடுக்கும் தர்ம ஸ்வரூபம் அல்லவா அவன்” என்று ஆண்டாள் சொல்கிறாள்.


இதற்கும் அந்த கோபிகையிடமிருந்து பதில் வராமல் போகவே, “கண்ணனைச் சொல்லவும் மறுபடியும் கனவு காண போய்விட்டாளோ” என்று பயந்து, ஆண்டாள் ராமாவதாரத்தின் போது நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். இந்த பெண் இப்படி தூங்குகிறதே! கும்பகர்ணனுக்கும் இவளுக்கும் போட்டி வைத்து கும்பகர்ணன் தோற்றுப்போய் தன் தூக்கத்தையும் இவளிடம் சமர்பித்து விட்டானோ? அவன் அந்ய தேவதாந்தரங்களிடம் ‘நித்யத்வம்’ கேட்கப்போய் நா பிறழ்ந்து ‘நித்ரத்வம்’ கேட்டு கூற்றத்தின் வாய் வீழ்ந்தவனாயிற்றே! இவளும், தர்ம ஸ்வரூபமான ஸம்ஸ்த கல்யாண குண பூர்ணனான நாராயணனிடம் ‘நித்ய சேஷத்வம்’ கேட்பதிருக்க, இங்கே நித்ரையில் இருக்கிறாளே! என்று சொல்லி புலம்புகிறாள்.


கிள்ளி களைந்தான், வாய் கீண்டான் என்றெல்லாம் பெருமான் அரக்கர்களை அழித்த கதையை சொல்கிற ஆண்டாள் இங்கே மட்டும் கூற்றத்தின் வாய் வீழ்ந்தான் என்று கும்பகர்ணன் தானே போய் வீழ்ந்ததாக ஏன் சொல்கிறாள்? ஏனென்றால் மற்ற அரக்கர்கள் எல்லாம் எதிர் நிற்பது பரமன் என்று அறியவில்லை. ஆனால் கும்பகர்ணன் அறிந்தே போய் வீழ்ந்தான். ராவணனே வந்து சரணடைந்தாலும், அவனுக்கு சரணாகதி அளித்து ரக்ஷிப்பேன் என்று சொன்ன கருணா சாகரத்தை – ‘தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து, சாவரைப் போலே’ – என்று தெரிந்தே வந்து வீழ்ந்து யமனுலகம் அடைந்தான்.


ஆற்ற அனந்தலுடையாய்! கண்ணனைக் கைக்கொண்ட ஒரு கர்வத்தில் இருக்கிறாயோ! நீ சாதாரணப்பட்டவள் இல்லை… அருங்கலம். பகவத் அனுக்ரஹத்துக்கு உக்தமான பாத்திரமானவள் நீ! அந்த ராமாவதாரத்தில் ராமனின் தூதனாக லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு அவன் கடமையை நினைவூட்ட வந்தபோது, தாரையானவள் தன் ஆடைகள் கலைந்த நிலையிலேயே வந்து நின்றாள். நீ அப்படி செய்து விடாதே! இங்கே கோபிகைகள் ஏராளமானோர் இருக்கிறோம்.. அதனால் தேற்றமாய்-திருத்தமாய் வந்து கதவைத் திற! என்று சொல்ல அந்த பெண்ணும் இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.


இதில் உள்ள முக்யமான தத்வ விசாரம் ஒன்றை பெரியோர் அருளியிருக்கிறார்கள். இங்கே இவர்கள் பகவதானுபத்திற்காக த்வரையுடன் துடிக்கிறார்கள். அங்கே அவளோ நிச்சிந்தையாக தூங்குகிறாள். இதில் இவர்கள், ‘பரமனை எப்படி அடைவது? எப்போது அடைவது?’ என்று துடிக்கிறார்கள். அவளோ, ‘மோக்ஷமெனும் வீடுபேற்றை தருவது அவன் கருணையல்லவா? நாம் என்ன செய்துவிட முடியும்?’ என்று கிடக்கிறாள். வெளியே இருப்பவர்களுக்கு அவனே ப்ராப்யம். அவனே பேறு. அவனை அடைவதே வீடுபேறு. உள்ளே இருப்பவளுக்கு அவனே ப்ராபகன். வீடுபேற்றை அளிப்பவன். தன்னையே அளிப்பதானாலும் அவனே அளிக்கவல்லவன். சுருக்கமாக வெளியே இருப்பவர்கள் ‘அவனன்றோ பேறு’ என்கிறார்கள் – அவனை அடைய துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவள் ‘அவனாலன்றோ பேறு’ என்று கொண்டிருக்கிறாள் – அதனால் அவன் தரும்போது தரட்டும் என்று கிடக்கிறாள். இரண்டுமே சரிதான். சிலரை துடிக்க வைப்பதும், சிலரை நிச்சிந்தையாக நிஷ்காம்யமாக இருக்க வைப்பதும் அவனது லீலை அல்லவா!
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை – 11


Dear Bhaktas, Today My posting in on the 11th Pasuram of Kattru karavai (கற்றுக் கறவைக்) Today let’s having the blessings of Shri Krishna while reading this pasuram:


பாடல் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


Kattru karavai kanangal pala karandhu
Settrar thiralazhiya chendru seruchcheyyum
Kuttramondrilladha kovalar tham porkodiye
Puttravalgul punamayila podharay
Suttratthu thozhi marellarum vandhu nin
Muttram pugundhu migilvannan per paada
Chittradhe pesadhe selvap pendatti nee
Ettrukk urangum porulelor empavai.


விளக்கம்: நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?


We are all blessed to be in this land and community of Lord Krishna, You are the unblemished golden jewel of the cowherds who have milked their many cows and are capable of vanquishing their enemies in battle. Oh beautiful one, all your friends are gathered in your yard, singing the praise of the cloud like dark skinned Lord, and how do you still sleep and not wake up to join the worship ?
 
திருப்பாவை(11).....!!!


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே* புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்*
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து* நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்*
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி* நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.


ஸ்ரீஆண்டாள் �� திருப்பாவை(11)


இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். அவ்வளவு பசுக்கள். கற்றுக்கறவை என்ற பதத்தில் சிறிய கன்றாக இருக்கும்போதே கன்றை ஈன்று பால் சுரக்க ஆர்ம்பித்துவிட்ட பசுக்கள் என்றும் அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.


இந்த பெண்ணின் தகப்பனார் இவ்வளவு பசுக்கள் இருக்கிறதே என்று சிறிதும் ஆயாசப்படாமல், தமக்கு தேவையானது போக, மீதமுள்ள பசுக்களையும் அவைகள் மடியில் பால் கட்டி துன்பப்படாமல் இருப்பதற்காகப் பாலை கறந்து விடுவாராம். அதோடு மட்டும் அல்ல… அவர் இந்த திருவாய்ப்பாடிக்கும் கண்ணனுக்கும் எதிரிகளாயிருப்பவர்களை அவர்கள் பலத்தை அழித்து அவர்களை குன்றிப்போக செய்து விடுவாராம். அத்தகைய எதிரிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை அடக்கிவிடுவாராம். தானுண்டு தன் வேலையுண்டு என்று பால் கறக்கும் இடையருக்கு ஏது எதிரி என்றால் – கண்ணனுக்கு யார் எதிரியோ அவர்களே இவர்களுக்கும் எதிரிகள். கண்ணனுக்கு என்ன ஒரு எதிரியா.. இரண்டு எதிரியா.. எவ்வளவோ அசுரர்கள் – அதனால் இன்னார் என்று சொல்லாமல் செற்றார் என்று பொதுவாகச் சொல்கிறாள் ஆண்டாள்.


இந்த கோபாலர் தம் கடமையில் கர்ம யோகியைப்போல் கண்ணாயிருப்பார். வர்ணாச்ரம தர்மங்களை கடைபிடிப்பவர். நல்ல அனுஷ்டானத்தைக் கொண்டவர். கண்ணனுக்கு எதிரிகள் இருப்பரேல் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அவர்களுடன் போரிடக்கூடியவாராய் பலமும் தைரியமும் மிகுந்தவர். அதோடு எதிரிகள் திறலழிந்தபின் – அதாவது அவர்கள் கையில் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணிகளாக நின்றுவிட்டால் அவர்களை எதுவும் செய்வதில்லை. திறன் இருக்கிற எதிரியுடன் மோதி அவன் திறனை அழிக்ககூடிய சாமர்த்தியம் உள்ளவர். ஞான பல ஐஸ்வர்ய சித்திகளை பெற்றவர். அப்படிப்பட்ட குற்றமே இல்லாத கோவலர் – இடையர் வீட்டில் பொற்கொடியாக பிறந்தவளே! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.


அடுத்து புற்றரவல்குல் புனமயிலே! போதராய்! என்கிறாள். ‘எவ்வளவு அழகான பெண் நீ!’. பாம்பு நுழையும் புற்றைப்போல இடையை உடைய பெண்ணே! வியாக்கியானத்தில் ‘புறம்பே புறப்பட்டு புழுதியடைந்த உடம்பன்றிக்கே தன்னிலத்திலே வர்த்திக்கிற ஸர்ப்பத்தினுடைய பணமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையும் உடைய நிதம்ப ப்ரதேசத்தை உடையவளே’ என்று பூர்வாசார்யர் அருளியிருக்கிறார்.


பூர்வசார்யர்கள் ஸ்வாபதேசமாக சில குறியீடுகளை விளக்கியிருக்கிறார்கள் – அதாவது திருப்பாவையில் இடையை குறிப்பிடும் இடங்கள் வைராக்கியத்தை குறிக்கும் – இடை சிறுத்து இருப்பது போல் ஆசை சிறுத்து வைராக்கியம் வந்த நிலை. சிரசை, கண்களை சொல்லும்போது ஞானத்தை குறிக்கும் என்று விளக்கங்கள் சொல்வர்.


இந்த பெண்ணுக்கு மயில் தோகையைப்போன்ற விரிந்த அளகபாரம் – விரிந்த கூந்தல் உண்டாம். இவள் கண்ணனுக்கு மிகவும் அணுக்கமானவள் – ப்ரியமானவள். தேசமுடயாய் என்று வேறொரு கோபிகையை சொன்னாளே அதைப்போல் இவளது பக்தி உள்ளார்ந்த தானே சுடர்விடக்கூடியது என்று குறிப்பால் உணர்த்துகிறாள். பொற்கொடி, புனமயில் என்று சொல்லுவதெல்லாம், இவள் மெல்லிய இயல்பை உடையவள், கொழுகொம்பின்றி கொடி வாடியிருப்பது போலே க்ருஷ்ணன் இல்லாமல் இவள் வாடுகிறாள். க்ருஷ்ணனை அண்டியே உஜ்ஜீவனம் செய்யும் பரதந்த்ரை இவள் என்று உணர்த்துவதற்காக ஆண்டாள் சொல்கிறாள்.


அடுத்து, இந்த திருவாய்ப்பாடி முழுவதும் உள்ள கோபிகைகள் அனைவரும் பந்துக்கள் – பாகவத சம்பந்தம் உடையவர்கள். அப்படி உன் சுற்றமான தோழிமார் எல்லாரும் உன் முற்றத்தில் வந்து நின்று முகில் வண்ணனான கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். உன் வீட்டு முற்றம் கண்ணனுக்கு உகப்பானது. அதனால் எங்களுக்கு வந்து அங்கே நின்று அவன் பேர்பாடுவதில் ஒரு ஆனந்தம். நாங்கள் இங்கே உரக்க அவன் பேரை பாடிக்கொண்டிருக்க, நீ இடத்தை விட்டு நகராமல், பேசாமல், செல்வம் நிறைந்த பிராட்டியாக இருக்கிறாயே! இது பாகவதர்களுக்கான லக்ஷணமா? உன் உறக்கத்திற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டு அவளை ஆண்டாள் எழுப்ப அவளும் எழுந்து மற்ற பாகவத பெண்பிள்ளைகளுடன் சேர்ந்தாள்.
 
வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை - 12


Dear Bhaktas, Today My posting in on the 12th Pasuram of Kanaithilan kattrerumai (கனைத்திளங் கற்றெருமை) Today Let us have the blessing of MANARKUDI Rajagopalan:


பாடல் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


Kanaithilan kattrerumai kandrukk irangi
Ninaitthu mulai vazhiye nindru paal sora
Nanaitthillam cherakkum narchelvan thangay
Panitthalai veezha nin vasar kadai pattri
Sinathinal thennilangai k komanai ch chettra
Manatthukkiniyanai paadavum nee vaay thiravaay
Initthan ezhunthiraay eedhenna perurakkam
Anaithilltharum arindhelor empavai


விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?


Sri Andal continuing her pursuit of waking up the girls to join her on the Margazhi Nonbu (worship) has enrolled 6 girls till now and is now on the door step of the 7th girl. The scene is the house of a cowherd whose magnificent cows are so laden with milk that when the milking is delayed by the cowherd, the cows thinking of their calves start secreting so much milk from their udders in overflow that the ground below becomes slushy. The reference here is that when anything is in great abundance it pours forth, abundance of devotion for the Lord, pours forth as divine music. So is the Lord’s compassion for his devotees that it can pour forth for us. Oh girl, we are standing in your courtyard with the early morning winter dew drenching our heads, and singing the praise of the Lord who destroyed the King of Lanka, the Lord who is so dear to our hearts and you are not even responding ! Everyone can see us here and you are in such deep sleep, wake up girl and join us for the worship
 

Latest ads

Back
Top