நாச்சியார் திருக்கோலம்
நாச்சியார் திருக்கோலம்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
வரும் 17.12.2018 அன்று நம்பெருமாள் மோஹினி அலங்காரம்..!
எம்பெருமான் உறங்கும் சமயம் “முரன்“ என்னும் ஒரு அசுரன் அவரை அழிக்கவருகின்றான். அப்போது எம்பெருமானின் திருமேனியிலிருந்து ஒரு சக்தி வெளிப்பட்டு அவனை அழித்தது. அந்த சக்திதான் “மோஹினி அவதாரம்“.
தேவர்களை ரட்சிக்க அவர்களுக்கு அமுது கிடைக்க எடுத்த அவதாரமும் மோஹினி அவதாரமே.
ஆக தன்னை ரட்சித்துக்கொள்ளவும், தேவர்களை ரட்சிப்பதற்காகவும் எடுத்த ரட்சணத்தின் வடிவம்தான் “மோஹினி அவதாரம்“. இன்று நம்மையெல்லாம் ரட்சித்து நமக்கும் வைகுண்ட பேறு உய்ய, அரங்கன் மோஹினி அவதாரத்தில் காட்சித் தருகின்றான்.
என்னைப் பொறுத்தவரை “மோஹினி அவதாரம்“ என்ற வார்த்தையினை விட “நாச்சியார் திருக்கோலம்“ என்ற வார்த்தைதான் மிக மிகப் பொருத்தமானது..!
அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!
”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” - அரங்கன்
வினவுகின்றார்..!
தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!
“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!
எனன குறை கண்டாய் பட்டரே..?
”எவ்வளவுதான் கனகச்சிதமாக இந்த திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!
அபரிமித வாத்ஸல்யத்தோடு தாயார் - அடைக்கலம் புகுந்தார்க்கு “அஞ்சேல்” என்று அபயமளிக்கும், தஞ்சமளிக்கும் அரங்கன்..! இந்த திவ்யதம்பதிகளிருக்க இனி நமக்கு குறையேது..? இனியொரு பிறவியேது..?
அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஓடும் போது தாய்மை என்னும் பண்பு பூர்ணம் பெறுகின்றது...!
இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..!
அவன் இன்று “அரங்கத்தம்மா...!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்...! உய்வடைவோம்...!
நாச்சியார் திருக்கோலம்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
வரும் 17.12.2018 அன்று நம்பெருமாள் மோஹினி அலங்காரம்..!
எம்பெருமான் உறங்கும் சமயம் “முரன்“ என்னும் ஒரு அசுரன் அவரை அழிக்கவருகின்றான். அப்போது எம்பெருமானின் திருமேனியிலிருந்து ஒரு சக்தி வெளிப்பட்டு அவனை அழித்தது. அந்த சக்திதான் “மோஹினி அவதாரம்“.
தேவர்களை ரட்சிக்க அவர்களுக்கு அமுது கிடைக்க எடுத்த அவதாரமும் மோஹினி அவதாரமே.
ஆக தன்னை ரட்சித்துக்கொள்ளவும், தேவர்களை ரட்சிப்பதற்காகவும் எடுத்த ரட்சணத்தின் வடிவம்தான் “மோஹினி அவதாரம்“. இன்று நம்மையெல்லாம் ரட்சித்து நமக்கும் வைகுண்ட பேறு உய்ய, அரங்கன் மோஹினி அவதாரத்தில் காட்சித் தருகின்றான்.
என்னைப் பொறுத்தவரை “மோஹினி அவதாரம்“ என்ற வார்த்தையினை விட “நாச்சியார் திருக்கோலம்“ என்ற வார்த்தைதான் மிக மிகப் பொருத்தமானது..!
அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!
”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” - அரங்கன்
வினவுகின்றார்..!
தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!
“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!
எனன குறை கண்டாய் பட்டரே..?
”எவ்வளவுதான் கனகச்சிதமாக இந்த திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!
அபரிமித வாத்ஸல்யத்தோடு தாயார் - அடைக்கலம் புகுந்தார்க்கு “அஞ்சேல்” என்று அபயமளிக்கும், தஞ்சமளிக்கும் அரங்கன்..! இந்த திவ்யதம்பதிகளிருக்க இனி நமக்கு குறையேது..? இனியொரு பிறவியேது..?
அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஓடும் போது தாய்மை என்னும் பண்பு பூர்ணம் பெறுகின்றது...!
இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..!
அவன் இன்று “அரங்கத்தம்மா...!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்...! உய்வடைவோம்...!