பகல் பத்து திருமொழி நான்காம் நாள் !
பகல் பத்து திருமொழி நான்காம் நாள் !
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !
கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே.
ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரியதொரு பரதேவதையினுடைய
காட்சியிலே பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்) அசலாக இருந்துகொண்டு
புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்மேல் வீசுங்கள்.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*- கண்ணபிரானுடைய காட்சியிலேயே பழகிக்கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் ஹிதோபதேஸம் செய்வதானது புண்ணிலே புளிரஸத்தைச் சொரியுமா போலேயிராநின்றது, ‘பெண்ணே! நீ அப்படியிருந்தால் அழகாயிருக்கும், இப்படியிருந்தால் அழகாயிருக்கும்‘ என்று நீங்கள் எனக்குச் சொல்லுகிறவார்த்தைகள் போதும், எனக்குநீங்கள் ஒன்றும் அழகுபேசவேண்டா, உண்மையாக எனக்கு ஏதாவது நன்மைபெறுவிக்க வேணுமென்ற கருத்து உங்களுக்குண்டாகில், பெண்பிறந்தார் படும்பாட்டை அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையிற் பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தாலேவீசி என்னுடைய தாபத்தைத் தணிக்கப்பாருங்கள் என்கிறாள்.
நீயே எனக்கு ஸர்வவிதாக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை இவ்விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி மிக்க நன்றியறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனேயன்றி உன்னைச் சிறிதும் குறை கூறமாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்குகிறார்.
பகல் பத்து திருமொழி நான்காம் நாள் !
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !
கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே.
ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரியதொரு பரதேவதையினுடைய
காட்சியிலே பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்) அசலாக இருந்துகொண்டு
புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்மேல் வீசுங்கள்.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*- கண்ணபிரானுடைய காட்சியிலேயே பழகிக்கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் ஹிதோபதேஸம் செய்வதானது புண்ணிலே புளிரஸத்தைச் சொரியுமா போலேயிராநின்றது, ‘பெண்ணே! நீ அப்படியிருந்தால் அழகாயிருக்கும், இப்படியிருந்தால் அழகாயிருக்கும்‘ என்று நீங்கள் எனக்குச் சொல்லுகிறவார்த்தைகள் போதும், எனக்குநீங்கள் ஒன்றும் அழகுபேசவேண்டா, உண்மையாக எனக்கு ஏதாவது நன்மைபெறுவிக்க வேணுமென்ற கருத்து உங்களுக்குண்டாகில், பெண்பிறந்தார் படும்பாட்டை அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையிற் பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தாலேவீசி என்னுடைய தாபத்தைத் தணிக்கப்பாருங்கள் என்கிறாள்.
நீயே எனக்கு ஸர்வவிதாக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை இவ்விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி மிக்க நன்றியறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனேயன்றி உன்னைச் சிறிதும் குறை கூறமாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்குகிறார்.