நாள் தோறும் நாலாயிரம்
நாள் தோறும் நாலாயிரம்
06.12.18
(தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி)
கதிரவன் குணதிசைச்
சிகரம் வந்து அணைந்தான்*
கனையிருள்
அன்றது காலை அம்பொழுதாய்*
மதுவிரிந்து
ஒழுகின மாமலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி*
எதிர்திசை
நிறைந்தனர் இவரொடும்
புகுந்த*
இருங்களிறு ஈட்டமும் பிடியொடு முரசும்*
அதிர்தலில் அலைகடல் போன்றுளது
எங்கும்*
அரங்கத்தம்மா! பள்ளி
எழுந்தருளாயே. (917)
பொருள்: ஶ்ரீரங்கநாதனே! சூரியன் கிழக்குத் திக்கிலுள்ள மலையின் உச்சியில் வந்து விட்டான். இருள் விலகி உதித்த விடிகாலையில் தாமரைப் பூக்கள் மலர்ந்து தேனைப் பொழிகின்றன. தேவர்களும் அரசர்களும் உன்னை நோக்கி ஒவ்வொருவராக நெருங்கி வந்து உனக்கு எதிரில் சிறிதளவு கூட இடமில்லை என்ற அளவுக்குக் கூடி நின்று உள்ளனர். இத்தனை பேரும் ஏறி வந்த யானைகளின் கூட்டமும் , மேலும் முரசொலியின் அதிர்வுகளும் சேர்த்து அலைகள் மோதும் கடல் போன்ற தோற்றம் எங்கும் உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் அறிதுயில் எழுவாயாக.
விளக்கம்:
முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கை ஆழ்வார்
" வெய்ய கதிரோன் விளக்காக " என்றாற்போலே, தொண்டரடிப் பொடியாழ்வாரும் சூரிய உதயத்துடன் முதல் பாசுரத்தைத் தொடங்குகிறார்.
உலக இருளை அகற்ற சூரியன் உதித்து விட்டான். எங்கள் மன இருளை அகற்ற நீர் பள்ளி எழுந்தருள வேண்டும் என்கிறார்.
கிழக்கு என்றால் கீழ்(குறைவு) என்றும் பொருள் கொள்ளலாம்.
நீ இருக்கும்
போது குறை யொன்றுமில்லை, எனவே கிழக்கு திசை என்று கூறாமல் குண திசை என்கிறார்.
மாமலர்- மா என்ற லட்சுமிக்கு உகந்த தாமரை மலர்கள். மாமலரெல்லாம் என்பது தாமரையுடன் முல்லை, மல்லிகை போன்றவற்றையும் குறிக்கும். அத்தனை மலர்களும் அரங்கனுக்குச் சமர்ப்பிக்க தேனைச் சுரக்கின்றன.
களிற்றீட்டமும் பிடியொடு முரசும் - களிறு - ஆண் யானை.
பிடி -பெண் யானை.
எங்கனம் ஆண் யானைகளுடன் பெண் யானைகளும் சேர்ந்து அரங்கனைக் காண வருகின்றனவோ, அங்கனம் தேவர்களுடன் தேவியரும், அரசர்களுடன் அரசியரும் மற்றும் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து நிறைந்து வந்துள்ளனர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக வர இன்னும் ஒரு காரணம்,
முன்பு தங்கள் தலைவனான கஜேந்திரனைக் காத்து ரட்சித்த ஶ்ரீமன்நாராயணனுக்கு நன்றி சொல்லத்தான் என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
===============
நாள் தோறும் நாலாயிரம்
06.12.18
(தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி)
கதிரவன் குணதிசைச்
சிகரம் வந்து அணைந்தான்*
கனையிருள்
அன்றது காலை அம்பொழுதாய்*
மதுவிரிந்து
ஒழுகின மாமலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி*
எதிர்திசை
நிறைந்தனர் இவரொடும்
புகுந்த*
இருங்களிறு ஈட்டமும் பிடியொடு முரசும்*
அதிர்தலில் அலைகடல் போன்றுளது
எங்கும்*
அரங்கத்தம்மா! பள்ளி
எழுந்தருளாயே. (917)
பொருள்: ஶ்ரீரங்கநாதனே! சூரியன் கிழக்குத் திக்கிலுள்ள மலையின் உச்சியில் வந்து விட்டான். இருள் விலகி உதித்த விடிகாலையில் தாமரைப் பூக்கள் மலர்ந்து தேனைப் பொழிகின்றன. தேவர்களும் அரசர்களும் உன்னை நோக்கி ஒவ்வொருவராக நெருங்கி வந்து உனக்கு எதிரில் சிறிதளவு கூட இடமில்லை என்ற அளவுக்குக் கூடி நின்று உள்ளனர். இத்தனை பேரும் ஏறி வந்த யானைகளின் கூட்டமும் , மேலும் முரசொலியின் அதிர்வுகளும் சேர்த்து அலைகள் மோதும் கடல் போன்ற தோற்றம் எங்கும் உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் அறிதுயில் எழுவாயாக.
விளக்கம்:
முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கை ஆழ்வார்
" வெய்ய கதிரோன் விளக்காக " என்றாற்போலே, தொண்டரடிப் பொடியாழ்வாரும் சூரிய உதயத்துடன் முதல் பாசுரத்தைத் தொடங்குகிறார்.
உலக இருளை அகற்ற சூரியன் உதித்து விட்டான். எங்கள் மன இருளை அகற்ற நீர் பள்ளி எழுந்தருள வேண்டும் என்கிறார்.
கிழக்கு என்றால் கீழ்(குறைவு) என்றும் பொருள் கொள்ளலாம்.
நீ இருக்கும்
போது குறை யொன்றுமில்லை, எனவே கிழக்கு திசை என்று கூறாமல் குண திசை என்கிறார்.
மாமலர்- மா என்ற லட்சுமிக்கு உகந்த தாமரை மலர்கள். மாமலரெல்லாம் என்பது தாமரையுடன் முல்லை, மல்லிகை போன்றவற்றையும் குறிக்கும். அத்தனை மலர்களும் அரங்கனுக்குச் சமர்ப்பிக்க தேனைச் சுரக்கின்றன.
களிற்றீட்டமும் பிடியொடு முரசும் - களிறு - ஆண் யானை.
பிடி -பெண் யானை.
எங்கனம் ஆண் யானைகளுடன் பெண் யானைகளும் சேர்ந்து அரங்கனைக் காண வருகின்றனவோ, அங்கனம் தேவர்களுடன் தேவியரும், அரசர்களுடன் அரசியரும் மற்றும் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து நிறைந்து வந்துள்ளனர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக வர இன்னும் ஒரு காரணம்,
முன்பு தங்கள் தலைவனான கஜேந்திரனைக் காத்து ரட்சித்த ஶ்ரீமன்நாராயணனுக்கு நன்றி சொல்லத்தான் என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
===============