நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயனம் முடிந்து ஆழ்வார் திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்களை அனத்யயன காலம் என்று சொல்வார்கள். அவ்வமயம் ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் கோவில்களிலும் வீடுகளிலும் திவ்யப் பிரபந்தங்களை சேவிக்க மாட்டார்கள். பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து செவி சாய்ப்பதால், நாமும் காத்திருப்போம். பொதுவாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரம்) தொடங்கி தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திரு நட்சத்திரம்) வரை இந்த அனத்யயன காலம் இருக்கும். கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும் பாராயணம் செய்வார்கள். மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவை அனுஷ்டிப்பார்கள். மற்ற எந்த நேரத்திலும் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள். அக்காலங்களில் வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி தேசிகப் பிரபந்தம் மற்றும் உபதேச இரத்தினமாலை ஆகியவை இல்லங்களில் பாராயணம் செய்யபடும்.
எனவே இன்று முதல் மார்கழி மாதத்தின் முதல் நாள் வரை தேசிக பிரபந்தமும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையும், மார்கழி முடிந்து தை மாத ஹஸ்த நடச்ததிரம் வரை மீண்டும் தேசிக பிரபந்தம் பதிவிடப்படும் என்று தெரிவித்தக் கொள்கிறேன். அதன்பின் நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்கள் வழக்கம்போல் பதிவிடப்படும் என்று தெரிவி்த்துக் கொள்கிறேன்.
என்னை ஆட்கொள்ளும் ஸ்ரீமந் நாராயணன் பாதங்களுக்கு சரணம்.
எனவே இன்று முதல் மார்கழி மாதத்தின் முதல் நாள் வரை தேசிக பிரபந்தமும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையும், மார்கழி முடிந்து தை மாத ஹஸ்த நடச்ததிரம் வரை மீண்டும் தேசிக பிரபந்தம் பதிவிடப்படும் என்று தெரிவித்தக் கொள்கிறேன். அதன்பின் நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்கள் வழக்கம்போல் பதிவிடப்படும் என்று தெரிவி்த்துக் கொள்கிறேன்.
என்னை ஆட்கொள்ளும் ஸ்ரீமந் நாராயணன் பாதங்களுக்கு சரணம்.