எட்டெழுத்து மந்திரம்
திருமங்கையன் திருமாலைக் கண்ட வேளையிலிருந்து திருமாலை எண்ணி எண்ணி, வாடி வாடி, ஆலயந்தோறும் பாடிப் பாடி பரவத் தொடங்குகின்றான் இதனை,
"வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்"
- பெரிய திருமொழி.
என்று திருமங்கை ஆழ்வார் பாடுவதன் மூலம் " ஓம் நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து மந்திரத்தைக் கண்டு கொண்டதாக எடுத்துரைக்கிறார். மேலும் இந்த எட்டெழுத்து மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு என்னென்ன நன்மை ஏற்படும் என்பதைப் பின் வருமாறு பட்டியலிடுகிறார்.
" குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்"
- பெரிய திருமொழி.
இப்பாடலில் எட்டெழுத்து மந்திரமான " ஓம் நமோ நாராயணா " என்னும் நாமம் உச்சரிப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவனவெனில் நல்ல குலத்தில் பிறக்கும் வாய்ப்பு கிட்டும், அனைத்து செல்வங்கள் கிட்டும், துன்பங்கள் தரைமட்டமாகும், சொர்க்கம் கிட்டும், வல்லமை கிட்டும், நாம் விரும்பும் எல்லாம் கிட்டும்.
தாய் செய்யும் நன்மைகளை விட அதிகப்படியான எல்லா நன்மைகளும் தரும் பேராற்றல் கொண்டது " நாராயணா " என்னும் நாமம் என்று இயம்புகிறார்.
திருமங்கையன் திருமாலைக் கண்ட வேளையிலிருந்து திருமாலை எண்ணி எண்ணி, வாடி வாடி, ஆலயந்தோறும் பாடிப் பாடி பரவத் தொடங்குகின்றான் இதனை,
"வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்"
- பெரிய திருமொழி.
என்று திருமங்கை ஆழ்வார் பாடுவதன் மூலம் " ஓம் நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து மந்திரத்தைக் கண்டு கொண்டதாக எடுத்துரைக்கிறார். மேலும் இந்த எட்டெழுத்து மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு என்னென்ன நன்மை ஏற்படும் என்பதைப் பின் வருமாறு பட்டியலிடுகிறார்.
" குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்"
- பெரிய திருமொழி.
இப்பாடலில் எட்டெழுத்து மந்திரமான " ஓம் நமோ நாராயணா " என்னும் நாமம் உச்சரிப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவனவெனில் நல்ல குலத்தில் பிறக்கும் வாய்ப்பு கிட்டும், அனைத்து செல்வங்கள் கிட்டும், துன்பங்கள் தரைமட்டமாகும், சொர்க்கம் கிட்டும், வல்லமை கிட்டும், நாம் விரும்பும் எல்லாம் கிட்டும்.
தாய் செய்யும் நன்மைகளை விட அதிகப்படியான எல்லா நன்மைகளும் தரும் பேராற்றல் கொண்டது " நாராயணா " என்னும் நாமம் என்று இயம்புகிறார்.