ஐப்பசி கடைமுழுக்கு புனித நீராடல்
தென்கயிலாயம் எனும் திருவையாறு காவிரியில் நாளை ஐப்பசி கடைமுழுக்கு புனித நீராடல் நடக்கிறது. மறுநாள் முடவன் முழுக்கு நடக்கிறது.
ஐப்பசி மாதம் எனும் துலாமாதம் முழுவதும் காவிரி ஆற்றில் நீராடுவதை துலாஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி முதல் நாளிலிருந்து திருவையாறு காவிரி ஆற்றில் நீராட ஆரம்பித்து கடைசி நாளான 30-ம் நாளில் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கடைசியாக நீராடும் கடைமுழுக்கு மிகவும் சிறந்தது.
ஐப்பசி மாதம் திருவையாறு புஷ்யமண்டபதுறை காவிரி ஆற்றில் சுவாமி தீர்த்தம் கொடுப்பது மிகவும் விஷேசமானது. கடைமுழுக்கு தினமான நாளை காலை புஷ்யமண்டபதுறை காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர். மறுநாள்
(17-ந்தேதி சனிக்கிழமை) முடவன்முழுக்கு அனுசரிக்கப்படுகிறது.
பக்தர்கள் கடைமுழுக்கு நாளில் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி தானம் செய்வர். பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள், மற்றும் வெகுதொலைவிலிருந்து வரும் முடவர்கள் அன்று திருவையாறு காவிரி ஆற்றில் நீராடும் பாக்கியம் கிடைக்காதது குறித்து ஸ்ரீ ஐயாறப்பரிடம் முறையிட்டு துலாஸ்நானம் செய்து இறைவனை தரிசிக்கும் பாக்கியத்தை தமக்கும் கொடுத்து அருளுமாறு வேண்டினார்கள்.
இதன்படி இறைவன் மறுநாள் கார்த்திகை முதல்நாளில் இவர்கள் துலாஸ்நானம் செய்து தன்னை தரிசிக்கலாம் என்று அருளினார். இதன்படி கடைமுழுக்கு நாளுக்கு மறுநாள் கார்த்திகை 1-ம் தேதி சனிக்கிழமை அன்று துலாஸ்நானம் செய்பவர்களுக்காக முடவன் முழுக்கு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடைமுழுக்கு மற்றும் முடவன்முழுக்கு ஏற்பாடுகளை ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
தென்கயிலாயம் எனும் திருவையாறு காவிரியில் நாளை ஐப்பசி கடைமுழுக்கு புனித நீராடல் நடக்கிறது. மறுநாள் முடவன் முழுக்கு நடக்கிறது.
ஐப்பசி மாதம் எனும் துலாமாதம் முழுவதும் காவிரி ஆற்றில் நீராடுவதை துலாஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி முதல் நாளிலிருந்து திருவையாறு காவிரி ஆற்றில் நீராட ஆரம்பித்து கடைசி நாளான 30-ம் நாளில் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கடைசியாக நீராடும் கடைமுழுக்கு மிகவும் சிறந்தது.
ஐப்பசி மாதம் திருவையாறு புஷ்யமண்டபதுறை காவிரி ஆற்றில் சுவாமி தீர்த்தம் கொடுப்பது மிகவும் விஷேசமானது. கடைமுழுக்கு தினமான நாளை காலை புஷ்யமண்டபதுறை காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர். மறுநாள்
(17-ந்தேதி சனிக்கிழமை) முடவன்முழுக்கு அனுசரிக்கப்படுகிறது.
பக்தர்கள் கடைமுழுக்கு நாளில் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி தானம் செய்வர். பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள், மற்றும் வெகுதொலைவிலிருந்து வரும் முடவர்கள் அன்று திருவையாறு காவிரி ஆற்றில் நீராடும் பாக்கியம் கிடைக்காதது குறித்து ஸ்ரீ ஐயாறப்பரிடம் முறையிட்டு துலாஸ்நானம் செய்து இறைவனை தரிசிக்கும் பாக்கியத்தை தமக்கும் கொடுத்து அருளுமாறு வேண்டினார்கள்.
இதன்படி இறைவன் மறுநாள் கார்த்திகை முதல்நாளில் இவர்கள் துலாஸ்நானம் செய்து தன்னை தரிசிக்கலாம் என்று அருளினார். இதன்படி கடைமுழுக்கு நாளுக்கு மறுநாள் கார்த்திகை 1-ம் தேதி சனிக்கிழமை அன்று துலாஸ்நானம் செய்பவர்களுக்காக முடவன் முழுக்கு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடைமுழுக்கு மற்றும் முடவன்முழுக்கு ஏற்பாடுகளை ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.