• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிள்ளை லோகாச்சாரியார் அருளிச்செய்த ஸ்ர&

பிள்ளை லோகாச்சாரியார் அருளிச்செய்த ஸ்ர&

பிள்ளை லோகாச்சாரியார்
அருளிச்செய்த ஸ்ரீ வசனபூஷணம்




பிள்ளை லோகாச்சாரியார்
தன்னுடைய ஸ்ரீ வசனபூஷணத்தில்,
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அநுகூல
ஸஹவாசமும்,
ப்ரதிகூல ஸஹவாச நிவ்ருத்தியும்
வேண்டும் என்கின்றார்.
அதாவது
நமக்கு சாதகமானவர்கள் கூட சேர்ந்திருத்தலும்,
நமக்கு பாதகமானவர்கள் கூட சேர்ந்திருத்தலை தவிர்த்தலும்
வேண்டும் என்கின்றார்.
மணவாள மாமுனிகளும் தன்னுடைய
உபதேச ரத்தினமாலையில்

நல்ல மணம் உள்ளதொன்றை
நண்ணி இருப்பதற்கு*
நல்லமணம் உண்டாம் நலமதது போல்* நல்லகுணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்குக்*
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு


விளக்கவுரை :
நல்ல வாசனையுள்ள ஒரு பொருளை சேர்ந்திருக்கும் ஒரு பொருளுக்கும்
நல்ல வாசனை உண்டாவதைப் போல், நல்ல குணம் உடையவர்களுடனே சேர்ந்துகொண்டு இருப்போருக்கு ,
அந்த சம்பந்தத்தினாலே , அவர்களோடு சேருபவர்களுக்கும் அந்த நல்லகுணமே உண்டாகும்.


தீய கந்தம் உள்ளததொன்றைச் சேர்ந்திருப்பதொன்றுக்குத்*
தீயகந்தம் ஏறும் திறமதுபோல்*
தீய குணம் உடையோர் தங்கள் உடன்
கூடி இருப்பார்க்குக்*
குணம் அதுவேயாம் செறிவு கொண்டு


விளக்கவுரை :
துர்நாற்றம் உள்ள ஒரு பொருளை சேர்ந்திருக்கும் ஒரு பொருளுக்கும் துர்நாற்றம் ஏறுவதைப்போல்,
தீய குணமுடையவர்களுடன் சேர்ந்திருப்பவர்களுக்கும்,
அந்த சம்பந்தத்தினால் அந்த தீய குணமே உண்டாகும்.
என்று கூறுகிறார்.


ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சாதகமானவர்கள் யார்?
பாதகமானவர்கள் யார்?




சாதகமானவர்கள் யார்?
ஸ்ரீவசனபூஷண சூத்திரம் -


260, அநுகூலராகிறார் - ஜ்ஞாந பக்தி வைராக்கியங்கள் இட்டு மாறினாப் போலே, வடிவிலே தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்.


விளக்கம் :
ஸ்ரீஆளவந்தார் தன்னுடைய தாத்தா
ஸ்ரீமந் நாதமுனிகளை போற்றிப் புகழ்ந்து
உள்ளபடி,
ஞானமும், எம்பெருமானிடம் ஆழ்ந்த பக்தியும், உலக விஷயங்களில் வைராக்கியமும் உடையவர்களாய்,
நமக்கும் அவற்றை பெருகச் செய்பவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் தோற்றமே நமக்கு சாதகமானவர்களாக,
நமக்கு நலம் அருளுபவர்களாகக் காட்டும்.
பக்தியிலே மிக நாட்டமுடையவர்களாக
இருப்பார்கள்.
இவர்களே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சாதகமானவர்கள்.


இந்த சாதகமானவர்கள்
நலம் தருவார்கள்




சூத்திரம் 261 :
ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல்செய் பொசிந்து காட்டுமா போலே,
இவை இல்லாதவர்க்கு இவர்களோட்டை
ஸம்பந்தத்தாலே உறாவுதல் தீரக் கடவதாயிருக்கும்.


விளக்கம் :
ஒரு வயல் நிறைய தண்ணீர் நிரம்பி நின்றிருந்தால்,
பக்கத்து வயலிலும் தண்ணீர் கசிந்து அந்த வயலும் தண்ணீர் நிரம்பும்,
அதுபோல
ஞானம் பக்தி வைராக்கியம் நிறைந்த
ஸ்ரீ வைஷ்ணவர்களின் தொடர்பால்,
ஞானம் பக்தி வைராக்கியம் இல்லாதவர்களுக்கும் அவை உண்டாகும்.


சூத்திரம் 262 :
ஆற்றுநீர் வரவு அணித்தானால்
அதுக்கீடான அடையாளங்கள் உண்டாகுமா போலே
இந்த ஸ்வபாவ விஷேசங்கள் தன்னடையே விளையக்கடவதாயிருக்கும்.


விளக்கம் :
ஆற்றில் வெள்ளநீர் நெருங்கி வந்துவிட்டதை,
ஆற்றுமணலில் நீர் கசிந்து பெருகுவதை வைத்து உணரலாம்.
அதைப்போல
நமக்கு பகவத்ப்ராப்தி
"பரமபத கைங்கர்யம் " கிடைப்பது நெருங்கும் போது,
ஞானம் பக்தி வைராக்கியம் முதலியவை
தானாகவே உண்டாகும்.


சூத்திரம் 263 :
இவற்றைக்கொண்டு சரம சரீரம் என்று தனக்குத்தானே அறுதியிடலாம்.


விளக்கம் :
எந்த முயற்சியும் இன்றி
ஞானம் பக்தி வைராக்கியம் முதலியவை
தானாகவே உண்டாகும் போது,
இந்த உடலே நமக்கு கடைசி உடல்
என்று நமக்கு நாமே
அறிந்து கொள்ளலாம்.


ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
பாதகமானவர்கள் யார் ?
?☘??????


சூத்திரம் 264 :
ப்ரதிகூலராகிறார் - தேஹாத்மாபிமானிகளும்,
ஸ்வதந்த்ரரும், உபயாந்தர நிஷ்டரும்,
ஸ்வப்ரயோஜநப்பரரும்.


விளக்கம்:
பாதகமானவர்கள் யார் யார் என்றால்,


உடலைத்தவிர ஆத்மா இருப்பதை அறியாமல்,
தன் உடல்மேல் பற்றுக்களோடு இருப்பவர்களும்,


ஆத்மா இருப்பதை அறிந்திருந்தாலும்,
உடலும் ஆத்மாவும் தனக்கு உரியது என்று நினைத்து தன்னிச்சையாக
நடப்பவர்களும்,


ஆத்மா இருப்பதை அறிந்திருந்தாலும்,
உடலும் ஆத்மாவும் தனக்கு உரியது அல்ல, எம்பெருமானுக்கே சொந்தமானது என்ற அறிவு இருந்தாலும்,
எம்பெருமானைத் தவிர
மற்றவர்களுக்கும் அடிமைப்பட்டு இருப்பவர்களும்,


எம்பெருமானைத் தவிர
மற்ற எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றுக்களையும்
வாசனையுடன் விட்டுவிட்டு எம்பெருமானே தஞ்சம் என்று சரணமடையாமல்,
கர்ம ஞான பக்தி யோகங்களாலே
எம்பெருமானை தன் சுயமுயற்சியால்
அடைய முயற்சி செய்பவர்களும்,


தாம் செய்கின்ற எல்லா காரியங்களும்,
பகவானுக்கு செய்கின்ற கைங்கர்யங்களும் ,
தனது இன்பத்திற்காகவே என்று இருப்பவர்களும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பாதகமானவர்கள்...
இவர்களோடு ஸஹவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது.


சாதகமானவர்களோடும் ஸஹவாசம்
வைத்துக் கொண்டு,
பாதகமானவர்களோடும் ஸஹவாசம்
வைத்துக் கொண்டு இருந்தால்
ஞானம் பக்தி வைராக்கியம்
ஒரு நாளும் வராது.
புனரபி ஜனனம்
புனரபி மரணம் என்று
மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கவேண்டும்
 

Latest ads

Back
Top