திருச்சந்தவிருத்தம் (104)
திருச்சந்தவிருத்தம் (104).....!!!
கடுங்கவந்தன் வக்கரன் கரன்முரன் சிரம்மவை*
இடந்துகூறு செய்த
பல்படைத்தடக்கை மாயனே!* கிடந்திருந்து நின்றியங்கு போதும் நின்ன பொற்கழல்*
தொடர்ந்துவிள்வி லாது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே.
ஸ்ரீதிருமழிசையாழ்வார் ♦ திருச்சந்தவிருத்தம் (104)
க்ரூரனான கபந்ததென்ன
தந்தவக்த்ரனென்ன
கரனென்ன முரனென்ன (இவர்களுடைய தலைகளை
சிந்ந பிந்நமாக்கினவனும்
பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
பெருமானே!
படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
தேவரீருடைய
அழகிய திருவடிகளையே
இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
தந்தருளவேணும்.
ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.
படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.
திருச்சந்தவிருத்தம் (104).....!!!
கடுங்கவந்தன் வக்கரன் கரன்முரன் சிரம்மவை*
இடந்துகூறு செய்த
பல்படைத்தடக்கை மாயனே!* கிடந்திருந்து நின்றியங்கு போதும் நின்ன பொற்கழல்*
தொடர்ந்துவிள்வி லாது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே.
ஸ்ரீதிருமழிசையாழ்வார் ♦ திருச்சந்தவிருத்தம் (104)
க்ரூரனான கபந்ததென்ன
தந்தவக்த்ரனென்ன
கரனென்ன முரனென்ன (இவர்களுடைய தலைகளை
சிந்ந பிந்நமாக்கினவனும்
பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
பெருமானே!
படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
தேவரீருடைய
அழகிய திருவடிகளையே
இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
தந்தருளவேணும்.
ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.
படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.