பஞ்சகல்பஸ்நானம்
கடுக்காய் தோல் நெல்லி முள்ளி கஸ்தூரி மஞ்சள் வேப்பங்கொட்டை மிளகு இந்த ஐந்தையும் பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்வது பஞ்ச கல்ப ஸ்நானம் என்பர்.
பரிசுத்தமான நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதை ஆண்டாள் 'தூயப் பெருநீர் யமுனை' என்றருளினாள். தர்ம சாஸ்த்ரப்படி ஸ்நானம் பஞ்சாங்கம் உச்யதே. ஸங்கல்பம், ஸுக்தபடனம், மார்ஜனம், தர்ப்பணம், வஸ்த்ர நிஷ்பீடனம் இவ்வைந்தும் உள்ளடக்கியது. பூர்ண ஸ்நானம். நீராடாமலும் ஜபம் செய்யாமலும் வைச்வதேவாதி சுத்தியில்லாமலும் உண்பவன் அசுத்தத்தை உண்கிறான்.
ஸங்கல்பம் : ஸங்கல்பம் செய்யாமல் ஸ்நானம் செய்பவர் தவளையாகப் பிறப்பர் என்கிறது மநுஸ்ம்ருதி.
ஸுக்தபடனம் : நீருக்குள் மூச்சடக்கி மூல மந்த்ர ஜபமோ அகமர்ஷணகுக்த ஜபமோ உச்சரித்துக் கொண்டே நீராடுதல்
மார்ஜனம் : துடைத்துக் கொள்ளுதல். துடைத்துக் கொண்டால்தான் ஸ்நானம் செய்த பலன் என்பதால் மார்ஜனம் என்பது நீராட்டத்தின் ஒரு அங்கமாகிறது.
தர்ப்பணம் : தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள்.
வஸ்த்ர நிஷ்பீடனம் : ஸ்நான சாடியை இடம் வலமாக பிழிதல். அகமர்ஷண ஜபம் பண்ணி நீரில் மூழ்கி பாபங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று எம்பெருமான் சந்த்ரனுக்கு கூறியுள்ளான். விச்வாமித்ரரின் குமாரர் பாபங்கள் தொலைய அந்தணர்கள் ஸ்நான காலத்தில் ஓதும் பதினேழு மந்த்ரங்கள் கொண்ட அகமர்ஷண ஸுக்தத்தை தமது தேஜோ பலத்தால் பகவானை உபாஸித்துப் பெற்று உலகினருக்கு உபதேசித்தபடியால் அம்மந்த்ரத்தை நினைவுகூர விச்வாமித்ரரின் குமாரர் அகமர்ஷணர் ஆனார்.
எம்பெருமான் அனைவரிலும் மேம்பட்டு நின்ற பெருமையானது நீரிலேயே வெளிப்பட்டன. எல்லா உலகையும் தாங்கும் ஆதி கூர்மமாகி உலகைக் காத்து அநேக சாஸ்த்ராத்தங்களை மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்தருளினான். அம்ருதமதனம் பண்ணிய போது அவன் பெருமை அறியாதவர்களாகவே "உங்கள் தெய்வம் ஆமையாகிற விலங்கானான்" என்று ஏசும்படி வருணனின் ஆயுதமான பாசங்களையுடையதான கடல்நீரிலே தன் முதுகில் மந்த்ரமலை சுழல்வது தனக்குப் பேறாக நினைத்து நீரில் மலை அமிழ்ந்து விடாதபடி கூர்ம ரூபத்தோடு அக்கடல் நீரிலேயே துயின்றான். திருப்பாற்கடலிலிருந்து பிராட்டி வெளியே வரும்போது தனது மென்மையான திருவடியை ஆதிகூர்மத்தின் முதுகுப் புறத்தில் ஊன்றி வைத்துத் தான் எழுந்தருளினானாம்.
ஒரு முறை திருக்கோட்டியூர் நம்பி ஓரிடத்தில் நீராட்டத்திற்குச் சென்ற சமயத்தில் அவரிடம் 'தேவரீர்.. ஸ்ரீ ஆளவந்தாரிடம் தஞ்சமாக நினைத்திருப்பது என்ன?' என்று கேட்டாராம் ஸ்ரீராமாநுஜர். அதற்கு நம்பி, ஸ்ரீஆளவந்தார் அகமர்ஷணம் பண்ணிக் கிடக்கும் போது ஆமை மணையை கவிழ்த்து போலே தெரிகின்ற அவருடைய முதுகுப் புறத்தை அவருடைய சொல்லும் நோக்கும் மாறிய பின் (அவர் திருநாட்டுக்கு எழுந்தருளிய பின்) அடியேனுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பேன். நீரும் அதையே தஞ்சமாக நினைத்திரும் "என்றருளினாராம். அதாவது ஆசார்யருடைய திருவடிதான் தஞ்சம் என்றில்லை. ஆசார்யரின் திருமேனியில் எந்த அவயமும் த்யானிப்பதற்குத் தக்கது. அது சிஷ்யனுக்கு பாபவிமோசனம் தான் என்று அர்த்தம். ஸ்ரீ ஆளவந்தார் அவ்வளவு பவித்ரமானவர் என்று காட்டியருளினார் திருக்கோட்டியூர் நம்பிகள்.
கடுக்காய் தோல் நெல்லி முள்ளி கஸ்தூரி மஞ்சள் வேப்பங்கொட்டை மிளகு இந்த ஐந்தையும் பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்வது பஞ்ச கல்ப ஸ்நானம் என்பர்.
பரிசுத்தமான நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதை ஆண்டாள் 'தூயப் பெருநீர் யமுனை' என்றருளினாள். தர்ம சாஸ்த்ரப்படி ஸ்நானம் பஞ்சாங்கம் உச்யதே. ஸங்கல்பம், ஸுக்தபடனம், மார்ஜனம், தர்ப்பணம், வஸ்த்ர நிஷ்பீடனம் இவ்வைந்தும் உள்ளடக்கியது. பூர்ண ஸ்நானம். நீராடாமலும் ஜபம் செய்யாமலும் வைச்வதேவாதி சுத்தியில்லாமலும் உண்பவன் அசுத்தத்தை உண்கிறான்.
ஸங்கல்பம் : ஸங்கல்பம் செய்யாமல் ஸ்நானம் செய்பவர் தவளையாகப் பிறப்பர் என்கிறது மநுஸ்ம்ருதி.
ஸுக்தபடனம் : நீருக்குள் மூச்சடக்கி மூல மந்த்ர ஜபமோ அகமர்ஷணகுக்த ஜபமோ உச்சரித்துக் கொண்டே நீராடுதல்
மார்ஜனம் : துடைத்துக் கொள்ளுதல். துடைத்துக் கொண்டால்தான் ஸ்நானம் செய்த பலன் என்பதால் மார்ஜனம் என்பது நீராட்டத்தின் ஒரு அங்கமாகிறது.
தர்ப்பணம் : தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள்.
வஸ்த்ர நிஷ்பீடனம் : ஸ்நான சாடியை இடம் வலமாக பிழிதல். அகமர்ஷண ஜபம் பண்ணி நீரில் மூழ்கி பாபங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று எம்பெருமான் சந்த்ரனுக்கு கூறியுள்ளான். விச்வாமித்ரரின் குமாரர் பாபங்கள் தொலைய அந்தணர்கள் ஸ்நான காலத்தில் ஓதும் பதினேழு மந்த்ரங்கள் கொண்ட அகமர்ஷண ஸுக்தத்தை தமது தேஜோ பலத்தால் பகவானை உபாஸித்துப் பெற்று உலகினருக்கு உபதேசித்தபடியால் அம்மந்த்ரத்தை நினைவுகூர விச்வாமித்ரரின் குமாரர் அகமர்ஷணர் ஆனார்.
எம்பெருமான் அனைவரிலும் மேம்பட்டு நின்ற பெருமையானது நீரிலேயே வெளிப்பட்டன. எல்லா உலகையும் தாங்கும் ஆதி கூர்மமாகி உலகைக் காத்து அநேக சாஸ்த்ராத்தங்களை மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்தருளினான். அம்ருதமதனம் பண்ணிய போது அவன் பெருமை அறியாதவர்களாகவே "உங்கள் தெய்வம் ஆமையாகிற விலங்கானான்" என்று ஏசும்படி வருணனின் ஆயுதமான பாசங்களையுடையதான கடல்நீரிலே தன் முதுகில் மந்த்ரமலை சுழல்வது தனக்குப் பேறாக நினைத்து நீரில் மலை அமிழ்ந்து விடாதபடி கூர்ம ரூபத்தோடு அக்கடல் நீரிலேயே துயின்றான். திருப்பாற்கடலிலிருந்து பிராட்டி வெளியே வரும்போது தனது மென்மையான திருவடியை ஆதிகூர்மத்தின் முதுகுப் புறத்தில் ஊன்றி வைத்துத் தான் எழுந்தருளினானாம்.
ஒரு முறை திருக்கோட்டியூர் நம்பி ஓரிடத்தில் நீராட்டத்திற்குச் சென்ற சமயத்தில் அவரிடம் 'தேவரீர்.. ஸ்ரீ ஆளவந்தாரிடம் தஞ்சமாக நினைத்திருப்பது என்ன?' என்று கேட்டாராம் ஸ்ரீராமாநுஜர். அதற்கு நம்பி, ஸ்ரீஆளவந்தார் அகமர்ஷணம் பண்ணிக் கிடக்கும் போது ஆமை மணையை கவிழ்த்து போலே தெரிகின்ற அவருடைய முதுகுப் புறத்தை அவருடைய சொல்லும் நோக்கும் மாறிய பின் (அவர் திருநாட்டுக்கு எழுந்தருளிய பின்) அடியேனுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பேன். நீரும் அதையே தஞ்சமாக நினைத்திரும் "என்றருளினாராம். அதாவது ஆசார்யருடைய திருவடிதான் தஞ்சம் என்றில்லை. ஆசார்யரின் திருமேனியில் எந்த அவயமும் த்யானிப்பதற்குத் தக்கது. அது சிஷ்யனுக்கு பாபவிமோசனம் தான் என்று அர்த்தம். ஸ்ரீ ஆளவந்தார் அவ்வளவு பவித்ரமானவர் என்று காட்டியருளினார் திருக்கோட்டியூர் நம்பிகள்.