• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சூதாட்ட நிகழ்வுகள்கூறும் தர்மம்

சூதாட்ட நிகழ்வுகள்கூறும் தர்மம்

சூதாட்ட நிகழ்வுகள்கூறும் தர்மம்


விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும்,
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் கடந்த பதிவில் பார்த்தோம் .


அவர் மகாநீதிமான்,
தருமத்திலிருந்துசிறிதளவும் நழுவாதவர் .
வில்லில் அவரை மிஞ்ச கிருஷ்ணனாலும்முடியாது. அப்படி இருக்க போர் என்று வந்து விட்டால் கௌரவர்கள் பக்கம் தான் போரிட வேண்டும் .அது அதனை சுலபம் இல்ல


அதே நேரத்தில் கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் கிருஷ்ணன்போட்ட திட்டங்கள்அவ்வளவு கடினமானது இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் .


பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை.


துரோணருக்குப் புத்திர பாசம்.


கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். தன் திறமையை நிரூபித்து அர்ஜுனனை விட பெரியவன் என்ற பெரும் புகழும் பெற வேண்டும் என்ற விருப்பம்


மேலும் இவர்கள் தர்மத்துக்குஎதிரான அணியில்இருந்ததால்
எல்லாரும்யுத்தத்தில்மரணம் அடையவேண்டும்என்றுவிதி நிர்ணயித்தது .


தர்ம சாஸ்திரம் கூறிய விதிபடி
எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும்,கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்தநிலையில்
வைத்துக்கொள்ள வேண்டும்.மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.? இல்லையே


திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும் போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள் . அதற்காக தர்மம் தீர்மானித்த தண்டனை — யுத்தத்தில் மரணம். தர்மம் விதுரர்க்கு அப்படி எளிதாக தண்டனை வழங்க இயலாதே.


ஏனெனில் விதுரர் அப்பழுக்கில்லாதவர்.
சூதாட்ட மன்றத்தில் மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து,துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி விதி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் யுதிஷ்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை -தர்மராஜர் (விதுரர்) சமநிலை
சரியாக வராதே.? .தர்மமே தர்மத்துக்கு எதிராக போரிட முடியும்மா ?


எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காக போராட வேண்டிய சூழ்நிலை. அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது.


விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.மஹாபாரதப் போருக்கு முடிவே கிடைத்திருக்காது .அவர்
கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.


சரி இதற்கும் விதுரருக்கும் விதுர நீதிக்கும் என்ன சம்பந்தம் ?


இருக்கிறது. மற்றவர்கள் போல் யார் பக்கம் தர்மம் இருக்கிறதோ அவர்களே ஜெயிக்கட்டும் என்று அவரால் இருந்து விட முடியவில்லை. உயிர் இழப்புகளை தடுக்க விரும்பினார் . அதற்காக அவர் இரு முடிவுகள் எடுத்தார் .


ஒன்று போரில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது .


மற்றொன்று எப்படியேனும் திருதராஷ்டிரனுக்கு அறிவுரை கூறி போரை நிறுத்துவது ?


போரில் தான் கலந்து கொல்லாமல் தவிர்ப்பதற்காக அவர் கிருஷ்ணனை வேண்டினார். விதுரர் பற்றி கிருஷ்ணனும் நன்கறிவர் .அதனால் அவருக்கு உதவ தூது எனும் பேரில் கிருஷ்ணனே நேரில் வந்தார் ,
அதற்காக கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார் . என்ன உபாயம் ?
அடுத்த பதிவில் பார்க்கலாம்
 

Latest ads

Back
Top