• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்புட்குழி

praveen

Life is a dream
Staff member
திருப்புட்குழி

மூலவர் "விஜயராகவப் பெருமாள்" தன் தொடையின் மீது ஜடாவுவை வைத்து அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம்


மூலவர்: விஜயராகவப் பெருமாள்


தாயார்: மரகதவல்லி, கோமளவல்லி

உற்சவர்: ஸ்ரீ ராமபிரான்


கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்


திசை: கிழக்கு


விமானம்: விஜயவீரகோடி விமானம்


தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்


மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்


ஊர்: காஞ்சிபுரம்


திருப்புட்குழி:-


ஒப்பற்ற நாதனாம் இறைவன் நாராயணன் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த சிறப்பு மிக்க ஓர் அவதாரம் இராமாவதாரம். அத்தகைய இராமவாதாரக் காலத்தில் தோன்றிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். "புள்" என்பதற்கு "பறவை" என்பது பொருள். "திரு" என்றால் "மரியாதை".


ஜடாயு என்ற பறவைக்கு இராமபிரான் ஊழியம் செய்த தலம் என்பதால் "திருப்புட்குழி" என்பது பெயர்.


தலவரலாறு :-


இராவணன் சீதா பிராட்டியை, சிறை எடுத்துச் செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டது.


இராவணனால் வெட்டப்பட்டு மரணத் தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த இராம, லட்சுமணரிடம் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியை தெரிவித்து மறைந்தது.


இராமபிரானின் தந்தை தசரதனுக்கு தோழர் ஜடாயு என்பது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் ஜடாயுவை சிறிய தந்தையாக எண்ணி தன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியை முதலியவற்றை ஜடாயுவிற்கு செய்தார்.


அவற்றை இத்தலத்தில் செய்ததாகவும், அதனால் இத்தீர்த்தம் "ஜடாயு புட்கரணி" என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


பெருமாள் கோவில்களில் திருமகள் தாயார் பெருமாள் சன்னிதிக்கு இடப்பக்கமாக சன்னிதி கொண்டு அருள்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மட்டும் வலது புறமாக சன்னதி கொண்டு அருள்கிறார்.


மூலவருக்கு அருகிலும் திருமகள் தலை சாய்ந்த நிலையில் இடமாகவும், பூமிதேவி வலமாகவும் காட்சி தருகின்றனர்.


தாயார் நிகழ்த்தும் அற்புதம் :-


இந்த மரகதவல்லித் தாயார் வறுத்த பயிறை முளைக்க வைக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக் கொண்டு இரவில்
உறங்க வேண்டும்.


விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


மங்களாசாசனம் :-


திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தில் 2 பாசுரங்கள்
பாடியருளியுள்ளார்.


"அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா
லென்னுள்ளம் மென்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ
நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை
நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே!!!"


தலசிறப்பு :-


மூலவர் தன் தொடையின் மீது ஜடாவுவை வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவிற்கும் சகல மரியாதை உண்டு.


ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலிபீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.


தாயார் சன்னதி பெருமாளின் இடப்பாகத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.


திருமகள் தாயார் தலை சாய்ந்த நிலையில் காட்சி தரும் திருத்தலம்.


இராமனுஜரின் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த ஊர்.


வறுத்த பயிரை முளைவித்து, குழந்தை வரம் அருளும் மரகதவல்லித்தாயார் !


ஜடாயுவுக்கு அந்திம காரியம் செய்த விஜயராகவன் !


உடையவர் ஸ்வாமி ராமானுஜர் யாதவப்ரகாசரிடம் வேதாந்த பாடம் படித்த கோயில் !


பித்ரு_தர்ப்பணத்திற்கு உகந்த ஒரு கோயில்


வழித்தடம் :-


காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 12 கீ.மீ தொலைவில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் அருகாமையிலேயே திவ்யதேசம் அமைந்துள்ளது.
 

Latest ads

Back
Top