• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்

praveen

Life is a dream
Staff member
அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்

அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்


மனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களை எட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம் இந்த எட்டு செயல்களை மையமாகக் கொண்டே மாந்திரீகம் உருவானது;மாந்திரீகத்திற்கு அஷ்டகர்மா என்று பெயர்;இந்த அஷ்டகர்மாக்களை இயக்குவது அஷ்ட பைரவப் பெருமான் களே! இந்த எட்டு செயல்களைக் கொண்டு 64 விதமான பாவச் செயல்களைச் செய்ய முடியும்;அதனால்,அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் அஷ்டாஷ்ட வடிவங்கள் எடுத்து 64 பேர்களாக தோன்றினர்;இந்த 64 பைரவர்களுக்கும் 64 தெய்வீக பெண் சக்திகள் துணை புரிகின்றனர்;இந்த 64 பைரவ தம்பதிகளில் முதன்மையானவர் உன்மத்த பைரவர்;இவரது துணையே வராகி!


வராகியின் வடிவங்களும் 64 ஆக இருக்கின்றன;இந்த 64 வடிவங்களில் முதன்மையானவர்கள் எட்டு வராகிகளே! அஷ்டவராகிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்;


பஞ்சமீ


அன்னை அராசாலை என்ற வராகியைப் பற்றி வராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது;நாத்திகப் பிரச்சாரம்,இந்தி எதிர்ப்பினால் தமிழுக்கும்,சமஸ்க்ருதத்திற்கும் இடையிலான 20,000 ஆண்டு மொழிபெயர்ப்பு தகர்ந்துவிட்டது;இதனால் பல அரிய நூல்கள் இன்று சமஸ்க்ருதத்திலேயே தங்கிவிட்டன;அண்டைமாநிலமான கேரளா கூட நம்மைவிட 120 ஆண்டுகள் முன்னேறிவிட்டது;ஆமாம்! ஏராளமான சமஸ்க்ருத நூல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளனர்;


வராகி கல்பத்தில்,வராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமீ ஆகும்;ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வராகி;பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமீ ஆகும்;சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவராகி தத்துவம் ஆகும்;இதனால் தான் இவளுக்கு பஞ்சமீ என்ற பெயர் உண்டானது;


பஞ்சமீயை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு;இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்;


வராகி என்ற வாராகி


சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வராகியைத்தான்! பரமரகசியமான இந்த வழிபாட்டுமுறையால் தான் இந்த பாரத தேசத்துடன் மோதவே மற்ற நாட்டினர் பயந்தனர்;இடையில் வந்த புறசமய தாக்குதல்களால் இந்த வராகி வழிபாடு அருகிவிட்டது;இப்போது மீண்டும் அன்னை வராகியின் அருள்பார்வை நமது தேசத்தின் மீது விழுந்திருக்கிறது;


மஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள்;மோளமுகம் கொண்டவள்;இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும்;நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்;கருநிறத்திருமேனியைக் கொண்டவள்;
படைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கியை பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைப் பொடியாக்கியவள்;


ஸ்ரீவராகி சக்தி வாய்ந்தவள்;ஒரு முகம்,இருகண்கள்,நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்;கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்;மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள்;இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும்;வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள்;சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்;


ஸ்ரீவராகி எலும்பின் தேவதை;இவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்;
மயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்;அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;இவ்வாறு இவளை வேண்டினால் வளம் பல கிடைக்கும்
 

Latest ads

Back
Top