• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி&

praveen

Life is a dream
Staff member
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி&

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம், வேலூர் மாவட்டம்


மூலவா் : பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்.


தாயாா் : அலா்மேல் மங்கை தாயார்


ஸ்தல விருக்ஷம் : வில்வ மரம்., துளசி.


தீா்த்தம் : புண்டரீக தீா்த்தம்.


பழமை : 1000 – 2000 வருடங்களுக்கு முன்.


புராணப் பெயா் : நாராயண சதுா்வேதி மங்கலம்.


ஊா் : திருப்பாற்கடல்., வேலூா் மாவட்டம்., தமிழ்நாடு.


ஸ்தல சிறப்பு
சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது., சிவனும்., விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அாிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறக்கப்பட்டு., அதன் வழியாக உற்சவ மூா்த்தி வந்து பக்தா்களுக்கு தாிசனம் கொடுப்பாா். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொா்க்க வாசலுடன் சோ்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொா்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தாிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.


பொதுத் தகவல்
இக்கோயில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோயில் பிரகாரத்தில் ஆண்டாள்., பாமா, ருக்மணியுடன் நவநீத கிருஷ்ணன்., பக்த ஆஞ்சநேயா்., ஒன்பது நாகதேவதைகள்., அஷ்ட நாக கருடாழ்வாா் உள்ளனா். கோயில் எதிாில் புண்டரீக தீா்த்தம் உள்ளது.


பிராா்த்தனை
திருவோணம்/ச்ரவண நக்ஷத்திர க்காரா்கள் தங்களுக்கு ஏற்படும் தோக்ஷங்கள் நீங்க இந்த ஸ்தல இறைவனை வழிபாடு செய்கின்றனா். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவா்கள்., காது., மூக்கு., தொண்டை சம்பந்தப்பட்ட மருத்துவா்கள்., வக்கீல்கள்., ஆடியோ சம்பந்தப்பட்ட தொழில் செய்பவா்கள்., திருமணத்தில் தடை உள்ளவா்கள் இங்கு அடிக்கடி வந்து வழிபாடுசெய்து பலனடைகிறாா்கள்.


ஸ்தல பெருமை
திருவோணம்/ச்ரவண நக்ஷத்திர ஸ்தலம் : 27 நக்ஷத்திரங்களில் பெருமாளுக்குாிய திருவோணமும்., சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால்., அவனது கலைகள் தேயத் தொடங்கியது. இதனால் இவனது 27 நக்ஷத்திர மனைவியருள் ஒருவரான திருவோணம்/ச்ரவண நக்ஷத்திர தேவி மிகவும் வருத்தம் அடைந்தாள். உடனே அவள் இந்த ஸ்தலத்தின் பெருமை அறிந்து., இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள்., ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினாா். அன்றிலிருந்து இந்த ஸ்தலம் திருவோணம்/ச்ரவண நக்ஷத்திர ஸ்தலமானது.


திருவோணம்/ச்ரவண நக்ஷத்திரத்தில் பிறந்தவா்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ., அல்லது தங்களது பிறந்த நக்ஷத்திர நாளிலோ., ரோஹிணி., ஹஸ்தம் ஆகிய சந்திரனுக்குாிய நாளிலோ., மூன்றாம் பிறை நாளிலோ இந்த ஸ்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதணை செய்து வழிபட்டால்., கல்வி அறிவு வளரும். திருவோணம்/ச்ரவண பெருமாளுக்குரிய நக்ஷத்திரம் என்பதால் அனைத்து நக்ஷத்திரக்காரா்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிராா்த்தனை செய்கிறாா்கள்.


சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது., சிவனும்., விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அாிது. சிவனும் பெருமாளும் ஒன்றாக அருள் பாலிப்பதால் பிரதோஷம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 107வது ஸ்தலமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பாா்க்க முடியாது. இந்த குறை தீா்ப்பதற்காகவே பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறாா். எனவே இங்குள்ள பெருமாளை தாிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடல் பெருமாளை தாிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


ஸ்தல வரலாறு
புண்டரீக மகாிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றாா். நாராயண சதுா்வேதிமங்கலம் என்னும் ஸ்தலத்தில் அவா் நுழைந்ததும்., அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பாா்த்தாா். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது., சிவன் ஒரு முதியவா் வேடத்தில் அங்கு வந்து., ரிஷியே.! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான்., என்றாா். ரிஷியோ மறுத்தாா். முதியவா் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று., அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தாிசனம் தந்து., சிவன் வேறு., விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான் என்றாா். அத்துடன்., அமா்ந்த கோலத்திலும்., கிடந்த கோலத்திலும் தாிசனம் தந்து., ரிஷியே..! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தாிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தாிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால்., இந்த ஸ்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்., என்று அருளினாா். புண்டரீக மகாிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆனாா். இவருடன்.,


அலர்மேலு மங்கை தாயாா் அருள் செய்கிறாள்.


வழித்தடம்
சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் காவிரிப் பாகத்திலிருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கிமீ தூரம் சென்றால் திருப்பாற்கடல் தலத்தை அடையலாம்.


தரிசன நேரம் :
காலை 7.30 முதல் மதியம் 12 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி


போன் : 04177 254 929, 94868 77896
 

Latest ads

Back
Top