காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்த
காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்தலமுண்டு !
தீப ப்ரகாசன் என்கிற திருநாமத்தோடே இன்றும் இங்கு இறைவன் நம்மை வரவேற்கின்றான் !
குளிர்ச்சியையுடைய தேனிளஞ்சோலைகள் சூழ்ந்திருக்கும் இடமாதலால் , இவ்விடத்திற்குத் திருத்தண்கா ( தண் = குளிர்ச்சியான , கா = சோலை ) என்கிற பெயரேற்பட்டதென்பர் !
இங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மரகதவல்லி என்றே திருநாமம் !
வேதாந்த தேசிகனுடைய திருவவதாரத்திற்கும் , மாமுனிகளின் அஷ்ட திக்கஜங்களில் ப்ரதானரான ப்ரதிவாதி பயங்கரமண்ணனுடைய திருவவதாரத்திற்கும் வித்திட்ட திவ்ய தேசம் இது !
தேசிகனும் அண்ணனும் பச்சை மரகதக் கல்லைப் போல் , ஒளி வீசித் திகழ்ந்திடுகின்றமை மரகதவல்லியின் திருவருள் துணை கொண்டே என்பதுணர்க !
ஆசிரியப் பெருமக்கள் மட்டுமா இவளருளால் தேசு ( தேஜஸ் ) பொலிந்திட விளங்குகின்றனர் ?!
விளக்கினொளியைப் போல் பிரகாசமாய் அங்கே பெருமான் நிற்கின்றதும், மரகதவல்லி அவன் திருமேனியில் திருமார்பில் படிந்திருப்பதால் தானாம் !
கலச அப்தி கந்யையான பிராட்டி ( அலை மகள் ) , திருப்பாற்கடல் கடையப் பட்டபொழுது எங்ங்னம் அதில் நின்றும் வெளிப்பட்டு, ஓடி வந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளோ, அதே போல் இங்கும் வேகவதியாற்றின் கரையிலுள்ள இந்தக் குளிர்ந்த சோலையிலும் மரகதவல்லியாகத் தோன்றி தீப ப்ரகாசனை அணைத்திட்டாளாம் !
இத்தாயாரை வேதாந்தாசார்யர் சரணாகதி தீபிகையில் வெகுவாகப் புகழ்ந்து மகிழ்கின்றமை அனுபவித்தற்குரியது !
".. கபீர ஸுபகம் ச்ரமஹாரி பும்ஸாம் மாதுர்ய ரம்யமநகம் மணிபங்க த்ருச்யம்.. "
மரகதவல்லி கம்பீரமானவள் ! ஸௌபாக்யமே வடிவெடுத்தவள்.. நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுமவள்.. நம்மை விட்டுக் கொடுக்காதவள்.
இறைவனும் மயங்கிப் போகும்படிப் (நமக்காகப்) பேசுமவள் .. அனைவரையும் அநுக்ரஹிப்பவள் !
பல்வகை அணிகலன்களைப் பூண்டிருப்பவள்.. தாமரையாள் என்றே போற்றப்படுமவள் !
இறைவனுக்கே ஒளியூட்டி அவனை தீபப்ரகாசனாக ஆக்குமவள் ; நம் வாழ்க்கைக்கு ஒளியூட்டாளோ ?!
மறக்காது மகிழ்வளிப்பாள் நம் மரகதவல்லி !
அவளைத் தொழுது நம் துயர் தொலைத்திடுவோமாக !
எழுத்து ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )
நவராத்திரி உத்ஸவம் 8ம் நாள். ஸ்ரீ மரகதவல்
காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்தலமுண்டு !
தீப ப்ரகாசன் என்கிற திருநாமத்தோடே இன்றும் இங்கு இறைவன் நம்மை வரவேற்கின்றான் !
குளிர்ச்சியையுடைய தேனிளஞ்சோலைகள் சூழ்ந்திருக்கும் இடமாதலால் , இவ்விடத்திற்குத் திருத்தண்கா ( தண் = குளிர்ச்சியான , கா = சோலை ) என்கிற பெயரேற்பட்டதென்பர் !
இங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மரகதவல்லி என்றே திருநாமம் !
வேதாந்த தேசிகனுடைய திருவவதாரத்திற்கும் , மாமுனிகளின் அஷ்ட திக்கஜங்களில் ப்ரதானரான ப்ரதிவாதி பயங்கரமண்ணனுடைய திருவவதாரத்திற்கும் வித்திட்ட திவ்ய தேசம் இது !
தேசிகனும் அண்ணனும் பச்சை மரகதக் கல்லைப் போல் , ஒளி வீசித் திகழ்ந்திடுகின்றமை மரகதவல்லியின் திருவருள் துணை கொண்டே என்பதுணர்க !
ஆசிரியப் பெருமக்கள் மட்டுமா இவளருளால் தேசு ( தேஜஸ் ) பொலிந்திட விளங்குகின்றனர் ?!
விளக்கினொளியைப் போல் பிரகாசமாய் அங்கே பெருமான் நிற்கின்றதும், மரகதவல்லி அவன் திருமேனியில் திருமார்பில் படிந்திருப்பதால் தானாம் !
கலச அப்தி கந்யையான பிராட்டி ( அலை மகள் ) , திருப்பாற்கடல் கடையப் பட்டபொழுது எங்ங்னம் அதில் நின்றும் வெளிப்பட்டு, ஓடி வந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளோ, அதே போல் இங்கும் வேகவதியாற்றின் கரையிலுள்ள இந்தக் குளிர்ந்த சோலையிலும் மரகதவல்லியாகத் தோன்றி தீப ப்ரகாசனை அணைத்திட்டாளாம் !
இத்தாயாரை வேதாந்தாசார்யர் சரணாகதி தீபிகையில் வெகுவாகப் புகழ்ந்து மகிழ்கின்றமை அனுபவித்தற்குரியது !
".. கபீர ஸுபகம் ச்ரமஹாரி பும்ஸாம் மாதுர்ய ரம்யமநகம் மணிபங்க த்ருச்யம்.. "
மரகதவல்லி கம்பீரமானவள் ! ஸௌபாக்யமே வடிவெடுத்தவள்.. நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுமவள்.. நம்மை விட்டுக் கொடுக்காதவள்.
இறைவனும் மயங்கிப் போகும்படிப் (நமக்காகப்) பேசுமவள் .. அனைவரையும் அநுக்ரஹிப்பவள் !
பல்வகை அணிகலன்களைப் பூண்டிருப்பவள்.. தாமரையாள் என்றே போற்றப்படுமவள் !
இறைவனுக்கே ஒளியூட்டி அவனை தீபப்ரகாசனாக ஆக்குமவள் ; நம் வாழ்க்கைக்கு ஒளியூட்டாளோ ?!
மறக்காது மகிழ்வளிப்பாள் நம் மரகதவல்லி !
அவளைத் தொழுது நம் துயர் தொலைத்திடுவோமாக !
எழுத்து ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )
நவராத்திரி உத்ஸவம் 8ம் நாள். ஸ்ரீ மரகதவல்