• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்த

praveen

Life is a dream
Staff member
காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்த

காஞ்சியில் 'திருத்தண்கா' என்றொரு திருத்தலமுண்டு !


தீப ப்ரகாசன் என்கிற திருநாமத்தோடே இன்றும் இங்கு இறைவன் நம்மை வரவேற்கின்றான் !


குளிர்ச்சியையுடைய தேனிளஞ்சோலைகள் சூழ்ந்திருக்கும் இடமாதலால் , இவ்விடத்திற்குத் திருத்தண்கா ( தண் = குளிர்ச்சியான , கா = சோலை ) என்கிற பெயரேற்பட்டதென்பர் !


இங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மரகதவல்லி என்றே திருநாமம் !


வேதாந்த தேசிகனுடைய திருவவதாரத்திற்கும் , மாமுனிகளின் அஷ்ட திக்கஜங்களில் ப்ரதானரான ப்ரதிவாதி பயங்கரமண்ணனுடைய திருவவதாரத்திற்கும் வித்திட்ட திவ்ய தேசம் இது !


தேசிகனும் அண்ணனும் பச்சை மரகதக் கல்லைப் போல் , ஒளி வீசித் திகழ்ந்திடுகின்றமை மரகதவல்லியின் திருவருள் துணை கொண்டே என்பதுணர்க !


ஆசிரியப் பெருமக்கள் மட்டுமா இவளருளால் தேசு ( தேஜஸ் ) பொலிந்திட விளங்குகின்றனர் ?!


விளக்கினொளியைப் போல் பிரகாசமாய் அங்கே பெருமான் நிற்கின்றதும், மரகதவல்லி அவன் திருமேனியில் திருமார்பில் படிந்திருப்பதால் தானாம் !


கலச அப்தி கந்யையான பிராட்டி ( அலை மகள் ) , திருப்பாற்கடல் கடையப் பட்டபொழுது எங்ங்னம் அதில் நின்றும் வெளிப்பட்டு, ஓடி வந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளோ, அதே போல் இங்கும் வேகவதியாற்றின் கரையிலுள்ள இந்தக் குளிர்ந்த சோலையிலும் மரகதவல்லியாகத் தோன்றி தீப ப்ரகாசனை அணைத்திட்டாளாம் !


இத்தாயாரை வேதாந்தாசார்யர் சரணாகதி தீபிகையில் வெகுவாகப் புகழ்ந்து மகிழ்கின்றமை அனுபவித்தற்குரியது !


".. கபீர ஸுபகம் ச்ரமஹாரி பும்ஸாம் மாதுர்ய ரம்யமநகம் மணிபங்க த்ருச்யம்.. "


மரகதவல்லி கம்பீரமானவள் ! ஸௌபாக்யமே வடிவெடுத்தவள்.. நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுமவள்.. நம்மை விட்டுக் கொடுக்காதவள்.


இறைவனும் மயங்கிப் போகும்படிப் (நமக்காகப்) பேசுமவள் .. அனைவரையும் அநுக்ரஹிப்பவள் !


பல்வகை அணிகலன்களைப் பூண்டிருப்பவள்.. தாமரையாள் என்றே போற்றப்படுமவள் !


இறைவனுக்கே ஒளியூட்டி அவனை தீபப்ரகாசனாக ஆக்குமவள் ; நம் வாழ்க்கைக்கு ஒளியூட்டாளோ ?!


மறக்காது மகிழ்வளிப்பாள் நம் மரகதவல்லி !


அவளைத் தொழுது நம் துயர் தொலைத்திடுவோமாக !


எழுத்து ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )


நவராத்திரி உத்ஸவம் 8ம் நாள். ஸ்ரீ மரகதவல்
 

Latest ads

Back
Top