• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாள் தோறும் நாலாயிரம்

praveen

Life is a dream
Staff member
நாள் தோறும் நாலாயிரம்

மாட மாளிகை சூழ் மதுரைப்பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மாமத யானை உதைத்தவன்
கூடு மாகில் நீ கூடிடு கூடலே (538)


பொருள்:
மாட மாளிகைகள் சூழ்ந்த வடமதுரையை நாடி வந்து , நம் தெருவின் நடுவே நடந்து , குவலயாபீடம் என்ற யானையை உதைத்து அழித்த கண்ணன் நம்மோடு கூடுவானாகில் , மனமே நீ முரண்படாமல் கூடுவாயாக .


விளக்கம்: நாடி என்ற பதத்தால் , கண்ணனே ஆண்டாளைத் தேடி வடமதுரைக்கு வந்ததாகப் பொருள் கொள்ள
வேண்டும்.
===============


அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும்
மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடலே கூடிடு . (539)
பொருள்: எனக்காகவே பிறந்தவன் , மருத மரம் முறியும்படி நடை கற்றவன் , கம்சனை வஞ்சனையாய் அழித்தவன் உள்ள மதுரை நகருக்கு அரசனாகிய கண்ணன் வந்தால் மனமே அவனுக்குக் கட்டுப்படுவாயாக


விளக்கம்: ராமர் ராவணனை வீழ்த்தியது போல் தர்ம யுத்தம் செய்து கம்சனை வெல்ல முடியாது என்று கண்ணன் அறிந்திருந்தான்; எனவே வஞ்சனையால் கொன்றான் . மதுரைக்கு அரசன் உக்கிரசேனனே ; ஆனாலும் அவனுக்குப் பட்டம் தர, கண்ணனே காரணமாக இருந்ததால், கண்ணனை மதுரைக்கு அரசன் என்று ஆண்டாள் கூறுகிறாள் .
=============
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் , எருதும் , புள்ளும்
வென்று எரி வேல் விறல் கஞ்சனும் , வீழ முன்
கொன்றவன் வரில் கூடலே கூடிடு . (540 )


பொருள்: வெறுக்கக் கூடிய செயல்களையே செய்து வந்த சிசுபாலனையும் , உயர்ந்த இரட்டை மருத மரங்களையும் , எருதாய் வந்த அசுரனனையும் கொக்காய் வந்த பகாசுரனையும், மற்றும் எல்லார் முன்னாலும் கம்சனைக் கொன்ற கண்ணன் வந்தால் அவனுக்குக் கட்டுப்படுவாயாக
==========


பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே (543)


பொருள்: நான்கு வேதங்களின் உட்பொருளாய் இருப்பவன், மத நீர் பெருகும் கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் , என்னைக் கவர்ந்தவன் , கோபியர் மனதில் உள்ளவன், அந்தக் கண்ணன் வந்தால் மனமே நீ கூடிவிடு.
=========
ஊடல் கூடல் , உணர்தல் புணர்தலை ,
நீடு நின்ற புகழ் ஆய்ச்சியர்
கூடலை , குழை கோதை கூறிய ,
பாடல் பத்தும் , வல்லார்க்கு இல்லை பாவமே (544)

பொருள்: ஊடலைக் காட்டக் கூடாதென்ற எச்சரிக்கை, மற்றும் கூடலில் உள்ள ஆர்வம் இந்த இரண்டையும் நெடுநாட்களுக்கு முன்னர் ஆய்ச்சியர் குலப்பெண்கள் நடத்தியதைக் கற்பனையில் கண்டு அழகிய கூந்தலை உடைய கோதை சொன்ன இந்த பத்துப் பாசுரங்கள் பாடுபவர்களின் பாவங்கள் அழியும் .
 

Latest ads

Back
Top