• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காவிரி ( பொன்னி) ஆறு எதற்காக தமிழ்நாட்டிற&#30

praveen

Life is a dream
Staff member
காவிரி ( பொன்னி) ஆறு எதற்காக தமிழ்நாட்டிற&#30

காவிரி ( பொன்னி) ஆறு எதற்காக தமிழ்நாட்டிற்கு சிவபெருமானால் கொண்டு வரப்பட்டது என்ற உண்மை ..


பொன்னி நதியை தனக்கான அகத்தியர் கைலாயத்தில் இருந்து சிவபெருமானிடம் தன்னுடைய கமன்டலத்தில் வாங்கி கொண்டு குடகு மலைக்கு வந்தார் அகத்தியர் .


அந்த காலம் சூரபதுமனின் ஆட்சி 1008 அண்டங்களை 108 யுகம் ஆள வேண்டும் என்று வரம் வாஙகி இருந்தான் சூரபதுமன் . இந்திரலோகத்திற்கு சென்று அங்கு தீயை வைத்து இந்திர லோகம் முழூவதையும் எரித்தான் சூரபதுமன் அவனுக்கு பயந்து குருவி வடிவம் எடுத்து பறந்து இந்திரனும் இந்திராணியும் சீர்காழியில் வந்து அடைந்தனர்


சூரபதுமனுக்கு பயந்து இந்திரன் மூங்ககிலாக மாறி சிவபூசை செய்து வந்தான் . சிவபூசை செய்யும் நேரத்தில் மட்டும் சுயரூபம் எடுத்து சிவபூசை செய்தான் மற்ற நேரங்களில் மூங்கிலாக இருந்தான் இந்திரன்


சீர்காழியில் நந்தனவனம் ( நந்தவனம்) அமைத்து நல்ல மலர்களை கொண்டு தோணியப்பரை பூசை செய்து வந்தான் இந்திரன் சூரபதுமன் பூமியில் மழை பெய்வதை நிறுத்திவிட்டான் அதனால் இந்திரன் அமைத்த நந்தனவனத்தில் உள்ள பூச்செடிகள் வாடியது இதனால் சிவபூசைக்கு பூக்கள் இல்லாமல் வருந்தினான் இந்திரன்


அந்த நேரத்தில் நாரதர் அங்கு வர உடனே நந்தனவனத்திற்கு நீர் வேண்டும் என கூற நீ விநாயகர் பெருமனை நோக்கி தவம் செய் அகத்தியர் கமன்லடலத்தில் உள்ள பொன்னி நதியை சீர்காழிக்கு பாய வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள் என்றார் அதே போல் இந்திரன் விநாயகர் பெருமனை நோக்கி தவம் செய்தார் அவர் காட்சி கொடுக்க உனக்கு என்ன‌‌ வரம் வேண்டும் என கேட்க நந்தனவனம் வாடாமல் இருக்கு ஒரு நதி வேண்டும் என வேண்டா விநாயகர் பெருமான் சரி இங்கு உடனே கங்கையை நதியை தரட்டுமா என்று கேட்க இல்லை சுவாமி எனக்கு அகத்தியர் கமன்டலத்தில் இருக்கும் பொன்ன நதியை தங்கள் சீர்காழியில் தர வேண்டும் என்று வேண்டினார் சரி என்று சொல்லி


விநாயகர் பெருமான் குடகு மலைக்கு சென்றார் அங்கு அகத்தியர் வில்வலன் / வாதாபி இரு அசூரர்களை சங்காரம் செய்த பின் அவர்கள் பிரம்மஹத்தியாக மாறி பின் தொடர்ந்து வந்ததால் அதை நிவர்த்தி செய்ய குடகுமலையில் சிவலிங்க‌ திருமேனி பிரதிஷ்டை செய்து சிவபூசை செய்து வந்தார் அந்த நேரத்தில் விநாயகர் காக்கை வடிவம் எடுத்து அகத்தியர் கமன்லடலத்தில் இருந்து பொன்னி நதியை கீழே கவிழ்த்து விட்டார்


*காகத்தால் விரிக்கப்பட்டதால் அதற்கு காவிரி **என்றும் பெயர் பெற்றது பொன்னி நதி அந்த காவிரி சீர்காழியில் பய்ந்து இந்திரன் உருவாக்கிய நந்தனவனம் பூத்துக்குலுங்கியது இந்திரனின் சிவபூசைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தது காவிரி ஆறு சான்று - கந்த புராணம் குடகு மலை சருக்கம்/ காவிரி சருக்கம்


சீர்காழிக்கு 12 பெயர்களில் வேணுபுரம் என்று பெயர் கொண்டது சீர்காழி சிவாலயத்தின் மற்ற 11 பெயர் கீழே உள்ளது (பிரமபுரம் / புகலி /வெங்குரு /தோணிபுரம் /பூந்தராய் /சிரபுரம் /புறவம் /சண்பை /சீகாளி / கொச்சைவயம் /கழுமலம் )
 

Latest ads

Back
Top