• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெ&

praveen

Life is a dream
Staff member
சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெ&

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.


அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.


அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து #கொள்ள வேண்டாமா?


பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் #ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் #தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.


#சங்கு பெற்ற கதை


#சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது #வெளிப்பட்ட #பலப்பல #தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று.


பாற்கடலில் #தோன்றிய இந்தச் சங்கு ‘#நமசிவாய’ என்ற #பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் #பாஞ்ச சைனம் எனப்பெயர் பெற்றது.


காப்போனைக் காக்கும் #கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் #இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார்.


சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் #சிவ பூசை செய்தார்.


திருமால் #ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் #கைக்கொண்ட திருத்தலம் திருச் #சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது.


திருமாலுக்குச் சங்கினை அருளித் #திருச்சங்க மங்கையில் #எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் #என்ற திருநாமம் உண்டு.


#சக்கரம் #பெற்ற கதை


சலந்தரன் என்னும் அசுரன் தன் #தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.


அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை #ஓடஓட #விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே #கூட சிறிது நேரம் மாற்றி விட்டான்.


அவரை ஒருமுறை #பிடித்த அவன், கழுத்தை #நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் #வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் #கொல்ல திருமாலால் முடியவில்லை.


அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு #வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் #கொல்ல முடியும் #என்ற நிலை ஏற்பட்டது. அதற் #கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான்.


அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் #கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான்.


சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை #வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை #சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார்.


#தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார்.


சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.


இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார்.


பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.


தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.


அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.
 

Latest ads

Back
Top