ஸ்ரீரங்கத்தில் கண்ட மயிலினம்
ஸ்ரீரங்கத்தில் கண்ட மயிலினம் -
ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் , திருமாலையின் பதினான்காம் பாசுரத்தில் அருளிச்செயததானது :-
" வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை *
அண்டர் கோண் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி *
நாய்க்கு இடுமினீரே "
உலகத்துக்கே முதல் கடவுளானவரும், பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கத்திலே பள்ளி கொண்டுள்ளவருமான ஸ்ரீரங்கநாதன் வாசம் செய்யுமான ஸ்ரீரங்கம் அன்றைய காலத்திலே எப்படிப்பட்டது என்றால் ,வண்டுகள் கூட்டங்களுடனும் வாயசைத்துக் கொண்டும், மயில்கள் கூட்டங்களுடன் ஆடிக் கொண்டும், குயில்கள் கூட்டங்களுடன் கூவிக் கொண்டும் , மேகங்கள் மேற்பகுதியில் வந்து கொண்டு நிற்கும்படியான , இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் சோலைகள் உடைய இடம்தான் திருவரங்கம்.
அன்று ஸ்ரீ.தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்திலே இப்படி கூட்டம் கூட்டமாக பார்த்த மேற்படி பறவைகள் , இக்காலத்திலும் ஓரளவிற்கு அங்கு உலாவிக் கொண்டுள்ளது. ஸ்ரீரங்கநாதனின் மீது உள்ள பற்று காரணமாக இன்றும் அங்கு மயிலினங்கள் பல இடங்களில் உலா வருகின்றன.
மேற்படி இந்த பாசுரத்தில் ஸ்ரீரங்கம் என்ற வார்த்தையை உரைக்காமல் வேறு விதமாக உரைப்பவர்கள் பற்றியும் , அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் அருளியுள்ளார் ஸ்ரீ.தொண்டரடிப்ப்ப்டி ஆழ்வார்.
அது போல் இன்றைய காலத்தில் "ஸ்ரீ " என்ற வார்த்தையை உரைக்க மறுப்பவர்களுக்கு அந்த பாசுரத்தின் ஒரு சில வார்த்தைகள் நன்றாக பாடம் கற்பிக்கும் விதமாக உள்ளது.
அரங்கனின் திருக்கோயில் எப்படி அத்துணை பத்தர்களுக்கும் சிறப்பு தரிசனமாக இருப்பது போல் , அரங்கனை நேரில் சென்று தரிசிக்க இயலாத நிலை இருந்தாலும், அவனின் பெரிய கோபுர தரிசனத்தை மிகையாக நினைத்து வாழ்கின்றன போலும் இந்த மயிலினங்கள்.
அடியேன் குடியிருப்பு கட்டடத்தை ஒட்டியுள்ள மதில் சுவற்றில் மயில்கள் உலா வந்து கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளேன்.
ஸ்ரீரங்கத்தில் கண்ட மயிலினம் -
ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் , திருமாலையின் பதினான்காம் பாசுரத்தில் அருளிச்செயததானது :-
" வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை *
அண்டர் கோண் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி *
நாய்க்கு இடுமினீரே "
உலகத்துக்கே முதல் கடவுளானவரும், பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கத்திலே பள்ளி கொண்டுள்ளவருமான ஸ்ரீரங்கநாதன் வாசம் செய்யுமான ஸ்ரீரங்கம் அன்றைய காலத்திலே எப்படிப்பட்டது என்றால் ,வண்டுகள் கூட்டங்களுடனும் வாயசைத்துக் கொண்டும், மயில்கள் கூட்டங்களுடன் ஆடிக் கொண்டும், குயில்கள் கூட்டங்களுடன் கூவிக் கொண்டும் , மேகங்கள் மேற்பகுதியில் வந்து கொண்டு நிற்கும்படியான , இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் சோலைகள் உடைய இடம்தான் திருவரங்கம்.
அன்று ஸ்ரீ.தொண்டரடிப்பொடியாழ்வார் காலத்திலே இப்படி கூட்டம் கூட்டமாக பார்த்த மேற்படி பறவைகள் , இக்காலத்திலும் ஓரளவிற்கு அங்கு உலாவிக் கொண்டுள்ளது. ஸ்ரீரங்கநாதனின் மீது உள்ள பற்று காரணமாக இன்றும் அங்கு மயிலினங்கள் பல இடங்களில் உலா வருகின்றன.
மேற்படி இந்த பாசுரத்தில் ஸ்ரீரங்கம் என்ற வார்த்தையை உரைக்காமல் வேறு விதமாக உரைப்பவர்கள் பற்றியும் , அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் அருளியுள்ளார் ஸ்ரீ.தொண்டரடிப்ப்ப்டி ஆழ்வார்.
அது போல் இன்றைய காலத்தில் "ஸ்ரீ " என்ற வார்த்தையை உரைக்க மறுப்பவர்களுக்கு அந்த பாசுரத்தின் ஒரு சில வார்த்தைகள் நன்றாக பாடம் கற்பிக்கும் விதமாக உள்ளது.
அரங்கனின் திருக்கோயில் எப்படி அத்துணை பத்தர்களுக்கும் சிறப்பு தரிசனமாக இருப்பது போல் , அரங்கனை நேரில் சென்று தரிசிக்க இயலாத நிலை இருந்தாலும், அவனின் பெரிய கோபுர தரிசனத்தை மிகையாக நினைத்து வாழ்கின்றன போலும் இந்த மயிலினங்கள்.
அடியேன் குடியிருப்பு கட்டடத்தை ஒட்டியுள்ள மதில் சுவற்றில் மயில்கள் உலா வந்து கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளேன்.