ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் பஞ்சவடி
#ஐந்தும் #ஐந்தும் #ஐந்துமாய்
#பஞ்சவடி
கோதாவரி நதிக்கரையில் ஐந்து வட வ்ருக்ஷங்கள் (ஐந்து ஆல மரங்கள்) சேர்ந்திருக்கும் இடம் பஞ்சவடி ஆகும்.
ஆல், - அரசு - வில்வம் - நெல்லி - அசோகம் என்ற ஐவகை மரங்கள் உள்ள இடம் என்றும் கூறுவர்.
ஸீதா லக்ஷமண ஸஹிதரான ஸ்ரீ ராமபிரான் ஆரண்யவாஸத்தின் போது அகஸ்தியர் ஆச்ரமம் சென்றனன். அதிதி ஸத்காரம் பண்ணிய மஹரிஷி பெருமாளுக்கு திவ்யாஸ்த்ரங்கள், வில், கத்தி முதலிய ஆயுதங்களைக் கொடுத்தார். பெருமாள் அவரிடம் அடர்ந்த வனமாயுள்ளதாய், தாங்கள் வசிப்பதற்கு ஏற்றதாயுள்ள இடத்தைக் காட்டவேண்டும் என்று கேட்க, அகஸ்திய முனிவரும் அங்கிருந்து இரண்டு யோஜனை தூரமுள்ள பஞ்சவடியில் வஸிக்கும்படி கூறி, ராம லக்ஷ்மணர்களையும், ஸீதையையும் திரும்பத் திரும்ப ஆசீர்வதித்து பஞ்சவடிக்கு அனுப்பினார்.
பஞ்சவடி மார்கத்தில் இவர்கள் தசரதரின் சகாவான ஜடாயுவைப் பார்க்க, அவரே அகஸ்தியர் குறித்த இடமான பஞ்சவடியை ராஜகுமாரர்களுக்குக் காட்டினார்.
மரங்களும், மரங்களில் விளையாடும் பறவைகளின் இனிய நாதங்களும், புஷ்பங்களும், தண்ணீரும், மணலும் நிறைந்த பஞ்சவடியில் ரம்யமான இடத்தில் லக்ஷ்மணன் அழகான பர்ணசாலையை அமைத்தான். அதைக் கண்டு பரவசமான ஸ்ரீராமன் "லக்ஷ்மணா! நீயே எனக்குத் தகப்பன் ஆனாய்!" என்று உள்ளம் உருகி கண்ணீர் விட்டான்.
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானை அடைய வேண்டியதிருக்க அவளை எதிரிட்டு பெருமாளை அடைய நினைத்த #சூர்ப்பணகா #பங்கம் நடந்த இடம் பஞ்சவடியில் உள்ள #தபோவனம் ஆகும்.
பஞ்சவடியில்தான் #ஸீதாபஹரணம் நடந்தது. இராவணன் ஸீதையைத் தூக்கிச் சென்றான் என்பதைவிட, ஸீதை தானே வலிய வந்து சிறை புகுந்தாள் என்று சொல்வதே பிராட்டி க்கு பெருமை கூறுவதாகும். தேவதேவ திவ்ய மஹிஷியான தன் பெருமையையும் சிறை இருப்பின் தன்மையையும் பாராதே தேவஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத்தான் சிறை புகுந்தாள்.
ஸுக்ரீவன் பஞ்சவடியில் தான் #பிராட்டியின் #அனுக்ரஹம் பெற்றனன். இராவணன் ஆகாசமார்க்கமாகப் பிராட்டியை கொண்டு சென்ற போது, ரிச்யமுகப் பர்வதத்தில் ஸுக்ரீவன் முதலான வானரங்களைக் கண்டு தன் திருவாபரணங்களில் சிலவற்றை ஒரு சீலையில் முடிந்து அவர்கள் நடுவே விழும்படி போட்டாள். பிராட்டியின் கடாக்ஷமும் அனுக்ரஹமும் கிடைத்ததனால் ஸுக்ரீவனுக்கு ஸ்ரீராமனின் கடாக்ஷமும் அனுக்ரஹமும் விரைவிலேயே கிட்டிற்று.
முக்கிய விசேஷண பூதையான பிராட்டியை புருஷகாரமாகக் கொள்ளாமல் அவளை எதிரிட்டு விசேஷ்ய பூதரான பெருமாளை விரும்பின சூர்ப்பநகைக்கு முக்ய அங்கஹாநியே பலமாயிற்று. ஸர்வர்க்கும் ப்ராணனாயிருக்கிற பெருமாளை உபேக்ஷித்து பிராட்டியை விபரீத புத்தியால் விரும்பின இராவணனுக்கு ப்ராணஹாநியே பலமாயிற்று. ஸர்வலோகத்துக்கும் மாதாவும் பிதாவுமாய்க் கொண்டிருக்கும் மிதுனத்தை முறையிலே விரும்பாமல் முறைகெட விரும்புவார் பெறும் பேறு இது என்றருளுகிறார் #பெரியவாச்சான்பிள்ளை.
#ஐந்தும் #ஐந்தும் #ஐந்துமாய்
#பஞ்சவடி
கோதாவரி நதிக்கரையில் ஐந்து வட வ்ருக்ஷங்கள் (ஐந்து ஆல மரங்கள்) சேர்ந்திருக்கும் இடம் பஞ்சவடி ஆகும்.
ஆல், - அரசு - வில்வம் - நெல்லி - அசோகம் என்ற ஐவகை மரங்கள் உள்ள இடம் என்றும் கூறுவர்.
ஸீதா லக்ஷமண ஸஹிதரான ஸ்ரீ ராமபிரான் ஆரண்யவாஸத்தின் போது அகஸ்தியர் ஆச்ரமம் சென்றனன். அதிதி ஸத்காரம் பண்ணிய மஹரிஷி பெருமாளுக்கு திவ்யாஸ்த்ரங்கள், வில், கத்தி முதலிய ஆயுதங்களைக் கொடுத்தார். பெருமாள் அவரிடம் அடர்ந்த வனமாயுள்ளதாய், தாங்கள் வசிப்பதற்கு ஏற்றதாயுள்ள இடத்தைக் காட்டவேண்டும் என்று கேட்க, அகஸ்திய முனிவரும் அங்கிருந்து இரண்டு யோஜனை தூரமுள்ள பஞ்சவடியில் வஸிக்கும்படி கூறி, ராம லக்ஷ்மணர்களையும், ஸீதையையும் திரும்பத் திரும்ப ஆசீர்வதித்து பஞ்சவடிக்கு அனுப்பினார்.
பஞ்சவடி மார்கத்தில் இவர்கள் தசரதரின் சகாவான ஜடாயுவைப் பார்க்க, அவரே அகஸ்தியர் குறித்த இடமான பஞ்சவடியை ராஜகுமாரர்களுக்குக் காட்டினார்.
மரங்களும், மரங்களில் விளையாடும் பறவைகளின் இனிய நாதங்களும், புஷ்பங்களும், தண்ணீரும், மணலும் நிறைந்த பஞ்சவடியில் ரம்யமான இடத்தில் லக்ஷ்மணன் அழகான பர்ணசாலையை அமைத்தான். அதைக் கண்டு பரவசமான ஸ்ரீராமன் "லக்ஷ்மணா! நீயே எனக்குத் தகப்பன் ஆனாய்!" என்று உள்ளம் உருகி கண்ணீர் விட்டான்.
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானை அடைய வேண்டியதிருக்க அவளை எதிரிட்டு பெருமாளை அடைய நினைத்த #சூர்ப்பணகா #பங்கம் நடந்த இடம் பஞ்சவடியில் உள்ள #தபோவனம் ஆகும்.
பஞ்சவடியில்தான் #ஸீதாபஹரணம் நடந்தது. இராவணன் ஸீதையைத் தூக்கிச் சென்றான் என்பதைவிட, ஸீதை தானே வலிய வந்து சிறை புகுந்தாள் என்று சொல்வதே பிராட்டி க்கு பெருமை கூறுவதாகும். தேவதேவ திவ்ய மஹிஷியான தன் பெருமையையும் சிறை இருப்பின் தன்மையையும் பாராதே தேவஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத்தான் சிறை புகுந்தாள்.
ஸுக்ரீவன் பஞ்சவடியில் தான் #பிராட்டியின் #அனுக்ரஹம் பெற்றனன். இராவணன் ஆகாசமார்க்கமாகப் பிராட்டியை கொண்டு சென்ற போது, ரிச்யமுகப் பர்வதத்தில் ஸுக்ரீவன் முதலான வானரங்களைக் கண்டு தன் திருவாபரணங்களில் சிலவற்றை ஒரு சீலையில் முடிந்து அவர்கள் நடுவே விழும்படி போட்டாள். பிராட்டியின் கடாக்ஷமும் அனுக்ரஹமும் கிடைத்ததனால் ஸுக்ரீவனுக்கு ஸ்ரீராமனின் கடாக்ஷமும் அனுக்ரஹமும் விரைவிலேயே கிட்டிற்று.
முக்கிய விசேஷண பூதையான பிராட்டியை புருஷகாரமாகக் கொள்ளாமல் அவளை எதிரிட்டு விசேஷ்ய பூதரான பெருமாளை விரும்பின சூர்ப்பநகைக்கு முக்ய அங்கஹாநியே பலமாயிற்று. ஸர்வர்க்கும் ப்ராணனாயிருக்கிற பெருமாளை உபேக்ஷித்து பிராட்டியை விபரீத புத்தியால் விரும்பின இராவணனுக்கு ப்ராணஹாநியே பலமாயிற்று. ஸர்வலோகத்துக்கும் மாதாவும் பிதாவுமாய்க் கொண்டிருக்கும் மிதுனத்தை முறையிலே விரும்பாமல் முறைகெட விரும்புவார் பெறும் பேறு இது என்றருளுகிறார் #பெரியவாச்சான்பிள்ளை.